< ရောမိဏး 12 >

1 ဟေ ဘြာတရ ဤၑွရသျ ကၖပယာဟံ ယုၐ္မာန် ဝိနယေ ယူယံ သွံ သွံ ၑရီရံ သဇီဝံ ပဝိတြံ ဂြာဟျံ ဗလိမ် ဤၑွရမုဒ္ဒိၑျ သမုတ္သၖဇတ, ဧၐာ သေဝါ ယုၐ္မာကံ ယောဂျာ၊
ஆகையால், எனக்கு பிரியமானவர்களே, நான் இறைவனுடைய இரக்கத்தை மனதிற்கொண்டு, உங்களை வருந்தி வேண்டிக்கொள்கிறதாவது, உங்கள் உடல்களை உயிருள்ள பலியாகவும், பரிசுத்தமும், இறைவனுக்குப் பிரியமாயிருக்கும்படி ஒப்புக்கொடுங்கள். இதுவே உங்களுடைய உண்மையான ஆவிக்குரிய வழிபாடு.
2 အပရံ ယူယံ သာံသာရိကာ ဣဝ မာစရတ, ကိန္တု သွံ သွံ သွဘာဝံ ပရာဝရ္တျ နူတနာစာရိဏော ဘဝတ, တတ ဤၑွရသျ နိဒေၑး ကီဒၖဂ် ဥတ္တမော ဂြဟဏီယး သမ္ပူရ္ဏၑ္စေတိ ယုၐ္မာဘိရနုဘာဝိၐျတေ၊ (aiōn g165)
இனிமேலும் இந்த உலகத்தின் மாதிரிகளுக்கு ஒத்து நடவாதேயுங்கள். இறைவனால் உங்கள் மனங்களில் ஆழமாக புதுப்பிக்கப்பட்டு, உங்கள் இயல்பில் மாறுதல் அடையுங்கள். அப்பொழுதே நீங்கள் சிறந்ததும், அவரைப் பிரியப்படுத்துகிறதும், முழுநிறைவானதுமான இறைவனுடைய சித்தம் என்ன என்பதை நடைமுறையில் அறிந்துகொள்வீர்கள். (aiōn g165)
3 ကၑ္စိဒပိ ဇနော ယောဂျတွာဒဓိကံ သွံ န မနျတာံ ကိန္တု ဤၑွရော ယသ္မဲ ပြတျယသျ ယတ္ပရိမာဏမ် အဒဒါတ် သ တဒနုသာရတော ယောဂျရူပံ သွံ မနုတာမ်, ဤၑွရာဒ် အနုဂြဟံ ပြာပ္တး သန် ယုၐ္မာကမ် ဧကဲကံ ဇနမ် ဣတျာဇ္ဉာပယာမိ၊
இறைவன் எனக்களித்த தன் கிருபையின்படி, உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொல்கிறதாவது: அளவுக்கதிகமாய் உங்களைக்குறித்து உயர்வாய் எண்ணிக்கொள்ள வேண்டாம். இறைவன் உங்களுக்குக் கொடுத்த விசுவாசத்தின் அளவின்படியே, மனத்தெளிவுடன் உங்களைக்குறித்து மதிப்பீடு செய்துகொள்ளுங்கள்.
4 ယတော ယဒွဒသ္မာကမ် ဧကသ္မိန် ၑရီရေ ဗဟူနျင်္ဂါနိ သန္တိ ကိန္တု သရွွေၐာမင်္ဂါနာံ ကာရျျံ သမာနံ နဟိ;
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு உடல் இருக்கிறது, அதில் பல உறுப்புகள் இருக்கின்றன. இந்த உறுப்புகள் எல்லாம் ஒரே வேலையைச் செய்வதில்லை.
5 တဒွဒသ္မာကံ ဗဟုတွေ'ပိ သရွွေ ဝယံ ခြီၐ္ဋေ ဧကၑရီရား ပရသ္ပရမ် အင်္ဂပြတျင်္ဂတွေန ဘဝါမး၊
அதுபோலவே கிறிஸ்துவுக்குள் நாம் பலராய் இருந்தாலும், ஒரே உடலாகின்றோம். நாம் உடலின் பல்வேறு உறுப்புகளாக இருந்து, ஒருவருக்கு ஒருவர் சொந்தமாயிருக்கிறோம்.
6 အသ္မာဒ် ဤၑွရာနုဂြဟေဏ ဝိၑေၐံ ဝိၑေၐံ ဒါနမ် အသ္မာသု ပြာပ္တေၐု သတ္သု ကောပိ ယဒိ ဘဝိၐျဒွါကျံ ဝဒတိ တရှိ ပြတျယသျ ပရိမာဏာနုသာရတး သ တဒ် ဝဒတု;
நமக்குக் கொடுக்கப்பட்ட கிருபையின்படியே, நாம் வித்தியாசமான வரங்களைப் பெற்றவர்களாய் இருக்கிறோம். இறைவாக்கு உரைப்பதற்கு ஒருவன் வரம்பெற்றிருந்தால், அவன் தன்னுடைய விசுவாசத்தின் அளவுக்கு ஏற்றபடியே அதைப் பயன்படுத்தட்டும்.
7 ယဒွါ ယဒိ ကၑ္စိတ် သေဝနကာရီ ဘဝတိ တရှိ သ တတ္သေဝနံ ကရောတု; အထဝါ ယဒိ ကၑ္စိဒ် အဓျာပယိတာ ဘဝတိ တရှိ သော'ဓျာပယတု;
அப்படியே சேவைசெய்கிறவன் சேவை செய்வதிலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும்,
8 တထာ ယ ဥပဒေၐ္ဋာ ဘဝတိ သ ဥပဒိၑတု ယၑ္စ ဒါတာ သ သရလတယာ ဒဒါတု ယသ္တွဓိပတိး သ ယတ္နေနာဓိပတိတွံ ကရောတု ယၑ္စ ဒယာလုး သ ဟၖၐ္ဋမနသာ ဒယတာမ်၊
உற்சாகப்படுத்துகிறவன் உற்சாகப்படுத்துவதிலும் நிலைத்திருக்கட்டும்; மற்றவர்களுடைய தேவைகளுக்குக் கொடுத்து உதவுகிறவன் தாராளமாய் கொடுக்கட்டும்; தலைமைத்துவத்தில் இருப்பவன் கவனத்தோடு நிர்வாகத்தைச் செய்யட்டும்; இரக்கம் காண்பிப்பவன் அதை முகமலர்ச்சியுடன் செய்யட்டும்.
9 အပရဉ္စ ယုၐ္မာကံ ပြေမ ကာပဋျဝရ္ဇိတံ ဘဝတု ယဒ် အဘဒြံ တဒ် ၒတီယဓွံ ယစ္စ ဘဒြံ တသ္မိန် အနုရဇျဓွမ်၊
உங்கள் அன்பு உண்மையானதாய் இருக்கவேண்டும். தீமையை வெறுத்து விடுங்கள்; நன்மையைப் பற்றிக்கொள்ளுங்கள்.
10 အပရံ ဘြာတၖတွပြေမ္နာ ပရသ္ပရံ ပြီယဓွံ သမာဒရာဒ် ဧကော'ပရဇနံ ၑြေၐ္ဌံ ဇာနီဓွမ်၊
ஒருவரில் ஒருவர் கனிவான சகோதர அன்புடையவர்களாய் இருங்கள், ஒவ்வொருவரும் உங்களைவிட மற்றவர்களை உயர்வானவர்களாகக் கனம்பண்ணி நடவுங்கள்,
11 တထာ ကာရျျေ နိရာလသျာ မနသိ စ သောဒျောဂါး သန္တး ပြဘုံ သေဝဓွမ်၊
ஆர்வம் குன்ற இடங்கொடாமல் ஆவியில் அனல் கொண்டவர்களாய் கர்த்தருக்கு ஊழியம் செய்யுங்கள்.
12 အပရံ ပြတျာၑာယာမ် အာနန္ဒိတာ ဒုးခသမယေ စ ဓဲရျျယုက္တာ ဘဝတ; ပြာရ္ထနာယာံ သတတံ ပြဝရ္တ္တဓွံ၊
எதிர்பார்ப்பில் மகிழ்ச்சியாய் இருங்கள், துன்பங்களில் பொறுமையாக இருங்கள், மன்றாடுவதில் உறுதியாய்த் தரித்திருங்கள்.
13 ပဝိတြာဏာံ ဒီနတာံ ဒူရီကုရုဓွမ် အတိထိသေဝါယာမ် အနုရဇျဓွမ်၊
தேவையிலிருக்கிற இறைவனுடைய மக்களுடன் உங்களிடம் உள்ளதைப் பகிர்ந்துகொள்ளுங்கள், உபசரிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.
14 ယေ ဇနာ ယုၐ္မာန် တာဍယန္တိ တာန် အာၑိၐံ ဝဒတ ၑာပမ် အဒတ္တွာ ဒဒ္ဓွမာၑိၐမ်၊
உங்களைத் துன்புறுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; சபிக்காதிருங்கள்.
15 ယေ ဇနာ အာနန္ဒန္တိ တဲး သာရ္ဒ္ဓမ် အာနန္ဒတ ယေ စ ရုဒန္တိ တဲး သဟ ရုဒိတ၊
மகிழ்ச்சியாய் இருக்கிறவர்களுடனே மகிழ்ச்சியாயிருங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.
16 အပရဉ္စ ယုၐ္မာကံ မနသာံ ပရသ္ပရမ် ဧကောဘာဝေါ ဘဝတု; အပရမ် ဥစ္စပဒမ် အနာကာင်္က္ၐျ နီစလောကဲး သဟာပိ မာရ္ဒဝမ် အာစရတ; သွာန် ဇ္ဉာနိနော န မနျဓွံ၊
ஒருவரோடு ஒருவர் ஒருமனதுள்ளவர்களாய் வாழுங்கள். பெருமைகொள்ளாமல், தாழ்ந்தவர்களுடனும் நட்புறவு கொள்ளுங்கள். நீங்கள் உங்களையே அறிவாளிகளெனப் பெருமிதம் கொள்ளாதிருங்கள்.
17 ပရသ္မာဒ် အပကာရံ ပြာပျာပိ ပရံ နာပကုရုတ၊ သရွွေၐာံ ဒၖၐ္ဋိတော ယတ် ကရ္မ္မောတ္တမံ တဒေဝ ကုရုတ၊
யாராவது உங்களுக்குத் தீமை செய்தால், அதற்குப் பதிலாக, நீங்களும் தீமை செய்யவேண்டாம். எல்லா மனிதருடைய பார்வையிலும் சரியானதையே செய்யும்படி கவனமாயிருங்கள்.
18 ယဒိ ဘဝိတုံ ၑကျတေ တရှိ ယထာၑက္တိ သရွွလောကဲး သဟ နိရွွိရောဓေန ကာလံ ယာပယတ၊
இயலுமானால் உங்களால் முடிந்தவரை எல்லோருடனும் சமாதானமாக இருங்கள்.
19 ဟေ ပြိယဗန္ဓဝး, ကသ္မဲစိဒ် အပကာရသျ သမုစိတံ ဒဏ္ဍံ သွယံ န ဒဒ္ဓွံ, ကိန္တွီၑွရီယကြောဓာယ သ္ထာနံ ဒတ္တ ယတော လိခိတမာသ္တေ ပရမေၑွရး ကထယတိ, ဒါနံ ဖလသျ မတ္ကရ္မ္မ သူစိတံ ပြဒဒါမျဟံ၊
என் அன்பானவர்களே, பழிக்குப்பழி வாங்கவேண்டாம், இறைவனுடைய கோபத்தின் தண்டனைக்கு இடங்கொடுங்கள். ஏனெனில், “பழிவாங்குதல் எனக்குரியது; நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்கிறார்” என்று எழுதியிருக்கிறதே.
20 ဣတိကာရဏာဒ် ရိပု ရျဒိ က္ၐုဓာရ္တ္တသ္တေ တရှိ တံ တွံ ပြဘောဇယ၊ တထာ ယဒိ တၖၐာရ္တ္တး သျာတ် တရှိ တံ ပရိပါယယ၊ တေန တွံ မသ္တကေ တသျ ဇွလဒဂ္နိံ နိဓာသျသိ၊
எனவே, “உங்கள் பகைவன் பசியாயிருந்தால், அவனுக்கு உணவு கொடுங்கள்; தாகமாயிருந்தால், அவனுக்கு குடிக்கக் கொடுங்கள். இவ்விதம் செய்வதனால் நீங்கள் அவனுடைய தலையின்மேல் எரியும் நெருப்புத் தணல்களைக் குவிப்பீர்கள்.”
21 ကုကြိယယာ ပရာဇိတာ န သန္တ ဥတ္တမကြိယယာ ကုကြိယာံ ပရာဇယတ၊
தீமை உங்களை மேற்கொள்ள இடங்கொடுக்க வேண்டாம். தீமையை நன்மையினால் மேற்கொள்ளுங்கள்.

< ရောမိဏး 12 >