< မထိး 8 >

1 ယဒါ သ ပရွွတာဒ် အဝါရောဟတ် တဒါ ဗဟဝေါ မာနဝါသ္တတ္ပၑ္စာဒ် ဝဝြဇုး၊
இயேசு மலையிலிருந்து இறங்கினபோது, திரளான மக்கள் அவருக்குப் பின்னே சென்றார்கள்.
2 ဧကး ကုၐ္ဌဝါန် အာဂတျ တံ ပြဏမျ ဗဘာၐေ, ဟေ ပြဘော, ယဒိ ဘဝါန် သံမနျတေ, တရှိ မာံ နိရာမယံ ကရ္တ္တုံ ၑက္နောတိ၊
அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்கு விருப்பமானால், என்னை சுத்தப்படுத்த உம்மால் முடியும் என்றான்.
3 တတော ယီၑုး ကရံ ပြသာရျျ တသျာင်္ဂံ သ္ပၖၑန် ဝျာဇဟာရ, သမ္မနျေ'ဟံ တွံ နိရာမယော ဘဝ; တေန သ တတ္က္ၐဏာတ် ကုၐ္ဌေနာမောစိ၊
இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான்.
4 တတော ယီၑုသ္တံ ဇဂါဒ, အဝဓေဟိ ကထာမေတာံ ကၑ္စိဒပိ မာ ဗြူဟိ, ကိန္တု ယာဇကသျ သန္နိဓိံ ဂတွာ သွာတ္မာနံ ဒရ္ၑယ မနုဇေဘျော နိဇနိရာမယတွံ ပြမာဏယိတုံ မူသာနိရူပိတံ ဒြဝျမ် ဥတ္သၖဇ စ၊
இயேசு அவனைப் பார்த்து: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாக இரு; ஆனாலும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.
5 တဒနန္တရံ ယီၑုနာ ကဖရ္နာဟူမ္နာမနိ နဂရေ ပြဝိၐ္ဋေ ကၑ္စိတ် ၑတသေနာပတိသ္တတ္သမီပမ် အာဂတျ ဝိနီယ ဗဘာၐေ,
இயேசு கப்பர்நகூமில் நுழைந்தபோது, நூறு படைவீரர்களுக்குத் தலைவனாகிய ஒருவன் அவரிடத்தில் வந்து:
6 ဟေ ပြဘော, မဒီယ ဧကော ဒါသး ပက္ၐာဃာတဝျာဓိနာ ဘၖၑံ ဝျထိတး, သတု ၑယနီယ အာသ္တေ၊
ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே பக்கவாதமாகக் கிடந்து மிகவும் வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
7 တဒါနီံ ယီၑုသ္တသ္မဲ ကထိတဝါန်, အဟံ ဂတွာ တံ နိရာမယံ ကရိၐျာမိ၊
அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சுகமாக்குவேன் என்றார்.
8 တတး သ ၑတသေနာပတိး ပြတျဝဒတ်, ဟေ ပြဘော, ဘဝါန် ယတ် မမ ဂေဟမဓျံ ယာတိ တဒျောဂျဘာဇနံ နာဟမသ္မိ; ဝါင်္မာတြမ် အာဒိၑတု, တေနဲဝ မမ ဒါသော နိရာမယော ဘဝိၐျတိ၊
அந்தத் தலைவன் மறுமொழியாக: ஆண்டவரே! நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும்; அப்பொழுது என் வேலைக்காரன் சுகமாவான்.
9 ယတော မယိ ပရနိဓ္နေ'ပိ မမ နိဒေၑဝၑျား ကတိ ကတိ သေနား သန္တိ, တတ ဧကသ္မိန် ယာဟီတျုက္တေ သ ယာတိ, တဒနျသ္မိန် ဧဟီတျုက္တေ သ အာယာတိ, တထာ မမ နိဇဒါသေ ကရ္မ္မဲတတ် ကုရွွိတျုက္တေ သ တတ် ကရောတိ၊
நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான்.
10 တဒါနီံ ယီၑုသ္တသျဲတတ် ဝစော နိၑမျ ဝိသ္မယာပန္နော'ဘူတ်; နိဇပၑ္စာဒ္ဂါမိနော မာနဝါန် အဝေါစ္စ, ယုၐ္မာန် တထျံ ဝစ္မိ, ဣသြာယေလီယလောကာနာံ မဓျေ'ပိ နဲတာဒၖၑော ဝိၑွာသော မယာ ပြာပ္တး၊
௧0இயேசு இதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப்பின்னே வருகிறவர்களைப் பார்த்து: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
11 အနျစ္စာဟံ ယုၐ္မာန် ဝဒါမိ, ဗဟဝး ပူရွွသျား ပၑ္စိမာယာၑ္စ ဒိၑ အာဂတျ ဣဗြာဟီမာ ဣသှာကာ ယာကူဗာ စ သာကမ် မိလိတွာ သမုပဝေက္ၐျန္တိ;
௧௧அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு பந்தியிருப்பார்கள்.
12 ကိန္တု ယတြ သ္ထာနေ ရောဒနဒန္တဃရ္ၐဏေ ဘဝတသ္တသ္မိန် ဗဟိရ္ဘူတတမိသြေ ရာဇျသျ သန္တာနာ နိက္ၐေသျန္တေ၊
௧௨ராஜ்யத்தின் பிள்ளைகளோ, வெளியில் உள்ள இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
13 တတး ပရံ ယီၑုသ္တံ ၑတသေနာပတိံ ဇဂါဒ, ယာဟိ, တဝ ပြတီတျနုသာရတော မင်္ဂလံ ဘူယာတ်; တဒါ တသ္မိန္နေဝ ဒဏ္ဍေ တဒီယဒါသော နိရာမယော ဗဘူဝ၊
௧௩பின்பு இயேசு அந்தத் தலைவனைப் பார்த்து: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அதே மணிநேரத்திலே அவனுடைய வேலைக்காரன் சுகமானான்.
14 အနန္တရံ ယီၑုး ပိတရသျ ဂေဟမုပသ္ထာယ ဇွရေဏ ပီဍိတာံ ၑယနီယသ္ထိတာံ တသျ ၑွၑြူံ ဝီက္ၐာဉ္စကြေ၊
௧௪இயேசு பேதுருவின் வீட்டிற்கு வந்து, அவனுடைய மாமியார் ஜூரமாகப் படுத்திருந்ததைக் கண்டார்.
15 တတသ္တေန တသျား ကရသျ သ္ပၖၐ္ဋတဝါတ် ဇွရသ္တာံ တတျာဇ, တဒါ သာ သမုတ္ထာယ တာန် သိၐေဝေ၊
௧௫அவர் அவளுடைய கையைத் தொட்டவுடனே ஜூரம் அவளைவிட்டு நீங்கியது; அவள் எழுந்திருந்து, அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள்.
16 အနန္တရံ သန္ဓျာယာံ သတျာံ ဗဟုၑော ဘူတဂြသ္တမနုဇာန် တသျ သမီပမ် အာနိနျုး သ စ ဝါကျေန ဘူတာန် တျာဇယာမာသ, သရွွပြကာရပီဍိတဇနာံၑ္စ နိရာမယာန် စကာရ;
௧௬மாலைநேரமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, வியாதியஸ்தர்கள் எல்லோரையும் சுகமாக்கினார்.
17 တသ္မာတ်, သရွွာ ဒုရ္ဗ္ဗလတာသ္မာကံ တေနဲဝ ပရိဓာရိတာ၊ အသ္မာကံ သကလံ ဝျာဓိံ သဧဝ သံဂၖဟီတဝါန်၊ ယဒေတဒွစနံ ယိၑယိယဘဝိၐျဒွါဒိနောက္တမာသီတ်, တတ္တဒါ သဖလမဘဝတ်၊
௧௭அவர்தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
18 အနန္တရံ ယီၑုၑ္စတုရ္ဒိက္ၐု ဇနနိဝဟံ ဝိလောကျ တဋိနျား ပါရံ ယာတုံ ၑိၐျာန် အာဒိဒေၑ၊
௧௮பின்பு, திரளான மக்கள் தம்மைச் சுற்றியிருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார்.
19 တဒါနီမ် ဧက ဥပါဓျာယ အာဂတျ ကထိတဝါန်, ဟေ ဂုရော, ဘဝါန် ယတြ ယာသျတိ တတြာဟမပိ ဘဝတး ပၑ္စာဒ် ယာသျာမိ၊
௧௯அப்பொழுது, வேதபண்டிதன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.
20 တတော ယီၑု ရ္ဇဂါဒ, ကြောၐ္ဋုး သ္ထာတုံ သ္ထာနံ ဝိဒျတေ, ဝိဟာယသော ဝိဟင်္ဂမာနာံ နီဍာနိ စ သန္တိ; ကိန္တု မနုၐျပုတြသျ ၑိရး သ္ထာပယိတုံ သ္ထာနံ န ဝိဒျတေ၊
௨0அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனிதகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார்.
21 အနန္တရမ် အပရ ဧကး ၑိၐျသ္တံ ဗဘာၐေ, ဟေ ပြဘော, ပြထမတော မမ ပိတရံ ၑ္မၑာနေ နိဓာတုံ ဂမနာရ္ထံ မာမ် အနုမနျသွ၊
௨௧அவருடைய சீடர்களில் வேறொருவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்செய்ய எனக்கு அனுமதி கொடுக்கவேண்டும் என்றான்.
22 တတော ယီၑုရုက္တဝါန် မၖတာ မၖတာန် ၑ္မၑာနေ နိဒဓတု, တွံ မမ ပၑ္စာဒ် အာဂစ္ဆ၊
௨௨அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம் செய்யட்டும், நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
23 အနန္တရံ တသ္မိန် နာဝမာရူဎေ တသျ ၑိၐျာသ္တတ္ပၑ္စာတ် ဇဂ္မုး၊
௨௩அவர் படகில் ஏறினபோது அவருடைய சீடர்கள் அவருக்குப் பின்னேசென்று ஏறினார்கள்.
24 ပၑ္စာတ် သာဂရသျ မဓျံ တေၐု ဂတေၐု တာဒၖၑး ပြဗလော ဈဉ္ဘ္ၑနိလ ဥဒတိၐ္ဌတ်, ယေန မဟာတရင်္ဂ ဥတ္ထာယ တရဏိံ ဆာဒိတဝါန်, ကိန္တု သ နိဒြိတ အာသီတ်၊
௨௪அப்பொழுது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாகக் கடலில் பெருங்காற்று உண்டானது. அவரோ தூங்கிக்கொண்டிருந்தார்.
25 တဒါ ၑိၐျာ အာဂတျ တသျ နိဒြာဘင်္ဂံ ကၖတွာ ကထယာမာသုး, ဟေ ပြဘော, ဝယံ မြိယာမဟေ, ဘဝါန် အသ္မာကံ ပြာဏာန် ရက္ၐတု၊
௨௫அப்பொழுது, அவருடைய சீடர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களைக் காப்பாற்றும், மரித்துப்போகிறோம் என்றார்கள்.
26 တဒါ သ တာန် ဥက္တဝါန်, ဟေ အလ္ပဝိၑွာသိနော ယူယံ ကုတော ဝိဘီထ? တတး သ ဥတ္ထာယ ဝါတံ သာဂရဉ္စ တရ္ဇယာမာသ, တတော နိရွွာတမဘဝတ်၊
௨௬அதற்கு அவர்: விசுவாசக்குறைவுள்ளவர்களே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார், உடனே, மிகுந்த அமைதல் உண்டானது.
27 အပရံ မနုဇာ ဝိသ္မယံ ဝိလောကျ ကထယာမာသုး, အဟော ဝါတသရိတ္ပတီ အသျ ကိမာဇ္ဉာဂြာဟိဏော်? ကီဒၖၑော'ယံ မာနဝး၊
௨௭அந்த மனிதர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.
28 အနန္တရံ သ ပါရံ ဂတွာ ဂိဒေရီယဒေၑမ် ဥပသ္ထိတဝါန်; တဒါ ဒွေါ် ဘူတဂြသ္တမနုဇော် ၑ္မၑာနသ္ထာနာဒ် ဗဟိ ရ္ဘူတွာ တံ သာက္ၐာတ် ကၖတဝန္တော်, တာဝေတာဒၖၑော် ပြစဏ္ဍာဝါသ္တာံ ယတ် တေန သ္ထာနေန ကောပိ ယာတုံ နာၑက္နောတ်၊
௨௮அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டிற்கு வந்தபோது, பிசாசுகள் பிடித்திருந்த இரண்டுபேர் கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியவர்களாக இருந்தபடியால், அந்தவழியாக ஒருவனும் நடக்கக்கூடாமலிருந்தது.
29 တာဝုစဲး ကထယာမာသတုး, ဟေ ဤၑွရသျ သူနော ယီၑော, တွယာ သာကမ် အာဝယေား ကး သမ္ဗန္ဓး? နိရူပိတကာလာတ် ပြာဂေဝ ကိမာဝါဘျာံ ယာတနာံ ဒါတုမ် အတြာဂတောသိ?
௨௯அவர்கள் அவரைப் பார்த்து: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று சத்தமிட்டார்கள்.
30 တဒါနီံ တာဘျာံ ကိဉ္စိဒ် ဒူရေ ဝရာဟာဏာမ် ဧကော မဟာဝြဇော'စရတ်၊
௩0அவர்களுக்கு சிறிது தூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன.
31 တတော ဘူတော် တော် တသျာန္တိကေ ဝိနီယ ကထယာမာသတုး, ယဒျာဝါံ တျာဇယသိ, တရှိ ဝရာဟာဏာံ မဓျေဝြဇမ် အာဝါံ ပြေရယ၊
௩௧அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி அனுமதிகொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன.
32 တဒါ ယီၑုရဝဒတ် ယာတံ, အနန္တရံ တော် ယဒါ မနုဇော် ဝိဟာယ ဝရာဟာန် အာၑြိတဝန္တော်, တဒါ တေ သရွွေ ဝရာဟာ ဥစ္စသ္ထာနာတ် မဟာဇဝေန ဓာဝန္တး သာဂရီယတောယေ မဇ္ဇန္တော မမြုး၊
௩௨அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிகளுக்குள் சென்றன; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து தண்ணீரில் இறந்துபோயின.
33 တတော ဝရာဟရက္ၐကား ပလာယမာနာ မဓျေနဂရံ တော် ဘူတဂြသ္တော် ပြတိ ယဒျဒ် အဃဋတ, တား သရွွဝါရ္တ္တာ အဝဒန်၊
௩௩அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் செய்திகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்கு நடந்தவைகளையும் அறிவித்தார்கள்.
34 တတော နာဂရိကား သရွွေ မနုဇာ ယီၑုံ သာက္ၐာတ် ကရ္တ္တုံ ဗဟိရာယာတား တဉ္စ ဝိလောကျ ပြာရ္ထယာဉ္စကြိရေ ဘဝါန် အသ္မာကံ သီမာတော ယာတု၊
௩௪அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் அனைவரும் இயேசுவிற்கு எதிர்கொண்டுவந்து, அவரைக்கண்டு, தங்களுடைய எல்லைகளைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.

< မထိး 8 >