< မထိး 6 >

1 သာဝဓာနာ ဘဝတ, မနုဇာန် ဒရ္ၑယိတုံ တေၐာံ ဂေါစရေ ဓရ္မ္မကရ္မ္မ မာ ကုရုတ, တထာ ကၖတေ ယုၐ္မာကံ သွရ္ဂသ္ထပိတုး သကာၑာတ် ကိဉ္စန ဖလံ န ပြာပ္သျထ၊
“நீங்கள் உங்கள் நற்செயல்களை மனிதர் முன்பாக அவர்கள் காணவேண்டுமென்று செய்யாதபடி கவனமாய் இருங்கள். நீங்கள் அப்படிச் செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவிடமிருந்து உங்களுக்கு வெகுமதி கிடைக்காது.
2 တွံ ယဒါ ဒဒါသိ တဒါ ကပဋိနော ဇနာ ယထာ မနုဇေဘျး ပြၑံသာံ ပြာပ္တုံ ဘဇနဘဝနေ ရာဇမာရ္ဂေ စ တူရီံ ဝါဒယန္တိ, တထာ မာ ကုရိ, အဟံ တုဘျံ ယထာရ္ထံ ကထယာမိ, တေ သွကာယံ ဖလမ် အလဘန္တ၊
“ஆகவே நீங்கள் ஏழைகளுக்கு கொடுக்கும்போது, தம்பட்டம் அடித்து அறிவிக்க வேண்டாம். மனிதர்களால் மதிப்பைப் பெறும்படி, வேஷக்காரர்கள் ஜெப ஆலயங்களிலும், வீதிகளிலும் செய்வதுபோல் செய்யவேண்டாம். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை முழுமையாய் பெற்றுவிட்டார்கள்.
3 ကိန္တု တွံ ယဒါ ဒဒါသိ, တဒါ နိဇဒက္ၐိဏကရော ယတ် ကရောတိ, တဒ် ဝါမကရံ မာ ဇ္ဉာပယ၊
ஆனால் நீங்கள் ஏழைகளுக்குக் கொடுக்கும்போது, உங்கள் வலதுகை செய்வதை உங்கள் இடதுகை அறியாதிருக்கட்டும்.
4 တေန တဝ ဒါနံ ဂုပ္တံ ဘဝိၐျတိ ယသ္တု တဝ ပိတာ ဂုပ္တဒရ္ၑီ, သ ပြကာၑျ တုဘျံ ဖလံ ဒါသျတိ၊
அப்பொழுது நீங்கள் கொடுப்பது இரகசியமாய் இருக்கும். நீங்கள் இரகசியமாய் செய்வதைக் காண்கிற உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதி அளிப்பார்.
5 အပရံ ယဒါ ပြာရ္ထယသေ, တဒါ ကပဋိနဣဝ မာ ကုရု, ယသ္မာတ် တေ ဘဇနဘဝနေ ရာဇမာရ္ဂသျ ကောဏေ တိၐ္ဌန္တော လောကာန် ဒရ္ၑယန္တး ပြာရ္ထယိတုံ ပြီယန္တေ; အဟံ ယုၐ္မာန် တထျံ ဝဒါမိ, တေ သွကီယဖလံ ပြာပ္နုဝန်၊
“நீங்கள் மன்றாடும்போது, வேஷக்காரர்களைப்போல் இருக்கவேண்டாம், ஏனெனில் அவர்கள் மனிதர் காணும்படி ஜெப ஆலயங்களிலும், வீதிகளின் சந்திகளிலும் நின்று மன்றாடுவதை விரும்புகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாய்ப் பெற்றுவிட்டார்கள்.
6 တသ္မာတ် ပြာရ္ထနာကာလေ အန္တရာဂါရံ ပြဝိၑျ ဒွါရံ ရုဒွွာ ဂုပ္တံ ပၑျတသ္တဝ ပိတုး သမီပေ ပြာရ္ထယသွ; တေန တဝ ယး ပိတာ ဂုပ္တဒရ္ၑီ, သ ပြကာၑျ တုဘျံ ဖလံ ဒါသျတိ
ஆனால் நீங்கள் மன்றாடும்போது, உங்கள் அறைக்குள் போய், கதவை மூடி கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவிடம் மன்றாடுங்கள். அப்பொழுது மறைவில் செய்யப்படுவதைக் காணும் உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதியளிப்பார்.
7 အပရံ ပြာရ္ထနာကာလေ ဒေဝပူဇကာဣဝ မုဓာ ပုနရုက္တိံ မာ ကုရု, ယသ္မာတ် တေ ဗောဓန္တေ, ဗဟုဝါရံ ကထာယာံ ကထိတာယာံ တေၐာံ ပြာရ္ထနာ ဂြာဟိၐျတေ၊
நீங்கள் மன்றாடும்போது, இறைவனை அறியாதவர்களைப்போல் வீண் வார்த்தைகளைப் பேசாதிருங்கள், ஏனெனில் தங்களின் அதிக வார்த்தைகளின் நிமித்தம், தங்கள் மன்றாட்டு கேட்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்கள்.
8 ယူယံ တေၐာမိဝ မာ ကုရုတ, ယသ္မာတ် ယုၐ္မာကံ ယဒ် ယတ် ပြယောဇနံ ယာစနာတး ပြာဂေဝ ယုၐ္မာကံ ပိတာ တတ် ဇာနာတိ၊
நீங்கள் அவர்களைப் போலிருக்க வேண்டாம், ஏனெனில் நீங்கள் கேட்கும் முன்னரே உங்கள் தேவையை உங்கள் பிதா அறிந்திருக்கிறார்.
9 အတဧဝ ယူယမ ဤဒၖက် ပြာရ္ထယဓွံ, ဟေ အသ္မာကံ သွရ္ဂသ္ထပိတး, တဝ နာမ ပူဇျံ ဘဝတု၊
“ஆகவே, நீங்கள் மன்றாட வேண்டிய விதம் இதுவே: “‘பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உமது பெயர் பரிசுத்தப்படுவதாக,
10 တဝ ရာဇတွံ ဘဝတု; တဝေစ္ဆာ သွရ္ဂေ ယထာ တထဲဝ မေဒိနျာမပိ သဖလာ ဘဝတု၊
உம்முடைய இராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரலோகத்திலே செய்யப்படுவதுபோல் பூமியிலேயும் செய்யப்படுவதாக.
11 အသ္မာကံ ပြယောဇနီယမ် အာဟာရမ် အဒျ ဒေဟိ၊
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
12 ဝယံ ယထာ နိဇာပရာဓိနး က္ၐမာမဟေ, တထဲဝါသ္မာကမ် အပရာဓာန် က္ၐမသွ၊
எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
13 အသ္မာန် ပရီက္ၐာံ မာနယ, ကိန္တု ပါပါတ္မနော ရက္ၐ; ရာဇတွံ ဂေါ်ရဝံ ပရာကြမး ဧတေ သရွွေ သရွွဒါ တဝ; တထာသ္တု၊
எங்களைச் சோதனைக்கு உட்படப்பண்ணாமல், எங்களைத் தீமையிலிருந்து இரட்சித்துக்கொள்ளும். இராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்.’
14 ယဒိ ယူယမ် အနျေၐာမ် အပရာဓာန် က္ၐမဓွေ တရှိ ယုၐ္မာကံ သွရ္ဂသ္ထပိတာပိ ယုၐ္မာန် က္ၐမိၐျတေ;
ஏனெனில், மனிதர் உங்களுக்கெதிராகக் குற்றம் செய்யும்போது நீங்கள் அவர்களை மன்னித்தால், உங்கள் பரலோகப் பிதாவும் உங்களை மன்னிப்பார்.
15 ကိန္တု ယဒိ ယူယမ် အနျေၐာမ် အပရာဓာန် န က္ၐမဓွေ, တရှိ ယုၐ္မာကံ ဇနကောပိ ယုၐ္မာကမ် အပရာဓာန် န က္ၐမိၐျတေ၊
ஆனால் மனிதருடைய குற்றங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாவிட்டால், உங்கள் பிதாவும் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிக்கமாட்டார்.
16 အပရမ် ဥပဝါသကာလေ ကပဋိနော ဇနာ မာနုၐာန် ဥပဝါသံ ဇ္ဉာပယိတုံ သွေၐာံ ဝဒနာနိ မ္လာနာနိ ကုရွွန္တိ, ယူယံ တဣဝ ဝိၐဏဝဒနာ မာ ဘဝတ; အဟံ ယုၐ္မာန် တထျံ ဝဒါမိ တေ သွကီယဖလမ် အလဘန္တ၊
“நீங்கள் உபவாசிக்கும்போது, வேஷக்காரர் செய்வதுபோல் வாடிய முகத்துடன் காணப்பட வேண்டாம். ஏனெனில் அவர்கள் தாங்கள் உபவாசிப்பதை மனிதர்கள் பார்க்கவேண்டுமென்று அவர்கள் தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், அவர்கள் தங்கள் வெகுமதியை ஏற்கெனவே முழுமையாகப் பெற்றுவிட்டார்கள் என்று நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
17 ယဒါ တွမ် ဥပဝသသိ, တဒါ ယထာ လောကဲသ္တွံ ဥပဝါသီဝ န ဒၖၑျသေ, ကိန္တု တဝ ယော'ဂေါစရး ပိတာ တေနဲဝ ဒၖၑျသေ, တတ္ကၖတေ နိဇၑိရသိ တဲလံ မရ္ဒ္ဒယ ဝဒနဉ္စ ပြက္ၐာလယ;
ஆனால் நீங்கள் உபவாசிக்கும்போது, உங்கள் தலைக்கு எண்ணெய் வைத்து, உங்கள் முகத்தைக் கழுவுங்கள்.
18 တေန တဝ ယး ပိတာ ဂုပ္တဒရ္ၑီ သ ပြကာၑျ တုဘျံ ဖလံ ဒါသျတိ၊
அப்பொழுது நீங்கள் உபவாசிப்பது மனிதருக்கு வெளிப்படையாகத் தெரியாதிருக்கும். ஆனால் கண்களுக்குக் காணப்படாதிருக்கிற உங்கள் பிதாவுக்கு மட்டும் தெரிந்திருக்கும்; மறைவில் செய்பவற்றை காண்கிற உங்கள் பிதா, உங்களுக்கு வெகுமதி அளிப்பார்.
19 အပရံ ယတြ သ္ထာနေ ကီဋား ကလင်္ကာၑ္စ က္ၐယံ နယန္တိ, စော်ရာၑ္စ သန္ဓိံ ကရ္တ္တယိတွာ စောရယိတုံ ၑက္နုဝန္တိ, တာဒၖၑျာံ မေဒိနျာံ သွာရ္ထံ ဓနံ မာ သံစိနုတ၊
“நீங்கள் பூமியில் உங்களுக்காகச் செல்வங்களைச் சேர்த்து வைக்கவேண்டாம். இங்கே அவை பூச்சி அரித்தும், துருப்பிடித்தும் அழிந்துவிடும். திருடரும் உடைத்துத் திருடுவார்கள்.
20 ကိန္တု ယတြ သ္ထာနေ ကီဋား ကလင်္ကာၑ္စ က္ၐယံ န နယန္တိ, စော်ရာၑ္စ သန္ဓိံ ကရ္တ္တယိတွာ စောရယိတုံ န ၑက္နုဝန္တိ, တာဒၖၑေ သွရ္ဂေ ဓနံ သဉ္စိနုတ၊
ஆனால் உங்களுடையச் செல்வத்தைப் பரலோகத்திலே சேர்த்துவையுங்கள். அங்கே அவை பூச்சி அரித்தோ, துருப்பிடித்தோ அழிவதில்லை. அங்கே திருடரும் உடைத்துத் திருடமாட்டார்கள்.
21 ယသ္မာတ် ယတြ သ္ထာနေ ယုၐ္မာံက ဓနံ တတြဲဝ ခါနေ ယုၐ္မာကံ မနာံသိ၊
ஏனெனில் உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும்.
22 လောစနံ ဒေဟသျ ပြဒီပကံ, တသ္မာတ် ယဒိ တဝ လောစနံ ပြသန္နံ ဘဝတိ, တရှိ တဝ ကၖတ္သ္နံ ဝပု ရ္ဒီပ္တိယုက္တံ ဘဝိၐျတိ၊
“கண் உடலின் விளக்காய் இருக்கிறது. உனது கண் நல்லதாய் இருந்தால், உன் முழு உடலும் வெளிச்சத்தால் நிரம்பியிருக்கும்.
23 ကိန္တု လောစနေ'ပြသန္နေ တဝ ကၖတ္သ္နံ ဝပုး တမိသြယုက္တံ ဘဝိၐျတိ၊ အတဧဝ ယာ ဒီပ္တိသ္တွယိ ဝိဒျတေ, သာ ယဒိ တမိသြယုက္တာ ဘဝတိ, တရှိ တတ် တမိသြံ ကိယန် မဟတ်၊
ஆனால் உன் கண் கெட்டதாயிருந்தால், உன் முழு உடலும் இருளால் நிறைந்திருக்கும். அப்படியானால், உன்னில் இருக்கும் வெளிச்சமே இருளாயிருந்தால், அந்த இருள் எவ்வளவு பெரியதாயிருக்கும்!
24 ကောပိ မနုဇော ဒွေါ် ပြဘူ သေဝိတုံ န ၑက္နောတိ, ယသ္မာဒ် ဧကံ သံမနျ တဒနျံ န သမ္မနျတေ, ယဒွါ ဧကတြ မနော နိဓာယ တဒနျမ် အဝမနျတေ; တထာ ယူယမပီၑွရံ လက္ၐ္မီဉ္စေတျုဘေ သေဝိတုံ န ၑက္နုထ၊
“எந்த வேலைக்காரனும், இரண்டு எஜமான்களுக்கு பணிசெய்ய முடியாது. அவன் ஒருவனை வெறுத்து, இன்னொருவனில் அன்பு செலுத்துவான். அல்லது அவன் ஒருவனுக்கு உண்மையுள்ளவனாய் இருந்து, மற்றவனை அலட்சியம் செய்வான். அப்படியே நீங்கள் இறைவனுக்கும், பணத்துக்கும் பணிசெய்ய முடியாது.
25 အပရမ် အဟံ ယုၐ္မဘျံ တထျံ ကထယာမိ, ကိံ ဘက္ၐိၐျာမး? ကိံ ပါသျာမး? ဣတိ ပြာဏဓာရဏာယ မာ စိန္တယတ; ကိံ ပရိဓာသျာမး? ဣတိ ကာယရက္ၐဏာယ န စိန္တယတ; ဘက္ၐျာတ် ပြာဏာ ဝသနာဉ္စ ဝပူံၐိ ကိံ ၑြေၐ္ဌာဏိ န ဟိ?
“ஆதலால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதை உண்ணுவோம் எதைக் குடிப்போம் என உங்கள் உயிரைக்குறித்துக் கவலைப்பட வேண்டாம்; அல்லது எதை உடுத்துவோம் என உங்கள் உடலைக்குறித்தும் கவலைப்பட வேண்டாம். உங்கள் உயிர் உணவைவிடவும், உங்கள் உடல் உடையைவிடவும் முக்கியமானதல்லவா?
26 ဝိဟာယသော ဝိဟင်္ဂမာန် ဝိလောကယတ; တဲ ရ္နောပျတေ န ကၖတျတေ ဘာဏ္ဍာဂါရေ န သဉ္စီယတေ'ပိ; တထာပိ ယုၐ္မာကံ သွရ္ဂသ္ထး ပိတာ တေဘျ အာဟာရံ ဝိတရတိ၊
ஆகாயத்துப் பறவைகளைப் பாருங்கள்; அவை விதைப்பதோ, அறுவடை செய்வதோ, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதோ இல்லை. அப்படி இருந்தும் உங்கள் பரலோக பிதா அவைகளுக்கும் உணவளிக்கிறார். நீங்கள் அவற்றைவிட அதிக மதிப்பு வாய்ந்தவர்கள் அல்லவா?
27 ယူယံ တေဘျး ကိံ ၑြေၐ္ဌာ န ဘဝထ? ယုၐ္မာကံ ကၑ္စိတ် မနုဇး စိန္တယန် နိဇာယုၐး က္ၐဏမပိ ဝရ္ဒ္ဓယိတုံ ၑက္နောတိ?
கவலைப்படுவதால், உங்களில் யார் தன் வாழ்நாளில் ஒருமணி நேரத்தைக் கூட்டமுடியும்?
28 အပရံ ဝသနာယ ကုတၑ္စိန္တယတ? က္ၐေတြောတ္ပန္နာနိ ပုၐ္ပာဏိ ကထံ ဝရ္ဒ္ဓန္တေ တဒါလောစယတ၊ တာနိ တန္တူန် နောတ္ပာဒယန္တိ ကိမပိ ကာရျျံ န ကုရွွန္တိ;
“உடையைக் குறித்தும் நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டு மலர்கள் எப்படி வளர்கின்றன என்று பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்கிறதுமில்லை.
29 တထာပျဟံ ယုၐ္မာန် ဝဒါမိ, သုလေမာန် တာဒၖဂ် အဲၑွရျျဝါနပိ တတ္ပုၐ္ပမိဝ ဝိဘူၐိတော နာသီတ်၊
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட, இவைகளில் ஒன்றைப்போல் உடை உடுத்தியதில்லை.
30 တသ္မာတ် က္ၐဒျ ဝိဒျမာနံ ၑ္စး စုလ္လျာံ နိက္ၐေပ္သျတေ တာဒၖၑံ ယတ် က္ၐေတြသ္ထိတံ ကုသုမံ တတ် ယဒီၑ္စရ ဣတ္ထံ ဗိဘူၐယတိ, တရှိ ဟေ သ္တောကပြတျယိနော ယုၐ္မာန် ကိံ န ပရိဓာပယိၐျတိ?
விசுவாசக் குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு நெருப்பிலே எறியப்படுகிற காட்டுப் புல்லுக்கே, இறைவன் இவ்வாறு உடுத்துவாரானால், உங்கள் பிதா உங்களுக்கு, எவ்வளவு அதிகமாய் உடுத்துவிப்பார்?
31 တသ္မာတ် အသ္မာဘိး ကိမတ္သျတေ? ကိဉ္စ ပါယိၐျတေ? ကိံ ဝါ ပရိဓာယိၐျတေ, ဣတိ န စိန္တယတ၊
எனவே என்னத்தை உண்போம்? என்னத்தைக் குடிப்போம்? என்னத்தை உடுப்போம்? என்று சொல்லிக் கவலைப்பட வேண்டாம்.
32 ယသ္မာတ် ဒေဝါရ္စ္စကာ အပီတိ စေၐ္ဋန္တေ; ဧတေၐု ဒြဝျေၐု ပြယောဇနမသ္တီတိ ယုၐ္မာကံ သွရ္ဂသ္ထး ပိတာ ဇာနာတိ၊
ஏனெனில் இறைவனை அறியாதவர்கள் இவற்றின் பின்னால் ஓடுகிறார்கள். உங்கள் பரலோக பிதாவோ இவை உங்களுக்குத் தேவை என அறிந்திருக்கிறார்.
33 အတဧဝ ပြထမတ ဤၑွရီယရာဇျံ ဓရ္မ္မဉ္စ စေၐ္ဋဓွံ, တတ ဧတာနိ ဝသ္တူနိ ယုၐ္မဘျံ ပြဒါယိၐျန္တေ၊
எனவே முதலாவதாக இறைவனுடைய அரசையும் அவரது நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்கு அவற்றோடுகூடக் கொடுக்கப்படும்.
34 ၑွး ကၖတေ မာ စိန္တယတ, ၑွဧဝ သွယံ သွမုဒ္ဒိၑျ စိန္တယိၐျတိ; အဒျတနီ ယာ စိန္တာ သာဒျကၖတေ ပြစုရတရာ၊
நாளைக்கு என்ன நடக்கும் என்று கவலைப்பட வேண்டாம். ஏனெனில் நாளையத்தினம், நாளைக்கான தேவையைப் பார்த்துக்கொள்ளும். ஒவ்வொரு நாளுக்கும், அன்றன்றுள்ள பிரச்சனையே போதும்.

< မထိး 6 >