< မထိး 24 >

1 အနန္တရံ ယီၑု ရျဒါ မန္ဒိရာဒ် ဗဟိ ရ္ဂစ္ဆတိ, တဒါနီံ ၑိၐျာသ္တံ မန္ဒိရနိရ္မ္မာဏံ ဒရ္ၑယိတုမာဂတား၊
இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, அவருடைய சீடர்கள் தேவாலயத்தின் கட்டிடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள்.
2 တတော ယီၑုသ္တာနုဝါစ, ယူယံ ကိမေတာနိ န ပၑျထ? ယုၐ္မာနဟံ သတျံ ဝဒါမိ, ဧတန္နိစယနသျ ပါၐာဏဲကမပျနျပါၐာဏေပရိ န သ္ထာသျတိ သရွွာဏိ ဘူမိသာတ် ကာရိၐျန္တေ၊
இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இந்த இடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல் இல்லாதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
3 အနန္တရံ တသ္မိန် ဇဲတုနပရွွတောပရိ သမုပဝိၐ္ဋေ ၑိၐျာသ္တသျ သမီပမာဂတျ ဂုပ္တံ ပပြစ္ဆုး, ဧတာ ဃဋနား ကဒါ ဘဝိၐျန္တိ? ဘဝတ အာဂမနသျ ယုဂါန္တသျ စ ကိံ လက္ၐ္မ? တဒသ္မာန် ဝဒတု၊ (aiōn g165)
பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கும்போது, சீடர்கள் அவரிடத்தில் தனிமையில் வந்து: இவைகள் எப்பொழுது நடக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவிற்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். (aiōn g165)
4 တဒါနီံ ယီၑုသ္တာနဝေါစတ်, အဝဓဒွွံ, ကောပိ ယုၐ္မာန် န ဘြမယေတ်၊
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: ஒருவனும் உங்களை ஏமாற்றாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்;
5 ဗဟဝေါ မမ နာမ ဂၖဟ္လန္တ အာဂမိၐျန္တိ, ခြီၐ္ဋော'ဟမေဝေတိ ဝါစံ ဝဒန္တော ဗဟူန် ဘြမယိၐျန္တိ၊
ஏனென்றால், அநேகர் வந்து, என் நாமத்தை வைத்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை ஏமாற்றுவார்கள்.
6 ယူယဉ္စ သံဂြာမသျ ရဏသျ စာဍမ္ဗရံ ၑြောၐျထ, အဝဓဒွွံ တေန စဉ္စလာ မာ ဘဝတ, ဧတာနျဝၑျံ ဃဋိၐျန္တေ, ကိန္တု တဒါ ယုဂါန္တော နဟိ၊
யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாக இருங்கள்; இவைகளெல்லாம் நடக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது.
7 အပရံ ဒေၑသျ ဝိပက္ၐော ဒေၑော ရာဇျသျ ဝိပက္ၐော ရာဇျံ ဘဝိၐျတိ, သ္ထာနေ သ္ထာနေ စ ဒုရ္ဘိက္ၐံ မဟာမာရီ ဘူကမ္ပၑ္စ ဘဝိၐျန္တိ,
மக்களுக்கு விரோதமாக மக்களும், ராஜ்யத்திற்கு விரோதமாக ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.
8 ဧတာနိ ဒုးခေါပကြမား၊
இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
9 တဒါနီံ လောကာ ဒုးခံ ဘောဇယိတုံ ယုၐ္မာန် ပရကရေၐု သမရ္ပယိၐျန္တိ ဟနိၐျန္တိ စ, တထာ မမ နာမကာရဏာဒ် ယူယံ သရွွဒေၑီယမနုဇာနာံ သမီပေ ဃၖဏာရှာ ဘဝိၐျထ၊
அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்: என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லா மக்களாலும் பகைக்கப்படுவீர்கள்.
10 ဗဟုၐု ဝိဃ္နံ ပြာပ္တဝတ္သု ပရသ္ပရမ် ၒတီယာံ ကၖတဝတ္သု စ ဧကော'ပရံ ပရကရေၐု သမရ္ပယိၐျတိ၊
௧0அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள்.
11 တထာ ဗဟဝေါ မၖၐာဘဝိၐျဒွါဒိန ဥပသ္ထာယ ဗဟူန် ဘြမယိၐျန္တိ၊
௧௧அநேகக் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை ஏமாற்றுவார்கள்.
12 ဒုၐ္ကရ္မ္မဏာံ ဗာဟုလျာဉ္စ ဗဟူနာံ ပြေမ ၑီတလံ ဘဝိၐျတိ၊
௧௨அக்கிரமம் பெருகுவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோகும்.
13 ကိန္တု ယး ကၑ္စိတ် ၑေၐံ ယာဝဒ် ဓဲရျျမာၑြယတေ, သဧဝ ပရိတြာယိၐျတေ၊
௧௩இறுதிவரை நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.
14 အပရံ သရွွဒေၑီယလောကာန် ပြတိမာက္ၐီ ဘဝိတုံ ရာဇသျ ၑုဘသမာစာရး သရွွဇဂတိ ပြစာရိၐျတေ, ဧတာဒၖၑိ သတိ ယုဂါန္တ ဥပသ္ထာသျတိ၊
௧௪ராஜ்யத்தினுடைய இந்த நற்செய்தி பூலோகமெங்கும் உள்ள எல்லா மக்களுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.
15 အတော ယတ် သရွွနာၑကၖဒ္ဃၖဏာရှံ ဝသ္တု ဒါနိယေလ္ဘဝိၐျဒွဒိနာ ပြောက္တံ တဒ် ယဒါ ပုဏျသ္ထာနေ သ္ထာပိတံ ဒြက္ၐျထ, (ယး ပဌတိ, သ ဗုဓျတာံ)
௧௫மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்து தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே, வாசிக்கிறவன் சிந்திக்கவேண்டும். நீங்கள் அதைப் பரிசுத்த இடத்தில் நிற்பதைப் பார்க்கும்போது,
16 တဒါနီံ ယေ ယိဟူဒီယဒေၑေ တိၐ္ဌန္တိ, တေ ပရွွတေၐု ပလာယန္တာံ၊
௧௬யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவேண்டும்.
17 ယး ကၑ္စိဒ် ဂၖဟပၖၐ္ဌေ တိၐ္ဌတိ, သ ဂၖဟာတ် ကိမပိ ဝသ္တွာနေတုမ် အဓေ နာဝရောဟေတ်၊
௧௭வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாவது எடுப்பதற்கு இறங்காமலிருக்கவேண்டும்.
18 ယၑ္စ က္ၐေတြေ တိၐ္ဌတိ, သောပိ ဝသ္တြမာနေတုံ ပရာဝၖတျ န ယာယာတ်၊
௧௮வயலில் இருக்கிறவன் தன் ஆடைகளை எடுப்பதற்குத் திரும்பாமலிருக்கவேண்டும்.
19 တဒါနီံ ဂရ္ဘိဏီသ္တနျပါယယိတြီဏာံ ဒုရ္ဂတိ ရ္ဘဝိၐျတိ၊
௧௯அந்த நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ.
20 အတော ယၐ္မာကံ ပလာယနံ ၑီတကာလေ ဝိၑြာမဝါရေ ဝါ ယန္န ဘဝေတ်, တဒရ္ထံ ပြာရ္ထယဓွမ်၊
௨0நீங்கள் ஓடிப்போவது மழைக் காலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, நடக்காதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள்.
21 အာ ဇဂဒါရမ္ဘာဒ် ဧတတ္ကာလပရျျနန္တံ ယာဒၖၑး ကဒါပိ နာဘဝတ် န စ ဘဝိၐျတိ တာဒၖၑော မဟာက္လေၑသ္တဒါနီမ် ဥပသ္ထာသျတိ၊
௨௧ஏனென்றால், உலகம் உண்டானதுமுதல் இதுவரைக்கும் நடக்காததும், இனிமேலும் நடைபெறாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும்.
22 တသျ က္လေၑသျ သမယော ယဒိ ဟ္သွော န ကြိယေတ, တရှိ ကသျာပိ ပြာဏိနော ရက္ၐဏံ ဘဝိတုံ န ၑက္နုယာတ်, ကိန္တု မနောနီတမနုဇာနာံ ကၖတေ သ ကာလော ဟ္သွီကရိၐျတေ၊
௨௨அந்த நாட்கள் குறைக்கப்படாமலிருந்தால், ஒருவன்கூட தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தம் அந்த நாட்கள் குறைக்கப்படும்.
23 အပရဉ္စ ပၑျတ, ခြီၐ္ဋော'တြ ဝိဒျတေ, ဝါ တတြ ဝိဒျတေ, တဒါနီံ ယဒီ ကၑ္စိဒ် ယုၐ္မာန ဣတိ ဝါကျံ ဝဒတိ, တထာပိ တတ် န ပြတီတ်၊
௨௩அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாவது சொன்னால் நம்பாதீர்கள்.
24 ယတော ဘာက္တခြီၐ္ဋာ ဘာက္တဘဝိၐျဒွါဒိနၑ္စ ဥပသ္ထာယ ယာနိ မဟန္တိ လက္ၐ္မာဏိ စိတြကရ္မ္မာဏိ စ ပြကာၑယိၐျန္တိ, တဲ ရျဒိ သမ္ဘဝေတ် တရှိ မနောနီတမာနဝါ အပိ ဘြာမိၐျန္တေ၊
௨௪ஏனென்றால், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்.
25 ပၑျတ, ဃဋနာတး ပူရွွံ ယုၐ္မာန် ဝါရ္တ္တာမ် အဝါဒိၐမ်၊
௨௫இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன்.
26 အတး ပၑျတ, သ ပြာန္တရေ ဝိဒျတ ဣတိ ဝါကျေ ကေနစိတ် ကထိတေပိ ဗဟိ ရ္မာ ဂစ္ဆတ, ဝါ ပၑျတ, သောန္တးပုရေ ဝိဒျတေ, ဧတဒွါကျ ဥက္တေပိ မာ ပြတီတ၊
௨௬ஆகவே: அதோ, வனாந்திரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாமலிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதீர்கள்.
27 ယတော ယထာ ဝိဒျုတ် ပူရွွဒိၑော နိရ္ဂတျ ပၑ္စိမဒိၑံ ယာဝတ် ပြကာၑတေ, တထာ မာနုၐပုတြသျာပျာဂမနံ ဘဝိၐျတိ၊
௨௭மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனிதகுமாரனுடைய வருகையும் இருக்கும்.
28 ယတြ ၑဝသ္တိၐ္ဌတိ, တတြေဝ ဂၖဓြာ မိလန္တိ၊
௨௮பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும்.
29 အပရံ တသျ က္လေၑသမယသျာဝျဝဟိတပရတြ သူရျျသျ တေဇော လောပ္သျတေ, စန္ဒြမာ ဇျောသ္နာံ န ကရိၐျတိ, နဘသော နက္ၐတြာဏိ ပတိၐျန္တိ, ဂဂဏီယာ ဂြဟာၑ္စ ဝိစလိၐျန္တိ၊
௨௯அந்தநாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் இருளடையும், சந்திரன் ஒளியைக் கொடுக்காமல் இருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் வல்லமைகள் அசைக்கப்படும்.
30 တဒါနီမ် အာကာၑမဓျေ မနုဇသုတသျ လက္ၐ္မ ဒရ္ၑိၐျတေ, တတော နိဇပရာကြမေဏ မဟာတေဇသာ စ မေဃာရူဎံ မနုဇသုတံ နဘသာဂစ္ဆန္တံ ဝိလောကျ ပၖထိဝျား သရွွဝံၑီယာ ဝိလပိၐျန္တိ၊
௩0அப்பொழுது மனிதகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனிதகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள எல்லாக் கோத்திரத்தார்களும் கண்டு புலம்புவார்கள்.
31 တဒါနီံ သ မဟာၑဗ္ဒာယမာနတူရျျာ ဝါဒကာန် နိဇဒူတာန် ပြဟေၐျတိ, တေ ဝျောမ္န ဧကသီမာတော'ပရသီမာံ ယာဝတ် စတုရ္ဒိၑသ္တသျ မနောနီတဇနာန် အာနီယ မေလယိၐျန္တိ၊
௩௧வலுவாகத் தொனிக்கும் எக்காளசத்தத்தோடு அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒருமுனைமுதல் மறுமுனைவரைக்கும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
32 ဥဍုမ္ဗရပါဒပသျ ဒၖၐ္ဋာန္တံ ၑိက္ၐဓွံ; ယဒါ တသျ နဝီနား ၑာခါ ဇာယန္တေ, ပလ္လဝါဒိၑ္စ နိရ္ဂစ္ဆတိ, တဒါ နိဒါဃကာလး သဝိဓော ဘဝတီတိ ယူယံ ဇာနီထ;
௩௨அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் நெருங்கிவிட்டது என்று அறிவீர்கள்.
33 တဒွဒ် ဧတာ ဃဋနာ ဒၖၐ္ဋွာ သ သမယော ဒွါရ ဥပါသ္ထာဒ် ဣတိ ဇာနီတ၊
௩௩அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் பார்க்கும்போது அவர் நெருக்கமாக வாசலின் அருகே வந்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
34 ယုၐ္မာနဟံ တထျံ ဝဒါမိ, ဣဒါနီန္တနဇနာနာံ ဂမနာတ် ပူရွွမေဝ တာနိ သရွွာဏိ ဃဋိၐျန္တေ၊
௩௪இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
35 နဘောမေဒိနျော ရ္လုပ္တယောရပိ မမ ဝါက် ကဒါပိ န လောပ္သျတေ၊
௩௫வானமும் பூமியும் ஒழிந்துபோகும், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
36 အပရံ မမ တာတံ ဝိနာ မာနုၐး သွရ္ဂသ္ထော ဒူတော ဝါ ကောပိ တဒ္ဒိနံ တဒ္ဒဏ္ဍဉ္စ န ဇ္ဉာပယတိ၊
௩௬அந்த நாளையும் அந்த நேரத்தையும் என் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.
37 အပရံ နောဟေ ဝိဒျမာနေ ယာဒၖၑမဘဝတ် တာဒၖၑံ မနုဇသုတသျာဂမနကာလေပိ ဘဝိၐျတိ၊
௩௭நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும்.
38 ဖလတော ဇလာပ္လာဝနာတ် ပူရွွံ ယဒ္ဒိနံ ယာဝတ် နောဟး ပေါတံ နာရောဟတ်, တာဝတ္ကာလံ ယထာ မနုၐျာ ဘောဇနေ ပါနေ ဝိဝဟနေ ဝိဝါဟနေ စ ပြဝၖတ္တာ အာသန်;
௩௮எப்படியென்றால், பெருவெள்ளத்திற்கு முன்னான காலத்திலே நோவா கப்பலுக்குள் பிரவேசிக்கும் நாள்வரை, மக்கள் புசித்தும் குடித்தும், பெண் எடுத்தும் பெண் கொடுத்தும்,
39 အပရမ် အာပ္လာဝိတောယမာဂတျ ယာဝတ် သကလမနုဇာန် ပ္လာဝယိတွာ နာနယတ်, တာဝတ် တေ ယထာ န ဝိဒါမာသုး, တထာ မနုဇသုတာဂမနေပိ ဘဝိၐျတိ၊
௩௯பெருவெள்ளம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகும்வரை உணராமல் இருந்தார்கள்; அப்படியே மனிதகுமாரன் வரும்காலத்திலும் நடக்கும்.
40 တဒါ က္ၐေတြသ္ထိတယောရ္ဒွယောရေကော ဓာရိၐျတေ, အပရသ္တျာဇိၐျတေ၊
௪0அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான்.
41 တထာ ပေၐဏျာ ပိံၐတျောရုဘယော ရျောၐိတောရေကာ ဓာရိၐျတေ'ပရာ တျာဇိၐျတေ၊
௪௧இரண்டு பெண்கள் மாவு அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்.
42 ယုၐ္မာကံ ပြဘုး ကသ္မိန် ဒဏ္ဍ အာဂမိၐျတိ, တဒ် ယုၐ္မာဘိ ရ္နာဝဂမျတေ, တသ္မာတ် ဇာဂြတး သန္တသ္တိၐ္ဌတ၊
௪௨உங்களுடைய ஆண்டவர் எந்த நேரத்திலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.
43 ကုတြ ယာမေ သ္တေန အာဂမိၐျတီတိ စေဒ် ဂၖဟသ္ထော ဇ္ဉာတုမ် အၑက္ၐျတ်, တရှိ ဇာဂရိတွာ တံ သန္ဓိံ ကရ္တ္တိတုမ် အဝါရယိၐျတ် တဒ် ဇာနီတ၊
௪௩திருடன் இரவிலே எந்த நேரத்திலே வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கொள்ளையடிக்கவிடமாட்டான் என்று அறிவீர்கள்.
44 ယုၐ္မာဘိရဝဓီယတာံ, ယတော ယုၐ္မာဘိ ရျတြ န ဗုဓျတေ, တတြဲဝ ဒဏ္ဍေ မနုဇသုတ အာယာသျတိ၊
௪௪நீங்கள் நினைக்காத நேரத்திலே மனிதகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாக இருங்கள்.
45 ပြဘု ရ္နိဇပရိဝါရာန် ယထာကာလံ ဘောဇယိတုံ ယံ ဒါသမ် အဓျက္ၐီကၖတျ သ္ထာပယတိ, တာဒၖၑော ဝိၑွာသျော ဓီမာန် ဒါသး ကး?
௪௫ஏற்ற நேரத்திலே தன் வேலைக்காரர்களுக்கு ஆகாரங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள வேலைக்காரன் யார்?
46 ပြဘုရာဂတျ ယံ ဒါသံ တထာစရန္တံ ဝီက္ၐတေ, သဧဝ ဓနျး၊
௪௬எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற வேலைக்காரனே பாக்கியவான்.
47 ယုၐ္မာနဟံ သတျံ ဝဒါမိ, သ တံ နိဇသရွွသွသျာဓိပံ ကရိၐျတိ၊
௪௭தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
48 ကိန္တု ပြဘုရာဂန္တုံ ဝိလမ္ဗတ ဣတိ မနသိ စိန္တယိတွာ ယော ဒုၐ္ဋော ဒါသော
௪௮அந்த வேலைக்காரனோ பொல்லாதவனாக இருந்து: என் எஜமான் வர நாளாகும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,
49 'ပရဒါသာန် ပြဟရ္တ္တုံ မတ္တာနာံ သင်္ဂေ ဘောက္တုံ ပါတုဉ္စ ပြဝရ္တ္တတေ,
௪௯தன் உடன்வேலைக்காரர்களை அடிக்கவும், குடிகாரர்களோடு புசிக்கவும் குடிக்கவும் தொடங்கினால்,
50 သ ဒါသော ယဒါ နာပေက္ၐတေ, ယဉ္စ ဒဏ္ဍံ န ဇာနာတိ, တတ္ကာလဧဝ တတ္ပြဘုရုပသ္ထာသျတိ၊
௫0அந்த வேலைக்காரன் நினைக்காத நாளிலும், அறியாத நேரத்திலும், அவனுடைய எஜமான் வந்து,
51 တဒါ တံ ဒဏ္ဍယိတွာ ယတြ သ္ထာနေ ရောဒနံ ဒန္တဃရ္ၐဏဉ္စာသာတေ, တတြ ကပဋိဘိး သာကံ တဒ္ဒၑာံ နိရူပယိၐျတိ၊
௫௧அவனைக் கடினமாகத் தண்டித்து, மாயக்காரர்களோடு அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

< မထိး 24 >