< မထိး 22 >

1 အနန္တရံ ယီၑုး ပုနရပိ ဒၖၐ္ဋာန္တေန တာန် အဝါဒီတ်,
இயேசு மறுபடியும் அவர்களோடு உவமைகளாகப் பேசிச் சொன்னது என்னவென்றால்:
2 သွရ္ဂီယရာဇျမ် ဧတာဒၖၑသျ နၖပတေး သမံ, ယော နိဇ ပုတြံ ဝိဝါဟယန် သရွွာန် နိမန္တြိတာန် အာနေတုံ ဒါသေယာန် ပြဟိတဝါန်,
பரலோகராஜ்யம் தன் குமாரனுக்கு திருமணம் செய்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது.
3 ကိန္တု တေ သမာဂန္တုံ နေၐ္ဋဝန္တး၊
அழைக்கப்பட்டவர்களைத் திருமணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் வேலைக்காரர்களை அனுப்பினான்; அவர்களோ வர விருப்பமில்லாதிருந்தார்கள்.
4 တတော ရာဇာ ပုနရပိ ဒါသာနနျာန် ဣတျုက္တွာ ပြေၐယာမာသ, နိမန္တြိတာန် ဝဒတ, ပၑျတ, မမ ဘေဇျမာသာဒိတမာသ္တေ, နိဇဝ္ဋၐာဒိပုၐ္ဋဇန္တူန် မာရယိတွာ သရွွံ ခါဒျဒြဝျမာသာဒိတဝါန်, ယူယံ ဝိဝါဟမာဂစ္ဆတ၊
அப்பொழுது அவன் வேறு வேலைக்காரர்களை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம் செய்தேன், என் எருதுகளும், கொழுத்த கன்றுக்குட்டிகளும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாக இருக்கிறது; திருமணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.
5 တထပိ တေ တုစ္ဆီကၖတျ ကေစိတ် နိဇက္ၐေတြံ ကေစိဒ် ဝါဏိဇျံ ပြတိ သွသွမာရ္ဂေဏ စလိတဝန္တး၊
அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைசெய்து, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்திற்கும் போய்விட்டார்கள்.
6 အနျေ လောကာသ္တသျ ဒါသေယာန် ဓၖတွာ ဒေါ်ရာတ္မျံ ဝျဝဟၖတျ တာနဝဓိၐုး၊
மற்றவர்கள் அவனுடைய வேலைக்காரர்களைப்பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள்.
7 အနန္တရံ သ နၖပတိသ္တာံ ဝါရ္တ္တာံ ၑြုတွာ ကြုဓျန် သဲနျာနိ ပြဟိတျ တာန် ဃာတကာန် ဟတွာ တေၐာံ နဂရံ ဒါဟယာမာသ၊
ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் படைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகர்களை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான்.
8 တတး သ နိဇဒါသေယာန် ဗဘာၐေ, ဝိဝါဟီယံ ဘောဇျမာသာဒိတမာသ္တေ, ကိန္တု နိမန္တြိတာ ဇနာ အယောဂျား၊
அப்பொழுது, அவன் தன் வேலைக்காரர்களைப் பார்த்து: திருமணவிருந்து ஆயத்தமாக இருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு தகுதியற்றவர்களாக போனார்கள்.
9 တသ္မာဒ် ယူယံ ရာဇမာရ္ဂံ ဂတွာ ယာဝတော မနုဇာန် ပၑျတ, တာဝတဧဝ ဝိဝါဟီယဘောဇျာယ နိမန္တြယတ၊
ஆகவே, நீங்கள் வீதிகளிலேபோய், காணப்படுகிற அனைவரையும் திருமணத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள் என்றான்.
10 တဒါ တေ ဒါသေယာ ရာဇမာရ္ဂံ ဂတွာ ဘဒြာန် အဘဒြာန် ဝါ ယာဝတော ဇနာန် ဒဒၖၑုး, တာဝတဧဝ သံဂၖဟျာနယန်; တတော'ဘျာဂတမနုဇဲ ရွိဝါဟဂၖဟမ် အပူရျျတ၊
௧0அந்த வேலைக்காரர்கள் புறப்பட்டு, வழிகளிலேபோய், தாங்கள் கண்ட நல்லவர்கள் பொல்லாதவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிறைந்திருந்தது.
11 တဒါနီံ သ ရာဇာ သရွွာနဘျာဂတာန် ဒြၐ္ဋုမ် အဘျန္တရမာဂတဝါန်; တဒါ တတြ ဝိဝါဟီယဝသနဟီနမေကံ ဇနံ ဝီက္ၐျ တံ ဇဂါဒ်,
௧௧விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே நுழைந்தபோது, திருமணஆடை அணிந்திராத ஒரு மனிதனை அங்கே பார்த்து:
12 ဟေ မိတြ, တွံ ဝိဝါဟီယဝသနံ ဝိနာ ကထမတြ ပြဝိၐ္ဋဝါန်? တေန သ နိရုတ္တရော ဗဘူဝ၊
௧௨நண்பனே, நீ திருமணஆடை இல்லாதவனாக இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான்.
13 တဒါ ရာဇာ နိဇာနုစရာန် အဝဒတ်, ဧတသျ ကရစရဏာန် ဗဒ္ဓါ ယတြ ရောဒနံ ဒန္တဲရ္ဒန္တဃရ္ၐဏဉ္စ ဘဝတိ, တတြ ဝဟိရ္ဘူတတမိသြေ တံ နိက္ၐိပတ၊
௧௩அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரர்களைப் பார்த்து: இவனுடைய கையையும் காலையும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான்.
14 ဣတ္ထံ ဗဟဝ အာဟူတာ အလ္ပေ မနောဘိမတား၊
௧௪அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார்.
15 အနန္တရံ ဖိရူၑိနး ပြဂတျ ယထာ သံလာပေန တမ် ဥန္မာထေ ပါတယေယုသ္တထာ မန္တြယိတွာ
௧௫அப்பொழுது, பரிசேயர்கள்போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைசெய்து,
16 ဟေရောဒီယမနုဇဲး သာကံ နိဇၑိၐျဂဏေန တံ ပြတိ ကထယာမာသုး, ဟေ ဂုရော, ဘဝါန် သတျး သတျမီၑွရီယမာရ္ဂမုပဒိၑတိ, ကမပိ မာနုၐံ နာနုရုဓျတေ, ကမပိ နာပေက္ၐတေ စ, တဒ် ဝယံ ဇာနီမး၊
௧௬தங்களுடைய சீடர்களையும் ஏரோதியர்களையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் உண்மையுள்ளவரென்றும், தேவனுடைய வழியை உண்மையாக போதிக்கிறவரென்றும், நீர் பட்சபாதமில்லாதவராக இருப்பதால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலை இல்லையென்றும் அறிந்திருக்கிறோம்.
17 အတး ကဲသရဘူပါယ ကရော'သ္မာကံ ဒါတဝျော န ဝါ? အတြ ဘဝတာ ကိံ ဗုဓျတေ? တဒ် အသ္မာန် ဝဒတု၊
௧௭ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள்.
18 တတော ယီၑုသ္တေၐာံ ခလတာံ ဝိဇ္ဉာယ ကထိတဝါန်, ရေ ကပဋိနး ယုယံ ကုတော မာံ ပရိက္ၐဓွေ?
௧௮இயேசு, அவர்களுடைய தீயகுணத்தை அறிந்து: மாயக்காரர்களே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்?
19 တတ္ကရဒါနသျ မုဒြာံ မာံ ဒရ္ၑယတ၊ တဒါနီံ တဲသ္တသျ သမီပံ မုဒြာစတုရ္ထဘာဂ အာနီတေ
௧௯வரிப்பணத்தை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்.
20 သ တာန် ပပြစ္ဆ, အတြ ကသျေယံ မူရ္တ္တိ ရ္နာမ စာသ္တေ? တေ ဇဂဒုး, ကဲသရဘူပသျ၊
௨0அப்பொழுது அவர்: இந்த உருவமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.
21 တတး သ ဥက္တဝါန, ကဲသရသျ ယတ် တတ် ကဲသရာယ ဒတ္တ, ဤၑွရသျ ယတ် တဒ် ဤၑွရာယ ဒတ္တ၊
௨௧இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.
22 ဣတိ ဝါကျံ နိၑမျ တေ ဝိသ္မယံ ဝိဇ္ဉာယ တံ ဝိဟာယ စလိတဝန္တး၊
௨௨அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரைவிட்டுப் போய்விட்டார்கள்.
23 တသ္မိန္နဟနိ သိဒူကိနော'ရ္ထာတ် ၑ္မၑာနာတ် နောတ္ထာသျန္တီတိ ဝါကျံ ယေ ဝဒန္တိ, တေ ယီၑေရန္တိကမ် အာဂတျ ပပြစ္ဆုး,
௨௩உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர்கள் அன்றையதினம் அவரிடம் வந்து:
24 ဟေ ဂုရော, ကၑ္စိန္မနုဇၑ္စေတ် နိးသန္တာနး သန် ပြာဏာန် တျဇတိ, တရှိ တသျ ဘြာတာ တသျ ဇာယာံ ဝျုဟျ ဘြာတုး သန္တာနမ် ဥတ္ပာဒယိၐျတီတိ မူသာ အာဒိၐ္ဋဝါန်၊
௨௪போதகரே, ஒருவன் வாரிசு இல்லாமல் மரித்துப்போனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை திருமணம்செய்து, தன் சகோதரனுக்கு வாரிசு உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே.
25 ကိန္တွသ္မာကမတြ ကေ'ပိ ဇနား သပ္တသဟောဒရာ အာသန်, တေၐာံ ဇျေၐ္ဌ ဧကာံ ကနျာံ ဝျဝဟာတ်, အပရံ ပြာဏတျာဂကာလေ သွယံ နိးသန္တာနး သန် တာံ သ္တြိယံ သွဘြာတရိ သမရ္ပိတဝါန်,
௨௫எங்களுக்குள்ளே சகோதரர்கள் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் திருமணம்செய்து, மரித்து, வாரிசு இல்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுப்போனான்.
26 တတော ဒွိတီယာဒိသပ္တမာန္တာၑ္စ တထဲဝ စကြုး၊
௨௬அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள்.
27 ၑေၐေ သာပီ နာရီ မမာရ၊
௨௭எல்லோருக்கும்பின்பு அந்த பெண்ணும் மரித்துப்போனாள்.
28 မၖတာနာမ် ဥတ္ထာနသမယေ တေၐာံ သပ္တာနာံ မဓျေ သာ နာရီ ကသျ ဘာရျျာ ဘဝိၐျတိ? ယသ္မာတ် သရွွဧဝ တာံ ဝျဝဟန်၊
௨௮ஆகவே, உயிர்த்தெழுதலில் அந்த ஏழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாக இருப்பாள்? அவர்கள் எல்லோரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள்.
29 တတော ယီၑုး ပြတျဝါဒီတ်, ယူယံ ဓရ္မ္မပုသ္တကမ် ဤၑွရီယာံ ၑက္တိဉ္စ န ဝိဇ္ဉာယ ဘြာန္တိမန္တး၊
௨௯இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தவறாகப் புரிந்துகொள்ளுகிறீர்கள்.
30 ဥတ္ထာနပြာပ္တာ လောကာ န ဝိဝဟန္တိ, န စ ဝါစာ ဒီယန္တေ, ကိန္တွီၑွရသျ သွရ္ဂသ္ထဒူတာနာံ သဒၖၑာ ဘဝန္တိ၊
௩0உயிர்த்தெழுதலில் பெண் எடுப்பதும் இல்லை, கொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதர்களைப்போல இருப்பார்கள்;
31 အပရံ မၖတာနာမုတ္ထာနမဓိ ယုၐ္မာန် ပြတီယမီၑွရောက္တိး,
௩௧மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாக இருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?
32 "အဟမိဗြာဟီမ ဤၑွရ ဣသှာက ဤၑွရော ယာကူဗ ဤၑွရ" ဣတိ ကိံ ယုၐ္မာဘိ ရ္နာပါဌိ? ကိန္တွီၑွရော ဇီဝတာမ် ဤၑွရ: , သ မၖတာနာမီၑွရော နဟိ၊
௩௨தேவன் மரித்தோருக்கு தேவனாக இல்லாமல், ஜீவனுள்ளோருக்கு தேவனாக இருக்கிறார் என்றார்.
33 ဣတိ ၑြုတွာ သရွွေ လောကာသ္တသျောပဒေၑာဒ် ဝိသ္မယံ ဂတား၊
௩௩மக்கள் இதைக்கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.
34 အနန္တရံ သိဒူကိနာမ် နိရုတ္တရတွဝါရ္တာံ နိၑမျ ဖိရူၑိန ဧကတြ မိလိတဝန္တး,
௩௪அவர் சதுசேயர்களைப் பேசவிடாமல் வாயடைத்தார் என்று பரிசேயர்கள் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள்.
35 တေၐာမေကော ဝျဝသ္ထာပကော ယီၑုံ ပရီက္ၐိတုံ ပပစ္ဆ,
௩௫அவர்களில் நியாயப்பண்டிதன் ஒருவன் அவரைச் சோதிக்கும்படி:
36 ဟေ ဂုရော ဝျဝသ္ထာၑာသ္တြမဓျေ ကာဇ္ဉာ ၑြေၐ္ဌာ?
௩௬போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கட்டளை முதன்மையானது என்று கேட்டான்.
37 တတော ယီၑုရုဝါစ, တွံ သရွွာန္တးကရဏဲး သရွွပြာဏဲး သရွွစိတ္တဲၑ္စ သာကံ ပြဘော် ပရမေၑွရေ ပြီယသွ,
௩௭இயேசு அவனைப் பார்த்து: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புசெலுத்துவாயாக;
38 ဧၐာ ပြထမမဟာဇ္ဉာ၊ တသျား သဒၖၑီ ဒွိတီယာဇ္ဉဲၐာ,
௩௮இது முதலாம் பெரிய கட்டளை.
39 တဝ သမီပဝါသိနိ သွာတ္မနီဝ ပြေမ ကုရု၊
௩௯இதற்கு இணையாக இருக்கிற இரண்டாம் கட்டளை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புசெலுத்துவதுபோல மற்றவனிடத்திலும் அன்புசெலுத்துவாயாக என்பதே.
40 အနယော ရ္ဒွယောရာဇ္ဉယေား ကၖတ္သ္နဝျဝသ္ထာယာ ဘဝိၐျဒွက္တၖဂြန္ထသျ စ ဘာရသ္တိၐ္ဌတိ၊
௪0இவ்விரண்டு கட்டளைகளிலும் நியாயப்பிரமாணம் முழுவதும், தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார்.
41 အနန္တရံ ဖိရူၑိနာမ် ဧကတြ သ္ထိတိကာလေ ယီၑုသ္တာန် ပပြစ္ဆ,
௪௧பரிசேயர்கள் கூடியிருக்கும்போது, இயேசு அவர்களைப் பார்த்து:
42 ခြီၐ္ဋမဓိ ယုၐ္မာကံ ကီဒၖဂ္ဗောဓော ဇာယတေ? သ ကသျ သန္တာနး? တတသ္တေ ပြတျဝဒန်, ဒါယူဒး သန္တာနး၊
௪௨கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள்.
43 တဒါ သ ဥက္တဝါန်, တရှိ ဒါယူဒ် ကထမ် အာတ္မာဓိၐ္ဌာနေန တံ ပြဘုံ ဝဒတိ?
௪௩அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியானவராலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
44 ယထာ မမ ပြဘုမိဒံ ဝါကျမဝဒတ် ပရမေၑွရး၊ တဝါရီန် ပါဒပီဌံ တေ ယာဝန္နဟိ ကရောမျဟံ၊ တာဝတ် ကာလံ မဒီယေ တွံ ဒက္ၐပါရ္ၑွ ဥပါဝိၑ၊ အတော ယဒိ ဒါယူဒ် တံ ပြဘုံ ဝဒတိ, ရ္တိဟ သ ကထံ တသျ သန္တာနော ဘဝတိ?
௪௪நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரிடம் சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
45 တဒါနီံ တေၐာံ ကောပိ တဒွါကျသျ ကိမပျုတ္တရံ ဒါတုံ နာၑက္နောတ်;
௪௫தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி என்றார்.
46 တဒ္ဒိနမာရဘျ တံ ကိမပိ ဝါကျံ ပြၐ္ဋုံ ကသျာပိ သာဟသော နာဘဝတ်၊
௪௬அதற்கு மறுமொழியாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லமுடியாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.

< မထိး 22 >