< မထိး 18 >

1 တဒါနီံ ၑိၐျာ ယီၑေား သမီပမာဂတျ ပၖၐ္ဋဝန္တး သွရ္ဂရာဇျေ ကး ၑြေၐ္ဌး?
அந்த வேளையில் சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பரலோக அரசில் யார் பெரியவன்?” என்று கேட்டார்கள்.
2 တတော ယီၑုး က္ၐုဒြမေကံ ဗာလကံ သွသမီပမာနီယ တေၐာံ မဓျေ နိဓာယ ဇဂါဒ,
அவர் ஒரு சிறுபிள்ளையை தன்னிடமாக அழைத்து, அவர்கள் நடுவில் நிறுத்தினார்.
3 ယုၐ္မာနဟံ သတျံ ဗြဝီမိ, ယူယံ မနောဝိနိမယေန က္ၐုဒြဗာလဝတ် န သန္တး သွရ္ဂရာဇျံ ပြဝေၐ္ဋုံ န ၑက္နုထ၊
அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நீங்கள் மனமாற்றம் அடைந்து சிறுபிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் ஒருபோதும் பரலோக அரசிற்குள் செல்லமாட்டீர்கள்.
4 ယး ကၑ္စိဒ် ဧတသျ က္ၐုဒြဗာလကသျ သမမာတ္မာနံ နမြီကရောတိ, သဧဝ သွရ္ဂရာဇယေ ၑြေၐ္ဌး၊
ஆதலால், இந்தச் சிறுபிள்ளையைப்போல் தன்னைத் தாழ்த்துகிறவனே பரலோக அரசில் பெரியவனாய் இருக்கிறான்” என்றார்.
5 ယး ကၑ္စိဒ် ဧတာဒၖၑံ က္ၐုဒြဗာလကမေကံ မမ နာမ္နိ ဂၖဟ္လာတိ, သ မာမေဝ ဂၖဟ္လာတိ၊
“இப்படி ஒரு சிறுபிள்ளையை என் பெயரில் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னையும் ஏற்றுக்கொள்ளுகிறான்.
6 ကိန္တု ယော ဇနော မယိ ကၖတဝိၑွာသာနာမေတေၐာံ က္ၐုဒြပြာဏိနာမ် ဧကသျာပိ ဝိဓ္နိံ ဇနယတိ, ကဏ္ဌဗဒ္ဓပေၐဏီကသျ တသျ သာဂရာဂါဓဇလေ မဇ္ဇနံ ၑြေယး၊
“என்னில் விசுவாசம் வைத்துள்ள, இந்தச் சிறியவர்களில் எவரையாவது பாவத்தில் விழப்பண்ணினால், அவனுடைய கழுத்திலே பெரிய திரிகைக் கல்லொன்றைக் கட்டி, கடலின் ஆழத்தில் அவன் தள்ளப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும்.
7 ဝိဃ္နာတ် ဇဂတး သန္တာပေါ ဘဝိၐျတိ, ဝိဃ္နော'ဝၑျံ ဇနယိၐျတေ, ကိန္တု ယေန မနုဇေန ဝိဃ္နော ဇနိၐျတေ တသျဲဝ သန္တာပေါ ဘဝိၐျတိ၊
மக்களைப் பாவத்தில் விழப்பண்ணும், காரியங்களின் நிமித்தம், உலகத்திற்கு ஐயோ! இப்படிப்பட்ட காரியங்கள் வரவேண்டியதே. ஆனால் யார் மூலம் அது வருகிறதோ அந்த மனிதனுக்கு ஐயோ!
8 တသ္မာတ် တဝ ကရၑ္စရဏော ဝါ ယဒိ တွာံ ဗာဓတေ, တရှိ တံ ဆိတ္တွာ နိက္ၐိပ, ဒွိကရသျ ဒွိပဒသျ ဝါ တဝါနပ္တဝဟ္နော် နိက္ၐေပါတ်, ခဉ္ဇသျ ဝါ ဆိန္နဟသ္တသျ တဝ ဇီဝနေ ပြဝေၑော ဝရံ၊ (aiōnios g166)
உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஊனமாகவோ முடமாகவோ நித்திய வாழ்விற்குள் செல்வது உனக்குச் சிறந்தது. (aiōnios g166)
9 အပရံ တဝ နေတြံ ယဒိ တွာံ ဗာဓတေ, တရှိ တဒပျုတ္ပာဝျ နိက္ၐိပ, ဒွိနေတြသျ နရကာဂ္နော် နိက္ၐေပါတ် ကာဏသျ တဝ ဇီဝနေ ပြဝေၑော ဝရံ၊ (Geenna g1067)
உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. இரண்டு கண்களுடையவனாய் நரகத்தின் நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் நித்திய வாழ்விற்குள் செல்வது சிறந்தது. (Geenna g1067)
10 တသ္မာဒဝဓဒ္ဓံ, ဧတေၐာံ က္ၐုဒြပြာဏိနာမ် ဧကမပိ မာ တုစ္ဆီကုရုတ,
“நீங்கள் இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அலட்சியம் பண்ணாதபடி கவனமாய் இருங்கள். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன், பரலோகத்திலுள்ள அவர்களுக்குரிய இறைத்தூதர்கள் எனது பரலோக பிதாவின் முகத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
11 ယတော ယုၐ္မာနဟံ တထျံ ဗြဝီမိ, သွရ္ဂေ တေၐာံ ဒူတာ မမ သွရ္ဂသ္ထသျ ပိတုရာသျံ နိတျံ ပၑျန္တိ၊ ဧဝံ ယေ ယေ ဟာရိတာသ္တာန် ရက္ၐိတုံ မနုဇပုတြ အာဂစ္ဆတ်၊
ஏனெனில் மானிடமகன் வழிதப்பிப் போனவர்களை இரட்சிக்கவே வந்தார்.
12 ယူယမတြ ကိံ ဝိဝိံဂ္ဃွေ? ကသျစိဒ် ယဒိ ၑတံ မေၐား သန္တိ, တေၐာမေကော ဟာရျျတေ စ, တရှိ သ ဧကောနၑတံ မေၐာန် ဝိဟာယ ပရွွတံ ဂတွာ တံ ဟာရိတမေကံ ကိံ န မၖဂယတေ?
“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருந்தாலும், அவற்றில் ஒன்று வழிதவறிப் போனால், அந்தத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழி தவறியதைத் தேடிப் போகமாட்டானோ?
13 ယဒိ စ ကဒါစိတ် တန္မေၐောဒ္ဒေၑံ လမတေ, တရှိ ယုၐ္မာနဟံ သတျံ ကထယာမိ, သော'ဝိပထဂါမိဘျ ဧကောနၑတမေၐေဘျောပိ တဒေကဟေတောရဓိကမ် အာဟ္လာဒတေ၊
நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, வழிதவறிப் போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைவிட, அந்த ஒரு ஆட்டைக் குறித்து அதிகமாக சந்தோஷப்படுகிறான்.
14 တဒွဒ် ဧတေၐာံ က္ၐုဒြပြာဧနာမ် ဧကောပိ နၑျတီတိ ယုၐ္မာကံ သွရ္ဂသ္ထပိတု ရ္နာဘိမတမ်၊
அதுபோலவே இந்தச் சிறியவர்களில் ஒருவனும் வழிதவறிப் போவது உங்கள் பரலோக பிதாவின் விருப்பமல்ல.
15 ယဒျပိ တဝ ဘြာတာ တွယိ ကိမပျပရာဓျတိ, တရှိ ဂတွာ ယုဝယောရ္ဒွယေား သ္ထိတယောသ္တသျာပရာဓံ တံ ဇ္ဉာပယ၊ တတြ သ ယဒိ တဝ ဝါကျံ ၑၖဏောတိ, တရှိ တွံ သွဘြာတရံ ပြာပ္တဝါန်,
“உன் சகோதர சகோதரிகளுள் ஒருவர் உனக்கு எதிராகப் பாவம்செய்தால், நீ போய் அவருடைய குற்றத்தை அவருக்குச் சுட்டிக்காட்டு. உங்கள் இருவருக்கும் இடையில் மட்டுமே அது செய்யப்படட்டும். அவர் உனக்குச் செவிகொடுத்தால், நீ உனது சகோதரன் அல்லது சகோதரியை இழக்காமல் காத்துக்கொள்வாய்.
16 ကိန္တု ယဒိ န ၑၖဏောတိ, တရှိ ဒွါဘျာံ တြိဘိ ရွာ သာက္ၐီဘိး သရွွံ ဝါကျံ ယထာ နိၑ္စိတံ ဇာယတေ, တဒရ္ထမ် ဧကံ ဒွေါ် ဝါ သာက္ၐိဏော် ဂၖဟီတွာ ယာဟိ၊
ஆனால் அவர் உனக்குச் செவிகொடாவிட்டால், ‘எல்லா காரியங்களும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் உறுதி செய்யப்படும்படி,’ வேறு ஒருவரையோ இருவரையோ உன்னுடன்கூட கூட்டிக்கொண்டுபோ.
17 တေန သ ယဒိ တယော ရွာကျံ န မာနျတေ, တရှိ သမာဇံ တဇ္ဇ္ဉာပယ, ကိန္တု ယဒိ သမာဇသျာပိ ဝါကျံ န မာနျတေ, တရှိ သ တဝ သမီပေ ဒေဝပူဇကဣဝ စဏ္ဍာလဣဝ စ ဘဝိၐျတိ၊
அவர் அவர்களுக்கும் செவிகொடுக்க மறுத்தால், அதைத் திருச்சபைக்குக் கூறு; அவர் திருச்சபைக்கும் செவிகொடுக்க மறுத்தால், அவரை இறைவனை அறியாதவரைப் போலவும் வரி வசூலிக்கிறவரைப் போலவும் நடத்து.
18 အဟံ ယုၐ္မာန် သတျံ ဝဒါမိ, ယုၐ္မာဘိး ပၖထိဝျာံ ယဒ် ဗဓျတေ တတ် သွရ္ဂေ ဘံတ္သျတေ; မေဒိနျာံ ယတ် ဘောစျတေ, သွရ္ဂေ'ပိ တတ် မောက္ၐျတေ၊
“மேலும் நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் எதைப் பூமியில் கட்டுகிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீங்கள் பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்.
19 ပုနရဟံ ယုၐ္မာန် ဝဒါမိ, မေဒိနျာံ ယုၐ္မာကံ ယဒိ ဒွါဝေကဝါကျီဘူယ ကိဉ္စိတ် ပြာရ္ထယေတေ, တရှိ မမ သွရ္ဂသ္ထပိတြာ တတ် တယေား ကၖတေ သမ္ပန္နံ ဘဝိၐျတိ၊
“மீண்டும் நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் கேட்கும் எதைக் குறித்தாவது பூமியிலே உங்களில் இருவர் ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது உங்களுக்காகச் செய்யப்படும்.
20 ယတော ယတြ ဒွေါ် တြယော ဝါ မမ နာန္နိ မိလန္တိ, တတြဲဝါဟံ တေၐာံ မဓျေ'သ္မိ၊
ஏனெனில் எங்கே இரண்டு அல்லது மூன்றுபேர் என் பெயரில் ஒன்றாய்கூடி இருக்கிறார்களோ, அங்கே நான் அவர்களுடன் இருக்கிறேன்” என்றார்.
21 တဒါနီံ ပိတရသ္တတ္သမီပမာဂတျ ကထိတဝါန် ဟေ ပြဘော, မမ ဘြာတာ မမ ယဒျပရာဓျတိ, တရှိ တံ ကတိကၖတွး က္ၐမိၐျေ?
அதற்குப் பின்பு பேதுரு இயேசுவிடம் வந்து அவரிடம், “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கெதிராகப் பாவம் செய்யும்போது, அவனை நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை வரைக்குமோ?” எனக் கேட்டான்.
22 ကိံ သပ္တကၖတွး? ယီၑုသ္တံ ဇဂါဒ, တွာံ ကေဝလံ သပ္တကၖတွော ယာဝတ် န ဝဒါမိ, ကိန္တု သပ္တတျာ ဂုဏိတံ သပ္တကၖတွော ယာဝတ်၊
இயேசு மறுமொழியாக, “ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது முறைக்கும் அதிகமாக” என்று நான் உனக்குச் சொல்கிறேன் என்றார்.
23 အပရံ နိဇဒါသဲး သဟ ဇိဂဏယိၐုး ကၑ္စိဒ် ရာဇေဝ သွရ္ဂရာဇယံ၊
“பரலோக அரசானது ஒரு அரசன் தனது வேலைக்காரர்களுடன் கணக்குப் பார்க்க வந்ததுபோல் இருக்கிறது.
24 အာရဗ္ဓေ တသ္မိန် ဂဏနေ သာရ္ဒ္ဓသဟသြမုဒြာပူရိတာနာံ ဒၑသဟသြပုဋကာနာမ် ဧကော'ဃမရ္ဏသ္တတ္သမက္ၐမာနာယိ၊
அவன் கணக்குப் பார்க்கத் தொடங்கியபோது, பத்து கோடி பொற்காசுகள் கடன்பட்ட ஒருவன் கொண்டுவரப்பட்டான்.
25 တသျ ပရိၑောဓနာယ ဒြဝျာဘာဝါတ် ပရိၑောဓနာရ္ထံ သ တဒီယဘာရျျာပုတြာဒိသရွွသွဉ္စ ဝိကြီယတာမိတိ တတ္ပြဘုရာဒိဒေၑ၊
அவனோ அதைச் செலுத்தமுடியாத நிலையில் இருந்தான். அதனால் அவனையும், அவனது மனைவியையும், பிள்ளைகளையும், அவனிடத்தில் உள்ளவை எல்லாவற்றையும் விற்றுக் கடனைத் திருப்பிச் செலுத்தும்படி, அவனுடைய எஜமான் உத்தரவிட்டான்.
26 တေန သ ဒါသသ္တသျ ပါဒယေား ပတန် ပြဏမျ ကထိတဝါန်, ဟေ ပြဘော ဘဝတာ ဃဲရျျေ ကၖတေ မယာ သရွွံ ပရိၑောဓိၐျတေ၊
“வேலைக்காரனோ அவனுக்கு முன்னால் மண்டியிட்டு, ‘என்னிடத்தில் பொறுமையாய் இரும், நான் எல்லாவற்றையும் திரும்பக் கொடுப்பேன்’ என்று கெஞ்சிக்கேட்டான்.
27 တဒါနီံ ဒါသသျ ပြဘုး သကရုဏး သန် သကလရ္ဏံ က္ၐမိတွာ တံ တတျာဇ၊
வேலைக்காரனின் எஜமான் அவனில் அனுதாபப்பட்டு, அவனுடைய கடனை ரத்து செய்து, அவனைப் போகவிட்டான்.
28 ကိန္တု တသ္မိန် ဒါသေ ဗဟိ ရျာတေ, တသျ ၑတံ မုဒြာစတုရ္ထာံၑာန် ယော ဓာရယတိ, တံ သဟဒါသံ ဒၖၐ္ဒွါ တသျ ကဏ္ဌံ နိၐ္ပီဍျ ဂဒိတဝါန်, မမ ယတ် ပြာပျံ တတ် ပရိၑောဓယ၊
“ஆனால் அந்த வேலைக்காரன் வெளியே போனபோது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகளை கடன்பட்டிருந்த தன் உடன்வேலைக்காரனைக் கண்டான். அவன் அவனைப் பிடித்து தொண்டையை நெரித்து, ‘நீ என்னிடத்தில் கடன்பட்டதைத் திருப்பிக் கொடு’ என வற்புறுத்திக் கேட்டான்.
29 တဒါ တသျ သဟဒါသသ္တတ္ပာဒယေား ပတိတွာ ဝိနီယ ဗဘာၐေ, တွယာ ဓဲရျျေ ကၖတေ မယာ သရွွံ ပရိၑောဓိၐျတေ၊
“அவனுடைய உடன்வேலைக்காரன் காலில் விழுந்து, ‘என்னிடத்தில் பொறுமையாய் இரும், நான் உமக்குத் திருப்பிக் கொடுப்பேன்’ எனக் கெஞ்சிக்கேட்டான்.
30 တထာပိ သ တတ် နာငဂီကၖတျ ယာဝတ် သရွွမၖဏံ န ပရိၑောဓိတဝါန် တာဝတ် တံ ကာရာယာံ သ္ထာပယာမာသ၊
“ஆனால் அவனோ அதற்கு மறுத்து, அந்தக் கடனைக் கட்டித் தீர்க்கும் வரைக்கும், அவனைச் சிறையில் அடைத்தான்.
31 တဒါ တသျ သဟဒါသာသ္တသျဲတာဒၖဂ် အာစရဏံ ဝိလောကျ ပြဘေား သမီပံ ဂတွာ သရွွံ ဝၖတ္တာန္တံ နိဝေဒယာမာသုး၊
நடந்தவற்றைக் கண்ட மற்ற வேலைக்காரர் மிகவும் துக்கப்பட்டு, எல்லாவற்றையும் தங்கள் அரசனிடம் போய்ச் சொன்னார்கள்.
32 တဒါ တသျ ပြဘုသ္တမာဟူယ ဇဂါဒ, ရေ ဒုၐ္ဋ ဒါသ, တွယာ မတ္သန္နိဓော် ပြာရ္ထိတေ မယာ တဝ သရွွမၖဏံ တျက္တံ;
“அப்பொழுது அரசன் அந்த வேலைக்காரனைக் கூப்பிட்டு, அவனைப் பார்த்து, ‘கொடுமையான வேலைக்காரனே, நீ என்னிடம் கெஞ்சிக் கேட்டபடியினால், நான் உனது கடனையெல்லாம் மன்னித்தேன்.
33 ယထာ စာဟံ တွယိ ကရုဏာံ ကၖတဝါန်, တထဲဝ တွတ္သဟဒါသေ ကရုဏာကရဏံ ကိံ တဝ နောစိတံ?
நான் உனக்கு இரக்கம் காட்டியது போல, நீயும் உனது உடன்வேலைக்காரனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டுமல்லவா?’ என்று கேட்டான்.
34 ဣတိ ကထယိတွာ တသျ ပြဘုး ကြုဒ္ဓျန် နိဇပြာပျံ ယာဝတ် သ န ပရိၑောဓိတဝါန်, တာဝတ် ပြဟာရကာနာံ ကရေၐု တံ သမရ္ပိတဝါန်၊
அவனுடைய எஜமான் கோபங்கொண்டு, அவனது கடன் முழுவதையும் கொடுத்துத் தீர்க்கும்வரை அவனைச் சித்திரவதை செய்யப்படும்படி சிறைக் காவலரிடம் ஒப்புக்கொடுத்தான்.
35 ယဒိ ယူယံ သွာန္တးကရဏဲး သွသွသဟဇာနာမ် အပရာဓာန် န က္ၐမဓွေ, တရှိ မမ သွရ္ဂသျး ပိတာပိ ယုၐ္မာန် ပြတီတ္ထံ ကရိၐျတိ၊
“நீங்களும் உங்கள் சகோதரன் அல்லது சகோதரியை மனப்பூர்வமாய் மன்னிக்காவிட்டால், இவ்வாறே எனது பரலோக பிதாவும் உங்களை நடத்துவார்” என்றார்.

< မထိး 18 >