< မထိး 13 >

1 အပရဉ္စ တသ္မိန် ဒိနေ ယီၑုး သဒ္မနော ဂတွာ သရိတ္ပတေ ရောဓသိ သမုပဝိဝေၑ၊
இயேசு அன்றைய தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.
2 တတြ တတ္သန္နိဓော် ဗဟုဇနာနာံ နိဝဟောပသ္ထိတေး သ တရဏိမာရုဟျ သမုပါဝိၑတ်, တေန မာနဝါ ရောဓသိ သ္ထိတဝန္တး၊
திரளான மக்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கரையிலே நின்றார்கள்.
3 တဒါနီံ သ ဒၖၐ္ဋာန္တဲသ္တာန် ဣတ္ထံ ဗဟုၑ ဥပဒိၐ္ဋဝါန်၊ ပၑျတ, ကၑ္စိတ် ကၖၐီဝလော ဗီဇာနိ ဝပ္တုံ ဗဟိရ္ဇဂါမ,
அவர் அநேக காரியங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான்.
4 တသျ ဝပနကာလေ ကတိပယဗီဇေၐု မာရ္ဂပါရ္ၑွေ ပတိတေၐု ဝိဟဂါသ္တာနိ ဘက္ၐိတဝန္တး၊
அவன் விதைக்கும்போது, சில விதைகள் வழியருகே விழுந்தன; பறவைகள் வந்து அவைகளைச் சாப்பிட்டன.
5 အပရံ ကတိပယဗီဇေၐု သ္တောကမၖဒျုက္တပါၐာဏေ ပတိတေၐု မၖဒလ္ပတွာတ် တတ္က္ၐဏာတ် တာနျင်္ကုရိတာနိ,
சில விதைகள் அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தன; மண் ஆழமாக இல்லாததினாலே அவைகள் சீக்கிரமாக முளைத்தன.
6 ကိန္တု ရဝါဝုဒိတေ ဒဂ္ဓာနိ တေၐာံ မူလာပြဝိၐ္ဋတွာတ် ၑုၐ္ကတာံ ဂတာနိ စ၊
வெயில் ஏறினபோதோ, கருகிப்போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயின.
7 အပရံ ကတိပယဗီဇေၐု ကဏ္ဋကာနာံ မဓျေ ပတိတေၐု ကဏ္ဋကာနျေဓိတွာ တာနိ ဇဂြသုး၊
சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தன; முள் வளர்ந்து அவைகளை நெருக்கிப்போட்டது.
8 အပရဉ္စ ကတိပယဗီဇာနိ ဥရွွရာယာံ ပတိတာနိ; တေၐာံ မဓျေ ကာနိစိတ် ၑတဂုဏာနိ ကာနိစိတ် ၐၐ္ဋိဂုဏာနိ ကာနိစိတ် တြိံၑဂုံဏာနိ ဖလာနိ ဖလိတဝန္တိ၊
சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன, சில விதைகள் நூறாகவும், சில விதைகள் அறுபதாகவும், சில விதைகள் முப்பதாகவும் பலன் தந்தன.
9 ၑြောတုံ ယသျ ၑြုတီ အာသာတေ သ ၑၖဏုယာတ်၊
கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்றார்.
10 အနန္တရံ ၑိၐျဲရာဂတျ သော'ပၖစ္ဆျတ, ဘဝတာ တေဘျး ကုတော ဒၖၐ္ဋာန္တကထာ ကထျတေ?
௧0அப்பொழுது, சீடர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடு உவமைகளாக பேசுகிறீர் என்று கேட்டார்கள்.
11 တတး သ ပြတျဝဒတ်, သွရ္ဂရာဇျသျ နိဂူဎာံ ကထာံ ဝေဒိတုံ ယုၐ္မဘျံ သာမရ္ထျမဒါယိ, ကိန္တု တေဘျော နာဒါယိ၊
௧௧அவர்களுக்கு அவர் மறுமொழியாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
12 ယသ္မာဒ် ယသျာန္တိကေ ဝရ္ဒ္ဓတေ, တသ္မာယေဝ ဒါယိၐျတေ, တသ္မာတ် တသျ ဗာဟုလျံ ဘဝိၐျတိ, ကိန္တု ယသျာန္တိကေ န ဝရ္ဒ္ဓတေ, တသျ ယတ် ကိဉ္စနာသ္တေ, တဒပိ တသ္မာဒ် အာဒါယိၐျတေ၊
௧௨உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
13 တေ ပၑျန္တောပိ န ပၑျန္တိ, ၑၖဏွန္တောပိ န ၑၖဏွန္တိ, ဗုဓျမာနာ အပိ န ဗုဓျန္တေ စ, တသ္မာတ် တေဘျော ဒၖၐ္ဋာန္တကထာ ကထျတေ၊
௧௩அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் கேளாதவர்களாகவும், உணர்ந்துகொள்ளாதவர்களாகவும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடு பேசுகிறேன்.
14 ယထာ ကရ္ဏဲး ၑြောၐျထ ယူယံ ဝဲ ကိန္တု ယူယံ န ဘောတ္သျထ၊ နေတြဲရ္ဒြက္ၐျထ ယူယဉ္စ ပရိဇ္ဉာတုံ န ၑက္ၐျထ၊ တေ မာနုၐာ ယထာ နဲဝ ပရိပၑျန္တိ လောစနဲး၊ ကရ္ဏဲ ရျထာ န ၑၖဏွန္တိ န ဗုဓျန္တေ စ မာနသဲး၊ ဝျာဝရ္တ္တိတေၐု စိတ္တေၐု ကာလေ ကုတြာပိ တဲရ္ဇနဲး၊ မတ္တသ္တေ မနုဇား သွသ္ထာ ယထာ နဲဝ ဘဝန္တိ စ၊ တထာ တေၐာံ မနုၐျာဏာံ ကြိယန္တေ သ္ထူလဗုဒ္ဓယး၊ ဗဓိရီဘူတကရ္ဏာၑ္စ ဇာတာၑ္စ မုဒြိတာ ဒၖၑး၊
௧௪ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.
15 ယဒေတာနိ ဝစနာနိ ယိၑယိယဘဝိၐျဒွါဒိနာ ပြောက္တာနိ တေၐု တာနိ ဖလန္တိ၊
௧௫இந்த மக்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாகக் கேட்டு, தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்பதே.
16 ကိန္တု ယုၐ္မာကံ နယနာနိ ဓနျာနိ, ယသ္မာတ် တာနိ ဝီက္ၐန္တေ; ဓနျာၑ္စ ယုၐ္မာကံ ၑဗ္ဒဂြဟား, ယသ္မာတ် တဲရာကရ္ဏျတေ၊
௧௬உங்களுடைய கண்கள் காண்கிறதினாலும், உங்களுடைய காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்.
17 မယာ ယူယံ တထျံ ဝစာမိ ယုၐ္မာဘိ ရျဒျဒ် ဝီက္ၐျတေ, တဒ် ဗဟဝေါ ဘဝိၐျဒွါဒိနော ဓာရ္မ္မိကာၑ္စ မာနဝါ ဒိဒၖက္ၐန္တောပိ ဒြၐ္ဋုံ နာလဘန္တ, ပုနၑ္စ ယူယံ ယဒျတ် ၑၖဏုထ, တတ် တေ ၑုၑြူၐမာဏာ အပိ ၑြောတုံ နာလဘန္တ၊
௧௭அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
18 ကၖၐီဝလီယဒၖၐ္ဋာန္တသျာရ္ထံ ၑၖဏုတ၊
௧௮ஆகவே, விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.
19 မာရ္ဂပါရ္ၑွေ ဗီဇာနျုပ္တာနိ တသျာရ္ထ ဧၐး, ယဒါ ကၑ္စိတ် ရာဇျသျ ကထာံ နိၑမျ န ဗုဓျတေ, တဒါ ပါပါတ္မာဂတျ တဒီယမနသ ဥပ္တာံ ကထာံ ဟရန် နယတိ၊
௧௯ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, சாத்தான் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.
20 အပရံ ပါၐာဏသ္ထလေ ဗီဇာနျုပ္တာနိ တသျာရ္ထ ဧၐး; ကၑ္စိတ် ကထာံ ၑြုတွဲဝ ဟရ္ၐစိတ္တေန ဂၖဟ္လာတိ,
௨0கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக்கேட்டு, உடனே அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுகிறவன்;
21 ကိန္တု တသျ မနသိ မူလာပြဝိၐ္ဋတွာတ် သ ကိဉ္စိတ္ကာလမာတြံ သ္ထိရသ္တိၐ္ဌတိ; ပၑ္စာတ တတ္ကထာကာရဏာတ် ကောပိ က္လေသ္တာဍနာ ဝါ စေတ် ဇာယတေ, တရှိ သ တတ္က္ၐဏာဒ် ဝိဃ္နမေတိ၊
௨௧ஆனாலும் தனக்குள்ளே வேரில்லாதவனாக, கொஞ்சக்காலம்மட்டும் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான்.
22 အပရံ ကဏ္ဋကာနာံ မဓျေ ဗီဇာနျုပ္တာနိ တဒရ္ထ ဧၐး; ကေနစိတ် ကထာယာံ ၑြုတာယာံ သာံသာရိကစိန္တာဘိ ရ္ဘြာန္တိဘိၑ္စ သာ ဂြသျတေ, တေန သာ မာ ဝိဖလာ ဘဝတိ၊ (aiōn g165)
௨௨முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாக இருந்து, உலகத்தின் கவலையும் செல்வத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப்போவான். (aiōn g165)
23 အပရမ် ဥရွွရာယာံ ဗီဇာနျုပ္တာနိ တဒရ္ထ ဧၐး; ယေ တာံ ကထာံ ၑြုတွာ ဝုဓျန္တေ, တေ ဖလိတား သန္တး ကေစိတ် ၑတဂုဏာနိ ကေစိတ ၐၐ္ဋိဂုဏာနိ ကေစိစ္စ တြိံၑဒ္ဂုဏာနိ ဖလာနိ ဇနယန္တိ၊
௨௩நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாக இருந்து, நூறுமடங்காகவும் அறுபதுமடங்காகவும் முப்பதுமடங்காகவும் பலன் தருவான் என்றார்.
24 အနန္တရံ သောပရာမေကာံ ဒၖၐ္ဋာန္တကထာမုပသ္ထာပျ တေဘျး ကထယာမာသ; သွရ္ဂီယရာဇျံ တာဒၖၑေန ကေနစိဒ် ဂၖဟသ္ထေနောပမီယတေ, ယေန သွီယက္ၐေတြေ ပြၑသ္တဗီဇာနျော်ပျန္တ၊
௨௪வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறது.
25 ကိန္တု က္ၐဏဒါယာံ သကလလောကေၐု သုပ္တေၐု တသျ ရိပုရာဂတျ တေၐာံ ဂေါဓူမဗီဇာနာံ မဓျေ ဝနျယဝမဗီဇာနျုပ္တွာ ဝဝြာဇ၊
௨௫மனிதர்கள் தூங்கும்போது அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான்.
26 တတော ယဒါ ဗီဇေဘျော'င်္ကရာ ဇာယမာနား ကဏိၑာနိ ဃၖတဝန္တး; တဒါ ဝနျယဝသာနျပိ ဒၖၑျမာနာနျဘဝန်၊
௨௬பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது.
27 တတော ဂၖဟသ္ထသျ ဒါသေယာ အာဂမျ တသ္မဲ ကထယာဉ္စကြုး, ဟေ မဟေစ္ဆ, ဘဝတာ ကိံ က္ၐေတြေ ဘဒြဗီဇာနိ နော်ပျန္တ? တထာတွေ ဝနျယဝသာနိ ကၖတ အာယန်?
௨௭வீட்டெஜமானுடைய வேலைக்காரர்கள் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னே அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.
28 တဒါနီံ တေန တေ ပြတိဂဒိတား, ကေနစိတ် ရိပုဏာ ကရ္မ္မဒမကာရိ၊ ဒါသေယား ကထယာမာသုး, ဝယံ ဂတွာ တာနျုတ္ပာယျ က္ၐိပါမော ဘဝတး ကီဒၖၑီစ္ဆာ ဇာယတေ?
௨௮அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்கள்: நாங்கள்போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள்.
29 တေနာဝါဒိ, နဟိ, ၑင်္ကေ'ဟံ ဝနျယဝသောတ္ပာဋနကာလေ ယုၐ္မာဘိသ္တဲး သာကံ ဂေါဓူမာ အပျုတ္ပာဋိၐျန္တေ၊
௨௯அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையும்சேர்த்து வேரோடு பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.
30 အတး ၑ္သျကရ္တ္တနကာလံ ယာဝဒ် ဥဘယာနျပိ သဟ ဝရ္ဒ္ဓန္တာံ, ပၑ္စာတ် ကရ္တ္တနကာလေ ကရ္တ္တကာန် ဝက္ၐျာမိ, ယူယမာဒေါ် ဝနျယဝသာနိ သံဂၖဟျ ဒါဟယိတုံ ဝီဋိကာ ဗဒွွာ သ္ထာပယတ; ကိန္တု သရွွေ ဂေါဓူမာ ယုၐ္မာဘိ ရ္ဘာဏ္ဍာဂါရံ နီတွာ သ္ထာပျန္တာမ်၊
௩0அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களைப் பார்த்து: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.
31 အနန္တရံ သောပရာမေကာံ ဒၖၐ္ဋာန္တကထာမုတ္ထာပျ တေဘျး ကထိတဝါန် ကၑ္စိန္မနုဇး သရ္ၐပဗီဇမေကံ နီတွာ သွက္ၐေတြ ဥဝါပ၊
௩௧வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான்.
32 သရ္ၐပဗီဇံ သရွွသ္မာဒ် ဗီဇာတ် က္ၐုဒြမပိ သဒင်္ကုရိတံ သရွွသ္မာတ် ၑာကာတ် ဗၖဟဒ် ဘဝတိ; သ တာဒၖၑသ္တရု ရ္ဘဝတိ, ယသျ ၑာခါသု နဘသး ခဂါ အာဂတျ နိဝသန္တိ; သွရ္ဂီယရာဇျံ တာဒၖၑသျ သရ္ၐပဲကသျ သမမ်၊
௩௨அது எல்லாவிதைகளிலும் சிறியதாயிருந்தும், வளரும்போது, எல்லாச் செடிகளிலும் பெரியதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்.
33 ပုနရပိ သ ဥပမာကထာမေကာံ တေဘျး ကထယာဉ္စကာရ; ကာစန ယောၐိတ် ယတ် ကိဏွမာဒါယ ဒြောဏတြယမိတဂေါဓူမစူရ္ဏာနာံ မဓျေ သရွွေၐာံ မိၑြီဘဝနပရျျန္တံ သမာစ္ဆာဒျ နိဓတ္တဝတီ, တတ္ကိဏွမိဝ သွရ္ဂရာဇျံ၊
௩௩வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே பிசைந்துவைத்தாள் என்றார்.
34 ဣတ္ထံ ယီၑု ရ္မနုဇနိဝဟာနာံ သန္နိဓာဝုပမာကထာဘိရေတာနျာချာနာနိ ကထိတဝါန် ဥပမာံ ဝိနာ တေဘျး ကိမပိ ကထာံ နာကထယတ်၊
௩௪இவைகளையெல்லாம் இயேசு மக்களோடு உவமைகளாகப் பேசினார்; உவமைகளில்லாமல், அவர்களோடு பேசவில்லை.
35 ဧတေန ဒၖၐ္ဋာန္တီယေန ဝါကျေန ဝျာဒါယ ဝဒနံ နိဇံ၊ အဟံ ပြကာၑယိၐျာမိ ဂုပ္တဝါကျံ ပုရာဘဝံ၊ ယဒေတဒွစနံ ဘဝိၐျဒွါဒိနာ ပြောက္တမာသီတ်, တတ် သိဒ္ဓမဘဝတ်၊
௩௫என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
36 သရွွာန် မနုဇာန် ဝိသၖဇျ ယီၑော် ဂၖဟံ ပြဝိၐ္ဋေ တစ္ဆိၐျာ အာဂတျ ယီၑဝေ ကထိတဝန္တး, က္ၐေတြသျ ဝနျယဝသီယဒၖၐ္ဋာန္တကထာမ် ဘဝါန အသ္မာန် သ္ပၐ္ဋီကၖတျ ဝဒတု၊
௩௬அப்பொழுது இயேசு மக்களை அனுப்பிவிட்டு வீட்டிற்குப் போனார். அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டுமென்று கேட்டார்கள்.
37 တတး သ ပြတျုဝါစ, ယေန ဘဒြဗီဇာနျုပျန္တေ သ မနုဇပုတြး,
௩௭அவர் மறுமொழியாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனிதகுமாரன்;
38 က္ၐေတြံ ဇဂတ်, ဘဒြဗီဇာနီ ရာဇျသျ သန္တာနား,
௩௮நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் பிள்ளைகள்; களைகள் சாத்தானுடைய பிள்ளைகள்;
39 ဝနျယဝသာနိ ပါပါတ္မနး သန္တာနား၊ ယေန ရိပုဏာ တာနျုပ္တာနိ သ ၑယတာနး, ကရ္တ္တနသမယၑ္စ ဇဂတး ၑေၐး, ကရ္တ္တကား သွရ္ဂီယဒူတား၊ (aiōn g165)
௩௯அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுவடை உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். (aiōn g165)
40 ယထာ ဝနျယဝသာနိ သံဂၖဟျ ဒါဟျန္တေ, တထာ ဇဂတး ၑေၐေ ဘဝိၐျတိ; (aiōn g165)
௪0ஆதலால், களைகளைச்சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இந்த உலகத்தின் முடிவிலே நடக்கும். (aiōn g165)
41 အရ္ထာတ် မနုဇသုတး သွာံယဒူတာန် ပြေၐယိၐျတိ, တေန တေ စ တသျ ရာဇျာတ် သရွွာန် ဝိဃ္နကာရိဏော'ဓာရ္မ္မိကလောကာံၑ္စ သံဂၖဟျ
௪௧மனிதகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற எல்லா இடறல்களையும் அக்கிரமம் செய்கிறவர்களையும் சேர்த்து,
42 ယတြ ရောဒနံ ဒန္တဃရ္ၐဏဉ္စ ဘဝတိ, တတြာဂ္နိကုဏ္ဍေ နိက္ၐေပ္သျန္တိ၊
௪௨அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.
43 တဒါနီံ ဓာရ္မ္မိကလောကား သွေၐာံ ပိတူ ရာဇျေ ဘာသ္ကရဣဝ တေဇသွိနော ဘဝိၐျန္တိ၊ ၑြောတုံ ယသျ ၑြုတီ အာသာတေ, မ ၑၖဏုယာတ်၊
௪௩அப்பொழுது, நீதிமான்கள் தங்களுடைய பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும்.
44 အပရဉ္စ က္ၐေတြမဓျေ နိဓိံ ပၑျန် ယော ဂေါပယတိ, တတး ပရံ သာနန္ဒော ဂတွာ သွီယသရွွသွံ ဝိကြီယ တ္တက္ၐေတြံ ကြီဏာတိ, သ ဣဝ သွရ္ဂရာဇျံ၊
௪௪அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற புதையலுக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் பார்த்து, மறைத்து, அதைப்பற்றிய மகிழ்ச்சியினாலேபோய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தை வாங்குகிறான்.
45 အနျဉ္စ ယော ဝဏိက် ဥတ္တမာံ မုက္တာံ ဂဝေၐယန္
௪௫மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத்தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாக இருக்கிறது.
46 မဟာရ္ဃာံ မုက္တာံ ဝိလောကျ နိဇသရွွသွံ ဝိကြီယ တာံ ကြီဏာတိ, သ ဣဝ သွရ္ဂရာဇျံ၊
௪௬அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைப் பார்த்து, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதை வாங்குகிறான்.
47 ပုနၑ္စ သမုဒြော နိက္ၐိပ္တး သရွွပြကာရမီနသံဂြာဟျာနာယဣဝ သွရ္ဂရာဇျံ၊
௪௭அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, எல்லாவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாக இருக்கிறது.
48 တသ္မိန် အာနာယေ ပူရ္ဏေ ဇနာ ယထာ ရောဓသျုတ္တောလျ သမုပဝိၑျ ပြၑသ္တမီနာန် သံဂြဟျ ဘာဇနေၐု နိဒဓတေ, ကုတ္သိတာန် နိက္ၐိပန္တိ;
௪௮அது நிறைந்தபோது, மீனவர்கள் அதைக் கரைக்கு இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துவிடுவார்கள்.
49 တထဲဝ ဇဂတး ၑေၐေ ဘဝိၐျတိ, ဖလတး သွရ္ဂီယဒူတာ အာဂတျ ပုဏျဝဇ္ဇနာနာံ မဓျာတ် ပါပိနး ပၖထက် ကၖတွာ ဝဟ္နိကုဏ္ဍေ နိက္ၐေပ္သျန္တိ, (aiōn g165)
௪௯இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, (aiōn g165)
50 တတြ ရောဒနံ ဒန္တဲ ရ္ဒန္တဃရ္ၐဏဉ္စ ဘဝိၐျတး၊
௫0அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார்.
51 ယီၑုနာ တေ ပၖၐ္ဋာ ယုၐ္မာဘိး ကိမေတာနျာချာနာနျဗုဓျန္တ? တဒါ တေ ပြတျဝဒန်, သတျံ ပြဘော၊
௫௧பின்பு, இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம் ஆண்டவரே, என்றார்கள்.
52 တဒါနီံ သ ကထိတဝါန်, နိဇဘာဏ္ဍာဂါရာတ် နဝီနပုရာတနာနိ ဝသ္တူနိ နိရ္ဂမယတိ ယော ဂၖဟသ္ထး သ ဣဝ သွရ္ဂရာဇျမဓိ ၑိက္ၐိတား သွရွ ဥပဒေၐ္ဋာရး၊
௫௨அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: இப்படி இருக்கிறபடியால், பரலோகராஜ்யத்திற்கு அடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபண்டிதன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான் என்றார்.
53 အနန္တရံ ယီၑုရေတား သရွွာ ဒၖၐ္ဋာန္တကထား သမာပျ တသ္မာတ် သ္ထာနာတ် ပြတသ္ထေ၊ အပရံ သွဒေၑမာဂတျ ဇနာန် ဘဇနဘဝန ဥပဒိၐ္ဋဝါန်;
௫௩இயேசு இந்த உவமைகளைச் சொல்லிமுடித்தபின்பு, அந்த இடத்தைவிட்டு,
54 တေ ဝိသ္မယံ ဂတွာ ကထိတဝန္တ ဧတသျဲတာဒၖၑံ ဇ္ဉာနမ် အာၑ္စရျျံ ကရ္မ္မ စ ကသ္မာဒ် အဇာယတ?
௫௪தாம் வளர்ந்த ஊருக்கு வந்து, அவர்களுடைய ஜெப ஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம் செய்தார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது?
55 ကိမယံ သူတြဓာရသျ ပုတြော နဟိ? ဧတသျ မာတု ရ္နာမ စ ကိံ မရိယမ် နဟိ? ယာကုဗ်-ယူၐဖ်-ၑိမောန်-ယိဟူဒါၑ္စ ကိမေတသျ ဘြာတရော နဟိ?
௫௫இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு, யோசே, சீமோன், யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர்கள் அல்லவா?
56 ဧတသျ ဘဂိနျၑ္စ ကိမသ္မာကံ မဓျေ န သန္တိ? တရှိ ကသ္မာဒယမေတာနိ လဗ္ဓဝါန်? ဣတ္ထံ သ တေၐာံ ဝိဃ္နရူပေါ ဗဘူဝ;
௫௬இவன் சகோதரிகளெல்லோரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி,
57 တတော ယီၑုနာ နိဂဒိတံ သွဒေၑီယဇနာနာံ မဓျံ ဝိနာ ဘဝိၐျဒွါဒီ ကုတြာပျနျတြ နာသမ္မာနျော ဘဝတီ၊
௫௭அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் அவமதிக்கப்படமாட்டான் என்றார்.
58 တေၐာမဝိၑွာသဟေတေား သ တတြ သ္ထာနေ ဗဟွာၑ္စရျျကရ္မ္မာဏိ န ကၖတဝါန်၊
௫௮அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால், அவர் அங்கே அதிக அற்புதங்களைச் செய்யவில்லை.

< မထိး 13 >