< လူကး 1 >

1 ပြထမတော ယေ သာက္ၐိဏော ဝါကျပြစာရကာၑ္စာသန် တေ'သ္မာကံ မဓျေ ယဒျတ် သပြမာဏံ ဝါကျမရ္ပယန္တိ သ္မ
மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, நமது மத்தியில் நிறைவேறிய நிகழ்வுகளின் விவரத்தை ஒழுங்காக எழுத, அநேகர் முன்வந்தார்கள்.
2 တဒနုသာရတော'နျေပိ ဗဟဝသ္တဒွၖတ္တာန္တံ ရစယိတုံ ပြဝၖတ္တား၊
துவக்கத்திலிருந்து கண்கண்ட சாட்சிகளாகவும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியர்களாகவும் இருந்த அவர்கள், எங்களுக்குக் கொடுக்கப்பட்டபடியே எழுதினார்கள்.
3 အတဧဝ ဟေ မဟာမဟိမထိယဖိလ် တွံ ယာ ယား ကထာ အၑိက္ၐျထာသ္တာသာံ ဒၖဎပြမာဏာနိ ယထာ ပြာပ္နောၐိ
நானும் உமக்கு அவற்றை ஒழுங்காக எழுதுவதற்குத் தீர்மானித்தேன். துவக்கத்திலிருந்து நடந்த எல்லாவற்றையும் கவனமாய் விசாரித்தறிந்து, இதை எழுதுகிறேன்.
4 တဒရ္ထံ ပြထမမာရဘျ တာနိ သရွွာဏိ ဇ္ဉာတွာဟမပိ အနုကြမာတ် သရွွဝၖတ္တာန္တာန် တုဘျံ လေခိတုံ မတိမကာရ္ၐမ်၊
இதனால் உமக்குப் போதிக்கப்பட்ட விஷயங்கள் நிச்சயமாக உண்மையானவை என்பதை நீர் அறிந்துகொள்ளலாம்.
5 ယိဟူဒါဒေၑီယဟေရောဒ္နါမကေ ရာဇတွံ ကုရွွတိ အဗီယယာဇကသျ ပရျျာယာဓိကာရီ သိခရိယနာမက ဧကော ယာဇကော ဟာရောဏဝံၑောဒ္ဘဝါ ဣလီၑေဝါချာ
ஏரோது அரசன் யூதேயாவை ஆட்சி செய்த காலத்தில், சகரியா என்னும் பெயருடைய ஒரு ஆசாரியன் இருந்தான். இவன் அபியாவின் ஆசாரியப் பிரிவைச் சேர்ந்தவன். இவனுடைய மனைவி எலிசபெத்தும், ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியைச் சேர்ந்தவள்.
6 တသျ ဇာယာ ဒွါဝိမော် နိရ္ဒောၐော် ပြဘေား သရွွာဇ္ဉာ ဝျဝသ္ထာၑ္စ သံမနျ ဤၑွရဒၖၐ္ဋော် ဓာရ္မ္မိကာဝါသ္တာမ်၊
அவர்கள் இருவரும் இறைவனின் பார்வையில் நீதிமான்களாக இருந்தார்கள். மற்றவர்களால் குற்றஞ்சாட்டப்பட இடமில்லாமல், கர்த்தருடைய எல்லாக் கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் கைக்கொண்டார்கள்.
7 တယေား သန္တာန ဧကောပိ နာသီတ်, ယတ ဣလီၑေဝါ ဗန္ဓျာ တော် ဒွါဝေဝ ဝၖဒ္ဓါဝဘဝတာမ်၊
ஆனாலும் எலிசபெத் மலடியாக இருந்ததினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; அவர்கள் இருவரும், இப்பொழுது வயது சென்றவர்களாய் இருந்தார்கள்.
8 ယဒါ သွပရျျာနုကြမေဏ သိခရိယ ဤၑွာသျ သမက္ၐံ ယာဇကီယံ ကရ္မ္မ ကရောတိ
ஒருமுறை அபியாவின் பிரிவை சேர்ந்தவர்கள், ஆலயத்தில் பணிபுரிந்தபோது, சகரியாவும் இறைவனுக்கு முன்பாக ஆசாரியப் பணியைச் செய்தான்.
9 တဒါ ယဇ္ဉသျ ဒိနပရိပါယျာ ပရမေၑွရသျ မန္ဒိရေ ပြဝေၑကာလေ ဓူပဇွာလနံ ကရ္မ္မ တသျ ကရဏီယမာသီတ်၊
ஒரு நாள் ஆசாரியர்களின் வழக்கத்தின்படி கடமைகளைச் செய்வதற்கு சீட்டு போட்டபோது, கர்த்தருடைய ஆலயத்திற்குள் போய் தூபங்காட்டும் பணியைச் செய்வதற்கு சகரியா தெரிந்தெடுக்கப்பட்டான்.
10 တဒ္ဓူပဇွာလနကာလေ လောကနိဝဟေ ပြာရ္ထနာံ ကရ္တုံ ဗဟိသ္တိၐ္ဌတိ
தூபங்காட்டும் வேளை வந்தபோது வழிபாட்டிற்கு கூடிவந்த மக்கள் வெளியே மன்றாடிக்கொண்டிருந்தார்கள்.
11 သတိ သိခရိယော ယသျာံ ဝေဒျာံ ဓူပံ ဇွာလယတိ တဒ္ဒက္ၐိဏပါရ္ၑွေ ပရမေၑွရသျ ဒူတ ဧက ဥပသ္ထိတော ဒရ္ၑနံ ဒဒေါ်၊
அப்பொழுது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான்.
12 တံ ဒၖၐ္ဋွာ သိခရိယ ဥဒွိဝိဇေ ၑၑင်္ကေ စ၊
சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டுப் பயந்தான்.
13 တဒါ သ ဒူတသ္တံ ဗဘာၐေ ဟေ သိခရိယ မာ ဘဲသ္တဝ ပြာရ္ထနာ ဂြာဟျာ ဇာတာ တဝ ဘာရျျာ ဣလီၑေဝါ ပုတြံ ပြသောၐျတေ တသျ နာမ ယောဟန် ဣတိ ကရိၐျသိ၊
அந்தத் தூதனோ அவனைப் பார்த்து: “சகரியாவே, பயப்படாதே; உனது மன்றாட்டு கேட்கப்பட்டது. உனது மனைவி எலிசபெத் உனக்கு ஒரு மகனைப் பெறுவாள், நீ அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்.
14 ကိဉ္စ တွံ သာနန္ဒး သဟရ္ၐၑ္စ ဘဝိၐျသိ တသျ ဇန္မနိ ဗဟဝ အာနန္ဒိၐျန္တိ စ၊
அவன் உனக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்புமாய் இருப்பான். அவனுடைய பிறப்பின் நிமித்தம், அநேகர் பெருமகிழ்ச்சியடைவார்கள்;
15 ယတော ဟေတေား သ ပရမေၑွရသျ ဂေါစရေ မဟာန် ဘဝိၐျတိ တထာ ဒြာက္ၐာရသံ သုရာံ ဝါ ကိမပိ န ပါသျတိ, အပရံ ဇန္မာရဘျ ပဝိတြေဏာတ္မနာ ပရိပူရ္ဏး
அவன் கர்த்தருடைய பார்வையில் பெரியவனாயிருப்பான். அவன் ஒருபோதும் திராட்சை இரசத்தையோ, மதுபானத்தையோ அருந்த மாட்டான், அவன் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவான்.
16 သန် ဣသြာယေလွံၑီယာန် အနေကာန် ပြဘေား ပရမေၑွရသျ မာရ္ဂမာနေၐျတိ၊
அவன் இஸ்ரயேல் மக்களில் பலரை அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பவும் கொண்டுவருவான்.
17 သန္တာနာန် ပြတိ ပိတၖဏာံ မနာံသိ ဓရ္မ္မဇ္ဉာနံ ပြတျနာဇ္ဉာဂြာဟိဏၑ္စ ပရာဝရ္တ္တယိတုံ, ပြဘေား ပရမေၑွရသျ သေဝါရ္ထမ် ဧကာံ သဇ္ဇိတဇာတိံ ဝိဓာတုဉ္စ သ ဧလိယရူပါတ္မၑက္တိပြာပ္တသ္တသျာဂြေ ဂမိၐျတိ၊
அவன் எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் கர்த்தருக்கு முன்பாகப் போவான்; தந்தையரின் இருதயத்தைப் பிள்ளைகள் பக்கமாகத் திருப்புவான், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்குத் திருப்புவான். இவ்விதமாய் கர்த்தருக்காக முன்னேற்பாடு செய்திருக்கிற மக்களை அவன் ஆயத்தம் செய்வான்” என்றான்.
18 တဒါ သိခရိယော ဒူတမဝါဒီတ် ကထမေတဒ် ဝေတ္သျာမိ? ယတောဟံ ဝၖဒ္ဓေါ မမ ဘာရျျာ စ ဝၖဒ္ဓါ၊
அப்பொழுது சகரியா அந்தத் தூதனிடம், “இது நடக்கும் என்று நான் எப்படி நம்பலாம்? நான் கிழவனாய் இருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாய் இருக்கிறாளே” என்றான்.
19 တတော ဒူတး ပြတျုဝါစ ပၑျေၑွရသျ သာက္ၐာဒွရ္တ္တီ ဇိဗြာယေလ္နာမာ ဒူတောဟံ တွယာ သဟ ကထာံ ဂဒိတုံ တုဘျမိမာံ ၑုဘဝါရ္တ္တာံ ဒါတုဉ္စ ပြေၐိတး၊
அதற்கு அந்தத் தூதன், “நான் இறைவனின் சமுகத்தில் நிற்கின்ற காபிரியேல்; உன்னுடன் பேசுவதற்காகவும், இந்த நற்செய்தியை உனக்கு அறிவிப்பதற்காகவும் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்.
20 ကိန္တု မဒီယံ ဝါကျံ ကာလေ ဖလိၐျတိ တတ် တွယာ န ပြတီတမ် အတး ကာရဏာဒ် ယာဝဒေဝ တာနိ န သေတ္သျန္တိ တာဝတ် တွံ ဝက္တုံမၑက္တော မူကော ဘဝ၊
நீயோ எனது வார்த்தைகளை நம்பவில்லை, ஆதலால் இவை நிகழும் நாள்வரைக்கும் நீ பேச முடியாமல் ஊமையாயிருப்பாய்; நான் சொன்னவையோ நியமித்த காலத்தில் நிறைவேறும்” என்றான்.
21 တဒါနီံ ယေ ယေ လောကား သိခရိယမပဲက္ၐန္တ တေ မဓျေမန္ဒိရံ တသျ ဗဟုဝိလမ္ဗာဒ် အာၑ္စရျျံ မေနိရေ၊
அதேவேளையில், சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக்கொண்டிருந்த மக்கள், அவன் ஏன் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருக்கிறான் என யோசிக்கத் தொடங்கினார்கள்.
22 သ ဗဟိရာဂတော ယဒါ ကိမပိ ဝါကျံ ဝက္တုမၑက္တး သင်္ကေတံ ကၖတွာ နိးၑဗ္ဒသ္တသျော် တဒါ မဓျေမန္ဒိရံ ကသျစိဒ် ဒရ္ၑနံ တေန ပြာပ္တမ် ဣတိ သရွွေ ဗုဗုဓိရေ၊
அவன் வெளியே வந்தபோது, அவர்களோடு பேச அவனால் முடியவில்லை. அவன் அவர்களுக்கு சைகை காட்டியதால், அவன் ஆலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறான் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவன் பேசமுடியாதவனாகவே இருந்தான்.
23 အနန္တရံ တသျ သေဝနပရျျာယေ သမ္ပူရ္ဏေ သတိ သ နိဇဂေဟံ ဇဂါမ၊
அவனது பணிசெய்யும் காலம் முடிவடைந்தபோது, அவன் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
24 ကတိပယဒိနေၐု ဂတေၐု တသျ ဘာရျျာ ဣလီၑေဝါ ဂရ္ဗ္ဘဝတီ ဗဘူဝ
இந்த நாட்களுக்குப்பின் அவன் மனைவி எலிசபெத் கருத்தரித்தாள், அவள் ஐந்து மாதங்களாக பிறர் கண்களில் படாதிருந்தாள்.
25 ပၑ္စာတ် သာ ပဉ္စမာသာန် သံဂေါပျာကထယတ် လောကာနာံ သမက္ၐံ မမာပမာနံ ခဏ္ဍယိတုံ ပရမေၑွရော မယိ ဒၖၐ္ဋိံ ပါတယိတွာ ကရ္မ္မေဒၖၑံ ကၖတဝါန်၊
அப்பொழுது அவள், “கர்த்தரே இதைச் செய்தார், இந்த நாட்களில் அவர் எனக்குத் தயவுகாட்டி, என் மக்களிடையே எனக்கிருந்த அவமானத்தை நீக்கிவிட்டார்” என்றாள்.
26 အပရဉ္စ တသျာ ဂရ္ဗ္ဘသျ ၐၐ္ဌေ မာသေ ဇာတေ ဂါလီလ္ပြဒေၑီယနာသရတ္ပုရေ
ஆறாம் மாதத்தில், கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் ஒரு பட்டணத்திற்கு இறைவன் காபிரியேல் தூதனை,
27 ဒါယူဒေါ ဝံၑီယာယ ယူၐဖ္နာမ္နေ ပုရုၐာယ ယာ မရိယမ္နာမကုမာရီ ဝါဂ္ဒတ္တာသီတ် တသျား သမီပံ ဇိဗြာယေလ် ဒူတ ဤၑွရေဏ ပြဟိတး၊
ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்; அவள் தாவீதின் சந்ததியானாகிய யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள்.
28 သ ဂတွာ ဇဂါဒ ဟေ ဤၑွရာနုဂၖဟီတကနျေ တဝ ၑုဘံ ဘူယာတ် ပြဘုး ပရမေၑွရသ္တဝ သဟာယောသ္တိ နာရီဏာံ မဓျေ တွမေဝ ဓနျာ၊
கர்த்தருடைய தூதன் அவளிடம் போய், “மிகவும் தயவு பெற்றவளே வாழ்க! கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்” என்றான்.
29 တဒါနီံ သာ တံ ဒၖၐ္ဋွာ တသျ ဝါကျတ ဥဒွိဇျ ကီဒၖၑံ ဘာၐဏမိဒမ် ဣတိ မနသာ စိန္တယာမာသ၊
தூதன் சொன்ன வார்த்தையைக் கேட்ட மரியாள் மிகவும் கலக்கமடைந்து, இந்த வாழ்த்துதல் எத்தகையதோ என்று யோசிக்கத் தொடங்கினாள்.
30 တတော ဒူတော'ဝဒတ် ဟေ မရိယမ် ဘယံ မာကာရ္ၐီး, တွယိ ပရမေၑွရသျာနုဂြဟောသ္တိ၊
ஆனால் அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய்.
31 ပၑျ တွံ ဂရ္ဗ္ဘံ ဓၖတွာ ပုတြံ ပြသောၐျသေ တသျ နာမ ယီၑုရိတိ ကရိၐျသိ၊
நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும்.
32 သ မဟာန် ဘဝိၐျတိ တထာ သရွွေဘျး ၑြေၐ္ဌသျ ပုတြ ဣတိ ချာသျတိ; အပရံ ပြဘုး ပရမေၑွရသ္တသျ ပိတုရ္ဒာယူဒး သိံဟာသနံ တသ္မဲ ဒါသျတိ;
அவர் பெரியவராயிருப்பார், மகா உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார்.
33 တထာ သ ယာကူဗော ဝံၑောပရိ သရွွဒါ ရာဇတွံ ကရိၐျတိ, တသျ ရာဇတွသျာန္တော န ဘဝိၐျတိ၊ (aiōn g165)
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். (aiōn g165)
34 တဒါ မရိယမ် တံ ဒူတံ ဗဘာၐေ နာဟံ ပုရုၐသင်္ဂံ ကရောမိ တရှိ ကထမေတတ် သမ္ဘဝိၐျတိ?
அப்பொழுது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படியாகும், நான் கன்னியாய் இருக்கிறேனே?” என்றாள்.
35 တတော ဒူတော'ကထယတ် ပဝိတြ အာတ္မာ တွာမာၑြာယိၐျတိ တထာ သရွွၑြေၐ္ဌသျ ၑက္တိသ္တဝေါပရိ ဆာယာံ ကရိၐျတိ တတော ဟေတောသ္တဝ ဂရ္ဗ္ဘာဒ် ယး ပဝိတြဗာလကော ဇနိၐျတေ သ ဤၑွရပုတြ ဣတိ ချာတိံ ပြာပ္သျတိ၊
அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார், மகா உன்னதமானவரின் வல்லமை உன்மேல் நிழலிடும். எனவே பிறக்கும் பரிசுத்த குழந்தை இறைவனின் மகன் என அழைக்கப்படுவார்.
36 အပရဉ္စ ပၑျ တဝ ဇ္ဉာတိရိလီၑေဝါ ယာံ သရွွေ ဗန္ဓျာမဝဒန် ဣဒါနီံ သာ ဝါရ္ဒ္ဓကျေ သန္တာနမေကံ ဂရ္ဗ္ဘေ'ဓာရယတ် တသျ ၐၐ္ဌမာသောဘူတ်၊
உனது உறவினராகிய எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற இருக்கிறாள். மலடி எனப்பட்டவள் இப்பொழுது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன.
37 ကိမပိ ကရ္မ္မ နာသာဓျမ် ဤၑွရသျ၊
இறைவனால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை” என்றான்.
38 တဒါ မရိယမ် ဇဂါဒ, ပၑျ ပြဘေရဟံ ဒါသီ မဟျံ တဝ ဝါကျာနုသာရေဏ သရွွမေတဒ် ဃဋတာမ်; အနနတရံ ဒူတသ္တသျား သမီပါတ် ပြတသ္ထေ၊
அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை; நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவளைவிட்டுப் போனான்.
39 အထ ကတိပယဒိနာတ် ပရံ မရိယမ် တသ္မာတ် ပရွွတမယပြဒေၑီယယိဟူဒါယာ နဂရမေကံ ၑီဃြံ ဂတွာ
அந்நாட்களில் மரியாள் புறப்பட்டு யூதேயாவின் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்திற்கு விரைவாகப் போனாள்;
40 သိခရိယယာဇကသျ ဂၖဟံ ပြဝိၑျ တသျ ဇာယာမ် ဣလီၑေဝါံ သမ္ဗောဓျာဝဒတ်၊
அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் போய், எலிசபெத்தை வாழ்த்தினாள்.
41 တတော မရိယမး သမ္ဗောဓနဝါကျေ ဣလီၑေဝါယား ကရ္ဏယေား ပြဝိၐ္ဋမာတြေ သတိ တသျာ ဂရ္ဗ္ဘသ္ထဗာလကော နနရ္တ္တ၊ တတ ဣလီၑေဝါ ပဝိတြေဏာတ္မနာ ပရိပူရ္ဏာ သတီ
மரியாளுடைய வாழ்த்துதலை எலிசபெத் கேட்டபோது, அவளுடைய கருப்பையில் இருந்த குழந்தை துள்ளியது. அப்பொழுது எலிசபெத் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
42 ပြောစ္စဲရ္ဂဒိတုမာရေဘေ, ယောၐိတာံ မဓျေ တွမေဝ ဓနျာ, တဝ ဂရ္ဗ္ဘသ္ထး ၑိၑုၑ္စ ဓနျး၊
உரத்த குரலில் சொன்னதாவது: “நீ பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ பெற்றெடுக்கப்போகும் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டது!
43 တွံ ပြဘောရ္မာတာ, မမ နိဝေၑနေ တွယာ စရဏာဝရ္ပိတော်, မမာဒျ သော်ဘာဂျမေတတ်၊
என் கர்த்தரின் தாய் என்னிடம் வருவதற்கு, நான் இவ்வளவாய் தயவுபெற்றேன்.
44 ပၑျ တဝ ဝါကျေ မမ ကရ္ဏယေား ပြဝိၐ္ဋမာတြေ သတိ မမောဒရသ္ထး ၑိၑုရာနန္ဒာန် နနရ္တ္တ၊
உனது வாழ்த்துதலின் சத்தம் எனது காதில்பட்டதுமே, எனது கருப்பையில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று.
45 ယာ သ္တြီ ဝျၑွသီတ် သာ ဓနျာ, ယတော ဟေတောသ္တာံ ပြတိ ပရမေၑွရောက္တံ ဝါကျံ သရွွံ သိဒ္ဓံ ဘဝိၐျတိ၊
கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே!” என்றாள்.
46 တဒါနီံ မရိယမ် ဇဂါဒ၊ ဓနျဝါဒံ ပရေၑသျ ကရောတိ မာမကံ မနး၊
அப்பொழுது மரியாள் சொன்னதாவது: “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
47 မမာတ္မာ တာရကေၑေ စ သမုလ္လာသံ ပြဂစ္ဆတိ၊
என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது.
48 အကရောတ် သ ပြဘု ရ္ဒုၐ္ဋိံ သွဒါသျာ ဒုရ္ဂတိံ ပြတိ၊ ပၑျာဒျာရဘျ မာံ ဓနျာံ ဝက္ၐျန္တိ ပုရုၐား သဒါ၊
ஏனெனில், அவர் தமது அடிமையின் தாழ்மை நிலையைத் தயவுடன் பார்த்தார். இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்;
49 ယး သရွွၑက္တိမာန် ယသျ နာမာပိ စ ပဝိတြကံ၊ သ ဧဝ သုမဟတ္ကရ္မ္မ ကၖတဝါန် မန္နိမိတ္တကံ၊
வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார்; பரிசுத்தர் என்பது அவருடைய பெயர்.
50 ယေ ဗိဘျတိ ဇနာသ္တသ္မာတ် တေၐာံ သန္တာနပံက္တိၐု၊ အနုကမ္ပာ တဒီယာ စ သရွွဒဲဝ သုတိၐ္ဌတိ၊
அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு, தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காண்பிக்கிறார்.
51 သွဗာဟုဗလတသ္တေန ပြာကာၑျတ ပရာကြမး၊ မနးကုမန္တြဏာသာရ္ဒ္ဓံ ဝိကီရျျန္တေ'ဘိမာနိနး၊
அவர் தமது புயத்தினால் வல்லமையான செயல்களை நிறைவேற்றினார்; தங்களுடைய உள்ளத்தில் அகந்தையான நினைவு கொண்டவர்களை அவர் சிதறடித்தார்.
52 သိံဟာသနဂတာလ္လောကာန် ဗလိနၑ္စာဝရောဟျ သး၊ ပဒေၐူစ္စေၐု လောကာံသ္တု က္ၐုဒြာန် သံသ္ထာပယတျပိ၊
ஆளுநர்களை அவர்களுடைய அரியணைகளில் இருந்து கீழே வீழ்த்தினார். ஆனால், தாழ்மையானவர்களையோ அவர் உயர்த்தினார்.
53 က္ၐုဓိတာန် မာနဝါန် ဒြဝျဲရုတ္တမဲး ပရိတရ္ပျ သး၊ သကလာန် ဓနိနော လောကာန် ဝိသၖဇေဒ် ရိက္တဟသ္တကာန်၊
அவர் பசியாய் இருந்தவர்களை நன்மைகளால் நிரப்பினார். ஆனால் செல்வந்தர்களையோ வெறுமையாய் அனுப்பினார்.
54 ဣဗြာဟီမိ စ တဒွံၑေ ယာ ဒယာသ္တိ သဒဲဝ တာံ၊ သ္မၖတွာ ပုရာ ပိတၖဏာံ နော ယထာ သာက္ၐာတ် ပြတိၑြုတံ၊ (aiōn g165)
அவர் தமது வேலைக்காரனாகிய இஸ்ரயேலுக்கு உதவி செய்தார்.
55 ဣသြာယေလ္သေဝကသ္တေန တထောပကြိယတေ သွယံ။
நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும் அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்” என்று பாடினாள். (aiōn g165)
56 အနန္တရံ မရိယမ် ပြာယေဏ မာသတြယမ် ဣလီၑေဝယာ သဟောၐိတွာ ဝျာဃုယျ နိဇနိဝေၑနံ ယယော်၊
மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதற்குப் பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனாள்.
57 တဒနန္တရမ် ဣလီၑေဝါယား ပြသဝကာလ ဥပသ္ထိတေ သတိ သာ ပုတြံ ပြာသောၐ္ဋ၊
எலிசபெத்திற்குப் பிள்ளைபெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள்.
58 တတး ပရမေၑွရသ္တသျာံ မဟာနုဂြဟံ ကၖတဝါန် ဧတတ် ၑြုတွာ သမီပဝါသိနး ကုဋုမ္ဗာၑ္စာဂတျ တယာ သဟ မုမုဒိရေ၊
அவளுடைய அயலவர்களும் உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன்கூட மகிழ்ச்சி அடைந்தார்கள்.
59 တထာၐ္ဋမေ ဒိနေ တေ ဗာလကသျ တွစံ ဆေတ္တုမ် ဧတျ တသျ ပိတၖနာမာနုရူပံ တန္နာမ သိခရိယ ဣတိ ကရ္တ္တုမီၐုး၊
அவர்களுடைய அயலவர்களும் உறவினர்களும் எட்டாம் நாளில் அந்தப் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யும்படி வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே சகரியா என்று பெயரிட நினைத்தார்கள்.
60 ကိန္တု တသျ မာတာကထယတ် တန္န, နာမာသျ ယောဟန် ဣတိ ကရ္တ္တဝျမ်၊
ஆனால் குழந்தையின் தாயோ, “இல்லை! அவன் யோவான் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று சொன்னாள்.
61 တဒါ တေ ဝျာဟရန် တဝ ဝံၑမဓျေ နာမေဒၖၑံ ကသျာပိ နာသ္တိ၊
அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினரில் அந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்றார்கள்.
62 တတး ပရံ တသျ ပိတရံ သိခရိယံ ပြတိ သင်္ကေတျ ပပြစ္ဆုး ၑိၑေား ကိံ နာမ ကာရိၐျတေ?
அப்பொழுது அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறான் என்று அறிவதற்கு, அவனிடம் சைகை மூலம் கேட்டார்கள்.
63 တတး သ ဖလကမေကံ ယာစိတွာ လိလေခ တသျ နာမ ယောဟန် ဘဝိၐျတိ၊ တသ္မာတ် သရွွေ အာၑ္စရျျံ မေနိရေ၊
அவன் ஒரு கற்பலகையைக் கேட்டுவாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, “இவனுடைய பெயர் யோவான்” என்று எழுதினான்.
64 တတ္က္ၐဏံ သိခရိယသျ ဇိဟွာဇာဍျေ'ပဂတေ သ မုခံ ဝျာဒါယ သ္ပၐ္ဋဝရ္ဏမုစ္စာရျျ ဤၑွရသျ ဂုဏာနုဝါဒံ စကာရ၊
உடனே அவனது வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் இறைவனைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான்.
65 တသ္မာစ္စတုရ္ဒိက္သ္ထား သမီပဝါသိလောကာ ဘီတာ ဧဝမေတား သရွွား ကထာ ယိဟူဒါယား ပရွွတမယပြဒေၑသျ သရွွတြ ပြစာရိတား၊
அயலவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தக் காரியங்களைக்குறித்து, யூதேயாவின் மலைநாடு எங்கும் மக்கள் பேசிக்கொண்டார்கள்.
66 တသ္မာတ် ၑြောတာရော မနးသု သ္ထာပယိတွာ ကထယာမ္ဗဘူဝုး ကီဒၖၑောယံ ဗာလော ဘဝိၐျတိ? အထ ပရမေၑွရသ္တသျ သဟာယောဘူတ်၊
இதைக் கேள்விப்பட்ட எல்லோரும் வியப்படைந்து, “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாய் இருக்குமோ?” என்றார்கள் கர்த்தருடைய கரம் அந்த பிள்ளையோடு இருந்தது.
67 တဒါ ယောဟနး ပိတာ သိခရိယး ပဝိတြေဏာတ္မနာ ပရိပူရ္ဏး သန် ဧတာဒၖၑံ ဘဝိၐျဒွါကျံ ကထယာမာသ၊
அந்தப் பிள்ளையின் தகப்பனான சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இறைவாக்கு உரைத்ததாவது:
68 ဣသြာယေလး ပြဘု ရျသ္တု သ ဓနျး ပရမေၑွရး၊ အနုဂၖဟျ နိဇာလ္လောကာန် သ ဧဝ ပရိမောစယေတ်၊
“இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக, அவர் வந்து தம்முடைய மக்களை மீட்டுக்கொண்டார்.
69 ဝိပက္ၐဇနဟသ္တေဘျော ယထာ မောစျာမဟေ ဝယံ၊ ယာဝဇ္ဇီဝဉ္စ ဓရ္မ္မေဏ သာရလျေန စ နိရ္ဘယား၊
அவர் தமது தாசனாகிய தாவீதின் வம்சத்திலிருந்து, நாம் இரட்சிப்பு அடைவதற்கான இரட்சணியக்கொம்பை எழுப்பியிருக்கிறார்.
70 သေဝါမဟဲ တမေဝဲကမ် ဧတတ္ကာရဏမေဝ စ၊ သွကီယံ သုပဝိတြဉ္စ သံသ္မၖတျ နိယမံ သဒါ၊
அவர் தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாய், நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். (aiōn g165)
71 ကၖပယာ ပုရုၐာန် ပူရွွာန် နိကၐာရ္ထာတ္တု နး ပိတုး၊ ဣဗြာဟီမး သမီပေ ယံ ၑပထံ ကၖတဝါန် ပုရာ၊
நம்முடைய பகைவரிடமிருந்தும், நம்மை வெறுக்கும் எல்லோருடைய கைகளிலிருந்தும் நமக்கு விடுதலையை ஏற்படுத்துவேன் என்றும்,
72 တမေဝ သဖလံ ကရ္တ္တံ တထာ ၑတြုဂဏသျ စ၊ ၒတီယာကာရိဏၑ္စဲဝ ကရေဘျော ရက္ၐဏာယ နး၊
அவருடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, நம்முடைய தந்தையருக்கு இரக்கம் காண்பிப்பேன் என்றும் சொல்லியிருந்தார்.
73 သၖၐ္ဋေး ပြထမတး သွီယဲး ပဝိတြဲ ရ္ဘာဝိဝါဒိဘိး၊ (aiōn g165)
அவர் நமது தந்தையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டு:
74 ယထောက္တဝါန် တထာ သွသျ ဒါယူဒး သေဝကသျ တု၊
நம்முடைய பகைவருடைய கையினின்று நம்மைத் தப்புவித்து, நமது நாட்களெல்லாம் பயமின்றிப் பணிசெய்யும்படி,
75 ဝံၑေ တြာတာရမေကံ သ သမုတ္ပာဒိတဝါန် သွယမ်၊
பரிசுத்தத்திலும் நீதியிலும் அவருக்கு முன்பாக என்றும் வாக்குக் கொடுத்திருந்தார்.
76 အတော ဟေ ဗာလက တွန္တု သရွွေဘျး ၑြေၐ္ဌ ဧဝ ယး၊ တသျဲဝ ဘာဝိဝါဒီတိ ပြဝိချာတော ဘဝိၐျသိ၊ အသ္မာကံ စရဏာန် က္ၐေမေ မာရ္ဂေ စာလယိတုံ သဒါ၊ ဧဝံ ဓွာန္တေ'ရ္ထတော မၖတျောၑ္ဆာယာယာံ ယေ တု မာနဝါး၊
“என் பிள்ளையே, நீயோ, உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி, அவருக்கு முன்பாகப் போவாய்.
77 ဥပဝိၐ္ဋာသ္တု တာနေဝ ပြကာၑယိတုမေဝ ဟိ၊ ကၖတွာ မဟာနုကမ္ပာံ ဟိ ယာမေဝ ပရမေၑွရး၊
நம்முடைய இறைவனின் மிகுந்த இரக்கத்தின் நிமித்தம் அவருடைய மக்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படுவதன் மூலமாய், இரட்சிப்பின் அறிவைக் கொடுப்பாய்.
78 ဦရ္ဒွွာတ် သူရျျမုဒါယျဲဝါသ္မဘျံ ပြာဒါတ္တု ဒရ္ၑနံ၊ တယာနုကမ္ပယာ သွသျ လောကာနာံ ပါပမောစနေ၊
இருளில் வாழ்கிறவர்களுக்கும் மரண இருளில் இருக்கிறவர்களுக்கும் ஒளியைத் தருவதற்கும்,
79 ပရိတြာဏသျ တေဘျော ဟိ ဇ္ဉာနဝိၑြာဏနာယ စ၊ ပြဘော ရ္မာရ္ဂံ ပရိၐ္ကရ္တ္တုံ တသျာဂြာယီ ဘဝိၐျသိ။
நமது கால்களை சமாதானத்தின் வழியில் நடத்துவதற்கும், பரலோகத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.”
80 အထ ဗာလကး ၑရီရေဏ ဗုဒ္ဓျာ စ ဝရ္ဒ္ဓိတုမာရေဘေ; အပရဉ္စ သ ဣသြာယေလော ဝံၑီယလောကာနာံ သမီပေ ယာဝန္န ပြကဋီဘူတသ္တာသ္တာဝတ် ပြာန္တရေ နျဝသတ်၊
அந்தப் பிள்ளை வளர்ந்து ஆவியில் வலிமையடைந்தது; அவன் வெளியரங்கமாக இஸ்ரயேலரின்முன் வரும் காலம்வரைக்கும் பாலைவனத்தில் வாழ்ந்தான்.

< လူကး 1 >