< လူကး 7 >

1 တတး ပရံ သ လောကာနာံ ကရ္ဏဂေါစရေ တာန် သရွွာန် ဥပဒေၑာန် သမာပျ ယဒါ ကဖရ္နာဟူမ္ပုရံ ပြဝိၑတိ
இயேசு தம்முடைய வார்த்தைகளையெல்லாம் மக்கள் கேட்கும்படி சொல்லிமுடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார்.
2 တဒါ ၑတသေနာပတေး ပြိယဒါသ ဧကော မၖတကလ္ပး ပီဍိတ အာသီတ်၊
அங்கே நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் அதிபதி ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதியால் மரணவேதனைப்பட்டான்.
3 အတး သေနာပတိ ရျီၑော ရွာရ္တ္တာံ နိၑမျ ဒါသသျာရောဂျကရဏာယ တသျာဂမနာရ္ထံ ဝိနယကရဏာယ ယိဟူဒီယာန် ကိယတး ပြာစး ပြေၐယာမာသ၊
அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டும் என்று, அவரைக் கேட்டுக்கொள்ள யூதர்களுடைய ஆலய மூப்பர்களை அவரிடத்தில் அனுப்பினான்.
4 တေ ယီၑောရန္တိကံ ဂတွာ ဝိနယာတိၑယံ ဝက္တုမာရေဘိရေ, သ သေနာပတိ ရ္ဘဝတောနုဂြဟံ ပြာပ္တုမ် အရှတိ၊
அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைத் தாழ்மையாக வேண்டிக்கொண்டு: நீர் அவனுக்கு இந்த தயவுசெய்கிறதற்கு அவன் தகுதி உடையவனாக இருக்கிறான்.
5 ယတး သောသ္မဇ္ဇာတီယေၐု လောကေၐု ပြီယတေ တထာသ္မတ္ကၖတေ ဘဇနဂေဟံ နိရ္မ္မိတဝါန်၊
அவன் நம்முடைய மக்களை நேசித்து, நமக்கு ஒரு ஜெப ஆலயத்தையும் கட்டினான் என்றார்கள்.
6 တသ္မာဒ် ယီၑုသ္တဲး သဟ ဂတွာ နိဝေၑနသျ သမီပံ ပြာပ, တဒါ သ ၑတသေနာပတိ ရွက္ၐျမာဏဝါကျံ တံ ဝက္တုံ ဗန္ဓူန် ပြာဟိဏောတ်၊ ဟေ ပြဘော သွယံ ၑြမော န ကရ္တ္တဝျော ယဒ် ဘဝတာ မဒ္ဂေဟမဓျေ ပါဒါရ္ပဏံ ကြိယေတ တဒပျဟံ နာရှာမိ,
அப்பொழுது இயேசு அவர்களோடு போனார். வீட்டிற்கு அருகில் சென்றபோது, அந்த படைஅதிபதி தன் நண்பரை நோக்கி: நீங்கள் இயேசுவிடம்போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டிற்குள் பிரவேசிக்க நான் தகுதியானவன் இல்லை;
7 ကိဉ္စာဟံ ဘဝတ္သမီပံ ယာတုမပိ နာတ္မာနံ ယောဂျံ ဗုဒ္ဓဝါန်, တတော ဘဝါန် ဝါကျမာတြံ ဝဒတု တေနဲဝ မမ ဒါသး သွသ္ထော ဘဝိၐျတိ၊
உம்மிடத்திற்கு வர நான் என்னைத் தகுதியானவனாக நினைக்கவில்லை; ஒரு வார்த்தைமட்டும் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சுகம் பெறுவான்.
8 ယသ္မာဒ် အဟံ ပရာဓီနောပိ မမာဓီနာ ယား သေနား သန္တိ တာသာမ် ဧကဇနံ ပြတိ ယာဟီတိ မယာ ပြောက္တေ သ ယာတိ; တဒနျံ ပြတိ အာယာဟီတိ ပြောက္တေ သ အာယာတိ; တထာ နိဇဒါသံ ပြတိ ဧတတ် ကုရွွိတိ ပြောက္တေ သ တဒေဝ ကရောတိ၊
நான் அதிகாரத்திற்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தாலும், எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற போர்வீரர்களும் உண்டு; நான் ஒருவனைப் போ என்றால் போகிறான், மற்றொருவனை வா என்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய் என்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான்.
9 ယီၑုရိဒံ ဝါကျံ ၑြုတွာ ဝိသ္မယံ ယယော်, မုခံ ပရာဝရ္တျ ပၑ္စာဒွရ္တ္တိနော လောကာန် ဗဘာၐေ စ, ယုၐ္မာနဟံ ဝဒါမိ ဣသြာယေလော ဝံၑမဓျေပိ ဝိၑွာသမီဒၖၑံ န ပြာပ္နဝံ၊
இயேசு இவைகளைக் கேட்டு அவனைக்குறித்து ஆச்சரியப்பட்டு, அவருக்குப் பின்னே வருகிற மக்களைப் பார்த்து: இஸ்ரவேலரிடத்தில் இப்படிப்பட்ட விசுவாசத்தை நான் இதுவரை கண்டதில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
10 တတသ္တေ ပြေၐိတာ ဂၖဟံ ဂတွာ တံ ပီဍိတံ ဒါသံ သွသ္ထံ ဒဒၖၑုး၊
௧0அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, வியாதியாகக்கிடந்த வேலைக்காரன் சுகம் பெற்றிருந்ததைக் கண்டார்கள்.
11 ပရေ'ဟနိ သ နာယီနာချံ နဂရံ ဇဂါမ တသျာနေကေ ၑိၐျာ အနျေ စ လောကာသ္တေန သာရ္ဒ္ဓံ ယယုး၊
௧௧மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீடர்களும் திரளான மக்களும் அவரோடு போனார்கள்.
12 တေၐု တန္နဂရသျ ဒွါရသန္နိဓိံ ပြာပ္တေၐု ကိယန္တော လောကာ ဧကံ မၖတမနုဇံ ဝဟန္တော နဂရသျ ဗဟိရျာန္တိ, သ တန္မာတုရေကပုတြသ္တန္မာတာ စ ဝိဓဝါ; တယာ သာရ္ဒ္ဓံ တန္နဂရီယာ ဗဟဝေါ လောကာ အာသန်၊
௧௨அவர், அந்த ஊரின் தலைவாசலுக்கு அருகில் வந்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணுவதற்காக கொண்டுவந்தார்கள்; அவன் தன் விதவைத் தாய்க்கு ஒரே மகனாக இருந்தான்; அந்த ஊரில் உள்ள அநேக மக்கள் அவளோடு வந்தார்கள்.
13 ပြဘုသ္တာံ ဝိလောကျ သာနုကမ္ပး ကထယာမာသ, မာ ရောဒီး၊ သ သမီပမိတွာ ခဋွာံ ပသ္ပရ္ၑ တသ္မာဒ် ဝါဟကား သ္ထဂိတာသ္တမျုး;
௧௩இயேசு அவளைப் பார்த்து, அவள்மேல் மனமிரங்கி: அழவேண்டாம் என்று சொல்லி,
14 တဒါ သ ဥဝါစ ဟေ ယုဝမနုၐျ တွမုတ္တိၐ္ဌ, တွာမဟမ် အာဇ္ဉာပယာမိ၊
௧௪அருகில் வந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்துகொண்டுவந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
15 တသ္မာတ် သ မၖတော ဇနသ္တတ္က္ၐဏမုတ္ထာယ ကထာံ ပြကထိတး; တတော ယီၑုသ္တသျ မာတရိ တံ သမရ္ပယာမာသ၊
௧௫மரித்தவன் உயிரோடு எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயாரிடம் ஒப்படைத்தார்.
16 တသ္မာတ် သရွွေ လောကား ၑၑင်္ကိရေ; ဧကော မဟာဘဝိၐျဒွါဒီ မဓျေ'သ္မာကမ် သမုဒဲတ်, ဤၑွရၑ္စ သွလောကာနနွဂၖဟ္လာတ် ကထာမိမာံ ကထယိတွာ ဤၑွရံ ဓနျံ ဇဂဒုး၊
௧௬எல்லோரும் பயந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது மக்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
17 တတး ပရံ သမသ္တံ ယိဟူဒါဒေၑံ တသျ စတုရ္ဒိက္သ္ထဒေၑဉ္စ တသျဲတတ္ကီရ္တ္တိ ရွျာနၑေ၊
௧௭இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதும் சுற்றியிருக்கிற பகுதிகள் எல்லாவற்றிலும் பிரசித்தமானது.
18 တတး ပရံ ယောဟနး ၑိၐျေၐု တံ တဒွၖတ္တာန္တံ ဇ္ဉာပိတဝတ္သု
௧௮இவைகளையெல்லாம் யோவானுடைய சீடர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீடர்களில் இரண்டுபேரை அழைத்து,
19 သ သွၑိၐျာဏာံ ဒွေါ် ဇနာဝါဟူယ ယီၑုံ ပြတိ ဝက္ၐျမာဏံ ဝါကျံ ဝက္တုံ ပြေၐယာမာသ, ယသျာဂမနမ် အပေက္ၐျ တိၐ္ဌာမော ဝယံ ကိံ သ ဧဝ ဇနသ္တွံ? ကိံ ဝယမနျမပေက္ၐျ သ္ထာသျာမး?
௧௯நீங்கள் இயேசுவினிடத்திற்குப்போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான்.
20 ပၑ္စာတ္တော် မာနဝေါ် ဂတွာ ကထယာမာသတုး, ယသျာဂမနမ် အပေက္ၐျ တိၐ္ဌာမော ဝယံ, ကိံ သဧဝ ဇနသ္တွံ? ကိံ ဝယမနျမပေက္ၐျ သ္ထာသျာမး? ကထာမိမာံ တုဘျံ ကထယိတုံ ယောဟန် မဇ္ဇက အာဝါံ ပြေၐိတဝါန်၊
௨0அப்படியே அவர்கள் இயேசுவிடம் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வர நாங்கள் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடம் அனுப்பினார் என்றார்கள்.
21 တသ္မိန် ဒဏ္ဍေ ယီၑူရောဂိဏော မဟာဝျာဓိမတော ဒုၐ္ဋဘူတဂြသ္တာံၑ္စ ဗဟူန် သွသ္ထာန် ကၖတွာ, အနေကာန္ဓေဘျၑ္စက္ၐုံၐိ ဒတ္တွာ ပြတျုဝါစ,
௨௧அந்த நேரத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேக குருடர்களுக்குப் பார்வையளித்தார்.
22 ယုဝါံ ဝြဇတမ် အန္ဓာ နေတြာဏိ ခဉ္ဇာၑ္စရဏာနိ စ ပြာပ္နုဝန္တိ, ကုၐ္ဌိနး ပရိၐ္ကြိယန္တေ, ဗဓိရား ၑြဝဏာနိ မၖတာၑ္စ ဇီဝနာနိ ပြာပ္နုဝန္တိ, ဒရိဒြာဏာံ သမီပေၐု သုသံဝါဒး ပြစာရျျတေ, ယံ ပြတိ ဝိဃ္နသွရူပေါဟံ န ဘဝါမိ သ ဓနျး,
௨௨இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் போய், பார்த்தவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு சொல்லுங்கள்; பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், காதுகேளாதோர் கேட்கிறார்கள், மரித்தோர் உயிரோடு எழுந்திருக்கிறார்கள், தரித்திரர்களுக்கு நற்செய்தி பிரசங்கிக்கப்படுகிறது.
23 ဧတာနိ ယာနိ ပၑျထး ၑၖဏုထၑ္စ တာနိ ယောဟနံ ဇ္ဉာပယတမ်၊
௨௩என்னிடத்தில் என் செயல்களைக்குறித்து சந்தேகமில்லாமல் விசுவாசிக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.
24 တယော ရ္ဒူတယော ရ္ဂတယေား သတော ရျောဟနိ သ လောကာန် ဝက္တုမုပစကြမေ, ယူယံ မဓျေပြာန္တရံ ကိံ ဒြၐ္ဋုံ နိရဂမတ? ကိံ ဝါယုနာ ကမ္ပိတံ နဍံ?
௨௪யோவானால் அனுப்பப்பட்டவர்கள் போனபின்பு அவர் யோவானைப்பற்றி மக்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்திரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசைகின்ற புல்லையோ?
25 ယူယံ ကိံ ဒြၐ္ဋုံ နိရဂမတ? ကိံ သူက္ၐ္မဝသ္တြပရိဓာယိနံ ကမပိ နရံ? ကိန္တု ယေ သူက္ၐ္မမၖဒုဝသ္တြာဏိ ပရိဒဓတိ သူတ္တမာနိ ဒြဝျာဏိ ဘုဉ္ဇတေ စ တေ ရာဇဓာနီၐု တိၐ္ဌန္တိ၊
௨௫இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? விலையுயர்ந்த ஆடை அணிந்த மனிதனையோ? அலங்கார ஆடை அணிந்து சுகபோகமாக வாழ்கிறவர்கள் அரசருடைய மாளிகைகளிலே இருக்கிறார்கள்.
26 တရှိ ယူယံ ကိံ ဒြၐ္ဋုံ နိရဂမတ? ကိမေကံ ဘဝိၐျဒွါဒိနံ? တဒေဝ သတျံ ကိန္တု သ ပုမာန် ဘဝိၐျဒွါဒိနောပိ ၑြေၐ္ဌ ဣတျဟံ ယုၐ္မာန် ဝဒါမိ;
௨௬இல்லையென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைவிட உயர்ந்தவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
27 ပၑျ သွကီယဒူတန္တု တဝါဂြ ပြေၐယာမျဟံ၊ ဂတွာ တွဒီယမာရ္ဂန္တု သ ဟိ ပရိၐ္ကရိၐျတိ၊ ယဒရ္ထေ လိပိရိယမ် အာသ္တေ သ ဧဝ ယောဟန်၊
௨௭இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்குமுன்னேபோய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தில் சொல்லப்பட்டவன் இவன்தான்.
28 အတော ယုၐ္မာနဟံ ဝဒါမိ သ္တြိယာ ဂရ္ဗ္ဘဇာတာနာံ ဘဝိၐျဒွါဒိနာံ မဓျေ ယောဟနော မဇ္ဇကာတ် ၑြေၐ္ဌး ကောပိ နာသ္တိ, တတြာပိ ဤၑွရသျ ရာဇျေ ယး သရွွသ္မာတ် က္ၐုဒြး သ ယောဟနောပိ ၑြေၐ္ဌး၊
௨௮பெண்களிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைவிட பெரிய தீர்க்கதரிசி ஒருவனும் இல்லை; ஆனாலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாக இருக்கிறவன் அவனைவிட பெரியவனாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
29 အပရဉ္စ သရွွေ လောကား ကရမဉ္စာယိနၑ္စ တသျ ဝါကျာနိ ၑြုတွာ ယောဟနာ မဇ္ဇနေန မဇ္ဇိတား ပရမေၑွရံ နိရ္ဒောၐံ မေနိရေ၊
௨௯யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட வரி வசூலிப்பவர்களும், மக்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதியுள்ளவர் என்று அறிக்கை செய்தார்கள்.
30 ကိန္တု ဖိရူၑိနော ဝျဝသ္ထာပကာၑ္စ တေန န မဇ္ဇိတား သွာန် ပြတီၑွရသျောပဒေၑံ နိၐ္ဖလမ် အကုရွွန်၊
௩0ஆனால், பரிசேயர்களும் நியாயப்பண்டிதர்களும் அவனிடம் ஞானஸ்நானம் பெறாமல் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்.
31 အထ ပြဘုး ကထယာမာသ, ဣဒါနီန္တနဇနာန် ကေနောပမာမိ? တေ ကသျ သဒၖၑား?
௩௧மறுபடியும் இயேசு சொன்னது என்னவென்றால்: இந்த வம்சத்தை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாக இருக்கிறார்கள்?
32 ယေ ဗာလကာ ဝိပဏျာမ် ဥပဝိၑျ ပရသ္ပရမ် အာဟူယ ဝါကျမိဒံ ဝဒန္တိ, ဝယံ ယုၐ္မာကံ နိကဋေ ဝံၑီရဝါဒိၐ္မ, ကိန္တု ယူယံ နာနရ္တ္တိၐ္ဋ, ဝယံ ယုၐ္မာကံ နိကဋ အရောဒိၐ္မ, ကိန္တု ယုယံ န ဝျလပိၐ္ဋ, ဗာလကဲရေတာဒၖၑဲသ္တေၐာမ် ဥပမာ ဘဝတိ၊
௩௨சந்தைகளில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காக புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறைசொல்லுகிற குழந்தைகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
33 ယတော ယောဟန် မဇ္ဇက အာဂတျ ပူပံ နာခါဒတ် ဒြာက္ၐာရသဉ္စ နာပိဝတ် တသ္မာဒ် ယူယံ ဝဒထ, ဘူတဂြသ္တောယမ်၊
௩௩யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சைரசம் குடிக்காதவனுமாக வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள்.
34 တတး ပရံ မာနဝသုတ အာဂတျာခါဒဒပိဝဉ္စ တသ္မာဒ် ယူယံ ဝဒထ, ခါဒကး သုရာပၑ္စာဏ္ဍာလပါပိနာံ ဗန္ဓုရေကော ဇနော ဒၖၑျတာမ်၊
௩௪மனிதகுமாரன் சாப்பிட வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, சாப்பாட்டுப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனிதன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள்.
35 ကိန္တု ဇ္ဉာနိနော ဇ္ဉာနံ နိရ္ဒောၐံ ဝိဒုး၊
௩௫ஆனாலும் ஞானமானது அதின் குழந்தைகளால் நீதியுள்ளதென்று நிரூபிக்கப்படும் என்றார்.
36 ပၑ္စာဒေကး ဖိရူၑီ ယီၑုံ ဘောဇနာယ နျမန္တြယတ် တတး သ တသျ ဂၖဟံ ဂတွာ ဘောက္တုမုပဝိၐ္ဋး၊
௩௬பரிசேயர்களில் ஒருவன் தன்னுடனே சாப்பிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டிற்குச் சென்று சாப்பிட உட்கார்ந்தார்.
37 ဧတရှိ တတ္ဖိရူၑိနော ဂၖဟေ ယီၑု ရ္ဘေက္တုမ် ဥပါဝေက္ၐီတ် တစ္ဆြုတွာ တန္နဂရဝါသိနီ ကာပိ ဒုၐ္ဋာ နာရီ ပါဏ္ဍရပြသ္တရသျ သမ္ပုဋကေ သုဂန္ဓိတဲလမ် အာနီယ
௩௭அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு பெண் அவர் பரிசேயன் வீட்டிலே உண்பதை அறிந்து, ஒரு பாத்திரத்தில் பரிமளதைலம் கொண்டுவந்து,
38 တသျ ပၑ္စာတ် ပါဒယေား သန္နိဓော် တသျော် ရုဒတီ စ နေတြာမ္ဗုဘိသ္တသျ စရဏော် ပြက္ၐာလျ နိဇကစဲရမာရ္က္ၐီတ်, တတသ္တသျ စရဏော် စုမ္ဗိတွာ တေန သုဂန္ဓိတဲလေန မမရ္ဒ၊
௩௮அவருடைய பாதங்களின் அருகே நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தம் செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.
39 တသ္မာတ် သ နိမန္တြယိတာ ဖိရူၑီ မနသာ စိန္တယာမာသ, ယဒျယံ ဘဝိၐျဒွါဒီ ဘဝေတ် တရှိ ဧနံ သ္ပၖၑတိ ယာ သ္တြီ သာ ကာ ကီဒၖၑီ စေတိ ဇ္ဉာတုံ ၑက္နုယာတ် ယတး သာ ဒုၐ္ဋာ၊
௩௯அவரை அழைத்த பரிசேயன் அதை பார்த்தபோது, இவர் தீர்க்கதரிசியாக இருந்தால் தம்மைத் தொடுகிற பெண் எப்படிப்பட்டவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாக இருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
40 တဒါ ယာၑုသ္တံ ဇဂါဒ, ဟေ ၑိမောန် တွာံ ပြတိ မမ ကိဉ္စိဒ် ဝက္တဝျမသ္တိ; တသ္မာတ် သ ဗဘာၐေ, ဟေ ဂုရော တဒ် ဝဒတု၊
௪0இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றார் அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான்.
41 ဧကောတ္တမရ္ဏသျ ဒွါဝဓမရ္ဏာဝါသ္တာံ, တယောရေကး ပဉ္စၑတာနိ မုဒြာပါဒါန် အပရၑ္စ ပဉ္စာၑတ် မုဒြာပါဒါန် ဓာရယာမာသ၊
௪௧அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது.
42 တဒနန္တရံ တယေား ၑောဓျာဘာဝါတ် သ ဥတ္တမရ္ဏသ္တယော ရၖဏေ စက္ၐမေ; တသ္မာတ် တယောရ္ဒွယေား ကသ္တသ္မိန် ပြေၐျတေ ဗဟု? တဒ် ဗြူဟိ၊
௪௨வாங்கிய கடனை திரும்பக்கொடுக்க அவர்களுக்கு முடியாததால், இருவருடைய கடன்களையும் மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாக இருப்பான்? அதைச் சொல் என்றார்.
43 ၑိမောန် ပြတျုဝါစ, မယာ ဗုဓျတေ ယသျာဓိကမ် ၒဏံ စက္ၐမေ သ ဣတိ; တတော ယီၑုသ္တံ ဝျာဇဟာရ, တွံ ယထာရ္ထံ ဝျစာရယး၊
௪௩சீமோன் மறுமொழியாக: எவனுக்கு அதிகமாக மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாக இருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாக நினைத்தாய் என்று சொல்லி,
44 အထ တာံ နာရီံ ပြတိ ဝျာဃုဌျ ၑိမောနမဝေါစတ်, သ္တြီမိမာံ ပၑျသိ? တဝ ဂၖဟေ မယျာဂတေ တွံ ပါဒပြက္ၐာလနာရ္ထံ ဇလံ နာဒါး ကိန္တု ယောၐိဒေၐာ နယနဇလဲ ရ္မမ ပါဒေါ် ပြက္ၐာလျ ကေၑဲရမာရ္က္ၐီတ်၊
௪௪பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனை நோக்கி: இந்தப் பெண்ணைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டிற்கு வந்தேன், நீ என் கால்களைக் கழுவத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
45 တွံ မာံ နာစုမ္ဗီး ကိန္တု ယောၐိဒေၐာ သွီယာဂမနာဒါရဘျ မဒီယပါဒေါ် စုမ္ဗိတုံ န ဝျရံသ္တ၊
௪௫நீ என்னை முத்தம் செய்யவில்லை, இவளோ, நான் இங்கு வந்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தம் செய்தாள்.
46 တွဉ္စ မဒီယောတ္တမာင်္ဂေ ကိဉ္စိဒပိ တဲလံ နာမရ္ဒီး ကိန္တု ယောၐိဒေၐာ မမ စရဏော် သုဂန္ဓိတဲလေနာမရ္ဒ္ဒီတ်၊
௪௬நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள்.
47 အတသ္တွာံ ဝျာဟရာမိ, ဧတသျာ ဗဟု ပါပမက္ၐမျတ တတော ဗဟု ပြီယတေ ကိန္တု ယသျာလ္ပပါပံ က္ၐမျတေ သောလ္ပံ ပြီယတေ၊
௪௭ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாக அன்பு செலுத்துவான் என்று சொல்லி;
48 တတး ပရံ သ တာံ ဗဘာၐေ, တွဒီယံ ပါပမက္ၐမျတ၊
௪௮அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார்.
49 တဒါ တေန သာရ္ဒ္ဓံ ယေ ဘောက္တုမ် ဥပဝိဝိၑုသ္တေ ပရသ္ပရံ ဝက္တုမာရေဘိရေ, အယံ ပါပံ က္ၐမတေ က ဧၐး?
௪௯அப்பொழுது அவரோடு சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
50 ကိန္တု သ တာံ နာရီံ ဇဂါဒ, တဝ ဝိၑွာသသ္တွာံ ပရျျတြာသ္တ တွံ က္ၐေမေဏ ဝြဇ၊
௫0இயேசு அந்தப் பெண்ணைப் பார்த்து: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார்.

< လူကး 7 >