< လူကး 18 >
1 အပရဉ္စ လောကဲရက္လာန္တဲ ရ္နိရန္တရံ ပြာရ္ထယိတဝျမ် ဣတျာၑယေန ယီၑုနာ ဒၖၐ္ဋာန္တ ဧကး ကထိတး၊
அதற்குப் பின்பு இயேசு, தமது சீடர்கள் மனந்தளர்ந்து போகாமல், எப்போதும் மன்றாடுகிறவர்களாய் இருக்கவேண்டும் என்பதைக்குறித்து காண்பிப்பதற்காக, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்:
2 ကုတြစိန္နဂရေ ကၑ္စိတ် ပြာဍွိဝါက အာသီတ် သ ဤၑွရာန္နာဗိဘေတ် မာနုၐာံၑ္စ နာမနျတ၊
“ஒரு பட்டணத்திலே ஒரு நீதிபதி இருந்தான். அவன் இறைவனுக்குப் பயப்படாதவன். மக்களையும் மதியாதவன்.
3 အထ တတ္ပုရဝါသိနီ ကာစိဒွိဓဝါ တတ္သမီပမေတျ ဝိဝါဒိနာ သဟ မမ ဝိဝါဒံ ပရိၐ္ကုရွွိတိ နိဝေဒယာမာသ၊
அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள். அவள் தொடர்ந்து அவனிடம் வந்து, ‘எனது விரோதிக்கு எதிராக எனக்கு நீதி வழங்குங்கள்’ என்று அவனைக் கெஞ்சிக் கேட்டாள்.
4 တတး သ ပြာဍွိဝါကး ကိယဒ္ဒိနာနိ န တဒင်္ဂီကၖတဝါန် ပၑ္စာစ္စိတ္တေ စိန္တယာမာသ, ယဒျပီၑွရာန္န ဗိဘေမိ မနုၐျာနပိ န မနျေ
“கொஞ்சக்காலம் அவன் அப்படிச் செய்ய மறுத்தான். இறுதியாக அவன், ‘நான் இறைவனுக்குப் பயப்படாதவனாகவும், மனிதனை மதிக்காதவனாகவும் இருந்துங்கூட,
5 တထာပျေၐာ ဝိဓဝါ မာံ က္လိၑ္နာတိ တသ္မာဒသျာ ဝိဝါဒံ ပရိၐ္ကရိၐျာမိ နောစေတ် သာ သဒါဂတျ မာံ ဝျဂြံ ကရိၐျတိ၊
இந்த விதவை தொடர்ந்து எனக்குத் தொந்தரவு கொடுக்கிறாள்; அதனால், நான் அவளுக்கு நீதி வழங்குவேன். அப்பொழுது அவள் இப்படித் தொடர்ந்து வந்து, என்னைத் தொந்தரவு செய்யமாட்டாள்’ என்று, தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்” என்றார்.
6 ပၑ္စာတ် ပြဘုရဝဒဒ် အသာဝနျာယပြာဍွိဝါကော ယဒါဟ တတြ မနော နိဓဓွံ၊
பின்பு கர்த்தர், “அந்த அநீதியுள்ள நீதிபதி சொன்னதைச் சிந்தித்துப் பாருங்கள்!
7 ဤၑွရသျ ယေ 'ဘိရုစိတလောကာ ဒိဝါနိၑံ ပြာရ္ထယန္တေ သ ဗဟုဒိနာနိ ဝိလမ္ဗျာပိ တေၐာံ ဝိဝါဒါန် ကိံ န ပရိၐ္ကရိၐျတိ?
அந்தப்படியே, தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்கு, இறைவன் நீதியை வழங்காதிருப்பாரோ? அவர் நீதி வழங்கத் தாமதிப்பாரோ?
8 ယုၐ္မာနဟံ ဝဒါမိ တွရယာ ပရိၐ္ကရိၐျတိ, ကိန္တု ယဒါ မနုၐျပုတြ အာဂမိၐျတိ တဒါ ပၖထိဝျာံ ကိမီဒၖၑံ ဝိၑွာသံ ပြာပ္သျတိ?
நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்களுக்கு இறைவன் சீக்கிரமாகவே நீதி வழங்குவார். ஆனால் மானிடமகனாகிய நான் வரும்போது, பூமியிலே விசுவாசத்தைக் காண்பேனோ?” என்றார்.
9 ယေ သွာန် ဓာရ္မ္မိကာန် ဇ္ဉာတွာ ပရာန် တုစ္ဆီကုရွွန္တိ ဧတာဒၖဂ္ဘျး, ကိယဒ္ဘျ ဣမံ ဒၖၐ္ဋာန္တံ ကထယာမာသ၊
தாங்கள் நீதிமான்கள் என்று நினைத்துக்கொண்டு, மற்றவர்கள் எல்லோரையும் கீழ்த்தரமாய் எண்ணிய சிலரைக் குறித்து, இயேசு இந்த உவமையைச் சொன்னார்:
10 ဧကး ဖိရူၑျပရး ကရသဉ္စာယီ ဒွါဝိမော် ပြာရ္ထယိတုံ မန္ဒိရံ ဂတော်၊
“இரண்டுபேர் மன்றாடும்படி ஆலயத்திற்குச் சென்றார்கள். அதில் ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன்.
11 တတော'သော် ဖိရူၑျေကပါရ္ၑွေ တိၐ္ဌန် ဟေ ဤၑွရ အဟမနျလောကဝတ် လောဌယိတာနျာယီ ပါရဒါရိကၑ္စ န ဘဝါမိ အသျ ကရသဉ္စာယိနသ္တုလျၑ္စ န, တသ္မာတ္တွာံ ဓနျံ ဝဒါမိ၊
அந்தப் பரிசேயன் நின்றுகொண்டு: ‘இறைவனே, நான் மற்றவர்களைப்போல் இராதபடியினால், உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் கள்வர்களையோ, தீமை செய்கிறவர்களையோ, விபசாரக்காரரையோ அல்லது இந்த வரி வசூலிக்கிறவனைப் போன்றவன் அல்ல.
12 သပ္တသု ဒိနေၐု ဒိနဒွယမုပဝသာမိ သရွွသမ္ပတ္တေ ရ္ဒၑမာံၑံ ဒဒါမိ စ, ဧတတ္ကထာံ ကထယန် ပြာရ္ထယာမာသ၊
நான் வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன், எனது வருமானத்திலெல்லாம் பத்திலொன்றை கொடுக்கிறேன்’ என்று, தனக்குத்தானே சொல்லி மன்றாடினான்.
13 ကိန္တု သ ကရသဉ္စာယိ ဒူရေ တိၐ္ဌန် သွရ္ဂံ ဒြၐ္ဋုံ နေစ္ဆန် ဝက္ၐသိ ကရာဃာတံ ကုရွွန် ဟေ ဤၑွရ ပါပိၐ္ဌံ မာံ ဒယသွ, ဣတ္ထံ ပြာရ္ထယာမာသ၊
“ஆனால், வரி வசூலிப்பவனோ தூரமாய் நின்று வானத்தை நோக்கிப் பார்க்கவும் துணியாமல், அவன் தன் மார்பில் அடித்துக்கொண்டு, ‘இறைவனே, பாவியாகிய என்மேல் இரக்கம் காட்டும்’ என மன்றாடினான்.
14 ယုၐ္မာနဟံ ဝဒါမိ, တယောရ္ဒွယော ရ္မဓျေ ကေဝလး ကရသဉ္စာယီ ပုဏျဝတ္တွေန ဂဏိတော နိဇဂၖဟံ ဇဂါမ, ယတော ယး ကၑ္စိတ် သွမုန္နမယတိ သ နာမယိၐျတေ ကိန္တု ယး ကၑ္စိတ် သွံ နမယတိ သ ဥန္နမယိၐျတေ၊
“நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவன் அல்ல, இவனே இறைவனுடைய பார்வையில் நீதிமானாகத் தீர்க்கப்பட்டு, தன் வீட்டிற்குத் திரும்பிச்சென்றான். ஏனெனில், தன்னைத்தான் உயர்த்துகிற எவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.”
15 အထ ၑိၑူနာံ ဂါတြသ္ပရ္ၑာရ္ထံ လောကာသ္တာန် တသျ သမီပမာနိနျုး ၑိၐျာသ္တဒ် ဒၖၐ္ဋွာနေတၖန် တရ္ဇယာမာသုး,
குழந்தைகள்மேல் இயேசு கைகளை வைக்கவேண்டும் என்பதற்காக, மக்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள். இதைச் சீடர்கள் கண்டபோது, அவர்கள் மக்களைக் கண்டித்தார்கள்.
16 ကိန္တု ယီၑုသ္တာနာဟူယ ဇဂါဒ, မန္နိကဋမ် အာဂန္တုံ ၑိၑူန် အနုဇာနီဓွံ တာံၑ္စ မာ ဝါရယတ; ယတ ဤၑွရရာဇျာဓိကာရိဏ ဧၐာံ သဒၖၑား၊
இயேசுவோ, பிள்ளைகளைத் தம்மிடம் வரவேற்று சீடர்களுக்கு, “சிறுபிள்ளைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்கவேண்டாம். ஏனெனில், இறைவனுடைய அரசு இப்படிப்பட்டவர்களுக்கே உரியது.
17 အဟံ ယုၐ္မာန် ယထာရ္ထံ ဝဒါမိ, ယော ဇနး ၑိၑေား သဒၖၑော ဘူတွာ ဤၑွရရာဇျံ န ဂၖဟ္လာတိ သ ကေနာပိ ပြကာရေဏ တတ် ပြဝေၐ္ဋုံ န ၑက္နောတိ၊
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், சிறுபிள்ளையைப்போல் இறைவனுடைய அரசை ஏற்றுக்கொள்ளாத ஒருவன், அதற்குள் ஒருபோதும் செல்லமாட்டான்” என்றார்.
18 အပရမ် ဧကောဓိပတိသ္တံ ပပြစ္ဆ, ဟေ ပရမဂုရော, အနန္တာယုၐး ပြာပ္တယေ မယာ ကိံ ကရ္တ္တဝျံ? (aiōnios )
அப்பொழுது தலைவன் ஒருவன் அவரிடம், “நல்ல போதகரே, நித்திய வாழ்வை உரிமையாகப் பெறுவதற்கு, நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான். (aiōnios )
19 ယီၑုရုဝါစ, မာံ ကုတး ပရမံ ဝဒသိ? ဤၑွရံ ဝိနာ ကောပိ ပရမော န ဘဝတိ၊
அதற்கு இயேசு, “நீ ஏன் என்னை நல்லவர் என்று அழைக்கிறாய்? இறைவன் ஒருவரைத் தவிர, வேறு யாரும் நல்லவர் இல்லையே.
20 ပရဒါရာန် မာ ဂစ္ဆ, နရံ မာ ဇဟိ, မာ စောရယ, မိထျာသာက္ၐျံ မာ ဒေဟိ, မာတရံ ပိတရဉ္စ သံမနျသွ, ဧတာ ယာ အာဇ္ဉား သန္တိ တာသ္တွံ ဇာနာသိ၊
‘விபசாரம் செய்யாதே, கொலை செய்யாதே, களவு செய்யாதே, பொய்சாட்சி சொல்லாதே, உன் தகப்பனையும் தாயையும் மதித்து நட’ என்ற கட்டளைகளை நீ அறிந்திருக்கிறாயே” என்றார்.
21 တဒါ သ ဥဝါစ, ဗာလျကာလာတ် သရွွာ ဧတာ အာစရာမိ၊
அதற்கு அவன், “என் சிறுவயதுமுதல், இவற்றையெல்லாம் செய்துகொண்டு இருக்கிறேன்” என்றான்.
22 ဣတိ ကထာံ ၑြုတွာ ယီၑုသ္တမဝဒတ်, တထာပိ တဝဲကံ ကရ္မ္မ နျူနမာသ္တေ, နိဇံ သရွွသွံ ဝိကြီယ ဒရိဒြေဘျော ဝိတရ, တသ္မာတ် သွရ္ဂေ ဓနံ ပြာပ္သျသိ; တတ အာဂတျ မမာနုဂါမီ ဘဝ၊
இயேசு இதைக் கேட்டபோது, “உன்னிடம் இன்னும் ஒரு குறைபாடு இருக்கிறது. உன்னிடம் உள்ள எல்லாவற்றையும் விற்று ஏழைகளுக்குக் கொடு. அப்பொழுது, பரலோகத்தில் உனக்கு செல்வம் இருக்கும். பின்பு வந்து என்னைப் பின்பற்று” என்றார்.
23 ကိန္တွေတာံ ကထာံ ၑြုတွာ သောဓိပတိး ၑုၑောစ, ယတသ္တသျ ဗဟုဓနမာသီတ်၊
அவன் இதைக் கேட்டபோது மிகவும் துக்கமடைந்தான். ஏனெனில், அவன் மிகுந்த செல்வமுடையவனாய் இருந்தான்.
24 တဒါ ယီၑုသ္တမတိၑောကာနွိတံ ဒၖၐ္ဋွာ ဇဂါဒ, ဓနဝတာမ် ဤၑွရရာဇျပြဝေၑး ကီဒၖဂ် ဒုၐ္ကရး၊
இயேசு அவனைப் பார்த்து, “பணக்காரன் இறைவனுடைய அரசிற்குள் போவது எவ்வளவு கடினமானது!
25 ဤၑွရရာဇျေ ဓနိနး ပြဝေၑာတ် သူစေၑ္ဆိဒြေဏ မဟာင်္ဂသျ ဂမနာဂမနေ သုကရေ၊
பணக்காரன் ஒருவன் இறைவனுடைய அரசுக்குள் செல்வதைப் பார்க்கிலும், ஒரு ஒட்டகம் ஊசியின் காதினுள் நுழைவது இலகுவாயிருக்கும்” என்றார்.
26 ၑြောတာရး ပပြစ္ဆုသ္တရှိ ကေန ပရိတြာဏံ ပြာပ္သျတေ?
இதைக் கேட்டவர்களோ, “அப்படியானால், யார்தான் இரட்சிக்கப்பட முடியும்?” என்று கேட்டார்கள்.
27 သ ဥက္တဝါန်, ယန် မာနုၐေဏာၑကျံ တဒ် ဤၑွရေဏ ၑကျံ၊
அதற்கு இயேசு, “மனிதரால் செய்ய முடியாதவற்றை, இறைவனால் செய்யமுடியும்” என்றார்.
28 တဒါ ပိတရ ဥဝါစ, ပၑျ ဝယံ သရွွသွံ ပရိတျဇျ တဝ ပၑ္စာဒ္ဂါမိနော'ဘဝါမ၊
அப்பொழுது பேதுரு அவரிடம், “உம்மைப் பின்பற்றுவதற்காக, எங்களிடம் உள்ளதையெல்லாம் விட்டுவிட்டு நாங்கள் வந்தோமே” என்றான்.
29 တတး သ ဥဝါစ, ယုၐ္မာနဟံ ယထာရ္ထံ ဝဒါမိ, ဤၑွရရာဇျာရ္ထံ ဂၖဟံ ပိတရော် ဘြာတၖဂဏံ ဇာယာံ သန္တာနာံၑ္စ တျက္တဝါ
அதற்கு இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது இறைவனுடைய அரசின் நிமித்தம் வீட்டையோ, மனைவியையோ, சகோதரர்களையோ, பெற்றோரையோ, பிள்ளைகளையோ விட்டுவிட்டிருந்தால்,
30 ဣဟ ကာလေ တတော'ဓိကံ ပရကာလေ 'နန္တာယုၑ္စ န ပြာပ္သျတိ လောက ဤဒၖၑး ကောပိ နာသ္တိ၊ (aiōn , aiōnios )
அவர்கள் இந்த வாழ்வில் அதிகமானவைகளைப் பெற்றுக்கொள்வதோடு, வரப்போகும் காலத்தில் நித்திய வாழ்வையும் நிச்சயமாகப் பெற்றுக்கொள்வார்கள்” என்றார். (aiōn , aiōnios )
31 အနန္တရံ သ ဒွါဒၑၑိၐျာနာဟူယ ဗဘာၐေ, ပၑျတ ဝယံ ယိရူၑာလမ္နဂရံ ယာမး, တသ္မာတ် မနုၐျပုတြေ ဘဝိၐျဒွါဒိဘိရုက္တံ ယဒသ္တိ တဒနုရူပံ တံ ပြတိ ဃဋိၐျတေ;
இயேசு பன்னிரண்டு சீடர்களையும் ஒரு பக்கமாய் அழைத்துக் கொண்டுபோய் அவர்களிடம், “நாம் எருசலேமுக்குப் போகிறோம், மானிடமகனாகிய என்னைப்பற்றி இறைவாக்கினர்களால் எழுதப்பட்டிருக்கின்ற எல்லாம் நிறைவேறும்.
32 ဝသ္တုတသ္တု သော'နျဒေၑီယာနာံ ဟသ္တေၐု သမရ္ပယိၐျတေ, တေ တမုပဟသိၐျန္တိ, အနျာယမာစရိၐျန္တိ တဒွပုၐိ နိၐ္ဌီဝံ နိက္ၐေပ္သျန္တိ, ကၑာဘိး ပြဟၖတျ တံ ဟနိၐျန္တိ စ,
மானிடமகனாகிய நான் யூதரல்லாதவர்களிடம் ஒப்படைக்கப்படுவேன். அவர்கள் என்னை ஏளனம் செய்து, அவமதித்து, என்மேல் துப்புவார்கள். என்னைச் சவுக்கால் அடித்து, என்னைக் கொலைசெய்வார்கள்.
33 ကိန္တု တၖတီယဒိနေ သ ၑ္မၑာနာဒ် ဥတ္ထာသျတိ၊
ஆனால் மூன்றாம் நாளிலே, நான் உயிரோடு எழுந்திருப்பேன்” என்று சொன்னார்.
34 ဧတသျား ကထာယာ အဘိပြာယံ ကိဉ္စိဒပိ တေ ဗောဒ္ဓုံ န ၑေကုး တေၐာံ နိကဋေ'သ္ပၐ္ဋတဝါတ် တသျဲတာသာံ ကထာနာမ် အာၑယံ တေ ဇ္ဉာတုံ န ၑေကုၑ္စ၊
சீடர்களோ, இவைகளில் ஒன்றையுமே விளங்கிக்கொள்ளவில்லை. இயேசு சொன்னதின் அர்த்தம் அவர்களிடமிருந்து மறைக்கப்பட்டிருந்தது. அவர் எதைக்குறித்துப் பேசுகிறாரென்றுகூட அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
35 အထ တသ္မိန် ယိရီဟေား ပုရသျာန္တိကံ ပြာပ္တေ ကၑ္စိဒန္ဓး ပထး ပါရ္ၑွ ဥပဝိၑျ ဘိက္ၐာမ် အကရောတ္
இயேசு எரிகோவுக்கு அருகில் வந்துகொண்டிருக்கையில், பார்வையற்ற ஒருவன் வீதி ஓரத்தில் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
36 သ လောကသမူဟသျ ဂမနၑဗ္ဒံ ၑြုတွာ တတ္ကာရဏံ ပၖၐ္ဋဝါန်၊
மக்கள் கூட்டமாக செல்லுகின்ற சத்தத்தை அவன் கேட்டு, என்ன நிகழ்கிறது என்று விசாரித்தான்.
37 နာသရတီယယီၑုရျာတီတိ လောကဲရုက္တေ သ ဥစ္စဲရွက္တုမာရေဘေ,
நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, அவ்வழியாய் போகிறாரென்று அவனுக்குச் சொன்னார்கள்.
38 ဟေ ဒါယူဒး သန္တာန ယီၑော မာံ ဒယသွ၊
உடனே அவன், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்” என்று சத்தமாய் கூப்பிட்டான்.
39 တတောဂြဂါမိနသ္တံ မော်နီ တိၐ္ဌေတိ တရ္ဇယာမာသုး ကိန္တု သ ပုနာရုဝန် ဥဝါစ, ဟေ ဒါယူဒး သန္တာန မာံ ဒယသွ၊
முன்னே சென்றுக் கொண்டிருந்தவர்கள் அவன் சத்தமிடாதிருக்கும்படி அவனை அதட்டினார்கள். ஆனால் அவனோ, இன்னும் அதிக சத்தமாய், “இயேசுவே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்” என்று, கூப்பிட்டான்.
40 တဒါ ယီၑုး သ္ထဂိတော ဘူတွာ သွာန္တိကေ တမာနေတုမ် အာဒိဒေၑ၊
இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி உத்தரவிட்டார். அவன் அருகில் வந்தபொழுது, இயேசு அவனிடம்,
41 တတး သ တသျာန္တိကမ် အာဂမတ်, တဒါ သ တံ ပပြစ္ဆ, တွံ ကိမိစ္ဆသိ? တွဒရ္ထမဟံ ကိံ ကရိၐျာမိ? သ ဥက္တဝါန်, ဟေ ပြဘော'ဟံ ဒြၐ္ဋုံ လဘဲ၊
“நான் உனக்கு என்ன செய்யவேண்டுமென்று நீ விரும்புகிறாய்?” என்று, கேட்டார். அதற்கு அவன், “ஆண்டவரே, நான் பார்வை பெறவிரும்புகிறேன்” என்றான்.
42 တဒါ ယီၑုရုဝါစ, ဒၖၐ္ဋိၑက္တိံ ဂၖဟာဏ တဝ ပြတျယသ္တွာံ သွသ္ထံ ကၖတဝါန်၊
இயேசு அவனிடம், “நீ பார்வையைப் பெற்றுக்கொள்; உன் விசுவாசம் உன்னை நலமாக்கிற்று” என்றார்.
43 တတသ္တတ္က္ၐဏာတ် တသျ စက္ၐုၐီ ပြသန္နေ; တသ္မာတ် သ ဤၑွရံ ဓနျံ ဝဒန် တတ္ပၑ္စာဒ် ယယော်, တဒါလောကျ သရွွေ လောကာ ဤၑွရံ ပြၑံသိတုမ် အာရေဘိရေ၊
உடனே, அவன் பார்வை பெற்று இறைவனைத் துதித்துக்கொண்டு, இயேசுவைப் பின்பற்றிச் சென்றான். இதைக் கண்ட எல்லா மக்களும் இறைவனைத் துதித்தார்கள்.