< လူကး 15 >

1 တဒါ ကရသဉ္စာယိနး ပါပိနၑ္စ လောကာ ဥပဒေၑ္ကထာံ ၑြောတုံ ယီၑေား သမီပမ် အာဂစ္ဆန်၊
இயேசு சொல்வதைக் கேட்பதற்காக அநேக வரி வசூலிப்போரும், பாவிகளும் அவரைச் சுற்றிக் கூடியிருந்தார்கள்.
2 တတး ဖိရူၑိန ဥပါဓျာယာၑ္စ ဝိဝဒမာနား ကထယာမာသုး ဧၐ မာနုၐး ပါပိဘိး သဟ ပြဏယံ ကၖတွာ တဲး သာရ္ဒ္ဓံ ဘုံက္တေ၊
அப்பொழுது பரிசேயரும், மோசேயின் சட்ட ஆசிரியரும், “இவன் பாவிகளை வரவேற்று, அவர்களுடன் சாப்பிடுகிறான்” என்று முறுமுறுத்தார்கள்.
3 တဒါ သ တေဘျ ဣမာံ ဒၖၐ္ဋာန္တကထာံ ကထိတဝါန်,
அப்பொழுது இயேசு அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்:
4 ကသျစိတ် ၑတမေၐေၐု တိၐ္ဌတ္မု တေၐာမေကံ သ ယဒိ ဟာရယတိ တရှိ မဓျေပြာန္တရမ် ဧကောနၑတမေၐာန် ဝိဟာယ ဟာရိတမေၐသျ ဥဒ္ဒေၑပြာပ္တိပရျျနတံ န ဂဝေၐယတိ, ဧတာဒၖၑော လောကော ယုၐ္မာကံ မဓျေ က အာသ္တေ?
“உங்களில் ஒருவனிடம் நூறு ஆடுகள் இருந்து, அவற்றில் ஒன்று காணாமல் போனால், அவன் தனது தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பத்திரமான இடத்தில் விட்டுவிட்டு, காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரைக்கும், அதைத் தேடிப்போவான் அல்லவா?
5 တသျောဒ္ဒေၑံ ပြာပျ ဟၖၐ္ဋမနာသ္တံ သ္ကန္ဓေ နိဓာယ သွသ္ထာနမ် အာနီယ ဗန္ဓုဗာန္ဓဝသမီပဝါသိန အာဟူယ ဝက္တိ,
அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, மகிழ்ச்சியுடன் தனது தோளில் போட்டுக்கொண்டு,
6 ဟာရိတံ မေၐံ ပြာပ္တောဟမ် အတော ဟေတော ရ္မယာ သာရ္ဒ္ဓမ် အာနန္ဒတ၊
தன் வீட்டுக்கு வருவான். பின்பு அவன் தன்னுடைய நண்பர்களையும், அயலவர்களையும் கூப்பிட்டு, ‘என்னுடனே மகிழ்ச்சியடையுங்கள்; காணாமல் போன எனது ஆட்டை நான் கண்டுபிடித்து விட்டேன்’ என்று சொல்வான்.
7 တဒွဒဟံ ယုၐ္မာန် ဝဒါမိ, ယေၐာံ မနးပရာဝရ္တ္တနသျ ပြယောဇနံ နာသ္တိ, တာဒၖၑဲကောနၑတဓာရ္မ္မိကကာရဏာဒ် ယ အာနန္ဒသ္တသ္မာဒ် ဧကသျ မနးပရိဝရ္တ္တိနး ပါပိနး ကာရဏာတ် သွရ္ဂေ 'ဓိကာနန္ဒော ဇာယတေ၊
அவ்விதமாகவே மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைப் பார்க்கிலும், மனந்திரும்புகிற ஒரு பாவியைக் குறித்து பரலோகத்திலே அதிக மகிழ்ச்சி உண்டாகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
8 အပရဉ္စ ဒၑာနာံ ရူပျခဏ္ဍာနာမ် ဧကခဏ္ဍေ ဟာရိတေ ပြဒီပံ ပြဇွာလျ ဂၖဟံ သမ္မာရ္ဇျ တသျ ပြာပ္တိံ ယာဝဒ် ယတ္နေန န ဂဝေၐယတိ, ဧတာဒၖၑီ ယောၐိတ် ကာသ္တေ?
“ஒரு பெண்ணிடம், பத்து வெள்ளி நாணயங்கள் இருந்து, அதில் ஒன்று காணாமல் போனால், அவள் அதைக்கண்டுபிடிக்கும் வரைக்கும், ஒரு விளக்கைக் கொளுத்தி, வீட்டைக் கூட்டி, கவனமாய் தேடாமல் இருப்பாளோ?
9 ပြာပ္တေ သတိ ဗန္ဓုဗာန္ဓဝသမီပဝါသိနီရာဟူယ ကထယတိ, ဟာရိတံ ရူပျခဏ္ဍံ ပြာပ္တာဟံ တသ္မာဒေဝ မယာ သာရ္ဒ္ဓမ် အာနန္ဒတ၊
அவள் அதைக் கண்டெடுக்கும்போது, தனது சிநேகிதிகளையும், அயலவர்களையும் கூடிவரும்படி கூப்பிட்டு, ‘என்னுடனே மகிழ்ச்சியாயிருங்கள்; காணாமல் போன எனது நாணயத்தை நான் கண்டுபிடித்தேன்’ என்று சொல்வாள் அல்லவா?
10 တဒွဒဟံ ယုၐ္မာန် ဝျာဟရာမိ, ဧကေန ပါပိနာ မနသိ ပရိဝရ္တ္တိတေ, ဤၑွရသျ ဒူတာနာံ မဓျေပျာနန္ဒော ဇာယတေ၊
அவ்விதமாகவே மனந்திரும்புகிற ஒரு பாவியைக் குறித்து, இறைவனுடைய தூதரின் முன்னிலையில் பெருமகிழ்ச்சி உண்டாகும்” என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
11 အပရဉ္စ သ ကထယာမာသ, ကသျစိဒ် ဒွေါ် ပုတြာဝါသ္တာံ,
இயேசு தொடர்ந்து சொன்னதாவது: “ஒருவனுக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள்.
12 တယေား ကနိၐ္ဌး ပုတြး ပိတြေ ကထယာမာသ, ဟေ ပိတသ္တဝ သမ္ပတ္တျာ ယမံၑံ ပြာပ္သျာမျဟံ ဝိဘဇျ တံ ဒေဟိ, တတး ပိတာ နိဇာံ သမ္ပတ္တိံ ဝိဘဇျ တာဘျာံ ဒဒေါ်၊
அவர்களில் இளையவன் தனது தகப்பனிடம், ‘அப்பா, சொத்தில் எனக்குரிய பங்கைத் தாரும்’ என்று கேட்டான். எனவே தகப்பன், தனது சொத்தை இரண்டுபேர்களுக்கும் இடையில் பிரித்துக்கொடுத்தான்.
13 ကတိပယာတ် ကာလာတ် ပရံ သ ကနိၐ္ဌပုတြး သမသ္တံ ဓနံ သံဂၖဟျ ဒူရဒေၑံ ဂတွာ ဒုၐ္ဋာစရဏေန သရွွာံ သမ္ပတ္တိံ နာၑယာမာသ၊
“சில நாட்களுக்குள்ளாகவே, இளையமகன் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரமாயுள்ள ஒரு நாட்டிற்குப் போனான். அவன் அங்கே, துன்மார்க்கமான வாழ்க்கையை வாழ்ந்து, தனது செல்வத்தையெல்லாம் வீணாக செலவுசெய்து அழித்துப்போட்டான்.
14 တသျ သရွွဓနေ ဝျယံ ဂတေ တဒ္ဒေၑေ မဟာဒုရ္ဘိက္ၐံ ဗဘူဝ, တတသ္တသျ ဒဲနျဒၑာ ဘဝိတုမ် အာရေဘေ၊
அவன் எல்லாவற்றையும் செலவுசெய்து முடித்தபின், அந்த நாடு முழுவதிலும் ஒரு கொடிய பஞ்சம் ஏற்பட்டது; அதனால், அவனுக்கு வறுமை ஏற்படத் தொடங்கியது.
15 တတး ပရံ သ ဂတွာ တဒ္ဒေၑီယံ ဂၖဟသ္ထမေကမ် အာၑြယတ; တတး သတံ ၑူကရဝြဇံ စာရယိတုံ ပြာန္တရံ ပြေၐယာမာသ၊
எனவே, அவன் அந்த நாட்டைச் சேர்ந்த ஒருவனிடம் போய், கூலிக்கு அமர்ந்தான். அங்கு அவன், பன்றிகளை மேய்க்கும்படி வயலுக்கு அனுப்பப்பட்டான்.
16 ကေနာပိ တသ္မဲ ဘက္ၐျာဒါနာတ် သ ၑူကရဖလဝလ္ကလေန ပိစိဏ္ဍပူရဏာံ ဝဝါဉ္ဆ၊
அப்பொழுது அவன், பன்றிகள் தின்கின்ற தவிட்டினாலேயே தனது வயிற்றை நிரப்ப ஆசைப்பட்டான். ஆனால், ஒருவரும் அவனுக்கு அதையும் கொடுக்கவில்லை.
17 ၑေၐေ သ မနသိ စေတနာံ ပြာပျ ကထယာမာသ, ဟာ မမ ပိတုး သမီပေ ကတိ ကတိ ဝေတနဘုဇော ဒါသာ ယထေၐ္ဋံ တတောဓိကဉ္စ ဘက္ၐျံ ပြာပ္နုဝန္တိ ကိန္တွဟံ က္ၐုဓာ မုမူရ္ၐုး၊
“அவனது புத்தி தெளிவடைந்தபோது, ‘எனது தகப்பனிடம் இருக்கும் கூலிக்காரர்களில் எத்தனையோ பேர், உணவைத் தாராளமாய்ப் பெற்றுக்கொள்கிறார்கள். நானோ, இங்கே பட்டினியில் சாகிறேன்.
18 အဟမုတ္ထာယ ပိတုး သမီပံ ဂတွာ ကထာမေတာံ ဝဒိၐျာမိ, ဟေ ပိတရ် ဤၑွရသျ တဝ စ ဝိရုဒ္ဓံ ပါပမကရဝမ္
நான் புறப்பட்டு என் தகப்பனிடத்திற்குத் திரும்பிப்போய், அவரிடம்: அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன்.
19 တဝ ပုတြဣတိ ဝိချာတော ဘဝိတုံ န ယောဂျောသ္မိ စ, မာံ တဝ ဝဲတနိကံ ဒါသံ ကၖတွာ သ္ထာပယ၊
நான் இனிமேலும் உம்முடைய மகன் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியுடையவன் அல்ல; என்னை உமது கூலிக்காரர்களில் ஒருவனாக வைத்துக்கொள்ளும் எனச் சொல்வேன்’ என்று சொல்லிக்கொண்டான்.
20 ပၑ္စာတ် သ ဥတ္ထာယ ပိတုး သမီပံ ဇဂါမ; တတသ္တသျ ပိတာတိဒူရေ တံ နိရီက္ၐျ ဒယာဉ္စကြေ, ဓာဝိတွာ တသျ ကဏ္ဌံ ဂၖဟီတွာ တံ စုစုမ္ဗ စ၊
எனவே, அவன் எழுந்து தன் தகப்பனிடத்திற்குப் போனான். “அவன் வெகுதூரத்தில் வந்துகொண்டிருக்கும் போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருக்கம் கொண்டான்; தகப்பன் ஓடிப்போய், தனது மகனைக் கைகளால் கட்டிப்பிடித்து முத்தமிட்டான்.
21 တဒါ ပုတြ ဥဝါစ, ဟေ ပိတရ် ဤၑွရသျ တဝ စ ဝိရုဒ္ဓံ ပါပမကရဝံ, တဝ ပုတြဣတိ ဝိချာတော ဘဝိတုံ န ယောဂျောသ္မိ စ၊
“மகனோ தன் தகப்பனிடம், ‘அப்பா, நான் பரலோகத்திற்கு எதிராகவும், உமக்கு எதிராகவும் பாவம் செய்துவிட்டேன். இனிமேலும், உமது மகன் என்று அழைக்கப்படுவதற்கு நான் தகுதியற்றவன்’ என்றான்.
22 ကိန္တု တသျ ပိတာ နိဇဒါသာန် အာဒိဒေၑ, သရွွောတ္တမဝသ္တြာဏျာနီယ ပရိဓာပယတဲနံ ဟသ္တေ စာင်္ဂုရီယကမ် အရ္ပယတ ပါဒယောၑ္စောပါနဟော် သမရ္ပယတ;
“ஆனால் அவனுடைய தகப்பனோ, தனது வேலைக்காரரைப் பார்த்து, ‘விரைவாய் போங்கள், முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து, அதை இவனுக்கு உடுத்துங்கள். இவனுடைய கை விரலிலே மோதிரத்தையும் காலுக்கு பாதரட்சையையும் போடுங்கள்.
23 ပုၐ္ဋံ ဂေါဝတ္သမ် အာနီယ မာရယတ စ တံ ဘုက္တွာ ဝယမ် အာနန္ဒာမ၊
மிக சிறப்பான விருந்தை உடனே ஆயத்தப்படுத்துங்கள். நாம் விருந்துண்டு கொண்டாடுவோம்.
24 ယတော မမ ပုတြောယမ် အမြိယတ ပုနရဇီဝီဒ် ဟာရိတၑ္စ လဗ္ဓောဘူတ် တတသ္တ အာနန္ဒိတုမ် အာရေဘိရေ၊
ஏனெனில், எனது மகனான இவன் இறந்து போயிருந்தான்; இப்பொழுதோ, மீண்டும் உயிர்பெற்று வந்திருக்கிறான். நான் இவனை இழந்து போயிருந்தேன்; இப்பொழுதோ, எனக்கு இவன் கிடைத்துவிட்டான்,’ என்றான். எனவே, அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.
25 တတ္ကာလေ တသျ ဇျေၐ္ဌး ပုတြး က္ၐေတြ အာသီတ်၊ အထ သ နိဝေၑနသျ နိကဋံ အာဂစ္ဆန် နၖတျာနာံ ဝါဒျာနာဉ္စ ၑဗ္ဒံ ၑြုတွာ
“இவ்வேளையில், மூத்த மகன் வயலில் இருந்தான். அவன் வீட்டிற்கு திரும்பிவந்து கொண்டிருக்கையில், ஆடல் பாடலின் சத்தம் அவனுக்குக் கேட்டது.
26 ဒါသာနာမ် ဧကမ် အာဟူယ ပပြစ္ဆ, ကိံ ကာရဏမသျ?
எனவே, அவன் வேலைக்காரரில் ஒருவனைக் கூப்பிட்டு, ‘என்ன நடக்கிறது?’ என்று விசாரித்தான்.
27 တတး သောဝါဒီတ်, တဝ ဘြာတာဂမတ်, တဝ တာတၑ္စ တံ သုၑရီရံ ပြာပျ ပုၐ္ဋံ ဂေါဝတ္သံ မာရိတဝါန်၊
அதற்கு அவன், ‘உம் சகோதரன் வந்திருக்கிறார். அவர் சுகபெலத்துடன் தம்மிடம் மீண்டும் வந்து சேர்ந்ததால், உமது தந்தை மிக சிறப்பான விருந்தை ஆயத்தபடுத்தியிருக்கிறார்’ என்றான்.
28 တတး သ ပြကုပျ နိဝေၑနာန္တး ပြဝေၐ္ဋုံ န သမ္မေနေ; တတသ္တသျ ပိတာ ဗဟိရာဂတျ တံ သာဓယာမာသ၊
“அப்பொழுது அந்த மூத்த சகோதரனோ கோபமடைந்து, உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தான். எனவே அவனது தந்தை வெளியே போய், அவனை உள்ளே வரும்படி கெஞ்சிக்கேட்டான்.
29 တတး သ ပိတရံ ပြတျုဝါစ, ပၑျ တဝ ကာဉ္စိဒပျာဇ္ဉာံ န ဝိလံဃျ ဗဟူန် ဝတ္သရာန် အဟံ တွာံ သေဝေ တထာပိ မိတြဲး သာရ္ဒ္ဓမ် ဥတ္သဝံ ကရ္တ္တုံ ကဒါပိ ဆာဂမေကမပိ မဟျံ နာဒဒါး;
அவனோ தன் தந்தையிடம், ‘இதோ, இத்தனை வருடங்களாக நான் உங்களுக்கு அடிமையாய் வேலைசெய்துகொண்டு வருகிறேன், நான் ஒருபோதும் உங்கள் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாமல் போனதில்லை. அப்படியிருந்தும், நான் எனது நண்பர்களுடன் கொண்டாடும்படி, நீங்கள் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியைகூட கொடுக்கவில்லை.
30 ကိန္တု တဝ ယး ပုတြော ဝေၑျာဂမနာဒိဘိသ္တဝ သမ္ပတ္တိမ် အပဝျယိတဝါန် တသ္မိန္နာဂတမာတြေ တသျဲဝ နိမိတ္တံ ပုၐ္ဋံ ဂေါဝတ္သံ မာရိတဝါန်၊
ஆனால் வேசிகளோடு உங்கள் சொத்தை வீணடித்த இந்த உங்கள் மகன் வீட்டிற்கு வந்த உடனே, இவனுக்காக நீங்கள் மிக சிறப்பான விருந்தை ஆயத்தப்படுத்தி இருக்கிறீர்கள்’ என்றான்.
31 တဒါ တသျ ပိတာဝေါစတ်, ဟေ ပုတြ တွံ သရွွဒါ မယာ သဟာသိ တသ္မာန် မမ ယဒျဒါသ္တေ တတ္သရွွံ တဝ၊
“அப்பொழுது தந்தை, ‘என் மகனே! நீ எப்பொழுதும் என்னுடனே தான் இருக்கிறாய். எனக்குரியவை எல்லாம் உனக்குரியவைகளே.
32 ကိန္တု တဝါယံ ဘြာတာ မၖတး ပုနရဇီဝီဒ် ဟာရိတၑ္စ ဘူတွာ ပြာပ္တောဘူတ်, ဧတသ္မာတ် ကာရဏာဒ် ဥတ္သဝါနန္ဒော် ကရ္တ္တုမ် ဥစိတမသ္မာကမ်၊
ஆனால் உம் சகோதரனான இவன் இறந்து போயிருந்தான்; இப்பொழுது மீண்டும் உயிர்பெற்றிருக்கிறான். காணாமல் போயிருந்தான்; மீண்டும் நமக்குக் கிடைத்திருக்கிறான். அதனால், நாம் சந்தோஷத்தோடே கொண்டாடுவது முறையானதே’ என்றான்.”

< လူကး 15 >