< လူကး 13 >

1 အပရဉ္စ ပီလာတော ယေၐာံ ဂါလီလီယာနာံ ရက္တာနိ ဗလီနာံ ရက္တဲး သဟာမိၑြယတ် တေၐာံ ဂါလီလီယာနာံ ဝၖတ္တာန္တံ ကတိပယဇနာ ဥပသ္ထာပျ ယီၑဝေ ကထယာမာသုး၊
அந்த நேரத்திலே அங்கே இருந்தவர்களில் சிலர் இயேசுவிடம் வந்து, பிலாத்து சில கலிலேயர்களுடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடு கலந்தான் என்ற செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
2 တတး သ ပြတျုဝါစ တေၐာံ လောကာနာမ် ဧတာဒၖၑီ ဒုရ္ဂတိ ရ္ဃဋိတာ တတ္ကာရဏာဒ် ယူယံ ကိမနျေဘျော ဂါလီလီယေဘျောပျဓိကပါပိနသ္တာန် ဗောဓဓွေ?
இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: அந்தக் கலிலேயர்களுக்கு அப்படிப்பட்டவைகள் நடந்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயர்களைவிட அவர்கள் பாவிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
3 ယုၐ္မာနဟံ ဝဒါမိ တထာ န ကိန္တု မနးသု န ပရာဝရ္တ္တိတေၐု ယူယမပိ တထာ နံက္ၐျထ၊
அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள்.
4 အပရဉ္စ ၑီလောဟနာမ္န ဥစ္စဂၖဟသျ ပတနာဒ် ယေ'ၐ္ဋာဒၑဇနာ မၖတာသ္တေ ယိရူၑာလမိ နိဝါသိသရွွလောကေဘျော'ဓိကာပရာဓိနး ကိံ ယူယမိတျံ ဗောဓဓွေ?
சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேர் மரித்தார்களே; எருசலேமில் குடியிருக்கிற மனிதர்களெல்லோரிலும் அவர்கள் குற்றவாளிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
5 ယုၐ္မာနဟံ ဝဒါမိ တထာ န ကိန္တု မနးသု န ပရိဝရ္တ္တိတေၐု ယူယမပိ တထာ နံက္ၐျထ၊
அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லோரும் அப்படியே அழிந்துபோவீர்கள் என்றார்.
6 အနန္တရံ သ ဣမာံ ဒၖၐ္ဋာန္တကထာမကထယဒ် ဧကော ဇနော ဒြာက္ၐာက္ၐေတြမဓျ ဧကမုဍုမ္ဗရဝၖက္ၐံ ရောပိတဝါန်၊ ပၑ္စာတ် သ အာဂတျ တသ္မိန် ဖလာနိ ဂဝေၐယာမာသ,
அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சைத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங்காணவில்லை.
7 ကိန္တု ဖလာပြာပ္တေး ကာရဏာဒ် ဥဒျာနကာရံ ဘၖတျံ ဇဂါဒ, ပၑျ ဝတ္သရတြယံ ယာဝဒါဂတျ ဧတသ္မိန္နုဍုမ္ဗရတရော် က္ၐလာနျနွိစ္ဆာမိ, ကိန္တု နဲကမပိ ပြပ္နောမိ တရုရယံ ကုတော ဝၖထာ သ္ထာနံ ဝျာပျ တိၐ္ဌတိ? ဧနံ ဆိန္ဓိ၊
அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருடங்களாக இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங்காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான்.
8 တတော ဘၖတျး ပြတျုဝါစ, ဟေ ပြဘော ပုနရွရ္ၐမေကံ သ္ထာတုမ် အာဒိၑ; ဧတသျ မူလသျ စတုရ္ဒိက္ၐု ခနိတွာဟမ် အာလဝါလံ သ္ထာပယာမိ၊
அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருடமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங்கொத்தி, எருப்போடுவேன்,
9 တတး ဖလိတုံ ၑက္နောတိ ယဒိ န ဖလတိ တရှိ ပၑ္စာတ် ဆေတ္သျသိ၊
கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்.
10 အထ ဝိၑြာမဝါရေ ဘဇနဂေဟေ ယီၑုရုပဒိၑတိ
௧0ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார்.
11 တသ္မိတ် သမယေ ဘူတဂြသ္တတွာတ် ကုဗ္ဇီဘူယာၐ္ဋာဒၑဝရ္ၐာဏိ ယာဝတ် ကေနာပျုပါယေန ၒဇု ရ္ဘဝိတုံ န ၑက္နောတိ ယာ ဒုရ္ဗ္ဗလာ သ္တြီ,
௧௧அப்பொழுது பதினெட்டு வருடங்களாகப் பலவீனப்படுத்தும் ஆவியைக்கொண்ட ஒரு பெண் அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாக இருந்தாள்.
12 တာံ တတြောပသ္ထိတာံ ဝိလောကျ ယီၑုသ္တာမာဟူယ ကထိတဝါန် ဟေ နာရိ တဝ ဒေါ်ရ္ဗ္ဗလျာတ် တွံ မုက္တာ ဘဝ၊
௧௨இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: பெண்ணே, உன் பலவீனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,
13 တတး ပရံ တသျာ ဂါတြေ ဟသ္တာရ္ပဏမာတြာတ် သာ ၒဇုရ္ဘူတွေၑွရသျ ဓနျဝါဒံ ကရ္တ္တုမာရေဘေ၊
௧௩அவள்மேல் தமது கரங்களை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
14 ကိန္တု ဝိၑြာမဝါရေ ယီၑုနာ တသျား သွာသ္ထျကရဏာဒ် ဘဇနဂေဟသျာဓိပတိး ပြကုပျ လောကာန် ဥဝါစ, ၐဋ္သု ဒိနေၐု လောကဲး ကရ္မ္မ ကရ္တ္တဝျံ တသ္မာဒ္ဓေတေား သွာသ္ထျာရ္ထံ တေၐု ဒိနေၐု အာဂစ္ဆတ, ဝိၑြာမဝါရေ မာဂစ္ဆတ၊
௧௪இயேசு ஓய்வுநாளிலே சுகமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, மக்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறு நாட்கள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சுகமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான்.
15 တဒါ ပဘုး ပြတျုဝါစ ရေ ကပဋိနော ယုၐ္မာကမ် ဧကဲကော ဇနော ဝိၑြာမဝါရေ သွီယံ သွီယံ ဝၖၐဘံ ဂရ္ဒဘံ ဝါ ဗန္ဓနာန္မောစယိတွာ ဇလံ ပါယယိတုံ ကိံ န နယတိ?
௧௫கர்த்தர் அவனுக்கு மறுமொழியாக மாயக்காரர்களே: உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா?
16 တရှျာၐ္ဋာဒၑဝတ္သရာန် ယာဝတ် ၑဲတာနာ ဗဒ္ဓါ ဣဗြာဟီမး သန္တတိရိယံ နာရီ ကိံ ဝိၑြာမဝါရေ န မောစယိတဝျာ?
௧௬இதோ, சாத்தான் பதினெட்டு வருடங்களாகக் கட்டியிருந்த ஆபிரகாமின் மகளாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார்.
17 ဧၐု ဝါကျေၐု ကထိတေၐု တသျ ဝိပက္ၐား သလဇ္ဇာ ဇာတား ကိန္တု တေန ကၖတသရွွမဟာကရ္မ္မကာရဏာတ် လောကနိဝဟး သာနန္ဒော'ဘဝတ်၊
௧௭அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். மக்களெல்லோரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் மகிழ்ந்தார்கள்.
18 အနန္တရံ သောဝဒဒ် ဤၑွရသျ ရာဇျံ ကသျ သဒၖၑံ? ကေန တဒုပမာသျာမိ?
௧௮அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாக இருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்?
19 ယတ် သရ္ၐပဗီဇံ ဂၖဟီတွာ ကၑ္စိဇ္ဇန ဥဒျာန ဥပ္တဝါန် တဒ် ဗီဇမင်္ကုရိတံ သတ် မဟာဝၖက္ၐော'ဇာယတ, တတသ္တသျ ၑာခါသု ဝိဟာယသီယဝိဟဂါ အာဂတျ နျူၐုး, တဒြာဇျံ တာဒၖၑေန သရ္ၐပဗီဇေန တုလျံ၊
௧௯அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு மனிதன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமானது; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார்.
20 ပုနး ကထယာမာသ, ဤၑွရသျ ရာဇျံ ကသျ သဒၖၑံ ဝဒိၐျာမိ? ယတ် ကိဏွံ ကာစိတ် သ္တြီ ဂၖဟီတွာ ဒြောဏတြယပရိမိတဂေါဓူမစူရ္ဏေၐု သ္ထာပယာမာသ,
௨0மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
21 တတး ကြမေဏ တတ် သရွွဂေါဓူမစူရ္ဏံ ဝျာပ္နောတိ, တသျ ကိဏွသျ တုလျမ် ဤၑွရသျ ရာဇျံ၊
௨௧அது புளித்த மாவிற்கு ஒப்பாக இருக்கிறது; அதை ஒரு பெண் எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடி மாவோடு பிசைந்து வைத்தாள் என்றார்.
22 တတး သ ယိရူၑာလမ္နဂရံ ပြတိ ယာတြာံ ကၖတွာ နဂရေ နဂရေ ဂြာမေ ဂြာမေ သမုပဒိၑန် ဇဂါမ၊
௨௨அவர் எருசலேமுக்குப் பயணமாகப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் செய்துகொண்டே போனார்.
23 တဒါ ကၑ္စိဇ္ဇနသ္တံ ပပြစ္ဆ, ဟေ ပြဘော ကိံ ကေဝလမ် အလ္ပေ လောကား ပရိတြာသျန္တေ?
௨௩அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, விடுதலையாக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்:
24 တတး သ လောကာန် ဥဝါစ, သံကီရ္ဏဒွါရေဏ ပြဝေၐ္ဋုံ ယတဃွံ, ယတောဟံ ယုၐ္မာန် ဝဒါမိ, ဗဟဝး ပြဝေၐ္ဋုံ စေၐ္ဋိၐျန္တေ ကိန္တု န ၑက္ၐျန္တိ၊
௨௪இடுக்கமான வாசல்வழியாக உள்ளே பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உள்ளே பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
25 ဂၖဟပတိနောတ္ထာယ ဒွါရေ ရုဒ္ဓေ သတိ ယဒိ ယူယံ ဗဟိး သ္ထိတွာ ဒွါရမာဟတျ ဝဒထ, ဟေ ပြဘော ဟေ ပြဘော အသ္မတ္ကာရဏာဒ် ဒွါရံ မောစယတု, တတး သ ဣတိ ပြတိဝက္ၐျတိ, ယူယံ ကုတြတျာ လောကာ ဣတျဟံ န ဇာနာမိ၊
௨௫வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் மறுமொழியாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார்.
26 တဒါ ယူယံ ဝဒိၐျထ, တဝ သာက္ၐာဒ် ဝယံ ဘေဇနံ ပါနဉ္စ ကၖတဝန္တး, တွဉ္စာသ္မာကံ နဂရသျ ပထိ သမုပဒိၐ္ဋဝါန်၊
௨௬அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் உணவு உண்டோமே, நீர் எங்களுடைய வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள்.
27 ကိန္တု သ ဝက္ၐျတိ, ယုၐ္မာနဟံ ဝဒါမိ, ယူယံ ကုတြတျာ လောကာ ဣတျဟံ န ဇာနာမိ; ဟေ ဒုရာစာရိဏော ယူယံ မတ္တော ဒူရီဘဝတ၊
௨௭ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரர்களாகிய நீங்களெல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
28 တဒါ ဣဗြာဟီမံ ဣသှာကံ ယာကူဗဉ္စ သရွွဘဝိၐျဒွါဒိနၑ္စ ဤၑွရသျ ရာဇျံ ပြာပ္တာန် သွာံၑ္စ ဗဟိၐ္ကၖတာန် ဒၖၐ္ဋွာ ယူယံ ရောဒနံ ဒန္တဲရ္ဒန္တဃရ္ၐဏဉ္စ ကရိၐျထ၊
௨௮நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் எல்லாத் தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்.
29 အပရဉ္စ ပူရွွပၑ္စိမဒက္ၐိဏောတ္တရဒိဂ္ဘျော လောကာ အာဂတျ ဤၑွရသျ ရာဇျေ နိဝတ္သျန္တိ၊
௨௯கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்த மக்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள்.
30 ပၑျတေတ္ထံ ၑေၐီယာ လောကာ အဂြာ ဘဝိၐျန္တိ, အဂြီယာ လောကာၑ္စ ၑေၐာ ဘဝိၐျန္တိ၊
௩0அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார்.
31 အပရဉ္စ တသ္မိန် ဒိနေ ကိယန္တး ဖိရူၑိန အာဂတျ ယီၑုံ ပြောစုး, ဗဟိရ္ဂစ္ဆ, သ္ထာနာဒသ္မာတ် ပြသ္ထာနံ ကုရု, ဟေရောဒ် တွာံ ဇိဃာံသတိ၊
௩௧அந்த நாளிலே சில பரிசேயர்கள் அவரிடத்தில் வந்து: நீர் இந்த இடத்தைவிட்டுப்போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாக இருக்கிறான் என்றார்கள்.
32 တတး သ ပြတျဝေါစတ် ပၑျတာဒျ ၑွၑ္စ ဘူတာန် ဝိဟာပျ ရောဂိဏော'ရောဂိဏး ကၖတွာ တၖတီယေဟ္နိ သေတ္သျာမိ, ကထာမေတာံ ယူယမိတွာ တံ ဘူရိမာယံ ဝဒတ၊
௩௨அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களை, சுகமாக்கி மூன்றாம்நாளில் நிறைவடைவேன்.
33 တတြာပျဒျ ၑွး ပရၑွၑ္စ မယာ ဂမနာဂမနေ ကရ္တ္တဝျေ, ယတော ဟေတော ရျိရူၑာလမော ဗဟိး ကုတြာပိ ကောပိ ဘဝိၐျဒွါဒီ န ဃာနိၐျတေ၊
௩௩இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்கு வெளியே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள்.
34 ဟေ ယိရူၑာလမ် ဟေ ယိရူၑာလမ် တွံ ဘဝိၐျဒွါဒိနော ဟံသိ တဝါန္တိကေ ပြေရိတာန် ပြသ္တရဲရ္မာရယသိ စ, ယထာ ကုက္ကုဋီ နိဇပက္ၐာဓး သွၑာဝကာန် သံဂၖဟ္လာတိ, တထာဟမပိ တဝ ၑိၑူန် သံဂြဟီတုံ ကတိဝါရာန် အဲစ္ဆံ ကိန္တု တွံ နဲစ္ဆး၊
௩௪எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளுவதைப்போல நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள விருப்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விருப்பமில்லாமற்போனது.
35 ပၑျတ ယုၐ္မာကံ ဝါသသ္ထာနာနိ ပြောစ္ဆိဒျမာနာနိ ပရိတျက္တာနိ စ ဘဝိၐျန္တိ; ယုၐ္မာနဟံ ယထာရ္ထံ ဝဒါမိ, ယး ပြဘော ရ္နာမ္နာဂစ္ဆတိ သ ဓနျ ဣတိ ဝါစံ ယာဝတ္ကာလံ န ဝဒိၐျထ, တာဝတ္ကာလံ ယူယံ မာံ န ဒြက္ၐျထ၊
௩௫இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் வாழ்த்தப்படத்தக்கவர் என்று நீங்கள் சொல்லும் காலம் வரும்வரைக்கும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

< လူကး 13 >