< ယောဟနး 8 >

1 ပြတျူၐေ ယီၑုး ပနရ္မန္ဒိရမ် အာဂစ္ဆတ္
இயேசுவோ ஒலிவமலைக்குச் சென்றார்.
2 တတး သရွွေၐု လောကေၐု တသျ သမီပ အာဂတေၐု သ ဥပဝိၑျ တာန် ဥပဒေၐ္ဋုမ် အာရဘတ၊
அதிகாலையிலே அவர் மீண்டும் ஆலய முற்றத்திற்கு வந்தார். மக்கள் எல்லோரும் அவரைச் சுற்றிக் கூடிவந்தனர். இயேசு அவர்களுக்கு போதிப்பதற்காக உட்கார்ந்தார்.
3 တဒါ အဓျာပကား ဖိရူၑိနဉ္စ ဝျဘိစာရကရ္မ္မဏိ ဓၖတံ သ္တြိယမေကာမ် အာနိယ သရွွေၐာံ မဓျေ သ္ထာပယိတွာ ဝျာဟရန္
அப்பொழுது மோசேயின் சட்ட ஆசிரியரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை அங்கு கொண்டுவந்தார்கள். அவர்கள் அவளை அங்கிருந்த எல்லோருக்கும் நடுவாக நிறுத்தினார்கள்.
4 ဟေ ဂုရော ယောၐိတမ် ဣမာံ ဝျဘိစာရကရ္မ္မ ကုရွွာဏာံ လောကာ ဓၖတဝန္တး၊
அவர்கள் இயேசுவிடம், “போதகரே, இந்தப் பெண் விபசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போதே பிடிக்கப்பட்டாள்.
5 ဧတာဒၖၑလောကား ပါၐာဏာဃာတေန ဟန္တဝျာ ဣတိ ဝိဓိရ္မူသာဝျဝသ္ထာဂြန္ထေ လိခိတောသ္တိ ကိန္တု ဘဝါန် ကိမာဒိၑတိ?
இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டும் என்று மோசேயின் சட்டத்தில் மோசே எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். இப்பொழுது நீர் என்ன சொல்கிறீர்?” என்றார்கள்.
6 တေ တမပဝဒိတုံ ပရီက္ၐာဘိပြာယေဏ ဝါကျမိဒမ် အပၖစ္ဆန် ကိန္တု သ ပြဟွီဘူယ ဘူမာဝင်္ဂလျာ လေခိတုမ် အာရဘတ၊
இயேசுவுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவரும்படி, ஒரு சூழ்ச்சியாக அவர்கள் இந்தக் கேள்வியை கேட்டார்கள். ஆனால் இயேசுவோ, குனிந்து தமது விரலினால் தரையிலே எழுதத் தொடங்கினார்.
7 တတသ္တဲး ပုနး ပုနး ပၖၐ္ဋ ဥတ္ထာယ ကထိတဝါန် ယုၐ္မာကံ မဓျေ ယော ဇနော နိရပရာဓီ သဧဝ ပြထမမ် ဧနာံ ပါၐာဏေနာဟန္တု၊
அவர்கள் தொடர்ந்து அவரைக் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததினால், இயேசு நிமிர்ந்து அவர்களைப் பார்த்து, “உங்களில் யாராவது பாவமில்லாதவன் இருந்தால், அவன் முதலாவதாக இவள்மேல் கல்லெறியட்டும்” என்றார்.
8 ပၑ္စာတ် သ ပုနၑ္စ ပြဟွီဘူယ ဘူမော် လေခိတုမ် အာရဘတ၊
இயேசு மீண்டும் குனிந்து தரையில் எழுதினார்.
9 တာံ ကထံ ၑြုတွာ တေ သွသွမနသိ ပြဗောဓံ ပြာပျ ဇျေၐ္ဌာနုကြမံ ဧကဲကၑး သရွွေ ဗဟိရဂစ္ဆန် တတော ယီၑုရေကာကီ တယက္တ္တောဘဝတ် မဓျသ္ထာနေ ဒဏ္ဍာယမာနာ သာ ယောၐာ စ သ္ထိတာ၊
அப்பொழுது, இதைக் கேட்டவர்களில், முதியோர் தொடங்கி சிறியோர் வரை ஒவ்வொருவராகப் போகத் தொடங்கினார்கள். இயேசு மட்டும் அங்கே இருந்தார். அந்தப் பெண்ணும் அங்கே நடுவே நின்றுகொண்டிருந்தாள்.
10 တတ္ပၑ္စာဒ် ယီၑုရုတ္ထာယ တာံ ဝနိတာံ ဝိနာ ကမပျပရံ န ဝိလောကျ ပၖၐ္ဋဝါန် ဟေ ဝါမေ တဝါပဝါဒကား ကုတြ? ကောပိ တွာံ ကိံ န ဒဏ္ဍယတိ?
இயேசு நிமிர்ந்து அவளைப் பார்த்து, “மகளே, அவர்கள் எங்கே? ஒருவனும் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்கவில்லையோ?” என்று கேட்டார்.
11 သာဝဒတ် ဟေ မဟေစ္ဆ ကောပိ န တဒါ ယီၑုရဝေါစတ် နာဟမပိ ဒဏ္ဍယာမိ ယာဟိ ပုနး ပါပံ မာကာရ္ၐီး၊
அதற்கு அவள், “இல்லை ஆண்டவரே” என்றாள். அப்பொழுது இயேசு அவளிடம், “நானும் உன்னை குற்றவாளியாகத் தீர்க்கமாட்டேன். இப்பொழுது நீ போகலாம், இனிப் பாவம் செய்யாதே” என்றார்.
12 တတော ယီၑုး ပုနရပိ လောကေဘျ ဣတ္ထံ ကထယိတုမ် အာရဘတ ဇဂတောဟံ ဇျောတိးသွရူပေါ ယး ကၑ္စိန် မတ္ပၑ္စာဒ ဂစ္ဆတိ သ တိမိရေ န ဘြမိတွာ ဇီဝနရူပါံ ဒီပ္တိံ ပြာပ္သျတိ၊
மீண்டும் இயேசு மக்களுடன் பேசத்தொடங்கி, “நானே உலகத்தின் வெளிச்சமாய் இருக்கிறேன். என்னைப் பின்பற்றுகிறவன் ஒருபோதும் இருளில் நடக்கமாட்டான். ஜீவ வெளிச்சம் அவர்களுடன் இருக்கும்” என்றார்.
13 တတး ဖိရူၑိနော'ဝါဒိၐုသ္တွံ သွာရ္ထေ သွယံ သာက္ၐျံ ဒဒါသိ တသ္မာတ် တဝ သာက္ၐျံ ဂြာဟျံ န ဘဝတိ၊
அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், “இதோ பார், நீயே உன்னைக் குறித்த சாட்சி கொடுக்கிறாயே; உனது சாட்சி உண்மையல்ல” என்றார்கள்.
14 တဒါ ယီၑုး ပြတျုဒိတဝါန် ယဒျပိ သွာရ္ထေ'ဟံ သွယံ သာက္ၐျံ ဒဒါမိ တထာပိ မတ် သာက္ၐျံ ဂြာဟျံ ယသ္မာဒ် အဟံ ကုတ အာဂတောသ္မိ ကွ ယာမိ စ တဒဟံ ဇာနာမိ ကိန္တု ကုတ အာဂတောသ္မိ ကုတြ ဂစ္ဆာမိ စ တဒ် ယူယံ န ဇာနီထ၊
இயேசு அதற்குப் பதிலாக, “நானே என்னைக்குறித்து சாட்சி கொடுத்தாலும், எனது சாட்சி உண்மையானதே. ஏனெனில் நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும், நான் எங்கே போகிறேன் என்றும் அறிந்திருக்கிறேன். ஆனால் நீங்களோ நான் எங்கிருந்து வந்திருக்கிறேன் என்றும், எங்கே போகிறேன் என்றும் அறியாதிருக்கிறீர்கள்.
15 ယူယံ လော်ကိကံ ဝိစာရယထ နာဟံ ကိမပိ ဝိစာရယာမိ၊
நீங்கள் மனிதருக்கேற்றபடி தீர்ப்புச் செய்கிறீர்கள்; நானோ ஒருவருக்கும் தீர்ப்புச் செய்வதில்லை.
16 ကိန္တု ယဒိ ဝိစာရယာမိ တရှိ မမ ဝိစာရော ဂြဟီတဝျော ယတောဟမ် ဧကာကီ နာသ္မိ ပြေရယိတာ ပိတာ မယာ သဟ ဝိဒျတေ၊
நான் தீர்ப்பு செய்தாலும், எனது தீர்ப்பு உண்மையானதாகவே இருக்கும். ஏனெனில் நான் தனியாக தீர்ப்பு கொடுப்பதில்லை. என்னை அனுப்பிய என் பிதாவும் என்னுடனேகூட இருக்கிறார்.
17 ဒွယော ရ္ဇနယေား သာက္ၐျံ ဂြဟဏီယံ ဘဝတီတိ ယုၐ္မာကံ ဝျဝသ္ထာဂြန္ထေ လိခိတမသ္တိ၊
இரண்டு பேருடைய சாட்சி உண்மையானது என்று உங்கள் சொந்த சட்டத்திலே எழுதியிருக்கிறது.
18 အဟံ သွာရ္ထေ သွယံ သာက္ၐိတွံ ဒဒါမိ ယၑ္စ မမ တာတော မာံ ပြေရိတဝါန် သောပိ မဒရ္ထေ သာက္ၐျံ ဒဒါတိ၊
நான் என்னைக்குறித்து சாட்சி கொடுக்கிறேன்; என்னை அனுப்பிய பிதாவே எனது இரண்டாவது சாட்சியாயிருக்கிறார்” என்றார்.
19 တဒါ တေ'ပၖစ္ဆန် တဝ တာတး ကုတြ? တတော ယီၑုး ပြတျဝါဒီဒ် ယူယံ မာံ န ဇာနီထ မတ္ပိတရဉ္စ န ဇာနီထ ယဒိ မာမ် အက္ၐာသျတ တရှိ မမ တာတမပျက္ၐာသျတ၊
அப்பொழுது அவர்கள் அவரிடம், “உமது பிதா எங்கே?” என்றார்கள். அதற்கு இயேசு, “என்னையோ, என் பிதாவையோ நீங்கள் அறியாமல் இருக்கிறீர்கள். நீங்கள் என்னை அறிந்தால், என் பிதாவையுங்கூட அறிந்திருப்பீர்கள்” என்றார்.
20 ယီၑု ရ္မန္ဒိရ ဥပဒိၑျ ဘဏ္ဍာဂါရေ ကထာ ဧတာ အကထယတ် တထာပိ တံ ပြတိ ကောပိ ကရံ နောဒတောလယတ်၊
இயேசு ஆலயப் பகுதியில் போதிக்கும்போது, காணிக்கை போடுகிற இடத்தின் அருகே நின்று, இந்த வார்த்தைகளைப் பேசினார். ஆனால் ஒருவனும் அவரைக் கைதுசெய்யவில்லை. ஏனெனில் அவருடைய நேரம் இன்னும் வரவில்லை.
21 တတး ပရံ ယီၑုး ပုနရုဒိတဝါန် အဓုနာဟံ ဂစ္ဆာမိ ယူယံ မာံ ဂဝေၐယိၐျထ ကိန္တု နိဇဲး ပါပဲ ရ္မရိၐျထ ယတ် သ္ထာနမ် အဟံ ယာသျာမိ တတ် သ္ထာနမ် ယူယံ ယာတုံ န ၑက္ၐျထ၊
மீண்டும் இயேசு அவர்களிடம், “நான் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் பாவத்திலேயே சாவீர்கள். நான் போகிற இடத்திற்கு உங்களால் வரமுடியாது” என்றார்.
22 တဒါ ယိဟူဒီယား ပြာဝေါစန် ကိမယမ် အာတ္မဃာတံ ကရိၐျတိ? ယတော ယတ် သ္ထာနမ် အဟံ ယာသျာမိ တတ် သ္ထာနမ် ယူယံ ယာတုံ န ၑက္ၐျထ ဣတိ ဝါကျံ ဗြဝီတိ၊
அப்பொழுது யூதர்கள், “இவன் தற்கொலை செய்துகொள்ள போகிறானா? அதனால்தான், ‘நான் போகிற இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்று சொல்கிறானோ!” என்று கேட்டார்கள்.
23 တတော ယီၑုသ္တေဘျး ကထိတဝါန် ယူယမ် အဓးသ္ထာနီယာ လောကာ အဟမ် ဦရ္ဒွွသ္ထာနီယး ယူယမ် ဧတဇ္ဇဂတ္သမ္ဗန္ဓီယာ အဟမ် ဧတဇ္ဇဂတ္သမ္ဗန္ဓီယော န၊
இயேசு தொடர்ந்து அவர்களிடம், “நீங்கள் கீழேயிருந்து வந்தவர்கள்; நான் மேலேயிருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்தைச் சேர்ந்தவர்கள்; நான் இந்த உலகத்தைச் சேர்ந்தவன் அல்ல.
24 တသ္မာတ် ကထိတဝါန် ယူယံ နိဇဲး ပါပဲ ရ္မရိၐျထ ယတောဟံ သ ပုမာန် ဣတိ ယဒိ န ဝိၑွသိထ တရှိ နိဇဲး ပါပဲ ရ္မရိၐျထ၊
நீங்கள் உங்கள் பாவங்களிலேயே சாவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசிக்காவிட்டால், நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள்” என்றார்.
25 တဒါ တေ 'ပၖစ္ဆန် ကသ္တွံ? တတော ယီၑုး ကထိတဝါန် ယုၐ္မာကံ သန္နိဓော် ယသျ ပြသ္တာဝမ် အာ ပြထမာတ် ကရောမိ သဧဝ ပုရုၐောဟံ၊
அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நீர் யார்?” என்று கேட்டார்கள். அதற்கு பதிலாக, “அதைத்தான் நான் தொடக்கத்திலிருந்தே உங்களுக்குச் சொல்கிறேனே” என்று இயேசு சொல்லி,
26 ယုၐ္မာသု မယာ ဗဟုဝါကျံ ဝက္တ္တဝျံ ဝိစာရယိတဝျဉ္စ ကိန္တု မတ္ပြေရယိတာ သတျဝါဒီ တသျ သမီပေ ယဒဟံ ၑြုတဝါန် တဒေဝ ဇဂတေ ကထယာမိ၊
“உங்களைப் பற்றிச் சொல்லவும், நியாயத்தீர்ப்பு அளிக்கவும் என்னிடம் அநேக காரியங்கள் இருக்கிறது. ஆனால் என்னை அனுப்பியவரிடமிருந்து கேட்டதை மட்டும் நான் உலகத்திற்கு அறிவிக்கிறேன். ஏனென்றால் என்னை அனுப்பியவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார்” என்றார்.
27 ကိန္တု သ ဇနကေ ဝါကျမိဒံ ပြောက္တ္တဝါန် ဣတိ တေ နာဗုဓျန္တ၊
இயேசு பிதாவாகிய இறைவனைக் குறித்தே பேசுகிறார் என்று அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை.
28 တတော ယီၑုရကထယဒ် ယဒါ မနုၐျပုတြမ် ဦရ္ဒွွ ဥတ္ထာပယိၐျထ တဒါဟံ သ ပုမာန် ကေဝလး သွယံ ကိမပိ ကရ္မ္မ န ကရောမိ ကိန္တု တာတော ယထာ ၑိက္ၐယတိ တဒနုသာရေဏ ဝါကျမိဒံ ဝဒါမီတိ စ ယူယံ ဇ္ဉာတုံ ၑက္ၐျထ၊
எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் மானிடமகனாகிய என்னை உயர்த்திய பின்பு, நானே அவர் என்றும், எனது சுயமாக நான் ஒன்றும் செய்கிறதில்லையென்றும், பிதா எனக்கு போதித்தபடியே நான் இவற்றைச் சொல்கிறேன் என்றும் அறிந்துகொள்வீர்கள்.
29 မတ္ပြေရယိတာ ပိတာ မာမ် ဧကာကိနံ န တျဇတိ သ မယာ သာရ္ဒ္ဓံ တိၐ္ဌတိ ယတောဟံ တဒဘိမတံ ကရ္မ္မ သဒါ ကရောမိ၊
என்னை அனுப்பிய பிதா என்னுடனே இருக்கிறார்; அவர் என்னைத் தனிமையாய் விட்டுவிடவில்லை. ஏனெனில் அவருக்குப் பிரியமானதையே நான் எப்பொழுதும் செய்கிறேன்” என்றார்.
30 တဒါ တသျဲတာနိ ဝါကျာနိ ၑြုတွာ ဗဟုဝသ္တာသ္မိန် ဝျၑွသန်၊
அவர் இந்தக் காரியங்களைக் குறித்துச் சொன்னபோது, பலர் அவரில் விசுவாசம் வைத்தார்கள்.
31 ယေ ယိဟူဒီယာ ဝျၑွသန် ယီၑုသ္တေဘျော'ကထယတ္
இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களிடம், “நீங்கள் எனது உபதேசத்தில் தொடர்ந்து நிலைத்திருந்தால், நீங்கள் உண்மையாகவே எனது சீடர்களாய் இருப்பீர்கள்.
32 မမ ဝါကျေ ယဒိ ယူယမ် အာသ္ထာံ ကုရုထ တရှိ မမ ၑိၐျာ ဘူတွာ သတျတွံ ဇ္ဉာသျထ တတး သတျတယာ ယုၐ္မာကံ မောက္ၐော ဘဝိၐျတိ၊
அப்பொழுது நீங்கள் சத்தியத்தை அறிந்துகொள்வீர்கள். சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்றார்.
33 တဒါ တေ ပြတျဝါဒိၐုး ဝယမ် ဣဗြာဟီမော ဝံၑး ကဒါပိ ကသျာပိ ဒါသာ န ဇာတာသ္တရှိ ယုၐ္မာကံ မုက္တ္တိ ရ္ဘဝိၐျတီတိ ဝါကျံ ကထံ ဗြဝီၐိ?
அப்பொழுது அவர்கள் இயேசுவிடம், “நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம். நாங்கள் ஒருபோதும் ஒருவருக்கும் அடிமைகளாய் இருந்ததில்லை. அப்படியிருக்க நாங்கள் விடுதலையாவோம் என்று நீர் எப்படிச் சொல்லலாம்?” என்றார்கள்.
34 တဒါ ယီၑုး ပြတျဝဒဒ် ယုၐ္မာနဟံ ယထာရ္ထတရံ ဝဒါမိ ယး ပါပံ ကရောတိ သ ပါပသျ ဒါသး၊
அதற்கு இயேசு பதிலாக, “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன். பாவம் செய்கிற ஒவ்வொருவரும் பாவத்திற்கு அடிமையாய் இருக்கிறார்கள்.
35 ဒါသၑ္စ နိရန္တရံ နိဝေၑနေ န တိၐ္ဌတိ ကိန္တု ပုတြော နိရန္တရံ တိၐ္ဌတိ၊ (aiōn g165)
ஒரு அடிமைக்குக் குடும்பத்தில் நிரந்தர இடம் இருப்பதில்லை. ஆனால் மகனோ குடும்பத்திற்கு என்றென்றும் சொந்தமானவனாயிருக்கிறான். (aiōn g165)
36 အတး ပုတြော ယဒိ ယုၐ္မာန် မောစယတိ တရှိ နိတာန္တမေဝ မုက္တ္တာ ဘဝိၐျထ၊
ஆகவே இறைவனின் மகன் உங்களை விடுதலையாக்கினால், நீங்கள் உண்மையாகவே விடுதலை பெறுவீர்கள்.
37 ယုယမ် ဣဗြာဟီမော ဝံၑ ဣတျဟံ ဇာနာမိ ကိန္တု မမ ကထာ ယုၐ္မာကမ် အန္တးကရဏေၐု သ္ထာနံ န ပြာပ္နုဝန္တိ တသ္မာဒ္ဓေတော ရ္မာံ ဟန္တုမ် ဤဟဓွေ၊
நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் என்னைக் கொல்வதற்கு ஆயத்தமாய் இருக்கிறீர்கள். ஏனெனில் எனது வார்த்தைக்கு உங்கள் உள்ளத்தில் இடமில்லை.
38 အဟံ သွပိတုး သမီပေ ယဒပၑျံ တဒေဝ ကထယာမိ တထာ ယူယမပိ သွပိတုး သမီပေ ယဒပၑျတ တဒေဝ ကုရုဓွေ၊
எனது பிதாவின் முன்னிலையில் கண்டவற்றையே நான் அறிவிக்கிறேன். ஆனால் நீங்களோ உங்கள் தகப்பனிடமிருந்து கேள்விப்பட்டதையே செய்கிறீர்கள்” என்றார்.
39 တဒါ တေ ပြတျဝေါစန် ဣဗြာဟီမ် အသ္မာကံ ပိတာ တတော ယီၑုရကထယဒ် ယဒိ ယူယမ် ဣဗြာဟီမး သန္တာနာ အဘဝိၐျတ တရှိ ဣဗြာဟီမ အာစာရဏဝဒ် အာစရိၐျတ၊
அதற்கு அவர்கள், “ஆபிரகாமே எங்கள் தந்தை” என்றார்கள். இயேசுவோ அவர்களிடம், “நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளானால் ஆபிரகாம் செய்தவற்றையே நீங்களும் செய்வீர்கள்.
40 ဤၑွရသျ မုခါတ် သတျံ ဝါကျံ ၑြုတွာ ယုၐ္မာန် ဇ္ဉာပယာမိ ယောဟံ တံ မာံ ဟန္တုံ စေၐ္ဋဓွေ ဣဗြာဟီမ် ဧတာဒၖၑံ ကရ္မ္မ န စကာရ၊
ஆனால் நீங்களோ, இறைவனிடம் கேட்டறிந்த சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனிதனான என்னைக் கொலைசெய்யத் திட்டமிட்டிருக்கிறீர்கள். ஆபிரகாம் இப்படியான காரியங்களைச் செய்யவில்லையே.
41 ယူယံ သွသွပိတုး ကရ္မ္မာဏိ ကုရုထ တဒါ တဲရုက္တ္တံ န ဝယံ ဇာရဇာတာ အသ္မာကမ် ဧကဧဝ ပိတာသ္တိ သ ဧဝေၑွရး
நீங்கள் உங்கள் சொந்தத் தகப்பன் செய்ததையே செய்கிறீர்கள்” என்றார். அதற்கு அவர்கள் அவரிடம், “நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்கள் இல்லை. இறைவன் ஒருவரே எங்களுக்கும் பிதா” என்றார்கள்.
42 တတော ယီၑုနာ ကထိတမ် ဤၑွရော ယဒိ ယုၐ္မာကံ တာတောဘဝိၐျတ် တရှိ ယူယံ မယိ ပြေမာကရိၐျတ ယတောဟမ် ဤၑွရာန္နိရ္ဂတျာဂတောသ္မိ သွတော နာဂတောဟံ သ မာံ ပြာဟိဏောတ်၊
அப்பொழுது இயேசு அவர்களிடம், “இறைவன் உங்கள் பிதாவாக இருந்தால், நீங்கள் என்னிலும் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் இப்பொழுது இங்கே இருக்கின்ற நான் இறைவனிடமிருந்தே வந்தேன். நான் எனது சுயவிருப்பத்தின்படி வரவில்லை; அவரே என்னை அனுப்பினார்.
43 ယူယံ မမ ဝါကျမိဒံ န ဗုဓျဓွေ ကုတး? ယတော ယူယံ မမောပဒေၑံ သောဎုံ န ၑက္နုထ၊
நான் சொல்வது ஏன் உங்களுக்குத் தெளிவாய் இல்லை? நான் சொல்வதைக் கேட்க உங்களுக்கு மனதில்லாமல் இருக்கிறதினால்தானே.
44 ယူယံ ၑဲတာန် ပိတုး သန္တာနာ ဧတသ္မာဒ် ယုၐ္မာကံ ပိတုရဘိလာၐံ ပူရယထ သ အာ ပြထမာတ် နရဃာတီ တဒန္တး သတျတွသျ လေၑောပိ နာသ္တိ ကာရဏာဒတး သ သတျတာယာံ နာတိၐ္ဌတ် သ ယဒါ မၖၐာ ကထယတိ တဒါ နိဇသွဘာဝါနုသာရေဏဲဝ ကထယတိ ယတော သ မၖၐာဘာၐီ မၖၐောတ္ပာဒကၑ္စ၊
நீங்கள் உங்கள் தகப்பனான சாத்தானுக்கு உரியவர்கள். உங்கள் தகப்பனின் ஆசைகளைச் செய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள். அவன் தொடக்கத்திலிருந்தே கொலைகாரனாய் இருக்கிறான். அவனிடம் சத்தியமில்லை. அதனால் அவன் சத்தியத்தில் நிலைத்திருப்பதில்லை. அவன் பொய் பேசும்போது தன் சொந்த மொழியையே பேசுகிறான். ஏனெனில் அவன் ஒரு பொய்யன், பொய்களின் தகப்பன்.
45 အဟံ တထျဝါကျံ ဝဒါမိ ကာရဏာဒသ္မာဒ် ယူယံ မာံ န ပြတီထ၊
இருந்தும் நானோ உங்களுக்கு சத்தியத்தை சொல்கிறபடியால், நீங்கள் என்னை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்.
46 မယိ ပါပမသ္တီတိ ပြမာဏံ ယုၐ္မာကံ ကော ဒါတုံ ၑက္နောတိ? ယဒျဟံ တထျဝါကျံ ဝဒါမိ တရှိ ကုတော မာံ န ပြတိထ?
நான் பாவம் செய்தேன் என்று என்னைக் குற்றம் சாட்டி நிரூபிக்க உங்களில் எவனால் முடியும்? நான் உங்களுக்கு சத்தியத்தைச் சொல்லியும், நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்காமல் இருக்கிறீர்கள்?
47 ယး ကၑ္စန ဤၑွရီယော လောကး သ ဤၑွရီယကထာယာံ မနော နိဓတ္တေ ယူယမ် ဤၑွရီယလောကာ န ဘဝထ တန္နိဒါနာတ် တတြ န မနာံသိ နိဓဒွေ၊
யார் இறைவனுக்குரியவராய் இருக்கிறவர்கள், அவன் இறைவன் சொல்லும் வார்த்தையைக் கேட்கிறான். நீங்களோ இறைவனுக்குரியவர்கள் அல்லாதபடியினாலே, இறைவனுடைய வார்த்தையைக் கேளாமல் இருக்கிறீர்கள்” என்றார்.
48 တဒါ ယိဟူဒီယား ပြတျဝါဒိၐုး တွမေကး ၑောမိရောဏီယော ဘူတဂြသ္တၑ္စ ဝယံ ကိမိဒံ ဘဒြံ နာဝါဒိၐ္မ?
அப்பொழுது யூதத்தலைவர்கள் அவரிடம், “நீ ஒரு சமாரியன். நீ பிசாசு பிடித்தவன் என்று நாங்கள் சொன்னது சரியல்லவா?” என்றார்கள்.
49 တတော ယီၑုး ပြတျဝါဒီတ် နာဟံ ဘူတဂြသ္တး ကိန္တု နိဇတာတံ သမ္မနျေ တသ္မာဒ် ယူယံ မာမ် အပမနျဓွေ၊
அதற்கு இயேசு, “நான் பிசாசு பிடித்தவன் அல்ல. நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன். நீங்களோ என்னை அவமதிக்கிறீர்கள்.
50 အဟံ သွသုချာတိံ န စေၐ္ဋေ ကိန္တု စေၐ္ဋိတာ ဝိစာရယိတာ စာပရ ဧက အာသ္တေ၊
நான் எனது சுய மகிமையைத் தேடவில்லை; ஆனால் எனக்காக மகிமையைத் தேடுகிறவரும் நியாயந்தீர்க்கிறவரும் ஒருவர் இருக்கிறாரே.
51 အဟံ ယုၐ္မဘျမ် အတီဝ ယထာရ္ထံ ကထယာမိ ယော နရော မဒီယံ ဝါစံ မနျတေ သ ကဒါစန နိဓနံ န ဒြက္ၐျတိ၊ (aiōn g165)
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், யாராவது எனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் ஒருபோதும் மரணத்தைக் காணமாட்டார்கள்” என்றார். (aiōn g165)
52 ယိဟူဒီယာသ္တမဝဒန် တွံ ဘူတဂြသ္တ ဣတီဒါနီမ် အဝဲၐ္မ၊ ဣဗြာဟီမ် ဘဝိၐျဒွါဒိနဉ္စ သရွွေ မၖတား ကိန္တု တွံ ဘာၐသေ ယော နရော မမ ဘာရတီံ ဂၖဟ္လာတိ သ ဇာတု နိဓာနာသွာဒံ န လပ္သျတေ၊ (aiōn g165)
அப்பொழுது யூதத்தலைவர்கள், “உனக்குப் பிசாசு பிடித்திருக்கிறது என்று இப்பொழுது நாங்கள் நன்றாய் தெரிந்துகொண்டோம். ஆபிரகாம் இறந்தார், இறைவாக்கினர்களும் இறந்தார்கள். ஆனால் நீயோ, யாராவது உனது வார்த்தையைக் கைக்கொண்டால், அவர்கள் எவ்விதத்திலும் மரணத்தை அனுபவிப்பதில்லை என்று சொல்கிறாய். (aiōn g165)
53 တရှိ တွံ ကိမ် အသ္မာကံ ပူရွွပုရုၐာဒ် ဣဗြာဟီမောပိ မဟာန်? ယသ္မာတ် သောပိ မၖတး ဘဝိၐျဒွါဒိနောပိ မၖတား တွံ သွံ ကံ ပုမာံသံ မနုၐေ?
நீ எங்கள் தகப்பன் ஆபிரகாமைப் பார்க்கிலும் பெரியவனோ? அவர் மரித்தார், அப்படியே இறைவாக்கினரும் மரித்தார்கள். நீ உன்னை யார் என்று எண்ணுகிறாய்?” என்று கேட்டார்கள்.
54 ယီၑုး ပြတျဝေါစဒ် ယဒျဟံ သွံ သွယံ သမ္မနျေ တရှိ မမ တတ် သမ္မနနံ ကိမပိ န ကိန္တု မမ တာတော ယံ ယူယံ သွီယမ် ဤၑွရံ ဘာၐဓွေ သဧဝ မာံ သမ္မနုတေ၊
இயேசு அதற்கு மறுமொழியாக, “நானே என்னை மகிமைப்படுத்தினால், எனது மகிமை அர்த்தமற்றது. நீங்கள் உங்கள் இறைவன் என்று உரிமையோடு சொல்கிற, எனது பிதாவே என்னை மகிமைப்படுத்துகிறவர்.
55 ယူယံ တံ နာဝဂစ္ဆထ ကိန္တွဟံ တမဝဂစ္ဆာမိ တံ နာဝဂစ္ဆာမီတိ ဝါကျံ ယဒိ ဝဒါမိ တရှိ ယူယမိဝ မၖၐာဘာၐီ ဘဝါမိ ကိန္တွဟံ တမဝဂစ္ဆာမိ တဒါက္ၐာမပိ ဂၖဟ္လာမိ၊
நீங்கள் அவரை அறியாதிருந்தாலும், நான் அவரை அறிந்திருக்கிறேன். நான் அவரை அறியவில்லை என்று சொன்னால், நானும் உங்களைப்போலவே ஒரு பொய்யனாய் இருப்பேன். ஆனால் நானோ அவரை அறிந்திருக்கிறேன். அவரின் வார்த்தையைக் கைக்கொள்கிறேன்.
56 ယုၐ္မာကံ ပူရွွပုရုၐ ဣဗြာဟီမ် မမ သမယံ ဒြၐ္ဋုမ် အတီဝါဝါဉ္ဆတ် တန္နိရီက္ၐျာနန္ဒစ္စ၊
உங்கள் முற்பிதாவான ஆபிரகாம் எனது நாளைக் காண்பதை எண்ணி மகிழ்ச்சி கொண்டிருந்தான்; அதைக்கண்டு அவன் சந்தோஷப்பட்டான்” என்றார்.
57 တဒါ ယိဟူဒီယာ အပၖစ္ဆန် တဝ ဝယး ပဉ္စာၑဒွတ္သရာ န တွံ ကိမ် ဣဗြာဟီမမ် အဒြာက္ၐီး?
அப்பொழுது யூதத்தலைவர்கள் அவரிடம், “உனக்கோ இன்னும் ஐம்பது வயதாகவில்லை. நீ ஆபிரகாமைக் கண்டாயோ!” என்றார்கள்.
58 ယီၑုး ပြတျဝါဒီဒ် ယုၐ္မာနဟံ ယထာရ္ထတရံ ဝဒါမိ ဣဗြာဟီမော ဇန္မနး ပူရွွကာလမာရဘျာဟံ ဝိဒျေ၊
அதற்கு இயேசு, “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்கு சொல்கிறேன், ஆபிரகாம் பிறப்பதற்கு முன்னமே இருக்கிறவர் நானே” என்றார்.
59 တဒါ တေ ပါၐာဏာန် ဥတ္တောလျ တမာဟန္တုမ် ဥဒယစ္ဆန် ကိန္တု ယီၑု ရ္ဂုပ္တော မန္တိရာဒ် ဗဟိရ္ဂတျ တေၐာံ မဓျေန ပြသ္ထိတဝါန်၊
இதைக் கேட்டவுடன் அவர்மேல் எறியும்படி அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டார்கள். ஆனால் இயேசுவோ அவர்கள் நடுவே கடந்து ஆலயப் பகுதியை விட்டு வெளியே போய்விட்டார்.

< ယောဟနး 8 >