< ယောဟနး 20 >

1 အနန္တရံ သပ္တာဟသျ ပြထမဒိနေ 'တိပြတျူၐေ 'န္ဓကာရေ တိၐ္ဌတိ မဂ္ဒလီနီ မရိယမ် တသျ ၑ္မၑာနသျ နိကဋံ ဂတွာ ၑ္မၑာနသျ မုခါတ် ပြသ္တရမပသာရိတမ် အပၑျတ်၊
வாரத்தின் முதலாவது நாள் அதிகாலையிலே, இன்னும் இருட்டாயிருக்கையிலே மகதலேனா மரியாள் கல்லறைக்குப் போனாள். அங்கே கல்லறையின் வாசலில் இருந்த கல் புரட்டப்பட்டிருப்பதை அவள் கண்டாள்.
2 ပၑ္စာဒ် ဓာဝိတွာ ၑိမောန္ပိတရာယ ယီၑေား ပြိယတမၑိၐျာယ စေဒမ် အကထယတ်, လောကား ၑ္မၑာနာတ် ပြဘုံ နီတွာ ကုတြာသ္ထာပယန် တဒ် ဝက္တုံ န ၑက္နောမိ၊
எனவே அவள் சீமோன் பேதுருவிடமும், இயேசு அன்பு செலுத்திய மற்றச் சீடர்களிடமும் ஓடிவந்து, “கல்லறையிலிருந்து கர்த்தரின் உடலை அவர்கள் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்திருக்கிறார்களோ எங்களுக்குத் தெரியாது!” என்றாள்.
3 အတး ပိတရး သောနျၑိၐျၑ္စ ဗရှိ ရ္ဘုတွာ ၑ္မၑာနသ္ထာနံ ဂန္တုမ် အာရဘေတာံ၊
எனவே பேதுருவும், மற்றச் சீடனும் கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
4 ဥဘယောရ္ဓာဝတေား သောနျၑိၐျး ပိတရံ ပၑ္စာတ် တျက္တွာ ပူရွွံ ၑ္မၑာနသ္ထာန ဥပသ္ထိတဝါန်၊
அவர்கள் இருவரும் ஒருமித்து ஓடினார்கள். ஆனால் மற்றச் சீடனோ பேதுருவை முந்திக் கொண்டு கல்லறைக்கு முதலில் போய்ச் சேர்ந்தான்.
5 တဒါ ပြဟွီဘူယ သ္ထာပိတဝသ္တြာဏိ ဒၖၐ္ဋဝါန် ကိန္တု န ပြာဝိၑတ်၊
அவன் குனிந்து பார்த்தபோது, மென்பட்டுத் துணிகள் அங்கே கிடப்பதைக் கண்டான். அவனோ உள்ளே போகவில்லை.
6 အပရံ ၑိမောန္ပိတရ အာဂတျ ၑ္မၑာနသ္ထာနံ ပြဝိၑျ
பின்பு அவனுக்குப்பின்னாக வந்த சீமோன் பேதுருவோ, வந்து சேர்ந்தவுடன் கல்லறைக்கு உள்ளே போனான். அங்கே மென்பட்டுத் துணிகள் கிடப்பதைக் கண்டான்.
7 သ္ထာပိတဝသ္တြာဏိ မသ္တကသျ ဝသ္တြဉ္စ ပၖထက် သ္ထာနာန္တရေ သ္ထာပိတံ ဒၖၐ္ဋဝါန်၊
இயேசுவின் தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியும் அங்கே கிடந்தது. அது மென்பட்டுத் துணியோடு அல்லாமல், தனியாக மடித்து வைக்கப்பட்டிருந்தது.
8 တတး ၑ္မၑာနသ္ထာနံ ပူရွွမ် အာဂတော ယောနျၑိၐျး သောပိ ပြဝိၑျ တာဒၖၑံ ဒၖၐ္ဋာ ဝျၑွသီတ်၊
பின்பு முதலாவதாகக் கல்லறைக்கு வந்திருந்த மற்றச் சீடனும் உள்ளே போனான். அவனும் கண்டு விசுவாசித்தான்.
9 ယတး ၑ္မၑာနာတ် သ ဥတ္ထာပယိတဝျ ဧတသျ ဓရ္မ္မပုသ္တကဝစနသျ ဘာဝံ တေ တဒါ ဝေါဒ္ဓုံ နာၑန္ကုဝန်၊
ஆனால் இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்க வேண்டும் என்ற வேதவசனத்தை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.
10 အနန္တရံ တော် ဒွေါ် ၑိၐျော် သွံ သွံ ဂၖဟံ ပရာဝၖတျာဂစ္ဆတာမ်၊
பின்பு சீடர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள்.
11 တတး ပရံ မရိယမ် ၑ္မၑာနဒွါရသျ ဗဟိး သ္ထိတွာ ရောဒိတုမ် အာရဘတ တတော ရုဒတီ ပြဟွီဘူယ ၑ္မၑာနံ ဝိလောကျ
ஆனால் மரியாளோ கல்லறைக்கு வெளியே அழுதுகொண்டு நின்றாள். அவள் அழுதுகொண்டு குனிந்து கல்லறையினுள்ளே பார்த்தாள்.
12 ယီၑေား ၑယနသ္ထာနသျ ၑိရးသ္ထာနေ ပဒတလေ စ ဒွယော ရ္ဒိၑော ဒွေါ် သွရ္ဂီယဒူတာဝုပဝိၐ္ဋော် သမပၑျတ်၊
அங்கே வெள்ளையுடை அணிந்த இரண்டு இறைத்தூதர்கள், இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு தூதன் தலைமாட்டிலும் இன்னொரு தூதன் கால்மாட்டிலும் இருந்தார்கள்.
13 တော် ပၖၐ္ဋဝန္တော် ဟေ နာရိ ကုတော ရောဒိၐိ? သာဝဒတ် လောကာ မမ ပြဘုံ နီတွာ ကုတြာသ္ထာပယန် ဣတိ န ဇာနာမိ၊
அவர்கள் அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவளோ, “அவர்கள் என் கர்த்தரை எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்தார்களோ எனக்குத் தெரியவில்லை” என்றாள்.
14 ဣတျုက္တွာ မုခံ ပရာဝၖတျ ယီၑုံ ဒဏ္ဍာယမာနမ် အပၑျတ် ကိန္တု သ ယီၑုရိတိ သာ ဇ္ဉာတုံ နာၑက္နောတ်၊
இதைச் சொல்லிவிட்டு, அவள் திரும்பியபோது இயேசு அங்கே நிற்பதைக் கண்டாள். ஆனால் அவர் இயேசுவே என்று அவள் அறிந்துகொள்ளவில்லை.
15 တဒါ ယီၑုသ္တာမ် အပၖစ္ဆတ် ဟေ နာရိ ကုတော ရောဒိၐိ? ကံ ဝါ မၖဂယသေ? တတး သာ တမ် ဥဒျာနသေဝကံ ဇ္ဉာတွာ ဝျာဟရတ်, ဟေ မဟေစ္ဆ တွံ ယဒီတး သ္ထာနာတ် တံ နီတဝါန် တရှိ ကုတြာသ္ထာပယသ္တဒ် ဝဒ တတ္သ္ထာနာတ် တမ် အာနယာမိ၊
அப்பொழுது இயேசு, “பெண்ணே, நீ ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். அவள் அவரைத் தோட்டக்காரன் என நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைக் கொண்டு போயிருந்தால், அவரை எங்கே வைத்தீர் என்று எனக்குச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றாள்.
16 တဒါ ယီၑုသ္တာမ် အဝဒတ် ဟေ မရိယမ်၊ တတး သာ ပရာဝၖတျ ပြတျဝဒတ် ဟေ ရဗ္ဗူနီ အရ္ထာတ် ဟေ ဂုရော၊
அப்பொழுது இயேசு அவளிடம், “மரியாளே!” என்றார். அவள் அவர் நின்ற பக்கமாய்த் திரும்பி, “ரபூனி!” என்று எபிரெய மொழியில் சத்தமாய் சொன்னாள். ரபூனி என்றால், “போதகரே” என்று அர்த்தம்.
17 တဒါ ယီၑုရဝဒတ် မာံ မာ ဓရ, ဣဒါနီံ ပိတုး သမီပေ ဦရ္ဒ္ဓွဂမနံ န ကရောမိ ကိန္တု ယော မမ ယုၐ္မာကဉ္စ ပိတာ မမ ယုၐ္မာကဉ္စေၑွရသ္တသျ နိကဋ ဦရ္ဒ္ဓွဂမနံ ကရ္တ္တုမ် ဥဒျတောသ္မိ, ဣမာံ ကထာံ တွံ ဂတွာ မမ ဘြာတၖဂဏံ ဇ္ဉာပယ၊
அப்பொழுது இயேசு அவளிடம், “நீ என்னைப் பற்றிக்கொள்ளாதே. ஏனெனில் நான் இன்னும் என் பிதாவினிடத்திற்குத் திரும்பிப் போகவில்லை. நீயோ என் சகோதரரிடம் போய் அவர்களிடம், ‘நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும், என் இறைவனிடத்திற்கும், உங்கள் இறைவனிடத்திற்கும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார்.
18 တတော မဂ္ဒလီနီမရိယမ် တတ္က္ၐဏာဒ် ဂတွာ ပြဘုသ္တသျဲ ဒရ္ၑနံ ဒတ္တွာ ကထာ ဧတာ အကထယဒ် ဣတိ ဝါရ္တ္တာံ ၑိၐျေဘျော'ကထယတ်၊
மகதலேனா மரியாள் சீடர்களிடம் போய், “நான் கர்த்தரைக் கண்டேன்!” என்று அறிவித்தாள், அவள், கர்த்தர் தனக்குக் கூறிய காரியங்களையும் அவர்களுக்குச் சொன்னாள்.
19 တတး ပရံ သပ္တာဟသျ ပြထမဒိနသျ သန္ဓျာသမယေ ၑိၐျာ ဧကတြ မိလိတွာ ယိဟူဒီယေဘျော ဘိယာ ဒွါရရုဒ္ဓမ် အကုရွွန်, ဧတသ္မိန် ကာလေ ယီၑုသ္တေၐာံ မဓျသ္ထာနေ တိၐ္ဌန် အကထယဒ် ယုၐ္မာကံ ကလျာဏံ ဘူယာတ်၊
வாரத்தின் முதலாவது நாளாகிய அன்றே மாலைவேளையில், சீடர்கள் ஒன்றாய் கூடியிருக்கையில், யூதருக்குப் பயந்ததினால் கதவுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தார்கள். இயேசு அங்கே வந்து, அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்குச் சமாதானம்” என்றார்.
20 ဣတျုက္တွာ နိဇဟသ္တံ ကုက္ၐိဉ္စ ဒရ္ၑိတဝါန်, တတး ၑိၐျား ပြဘုံ ဒၖၐ္ဋွာ ဟၖၐ္ဋာ အဘဝန်၊
அவர் இதைச் சொன்னபின்பு, தமது கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீடர்கள் கர்த்தரைக் கண்டபோது பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
21 ယီၑုး ပုနရဝဒဒ် ယုၐ္မာကံ ကလျာဏံ ဘူယာတ် ပိတာ ယထာ မာံ ပြဲၐယတ် တထာဟမပိ ယုၐ္မာန် ပြေၐယာမိ၊
மீண்டும் இயேசு அவர்களிடம், “உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கட்டும்! பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார்.
22 ဣတျုက္တွာ သ တေၐာမုပရိ ဒီရ္ဃပြၑွာသံ ဒတ္တွာ ကထိတဝါန် ပဝိတြမ် အာတ္မာနံ ဂၖဟ္လီတ၊
இதைச் சொல்லி, இயேசு அவர்கள்மேல் ஊதி, “பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுங்கள்.
23 ယူယံ ယေၐာံ ပါပါနိ မောစယိၐျထ တေ မောစယိၐျန္တေ ယေၐာဉ္စ ပါပါတိ န မောစယိၐျထ တေ န မောစယိၐျန္တေ၊
நீங்கள் யாருடைய பாவங்களையாவது மன்னித்தால், அவை மன்னிக்கப்படும்; நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காவிட்டால், அவை மன்னிக்கப்பட மாட்டாது” என்றார்.
24 ဒွါဒၑမဓျေ ဂဏိတော ယမဇော ထောမာနာမာ ၑိၐျော ယီၑောရာဂမနကာလဲ တဲး သာရ္ဒ္ဓံ နာသီတ်၊
இயேசு அங்கே வந்தபோது, பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான திதிமு என்றழைக்கப்பட்ட தோமா சீடர்களுடன் இருக்கவில்லை.
25 အတော ဝယံ ပြဘူမ် အပၑျာမေတိ ဝါကျေ'နျၑိၐျဲရုက္တေ သောဝဒတ်, တသျ ဟသ္တယော ရ္လော်ဟကီလကာနာံ စိဟ္နံ န ဝိလောကျ တစ္စိဟ္နမ် အင်္ဂုလျာ န သ္ပၖၐ္ဋွာ တသျ ကုက္ၐော် ဟသ္တံ နာရောပျ စာဟံ န ဝိၑွသိၐျာမိ၊
எனவே மற்றச் சீடர்கள் அவனிடம், “நாங்கள் கர்த்தரைக் கண்டோம்!” என்றார்கள். ஆனால், தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகள் அடிக்கப்பட்டக் காயத்தை நான் கண்டு, எனது விரலை ஆணி பாய்ந்த காயத்திலும், அவருடைய விலாவிலும் வைத்து பார்த்தாலொழிய நான் அதை விசுவாசிக்கமாட்டேன்” என்றான்.
26 အပရမ် အၐ္ဋမေ'ဟ္နိ ဂတေ သတိ ထောမာသဟိတး ၑိၐျဂဏ ဧကတြ မိလိတွာ ဒွါရံ ရုဒ္ဓွာဘျန္တရ အာသီတ်, ဧတရှိ ယီၑုသ္တေၐာံ မဓျသ္ထာနေ တိၐ္ဌန် အကထယတ်, ယုၐ္မာကံ ကုၑလံ ဘူယာတ်၊
இது நடந்து எட்டு நாட்களுக்குப்பின் இயேசுவின் சீடர்கள் அந்த வீட்டில் மீண்டும் கூடியிருந்தார்கள். தோமாவும் அவர்களுடனே இருந்தான். கதவுகள் பூட்டப்பட்டிருந்த போதுங்கூட, இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்” என்றார்.
27 ပၑ္စာတ် ထာမဲ ကထိတဝါန် တွမ် အင်္ဂုလီမ် အတြာရ္ပယိတွာ မမ ကရော် ပၑျ ကရံ ပြသာရျျ မမ ကုက္ၐာဝရ္ပယ နာဝိၑွသျ၊
பின்பு அவர் தோமாவிடம், “இங்கே உனது விரலைப் போட்டு எனது கைகளைப் பார். உனது கையை நீட்டி என் விலாவைத் தொட்டுப்பார். அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு” என்றார்.
28 တဒါ ထောမာ အဝဒတ်, ဟေ မမ ပြဘော ဟေ မဒီၑွရ၊
அப்பொழுது தோமா, “என் ஆண்டவரே, என் இறைவனே!” என்றான்.
29 ယီၑုရကထယတ်, ဟေ ထောမာ မာံ နိရီက္ၐျ ဝိၑွသိၐိ ယေ န ဒၖၐ္ဋွာ ဝိၑွသန္တိ တဧဝ ဓနျား၊
அதற்கு இயேசு அவனிடம், “நீ என்னைக் கண்டதினால் விசுவாசிக்கிறாய்; என்னைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
30 ဧတဒနျာနိ ပုသ္တကေ'သ္မိန် အလိခိတာနိ ဗဟူနျာၑ္စရျျကရ္မ္မာဏိ ယီၑုး ၑိၐျာဏာံ ပုရသ္တာဒ် အကရောတ်၊
இயேசு தமது சீடருக்கு முன்பாகப் பல அடையாளங்களைச் செய்தார். அவை இந்தப் புத்தகத்தில் எழுதப்படவில்லை.
31 ကိန္တု ယီၑုရီၑွရသျာဘိၐိက္တး သုတ ဧဝေတိ ယထာ ယူယံ ဝိၑွသိထ ဝိၑွသျ စ တသျ နာမ္နာ ပရမာယုး ပြာပ္နုထ တဒရ္ထမ် ဧတာနိ သရွွာဏျလိချန္တ၊
ஆனால் இயேசுவே கிறிஸ்து என்றும், இறைவனின் மகன் என்றும் நீங்கள் விசுவாசிக்கும்படியும், விசுவாசிப்பதால் அவருடைய பெயரில் நீங்கள் வாழ்வைப் பெறும்படியும் இவை எழுதப்பட்டிருக்கின்றன.

< ယောဟနး 20 >