< ယောဟနး 17 >

1 တတး ပရံ ယီၑုရေတား ကထား ကထယိတွာ သွရ္ဂံ ဝိလောကျဲတတ် ပြာရ္ထယတ်, ဟေ ပိတး သမယ ဥပသ္ထိတဝါန်; ယထာ တဝ ပုတြသ္တဝ မဟိမာနံ ပြကာၑယတိ တဒရ္ထံ တွံ နိဇပုတြသျ မဟိမာနံ ပြကာၑယ၊
இயேசு இதைச் சொன்னபின்பு அவர் பரலோகத்தை நோக்கிப்பார்த்து மன்றாடினார், “பிதாவே, எனது வேளை வந்துவிட்டது. உமது மகனாகிய நான் உம்மை மகிமைப்படுத்தும்படி, நீர் உம்முடைய மகனாகிய என்னை மகிமைப்படுத்தும்.
2 တွံ ယောလ္လောကာန် တသျ ဟသ္တေ သမရ္ပိတဝါန် သ ယထာ တေဘျော'နန္တာယု ရ္ဒဒါတိ တဒရ္ထံ တွံ ပြာဏိမာတြာဏာမ် အဓိပတိတွဘာရံ တသ္မဲ ဒတ္တဝါန်၊ (aiōnios g166)
நீர் எல்லா மக்கள்மேலும் அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறீர். அவரிடம் நீர் ஒப்புக்கொடுத்த அனைவருக்கும் அவர் நித்திய ஜீவனைக் கொடுக்கும்படியே நீர் அதிகாரம் கொடுத்தீர். (aiōnios g166)
3 ယသ္တွမ် အဒွိတီယး သတျ ဤၑွရသ္တွယာ ပြေရိတၑ္စ ယီၑုး ခြီၐ္ဋ ဧတယောရုဘယေား ပရိစယေ ပြာပ္တေ'နန္တာယု ရ္ဘဝတိ၊ (aiōnios g166)
ஒன்றான சத்திய இறைவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசுகிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொள்வதே நித்தியவாழ்வு. (aiōnios g166)
4 တွံ ယသျ ကရ္မ္မဏော ဘာရံ မဟျံ ဒတ္တဝါန်, တတ် သမ္ပန္နံ ကၖတွာ ဇဂတျသ္မိန် တဝ မဟိမာနံ ပြာကာၑယံ၊
நீர் செய்யும்படி எனக்குக் கொடுத்த வேலையை நிறைவேற்றி முடித்ததன் மூலம், பூமியிலே உம்மை மகிமைப்படுத்தினேன்.
5 အတဧဝ ဟေ ပိတ ရ္ဇဂတျဝိဒျမာနေ တွယာ သဟ တိၐ္ဌတော မမ ယော မဟိမာသီတ် သမ္ပြတိ တဝ သမီပေ မာံ တံ မဟိမာနံ ပြာပယ၊
பிதாவே, உலகம் உண்டாகும் முன்பே எனக்கு உம்மிடம் இருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மில் மகிமைப்படுத்தும்.
6 အနျစ္စ တွမ် ဧတဇ္ဇဂတော ယာလ္လောကာန် မဟျမ် အဒဒါ အဟံ တေဘျသ္တဝ နာမ္နသ္တတ္တွဇ္ဉာနမ် အဒဒါံ, တေ တဝဲဝါသန်, တွံ တာန် မဟျမဒဒါး, တသ္မာတ္တေ တဝေါပဒေၑမ် အဂၖဟ္လန်၊
“உலகத்திலிருந்து நீர் எனக்கு ஒப்புக்கொடுத்த இவர்களுக்கு உம்முடைய பெயரை வெளிப்படுத்தினேன். உம்முடையவர்களாய் இருந்த இவர்களை நீர் எனக்குக் கொடுத்தீர். இவர்களும் நீர் கொடுத்த வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
7 တွံ မဟျံ ယတ် ကိဉ္စိဒ် အဒဒါသ္တတ္သရွွံ တွတ္တော ဇာယတေ ဣတျဓုနာဇာနန်၊
நீர் எனக்குத் தந்த எல்லாம் உம்மிடத்திலிருந்தே வருகிறது என்று இவர்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள்.
8 မဟျံ ယမုပဒေၑမ် အဒဒါ အဟမပိ တေဘျသ္တမုပဒေၑမ် အဒဒါံ တေပိ တမဂၖဟ္လန် တွတ္တောဟံ နိရ္ဂတျ တွယာ ပြေရိတောဘဝမ် အတြ စ ဝျၑွသန်၊
ஏனெனில் நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளையே நான் இவர்களுக்குக் கொடுத்தேன். இவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். நான் உம்மிடத்திலிருந்து வந்தேன் என்று இவர்கள் நிச்சயமாய் அறிந்திருக்கிறார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்று இவர்கள் விசுவாசிக்கின்றார்கள்.
9 တေၐာမေဝ နိမိတ္တံ ပြာရ္ထယေ'ဟံ ဇဂတော လောကနိမိတ္တံ န ပြာရ္ထယေ ကိန္တု ယာလ္လောကာန် မဟျမ် အဒဒါသ္တေၐာမေဝ နိမိတ္တံ ပြာရ္ထယေ'ဟံ ယတသ္တေ တဝဲဝါသတေ၊
நான் இவர்களுக்காகவே மன்றாடுகிறேன். நான் உலகத்துக்காக மன்றாடவில்லை. நீர் எனக்குக் கொடுத்திருக்கும் இவர்களுக்காகவே மன்றாடுகிறேன். ஏனெனில் இவர்கள் உம்முடையவர்கள்.
10 ယေ မမ တေ တဝ ယေ စ တဝ တေ မမ တထာ တဲ ရ္မမ မဟိမာ ပြကာၑျတေ၊
என்னுடையதெல்லாம் உம்முடையதே, உம்முடையதெல்லாம் என்னுடையதே. இவர்கள் மூலமாய் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.
11 သာမ္ပြတမ် အသ္မိန် ဇဂတိ မမာဝသ္ထိတေး ၑေၐမ် အဘဝတ် အဟံ တဝ သမီပံ ဂစ္ဆာမိ ကိန္တု တေ ဇဂတိ သ္ထာသျန္တိ; ဟေ ပဝိတြ ပိတရာဝယော ရျထဲကတွမာသ္တေ တထာ တေၐာမပျေကတွံ ဘဝတိ တဒရ္ထံ ယာလ္လောကာန် မဟျမ် အဒဒါသ္တာန် သွနာမ္နာ ရက္ၐ၊
நான் இனிமேலும் உலகத்தில் இருக்கமாட்டேன். நான் உம்மிடத்தில் வருகிறேன்; இவர்களோ இன்னும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். ஆகவே பரிசுத்த பிதாவே, உம்முடைய பெயரின் வல்லமையினாலே இவர்களைக் காத்துக்கொள்ளும். அந்தப் பெயரையே நீர் எனக்கும் கொடுத்தீர். எனவே நாம் ஒன்றாய் இருப்பதுபோலவே, இவர்களும் ஒன்றாய் இருக்கட்டும்.
12 ယာဝန္တိ ဒိနာနိ ဇဂတျသ္မိန် တဲး သဟာဟမာသံ တာဝန္တိ ဒိနာနိ တာန် တဝ နာမ္နာဟံ ရက္ၐိတဝါန်; ယာလ္လောကာန် မဟျမ် အဒဒါသ္တာန် သရွွာန် အဟမရက္ၐံ, တေၐာံ မဓျေ ကေဝလံ ဝိနာၑပါတြံ ဟာရိတံ တေန ဓရ္မ္မပုသ္တကသျ ဝစနံ ပြတျက္ၐံ ဘဝတိ၊
நான் இவர்களோடு இருந்தபோது, நீர் எனக்குக் கொடுத்த உமது பெயராலே இவர்களைக் காப்பாற்றிப் பாதுகாத்து வைத்திருந்தேன். வேதவசனம் நிறைவேறும்படி அழிவின் மகனைத் தவிர வேறு ஒருவரையும் நான் இழந்து போகவில்லை.
13 ကိန္တွဓုနာ တဝ သန္နိဓိံ ဂစ္ဆာမိ မယာ ယထာ တေၐာံ သမ္ပူရ္ဏာနန္ဒော ဘဝတိ တဒရ္ထမဟံ ဇဂတိ တိၐ္ဌန် ဧတား ကထာ အကထယမ်၊
“நான் இப்போது உம்மிடத்தில் வருகிறேன். ஆனால் இவர்கள் என்னுடைய சந்தோஷத்தைத் தங்களுக்குள் முழுநிறைவாய்ப் பெற்றுக்கொள்ளும்படி, நான் உலகத்தில் இருக்கும்போதே இவைகளைச் சொல்கிறேன்.
14 တဝေါပဒေၑံ တေဘျော'ဒဒါံ ဇဂတာ သဟ ယထာ မမ သမ္ဗန္ဓော နာသ္တိ တထာ ဇဇတာ သဟ တေၐာမပိ သမ္ဗန္ဓာဘာဝါဇ် ဇဂတော လောကာသ္တာန် ၒတီယန္တေ၊
நான் இவர்களுக்கு உம்முடைய வார்த்தையைக் கொடுத்திருக்கிறேன். உலகமோ இவர்களை வெறுத்திருக்கிறது. ஏனெனில் நான் உலகத்திற்கு உரியவனாய் இராததுபோல, இவர்களும் உலகத்திற்கு உரியவர்கள் அல்ல.
15 တွံ ဇဂတသ္တာန် ဂၖဟာဏေတိ န ပြာရ္ထယေ ကိန္တွၑုဘာဒ် ရက္ၐေတိ ပြာရ္ထယေဟမ်၊
இந்த உலகத்தை விட்டு இவர்களை எடுத்துக்கொள்ளும் என்று நான் மன்றாடவில்லை; ஆனால் தீயவனிடமிருந்து இவர்களைப் பாதுகாத்துக்கொள்ளும் என்றே மன்றாடுகிறேன்.
16 အဟံ ယထာ ဇဂတ္သမ္ဗန္ဓီယော န ဘဝါမိ တထာ တေပိ ဇဂတ္သမ္ဗန္ဓီယာ န ဘဝန္တိ၊
நான் உலகத்திற்கு உரியவனாய் இல்லாததுபோல் இவர்களும் உலகத்துக்கு உரியவர்கள் அல்ல.
17 တဝ သတျကထယာ တာန် ပဝိတြီကုရု တဝ ဝါကျမေဝ သတျံ၊
சத்தியத்தினாலே இவர்களை அர்ப்பணியும்; உம்முடைய வார்த்தையே சத்தியம்.
18 တွံ ယထာ မာံ ဇဂတိ ပြဲရယသ္တထာဟမပိ တာန် ဇဂတိ ပြဲရယံ၊
நீர் என்னை உலகத்திற்குள் அனுப்பினதுபோல நானும் இவர்களை உலகத்திற்குள் அனுப்புகிறேன்.
19 တေၐာံ ဟိတာရ္ထံ ယထာဟံ သွံ ပဝိတြီကရောမိ တထာ သတျကထယာ တေပိ ပဝိတြီဘဝန္တု၊
இவர்கள் தங்களை உண்மையாக அர்ப்பணிக்கும்படி, இவர்களுக்காக நானும் என்னை அர்ப்பணிக்கிறேன்.
20 ကေဝလံ ဧတေၐာမရ္ထေ ပြာရ္ထယေ'ဟမ် ဣတိ န ကိန္တွေတေၐာမုပဒေၑေန ယေ ဇနာ မယိ ဝိၑွသိၐျန္တိ တေၐာမပျရ္ထေ ပြာရ္ထေယေ'ဟမ်၊
“நான் என் சீடர்களுக்காக மாத்திரம் மன்றாடவில்லை. இவர்கள் அறிவிக்கும் செய்தியின் மூலமாய் என்னில் விசுவாசம் வைக்கப் போகிறவர்களுக்காகவும் மன்றாடுகிறேன்.
21 ဟေ ပိတသ္တေၐာံ သရွွေၐာမ် ဧကတွံ ဘဝတု တဝ ယထာ မယိ မမ စ ယထာ တွယျေကတွံ တထာ တေၐာမပျာဝယောရေကတွံ ဘဝတု တေန တွံ မာံ ပြေရိတဝါန် ဣတိ ဇဂတော လောကား ပြတိယန္တု၊
பிதாவே நீர் என்னில் இருக்கிறது போலவும், நான் உம்மில் இருக்கிறது போலவும் அவர்கள் எல்லோரும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்றும் மன்றாடுகிறேன். நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்படி, அவர்களும் நம்மில் ஒன்றாய் இருக்கட்டும்.
22 ယထာဝယောရေကတွံ တထာ တေၐာမပျေကတွံ ဘဝတု တေၐွဟံ မယိ စ တွမ် ဣတ္ထံ တေၐာံ သမ္ပူရ္ဏမေကတွံ ဘဝတု, တွံ ပြေရိတဝါန် တွံ မယိ ယထာ ပြီယသေ စ တထာ တေၐွပိ ပြီတဝါန် ဧတဒျထာ ဇဂတော လောကာ ဇာနန္တိ
நாம் ஒன்றாய் இருப்பதுபோலவே அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
23 တဒရ္ထံ တွံ ယံ မဟိမာနံ မဟျမ် အဒဒါသ္တံ မဟိမာနမ် အဟမပိ တေဘျော ဒတ္တဝါန်၊
இவ்வாறு நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருப்பதனால், அவர்களும் முழுமையான ஒற்றுமைக்குள் கொண்டுவரப்படுவார்கள். அப்பொழுது நீரே என்னை அனுப்பினீர் என்றும், நீர் என்னில் அன்பாயிருந்தது போலவே, அவர்களிலும் அன்பாயிருக்கிறீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்.
24 ဟေ ပိတ ရ္ဇဂတော နိရ္မ္မာဏာတ် ပူရွွံ မယိ သ္နေဟံ ကၖတွာ ယံ မဟိမာနံ ဒတ္တဝါန် မမ တံ မဟိမာနံ ယထာ တေ ပၑျန္တိ တဒရ္ထံ ယာလ္လောကာန် မဟျံ ဒတ္တဝါန် အဟံ ယတြ တိၐ္ဌာမိ တေပိ ယထာ တတြ တိၐ္ဌန္တိ မမဲၐာ ဝါဉ္ဆာ၊
“பிதாவே நீர் எனக்குக் கொடுத்த இவர்கள் நான் இருக்கும் இடத்திலே, என்னுடன் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். உலகம் படைக்கப்படும் முன்னே நீர் என்னில் அன்பாயிருந்ததினால், நீர் எனக்குக் கொடுத்த மகிமையை இவர்கள் காணவேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.
25 ဟေ ယထာရ္ထိက ပိတ ရ္ဇဂတော လောကဲသ္တွယျဇ္ဉာတေပိ တွာမဟံ ဇာနေ တွံ မာံ ပြေရိတဝါန် ဣတီမေ ၑိၐျာ ဇာနန္တိ၊
“நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியாவிட்டாலும், நான் உம்மை அறிவேன். நான் உம்மாலேயே அனுப்பப்பட்டேன் என்று இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.
26 ယထာဟံ တေၐု တိၐ္ဌာမိ တထာ မယိ ယေန ပြေမ္နာ ပြေမာကရောသ္တတ် တေၐု တိၐ္ဌတိ တဒရ္ထံ တဝ နာမာဟံ တာန် ဇ္ဉာပိတဝါန် ပုနရပိ ဇ္ဉာပယိၐျာမိ၊
நீர் என்மேல் வைத்திருக்கும் அன்பு இவர்கள்மேல் இருக்கும்படிக்கும், நான் இவர்களில் இருக்கும்படிக்கும் நான் உமது பெயரை இவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறேன். தொடர்ந்து உம்மைத் தெரியப்படுத்துவேன்” என்றார்.

< ယောဟနး 17 >