< ယောဟနး 16 >

1 ယုၐ္မာကံ ယထာ ဝါဓာ န ဇာယတေ တဒရ္ထံ ယုၐ္မာန် ဧတာနိ သရွွဝါကျာနိ ဝျာဟရံ၊
“நீங்கள் விசுவாசத்தைவிட்டு விலகிப் போகாதபடி இதை எல்லாம் நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
2 လောကာ ယုၐ္မာန် ဘဇနဂၖဟေဘျော ဒူရီကရိၐျန္တိ တထာ ယသ္မိန် သမယေ ယုၐ္မာန် ဟတွာ ဤၑွရသျ တုၐ္ဋိ ဇနကံ ကရ္မ္မာကုရ္မ္မ ဣတိ မံသျန္တေ သ သမယ အာဂစ္ဆန္တိ၊
சிலர் உங்களை ஜெப ஆலயங்களிலிருந்து வெளியே துரத்துவார்கள்; உண்மையாகவே ஒரு காலம் வருகிறது, உங்களைக் கொலைசெய்கிறவர்களுங்கூட தாங்கள் இறைவனுக்கு பணிசெய்வதாகவே எண்ணுவார்கள்.
3 တေ ပိတရံ မာဉ္စ န ဇာနန္တိ, တသ္မာဒ် ယုၐ္မာန် ပြတီဒၖၑမ် အာစရိၐျန္တိ၊
பிதாவையோ என்னையோ அவர்கள் அறியாததன் நிமித்தம் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வார்கள்.
4 အတော ဟေတား သမယေ သမုပသ္ထိတေ ယထာ မမ ကထာ ယုၐ္မာကံ မနးသုး သမုပတိၐ္ဌတိ တဒရ္ထံ ယုၐ္မာဘျမ် ဧတာံ ကထာံ ကထယာမိ ယုၐ္မာဘိး သာရ္ဒ္ဓမ် အဟံ တိၐ္ဌန် ပြထမံ တာံ ယုၐ္မဘျံ နာကထယံ၊
அந்தக் காலம் வருகிறபோது, நான் அதைக்குறித்து உங்களை எச்சரித்ததை நீங்கள் நினைவில் கொள்வதற்கே இதை நான் உங்களுக்கு முன்னதாகவே சொல்லியிருக்கிறேன். நான் உங்களுடனேகூட இருந்ததினாலே இதை உங்களுக்கு ஆரம்பத்திலேயே சொல்லவில்லை.
5 သာမ္ပြတံ သွသျ ပြေရယိတုး သမီပံ ဂစ္ဆာမိ တထာပိ တွံ က္က ဂစ္ဆသိ ကထာမေတာံ ယုၐ္မာကံ ကောပိ မာံ န ပၖစ္ဆတိ၊
இப்பொழுது நான் என்னை அனுப்பிய பிதாவினிடத்திற்குப் போகிறேன். ஆனால், ‘நீர் எங்கே போகிறீர்’ என்று உங்களில் ஒருவனும் என்னிடத்தில் கேட்கவில்லை.
6 ကိန္တု မယောက္တာဘိရာဘိး ကထာဘိ ရျူၐ္မာကမ် အန္တးကရဏာနိ ဒုးခေန ပူရ္ဏာနျဘဝန်၊
நான் இவைகளைச் சொன்னதினாலே நீங்கள் துக்கம் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.
7 တထာပျဟံ ယထာရ္ထံ ကထယာမိ မမ ဂမနံ ယုၐ္မာကံ ဟိတာရ္ထမေဝ, ယတော ဟေတော ရ္ဂမနေ န ကၖတေ သဟာယော ယုၐ္မာကံ သမီပံ နာဂမိၐျတိ ကိန္တု ယဒိ ဂစ္ဆာမိ တရှိ ယုၐ္မာကံ သမီပေ တံ ပြေၐယိၐျာမိ၊
ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்: உங்கள் நன்மைக்காவே நான் உங்களைவிட்டுப் போகிறேன். ஏனெனில் நான் போனாலேயன்றி உதவியாளர் உங்களிடத்தில் வரமாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன்.
8 တတး သ အာဂတျ ပါပပုဏျဒဏ္ဍေၐု ဇဂတော လောကာနာံ ပြဗောဓံ ဇနယိၐျတိ၊
உதவியாளர் வரும்பொழுது, பாவம், நீதி, நியாயத்தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்து உலகத்தினரை கண்டித்து உணத்துவார்:
9 တေ မယိ န ဝိၑွသန္တိ တသ္မာဒ္ဓေတေား ပါပပြဗောဓံ ဇနယိၐျတိ၊
அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதிருப்பதினால் பாவத்தைக் குறித்தும்,
10 ယုၐ္မာကမ် အဒၖၑျး သန္နဟံ ပိတုး သမီပံ ဂစ္ဆာမိ တသ္မာဒ် ပုဏျေ ပြဗောဓံ ဇနယိၐျတိ၊
இனிமேல் நீங்கள் என்னைக் காணாதபடிக்கு பிதாவின் இடத்திற்கு நான் போகிறபடியால் நீதியைக் குறித்தும்,
11 ဧတဇ္ဇဂတော'ဓိပတိ ရ္ဒဏ္ဍာဇ္ဉာံ ပြာပ္နောတိ တသ္မာဒ် ဒဏ္ဍေ ပြဗောဓံ ဇနယိၐျတိ၊
இந்த உலகத்தின் அதிபதி இப்பொழுது நியாயத் தீர்ப்புக்குள்ளாகி இருப்பதனால், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார்.
12 ယုၐ္မဘျံ ကထယိတုံ မမာနေကား ကထာ အာသတေ, တား ကထာ ဣဒါနီံ ယူယံ သောဎုံ န ၑက္နုထ;
“நான் உங்களுக்குச் சொல்வதற்கோ இன்னும் அதிகமாய் இருக்கிறது. இதை எல்லாம் இப்பொழுது உங்களால் தாங்கிக் கொள்ளமுடியாது.
13 ကိန္တု သတျမယ အာတ္မာ ယဒါ သမာဂမိၐျတိ တဒါ သရွွံ သတျံ ယုၐ္မာန် နေၐျတိ, သ သွတး ကိမပိ န ဝဒိၐျတိ ကိန္တု ယစ္ဆြောၐျတိ တဒေဝ ကထယိတွာ ဘာဝိကာရျျံ ယုၐ္မာန် ဇ္ဉာပယိၐျတိ၊
ஆனால் சத்திய ஆவியானவர் வரும்போது, அவர் உங்களை எல்லா சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார். அவர் தம்முடைய சுயவிருப்பத்தின்படி எதையும் பேசமாட்டார்; தாம் கேட்கிறதை மாத்திரமே அவர் பேசுவார். வரப்போகும் காரியங்களை அவர் உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பார்.
14 မမ မဟိမာနံ ပြကာၑယိၐျတိ ယတော မဒီယာံ ကထာံ ဂၖဟီတွာ ယုၐ္မာန် ဗောဓယိၐျတိ၊
அவர் எனக்குரியதிலிருந்து எடுத்து அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார். இதனால் அவர் எனக்கே மகிமையைக் கொண்டுவருவார்.
15 ပိတု ရျဒျဒ် အာသ္တေ တတ် သရွွံ မမ တသ္မာဒ် ကာရဏာဒ် အဝါဒိၐံ သ မဒီယာံ ကထာံ ဂၖဟီတွာ ယုၐ္မာန် ဗောဓယိၐျတိ၊
பிதாவுக்கு உரியவைகள் எல்லாம் என்னுடையவைகளாய் இருக்கின்றன. அதனாலேயே ஆவியானவர் எனக்குரியதிலிருந்து எடுத்து உங்களுக்கு அதை வெளிப்படுத்துவார் என்று சொன்னேன்.
16 ကိယတ္ကာလာတ် ပရံ ယူယံ မာံ ဒြၐ္ဋုံ န လပ္သျဓွေ ကိန္တု ကိယတ္ကာလာတ် ပရံ ပုန ရ္ဒြၐ္ဋုံ လပ္သျဓွေ ယတောဟံ ပိတုး သမီပံ ဂစ္ဆာမိ၊
“இன்னும் கொஞ்சம் காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மீண்டும் கொஞ்சக் காலத்திலே நீங்கள் என்னைக் காணுவீர்கள்.”
17 တတး ၑိၐျာဏာံ ကိယန္တော ဇနား ပရသ္ပရံ ဝဒိတုမ် အာရဘန္တ, ကိယတ္ကာလာတ် ပရံ မာံ ဒြၐ္ဋုံ န လပ္သျဓွေ ကိန္တု ကိယတ္ကာလာတ် ပရံ ပုန ရ္ဒြၐ္ဋုံ လပ္သျဓွေ ယတောဟံ ပိတုး သမီပံ ဂစ္ဆာမိ, ဣတိ ယဒ် ဝါကျမ် အယံ ဝဒတိ တတ် ကိံ?
அவர்களுடைய சீடர்களில் சிலர் ஒருவரையொருவர் பார்த்து, “‘இன்னும் கொஞ்சக்காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்’ என்றும், ‘மீண்டும் கொஞ்சக்காலத்திற்குப் பின் என்னைக் காண்பீர்கள்’ என்றும், ‘நான் என் பிதாவினிடத்திற்கு போகிறேன்’ என்றும் சொல்கிறாரே, அதன் அர்த்தம் என்ன?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
18 တတး ကိယတ္ကာလာတ် ပရမ် ဣတိ တသျ ဝါကျံ ကိံ? တသျ ဝါကျသျာဘိပြာယံ ဝယံ ဗောဒ္ဓုံ န ၑက္နုမသ္တဲရိတိ
“இவர், ‘கொஞ்சக்காலம்’ என்று சொல்வதன் அர்த்தம் என்ன? இவர் சொல்வது நமக்கு விளங்கவில்லையே” என்றும் பேசிக்கொண்டார்கள்.
19 နိဂဒိတေ ယီၑုသ္တေၐာံ ပြၑ္နေစ္ဆာံ ဇ္ဉာတွာ တေဘျော'ကထယတ် ကိယတ္ကာလာတ် ပရံ မာံ ဒြၐ္ဋုံ န လပ္သျဓွေ, ကိန္တု ကိယတ္ကာလာတ် ပရံ ပူန ရ္ဒြၐ္ဋုံ လပ္သျဓွေ, ယာမိမာံ ကထာမကထယံ တသျာ အဘိပြာယံ ကိံ ယူယံ ပရသ္ပရံ မၖဂယဓွေ?
இதைக்குறித்து சீடர்கள் தம்மிடம் கேட்க விரும்புகிறார்கள் என்று இயேசு அறிந்துகொண்டார். எனவே அவர் அவர்களிடம், “கொஞ்சக்காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மீண்டும் கொஞ்சக்காலத்தில் என்னைக் காண்பீர்கள்” என்று நான் சொன்னேன். அதனுடைய அர்த்தம் என்னவென்றுதானே நீங்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்.
20 ယုၐ္မာနဟမ် အတိယထာရ္ထံ ဝဒါမိ ယူယံ ကြန္ဒိၐျထ ဝိလပိၐျထ စ, ကိန္တု ဇဂတော လောကာ အာနန္ဒိၐျန္တိ; ယူယံ ၑောကာကုလာ ဘဝိၐျထ ကိန္တု ၑောကာတ် ပရံ အာနန္ဒယုက္တာ ဘဝိၐျထ၊
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் அழுது புலம்புவீர்கள், ஆனால் உலகமோ மகிழ்ச்சி அடையும். நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனால் உங்கள் துக்கமோ சந்தோஷமாக மாறும்.
21 ပြသဝကာလ ဥပသ္ထိတေ နာရီ ယထာ ပြသဝဝေဒနယာ ဝျာကုလာ ဘဝတိ ကိန္တု ပုတြေ ဘူမိၐ္ဌေ သတိ မနုၐျဲကော ဇန္မနာ နရလောကေ ပြဝိၐ္ဋ ဣတျာနန္ဒာတ် တသျာသ္တတ္သရွွံ ဒုးခံ မနသိ န တိၐ္ဌတိ,
பிரசவிக்கின்ற ஒரு பெண் தன்னுடைய பிரசவவேளை வந்துவிட்டதால், வேதனையை அனுபவிக்கின்றாள்; ஆனால் குழந்தை பிறந்தவுடனேயோ, அவள் தன் வேதனையை மறந்து விடுகிறாள். ஏனெனில் ஒரு பிள்ளையை உலகத்திற்குக் கொண்டு வந்ததைக் குறித்து மகிழ்ச்சி அடைகிறாள்.
22 တထာ ယူယမပိ သာမ္ပြတံ ၑောကာကုလာ ဘဝထ ကိန္တု ပုနရပိ ယုၐ္မဘျံ ဒရ္ၑနံ ဒါသျာမိ တေန ယုၐ္မာကမ် အန္တးကရဏာနိ သာနန္ဒာနိ ဘဝိၐျန္တိ, ယုၐ္မာကံ တမ် အာနန္ဒဉ္စ ကောပိ ဟရ္တ္တုံ န ၑက္ၐျတိ၊
அவ்விதமாகவே நீங்களும் இப்பொழுது வேதனையை அனுபவிக்கிறீர்கள். ஆனால் நான் உங்களை மீண்டும் காண்பேன். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். யாரும் அந்தச் சந்தோஷத்தை உங்களிடமிருந்து பறித்துக்கொள்ள மாட்டார்கள்.
23 တသ္မိန် ဒိဝသေ ကာမပိ ကထာံ မာံ န ပြက္ၐျထ၊ ယုၐ္မာနဟမ် အတိယထာရ္ထံ ဝဒါမိ, မမ နာမ္နာ ယတ် ကိဉ္စိဒ် ပိတရံ ယာစိၐျဓွေ တဒေဝ သ ဒါသျတိ၊
அந்த நாளிலே நீங்கள் என்னிடத்திலே எதையுமே கேட்கவேண்டியதில்லை. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் என் பெயரிலே என் பிதாவினிடத்தில் எதைக் கேட்டாலும், அதை அவர் உங்களுக்குத் தருவார்.
24 ပူရွွေ မမ နာမ္နာ ကိမပိ နာယာစဓွံ, ယာစဓွံ တတး ပြာပ္သျထ တသ္မာဒ် ယုၐ္မာကံ သမ္ပူရ္ဏာနန္ဒော ဇနိၐျတေ၊
இதுவரை நீங்கள் என்னுடைய பெயரில் எதையுமே கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் சந்தோஷமும் முழுநிறைவுபெறும்.
25 ဥပမာကထာဘိး သရွွာဏျေတာနိ ယုၐ္မာန် ဇ္ဉာပိတဝါန် ကိန္တု ယသ္မိန် သမယေ ဥပမယာ နောက္တွာ ပိတုး ကထာံ သ္ပၐ္ဋံ ဇ္ဉာပယိၐျာမိ သမယ ဧတာဒၖၑ အာဂစ္ဆတိ၊
“இவைகளை எல்லாம் உவமைகள் மூலம் உங்களுடன் பேசினேன். ஆனால் காலம் வருகிறது. அப்பொழுது நான் இப்படியான உவமைகளைக் கொண்டு பேசமாட்டேன். பிதாவைக் குறித்து தெளிவாக உங்களோடு பேசுவேன்.
26 တဒါ မမ နာမ္နာ ပြာရ္ထယိၐျဓွေ 'ဟံ ယုၐ္မန္နိမိတ္တံ ပိတရံ ဝိနေၐျေ ကထာမိမာံ န ဝဒါမိ;
அந்த நாளிலே நீங்களே என்னுடைய பெயரில் பிதாவினிடத்தில் கேட்பீர்கள். எனவே உங்களுக்காக நான் பிதாவினிடத்தில் கேட்கவேண்டியதில்லை.
27 ယတော ယူယံ မယိ ပြေမ ကုရုထ, တထာဟမ် ဤၑွရသျ သမီပါဒ် အာဂတဝါန် ဣတျပိ ပြတီထ, တသ္မာဒ် ကာရဏာတ် ကာရဏာတ် ပိတာ သွယံ ယုၐ္မာသု ပြီယတေ၊
நீங்கள் என்னில் அன்பாயிருந்ததினாலும், நான் இறைவனிடமிருந்து வந்தேன் என்று விசுவாசிப்பதினாலும், பிதாவே உங்களில் அன்பாயிருக்கிறார்.
28 ပိတုး သမီပါဇ္ဇဇဒ် အာဂတောသ္မိ ဇဂတ် ပရိတျဇျ စ ပုနရပိ ပိတုး သမီပံ ဂစ္ဆာမိ၊
நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு, இந்த உலகத்திற்கு வந்தேன்; இப்போது உலகத்தை விட்டு பிதாவினிடத்திற்கு திரும்பிப் போகிறேன்” என்றார்.
29 တဒါ ၑိၐျာ အဝဒန်, ဟေ ပြဘော ဘဝါန် ဥပမယာ နောက္တွာဓုနာ သ္ပၐ္ဋံ ဝဒတိ၊
அப்பொழுது இயேசுவினுடைய சீடர்கள், “இப்பொழுது நீர் உவமையாகச் சொல்லாமல் தெளிவாய் பேசுகிறீர்.
30 ဘဝါန် သရွွဇ္ဉး ကေနစိတ် ပၖၐ္ဋော ဘဝိတုမပိ ဘဝတး ပြယောဇနံ နာသ္တီတျဓုနာသ္မာကံ သ္ထိရဇ္ဉာနံ ဇာတံ တသ္မာဒ် ဘဝါန် ဤၑွရသျ သမီပါဒ် အာဂတဝါန် ဣတျတြ ဝယံ ဝိၑွသိမး၊
நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர். அதனால் யாரும் உம்மிடத்தில் கேள்விகள் கேட்கவேண்டிய அவசியம் இல்லை என்பது எங்களுக்குத் தெரிகிறது. எனவே நீர் இறைவனிடமிருந்து வந்தீர் என்பதை நாங்கள் விசுவாசிக்கிறோம்” என்றார்கள்.
31 တတော ယီၑုး ပြတျဝါဒီဒ် ဣဒါနီံ ကိံ ယူယံ ဝိၑွသိထ?
அதற்கு இயேசு, “இப்பொழுதாவது நீங்கள் விசுவாசிக்கிறீர்களே?
32 ပၑျတ သရွွေ ယူယံ ဝိကီရ္ဏား သန္တော မာမ် ဧကာကိနံ ပီရတျဇျ သွံ သွံ သ္ထာနံ ဂမိၐျထ, ဧတာဒၖၑး သမယ အာဂစ္ဆတိ ဝရံ ပြာယေဏောပသ္ထိတဝါန်; တထာပျဟံ နဲကာကီ ဘဝါမိ ယတး ပိတာ မယာ သာရ္ဒ္ဓမ် အာသ္တေ၊
ஆனால் ஒரு காலம் வருகிறது, அது இப்போதே வந்துவிட்டது. அப்பொழுது நீங்கள் சிதறடிக்கப்படுவீர்கள். ஒவ்வொருவரும் அவரவர் வீட்டுக்கு ஓடிப்போவீர்கள். நீங்கள் என்னைத் தனியே விட்டுவிடுவீர்கள். ஆனால் நான் தனிமையாய் இல்லை; ஏனெனில் என் பிதா என்னுடனே இருக்கிறார்.
33 ယထာ မယာ ယုၐ္မာကံ ၑာန္တိ ရ္ဇာယတေ တဒရ္ထမ် ဧတား ကထာ ယုၐ္မဘျမ် အစကထံ; အသ္မိန် ဇဂတိ ယုၐ္မာကံ က္လေၑော ဃဋိၐျတေ ကိန္တွက္ၐောဘာ ဘဝတ ယတော မယာ ဇဂဇ္ဇိတံ၊
“நீங்கள் என்னில் சமாதானம் பெற்றவர்களாய் இருக்கும்படியே, இவைகளை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்திலே உங்களுக்கு துன்பங்கள் உண்டு. ஆனாலும் திடன்கொள்ளுங்கள், நான் உலகத்தின்மீது வெற்றி கொண்டுவிட்டேன்” என்றார்.

< ယောဟနး 16 >