< ဣဖိၐိဏး 6 >

1 ဟေ ဗာလကား, ယူယံ ပြဘုမ် ဥဒ္ဒိၑျ ပိတြောရာဇ္ဉာဂြာဟိဏော ဘဝတ ယတသ္တတ် နျာယျံ၊
பிள்ளைகளே, நீங்கள் கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாக, உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். இதுவே சரியானது.
2 တွံ နိဇပိတရံ မာတရဉ္စ သမ္မနျသွေတိ ယော ဝိဓိး သ ပြတိဇ္ဉာယုက္တး ပြထမော ဝိဓိး
“உங்கள் தகப்பனையும், தாயையும் மதித்து நடவுங்கள்.” இதுவே வாக்குத்தத்தத்துடன் சேர்த்துக்கொடுக்கப்பட்ட முதலாவது கட்டளை.
3 ဖလတသ္တသ္မာတ် တဝ ကလျာဏံ ဒေၑေ စ ဒီရ္ဃကာလမ် အာယု ရ္ဘဝိၐျတီတိ၊
“மதித்து நடந்தால், உங்களுக்கு நன்மை உண்டாகும். நீங்களும் இந்தப் பூமியில் நீடித்து வாழ்வீர்கள்” என எழுதப்பட்டிருக்கிறது.
4 အပရံ ဟေ ပိတရး, ယူယံ သွဗာလကာန် မာ ရောၐယတ ကိန္တု ပြဘော ရွိနီတျာဒေၑာဘျာံ တာန် ဝိနယတ၊
தந்தையரே, உங்கள் பிள்ளைகளைக் கோபமூட்டாதீர்கள்; பிள்ளைகளைக் கர்த்தரின் பயிற்சியிலும், அறிவுறுத்தல்களிலும் வளர்த்திடுங்கள்.
5 ဟေ ဒါသား, ယူယံ ခြီၐ္ဋမ် ဥဒ္ဒိၑျ သဘယား ကမ္ပာနွိတာၑ္စ ဘူတွာ သရလာန္တးကရဏဲရဲဟိကပြဘူနာမ် အာဇ္ဉာဂြာဟိဏော ဘဝတ၊
அடிமைகளே, இந்தப் பூமியில் உங்களுக்கு எஜமான்களாய் இருக்கிறவர்களுக்கு பயத்துடனும் மரியாதையுடனும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதுபோல, அவர்களுக்கு உண்மையான மனதுடன் கீழ்ப்படியுங்கள்.
6 ဒၖၐ္ဋိဂေါစရီယပရိစရျျယာ မာနုၐေဘျော ရောစိတုံ မာ ယတဓွံ ကိန္တု ခြီၐ္ဋသျ ဒါသာ ဣဝ နိဝိၐ္ဋမနောဘိရီၑ္စရသျေစ္ဆာံ သာဓယတ၊
அவர்களுடைய நன்மதிப்பைப் பெறுவதற்காக அவர்கள் உங்களைக் கவனிக்கும்போது மட்டும் அப்படிக் கீழ்ப்படியாமல், உங்கள் முழு இருதயத்தோடும் இறைவனுடைய சித்தத்தைச் செய்யும் கிறிஸ்துவின் அடிமைகளைப்போல கீழ்ப்படியுங்கள்.
7 မာနဝါန် အနုဒ္ဒိၑျ ပြဘုမေဝေါဒ္ဒိၑျ သဒ္ဘါဝေန ဒါသျကရ္မ္မ ကုရုဓွံ၊
நீங்கள் மனிதருக்கு பணிசெய்கிறவர்களைப் போலல்லாமல், கர்த்தருக்குப் பணிசெய்கிறவர்களாக, முழு இருதயத்துடனும் உங்கள் பணியைச் செய்யுங்கள்.
8 ဒါသမုက္တယော ရျေန ယတ် သတ္ကရ္မ္မ ကြိယတေ တေန တသျ ဖလံ ပြဘုတော လပ္သျတ ဣတိ ဇာနီတ စ၊
ஏனெனில் ஒருவன் அடிமையாயினும் சுதந்திரமுடையவனாயினும் அவனவன் செய்கின்ற நன்மைக்குப் பதிலாக, கர்த்தர் ஒவ்வொருவனுக்கும் அதற்குரிய பலனைக் கொடுப்பார் என்பது உங்களுக்குத் தெரியும்.
9 အပရံ ဟေ ပြဘဝး, ယုၐ္မာဘိ ရ္ဘရ္တ္သနံ ဝိဟာယ တာန် ပြတိ နျာယျာစရဏံ ကြိယတာံ ယၑ္စ ကသျာပိ ပက္ၐပါတံ န ကရောတိ ယုၐ္မာကမပိ တာဒၖၑ ဧကး ပြဘုး သွရ္ဂေ ဝိဒျတ ဣတိ ဇ္ဉာယတာံ၊
எஜமான்களே, உங்கள் அடிமைகளை நீங்களும் அப்படியே நடத்துங்கள். அவர்களை பயமுறுத்தவேண்டாம். நீங்களும் உங்கள் அடிமைகளும் பரலோகத்திலுள்ள ஒரே எஜமானுக்கே உரியவர்கள் என்பதையும், அவர் பாரபட்சம் காட்டுகிறவர் அல்ல என்பதையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
10 အဓိကန္တု ဟေ ဘြာတရး, ယူယံ ပြဘုနာ တသျ ဝိကြမယုက္တၑက္တျာ စ ဗလဝန္တော ဘဝတ၊
இறுதியாக, கர்த்தரிலும், அவருடைய பெரிதான வல்லமையில் பெலப்பட்டிருங்கள்.
11 ယူယံ ယတ် ၑယတာနၑ္ဆလာနိ နိဝါရယိတုံ ၑက္နုထ တဒရ္ထမ် ဤၑွရီယသုသဇ္ဇာံ ပရိဓဒ္ဓွံ၊
நீங்கள் பிசாசின் எல்லாவித தந்திரங்களை எதிர்த்து நிற்கக் கூடியவர்களாய் இருக்கும்படி, இறைவனின் முழுப் போர்க்கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள்.
12 ယတး ကေဝလံ ရက္တမာံသာဘျာမ် ဣတိ နဟိ ကိန္တု ကရ္တၖတွပရာကြမယုက္တဲသ္တိမိရရာဇျသျေဟလောကသျာဓိပတိဘိး သွရ္ဂောဒ္ဘဝဲ ရ္ဒုၐ္ဋာတ္မဘိရေဝ သာရ္ဒ္ဓမ် အသ္မာဘိ ရျုဒ္ဓံ ကြိယတေ၊ (aiōn g165)
ஏனெனில், நமது போராட்டம் மனித எதிரிகளோடு அல்ல. அது தீமையான ஆட்சியாளர்களுக்கும், காணக்கூடாத உலகத்தின் அதிகாரங்களுக்கும், இந்த இருள் உலகில் ஆட்சிசெய்யும் வல்லமைகளுக்கும் எதிரானதுமாய் இருக்கிறது; அது வான மண்டலங்களிலுள்ள தீய ஆவிகளின் சேனைகளுக்கும் எதிரானதாயிருக்கிறது. (aiōn g165)
13 အတော ဟေတော ရျူယံ ယယာ သံကုလေ ဒိနေ'ဝသ္ထာတုံ သရွွာဏိ ပရာဇိတျ ဒၖဎား သ္ထာတုဉ္စ ၑက္ၐျထ တာမ် ဤၑွရီယသုသဇ္ဇာံ ဂၖဟ္လီတ၊
எனவே, தீமையின் நாள் வரும்போது, எதிரியின் தாக்குதலை எதிர்த்து நிற்கவும், எல்லாவற்றையும் செய்துமுடித்த பின்பு, வெற்றி பெற்று உறுதியுடன் நிலைநிற்கவும், இறைவனின் முழுப் போர்கவசத்தையும் அணிந்துகொள்ளுங்கள்.
14 ဝသ္တုတသ္တု သတျတွေန ၑၖင်္ခလေန ကဋိံ ဗဒ္ဓွာ ပုဏျေန ဝရ္မ္မဏာ ဝက္ၐ အာစ္ဆာဒျ
உங்கள் இடுப்பைச் சுற்றி, சத்தியம் என்னும் இடைக்கச்சையைக் கட்டிக்கொண்டு. நீதி ஆகிய மார்கவசத்தை அணிந்துகொண்டு, உறுதியாய் நில்லுங்கள்.
15 ၑာန္တေး သုဝါရ္တ္တယာ ဇာတမ် ဥတ္သာဟံ ပါဒုကာယုဂလံ ပဒေ သမရ္ပျ တိၐ္ဌတ၊
சமாதானத்தின் நற்செய்தியை அறிவிக்கும் ஆயத்தத்தை உங்கள் பாதரட்சைகளாகப் போட்டுக்கொள்ளுங்கள்.
16 ယေန စ ဒုၐ္ဋာတ္မနော'ဂ္နိဗာဏာန် သရွွာန် နိရွွာပယိတုံ ၑက္ၐျထ တာဒၖၑံ သရွွာစ္ဆာဒကံ ဖလကံ ဝိၑွာသံ ဓာရယတ၊
இவை எல்லாவற்றிலும், விசுவாசம் என்னும் கேடயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதைக்கொண்டே, தீமைசெய்பவன் எய்துவிடும் நெருப்பு அம்புகளை உங்களால் அணைத்துவிட முடியும்.
17 ၑိရသ္တြံ ပရိတြာဏမ် အာတ္မနး ခင်္ဂဉ္စေၑွရသျ ဝါကျံ ဓာရယတ၊
இரட்சிப்பைத் தலைக்கவசமாக அணிந்துகொள்ளுங்கள். இறைவனுடைய வார்த்தையாகிய பரிசுத்த ஆவியானவரின் வாளை எடுத்துக்கொள்ளுங்கள்.
18 သရွွသမယေ သရွွယာစနေန သရွွပြာရ္ထနေန စာတ္မနာ ပြာရ္ထနာံ ကုရုဓွံ တဒရ္ထံ ဒၖဎာကာင်္က္ၐယာ ဇာဂြတး သရွွေၐာံ ပဝိတြလောကာနာံ ကၖတေ သဒါ ပြာရ္ထနာံ ကုရုဓွံ၊
எல்லாச் சந்தர்ப்பங்களிலும் எல்லா விதமான வேண்டுதல்களையும் விண்ணப்பங்களையும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு மன்றாடுங்கள். இதை மனதில்கொண்டு, விழிப்புணர்வுள்ளவர்களாய் இருங்கள். எல்லாப் பரிசுத்தவான்களுக்காகவும் எப்பொழுதும் மன்றாடுங்கள்.
19 အဟဉ္စ ယသျ သုသံဝါဒသျ ၑၖင်္ခလဗဒ္ဓး ပြစာရကဒူတော'သ္မိ တမ် ဥပယုက္တေနောတ္သာဟေန ပြစာရယိတုံ ယထာ ၑက္နုယာံ
எனக்காகவும் மன்றாடுங்கள், நான் செய்தி கொடுக்கும் போதெல்லாம் இறைவன் எனக்கு நற்செய்தியின் இரகசியத்தை பயமின்றி எடுத்துக்கூற வார்த்தைகளைக் கொடுக்கும்படி மன்றாடுங்கள்.
20 တထာ နိရ္ဘယေန သွရေဏောတ္သာဟေန စ သုသံဝါဒသျ နိဂူဎဝါကျပြစာရာယ ဝက္တၖတာ ယတ် မဟျံ ဒီယတေ တဒရ္ထံ မမာပိ ကၖတေ ပြာရ္ထနာံ ကုရုဓွံ၊
அந்த நற்செய்திக்காகவே நான் இப்பொழுது விலங்கிடப்பட்ட ஒரு தூதுவனாக இருக்கிறேன். நான் பேசவேண்டிய விதமாய் பயமின்றி அறிவிக்க மன்றாடுங்கள்.
21 အပရံ မမ ယာဝသ္ထာသ္တိ ယစ္စ မယာ ကြိယတေ တတ် သရွွံ ယဒ် ယုၐ္မာဘိ ရ္ဇ္ဉာယတေ တဒရ္ထံ ပြဘုနာ ပြိယဘြာတာ ဝိၑွာသျး ပရိစာရကၑ္စ တုခိကော ယုၐ္မာန် တတ် ဇ္ဉာပယိၐျတိ၊
நமது அன்பு சகோதரனும், கர்த்தருடைய ஊழியத்தில் உண்மையுள்ள ஊழியக்காரனுமான தீகிக்கு என்னைப்பற்றிய எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரிவிப்பான். அப்பொழுது நான் எப்படியிருக்கிறேன் என்றும், என்ன செய்கிறேன் என்றும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
22 ယူယံ ယဒ် အသ္မာကမ် အဝသ္ထာံ ဇာနီထ ယုၐ္မာကံ မနာံသိ စ ယတ် သာန္တွနာံ လဘန္တေ တဒရ္ထမေဝါဟံ ယုၐ္မာကံ သန္နိဓိံ တံ ပြေၐိတဝါန၊
நாங்கள் எல்லோரும் எப்படியிருக்கிறோம் என்பதை அவன் உங்களுக்குச் சொல்லி, உங்களை மனதளவில் உற்சாகப்படுத்தும் நோக்கத்திற்காகவேதான், நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன்.
23 အပရမ် ဤၑွရး ပြဘု ရျီၑုခြီၐ္ဋၑ္စ သရွွေဘျော ဘြာတၖဘျး ၑာန္တိံ ဝိၑွာသသဟိတံ ပြေမ စ ဒေယာတ်၊
பிதாவாகிய இறைவனிடமும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடமும் இருந்து, எல்லாச் சகோதரருக்கும் சமாதானமும், விசுவாசத்துடன் இணைந்த அன்பும் இருப்பதாக.
24 ယေ ကေစိတ် ပြဘော် ယီၑုခြီၐ္ဋေ'က္ၐယံ ပြေမ ကုရွွန္တိ တာန် ပြတိ ပြသာဒေါ ဘူယာတ်၊ တထာသ္တု၊
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அழிந்துபோகாத அன்புடன் நேசிக்கும் அனைவருடனும் கிருபை இருப்பதாக.

< ဣဖိၐိဏး 6 >