< ပြေရိတား 8 >

1 တသျ ဟတျာကရဏံ ၑော်လောပိ သမမနျတ၊ တသ္မိန် သမယေ ယိရူၑာလမ္နဂရသ္ထာံ မဏ္ဍလီံ ပြတိ မဟာတာဍနာယာံ ဇာတာယာံ ပြေရိတလောကာန် ဟိတွာ သရွွေ'ပရေ ယိဟူဒါၑောမိရောဏဒေၑယော ရ္နာနာသ္ထာနေ ဝိကီရ္ဏား သန္တော ဂတား၊
ஸ்தேவானைக் கொலைசெய்கிறதற்கு, சவுலும் உடன்பட்டிருந்தான். அந்த நாளிலே, எருசலேமில் இருந்த திருச்சபைக்கு மிகுந்த துன்பம் ஏற்பட்டது. இதனால், அப்போஸ்தலரைத் தவிர அனைவரும் யூதேயாவின் நாட்டுப் புறங்களுக்கும், சமாரியாவுக்கும் சிதறடிக்கப்பட்டார்கள்.
2 အနျစ္စ ဘက္တလောကာသ္တံ သ္တိဖာနံ ၑ္မၑာနေ သ္ထာပယိတွာ ဗဟု ဝျလပန်၊
இறைவனுடைய பக்தர்கள் ஸ்தேவானை அடக்கம்பண்ணி, அவனுக்காக ஆழ்ந்த துக்கங்கொண்டாடினார்கள்.
3 ကိန္တု ၑော်လော ဂၖဟေ ဂၖဟေ ဘြမိတွာ သ္တြိယး ပုရုၐာံၑ္စ ဓၖတွာ ကာရာယာံ ဗဒ္ဓွာ မဏ္ဍလျာ မဟောတ္ပာတံ ကၖတဝါန်၊
ஆனால் சவுலோ, திருச்சபையை அழிக்கத் தொடங்கினான். அவன் வீடுகள்தோறும் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக்கொண்டுபோய் அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தான்.
4 အနျစ္စ ယေ ဝိကီရ္ဏာ အဘဝန် တေ သရွွတြ ဘြမိတွာ သုသံဝါဒံ ပြာစာရယန်၊
சிதறிப்போனவர்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம், நற்செய்தியைப் பிரசங்கித்தார்கள்.
5 တဒါ ဖိလိပး ၑောမိရောဏ္နဂရံ ဂတွာ ခြီၐ္ဋာချာနံ ပြာစာရယတ်;
பிலிப்பு சமாரியாவிலுள்ள பட்டணத்திற்குப் போய், அங்கே கிறிஸ்துவைப் பிரசித்தப்படுத்தினான்.
6 တတော'ၑုစိ-ဘၖတဂြသ္တလောကေဘျော ဘူတာၑ္စီတ္ကၖတျာဂစ္ဆန် တထာ ဗဟဝး ပက္ၐာဃာတိနး ခဉ္ဇာ လောကာၑ္စ သွသ္ထာ အဘဝန်၊
கூடிவந்த மக்கள், பிலிப்பு சொன்னதைக் கேட்டும் அவன் செய்த அற்புத அடையாளங்களைக் கண்டும் அவன் சொன்னவைகளுக்கு எல்லோரும் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள்.
7 တသ္မာတ် လာကာ ဤဒၖၑံ တသျာၑ္စရျျံ ကရ္မ္မ ဝိလောကျ နိၑမျ စ သရွွ ဧကစိတ္တီဘူယ တေနောက္တာချာနေ မနာံသိ နျဒဓုး၊
அநேகரிலிருந்து, தீய ஆவிகள் கூச்சலிட்டுக்கொண்டு வெளியேறின. பல முடக்குவாதக்காரரும் கால் ஊனமுற்றோர்களும் சுகமடைந்தார்கள்.
8 တသ္မိန္နဂရေ မဟာနန္ဒၑ္စာဘဝတ်၊
இதனால் அந்தப் பட்டணத்திலே பெருமகிழ்ச்சி உண்டாயிற்று.
9 တတး ပူရွွံ တသ္မိန္နဂရေ ၑိမောန္နာမာ ကၑ္စိဇ္ဇနော ဗဟွီ ရ္မာယာကြိယား ကၖတွာ သွံ ကဉ္စန မဟာပုရုၐံ ပြောစျ ၑောမိရောဏီယာနာံ မောဟံ ဇနယာမာသ၊
சீமோன் என்னும் பெயருடைய ஒருவன், சில காலமாக அந்தப் பட்டணத்தில் மந்திரவித்தை செய்து, சமாரியாவிலுள்ள மக்களையெல்லாம் வியக்கச்செய்தான். அவன் தன்னை ஒரு பெரிய ஆளாகக் காண்பித்துக்கொண்டான்.
10 တသ္မာတ် သ မာနုၐ ဤၑွရသျ မဟာၑက္တိသွရူပ ဣတျုက္တွာ ဗာလဝၖဒ္ဓဝနိတား သရွွေ လာကာသ္တသ္မိန် မနာံသိ နျဒဓုး၊
இதனால் உயர்ந்தவர்களும் தாழ்ந்தவர்களுமான எல்லா மக்களும் அவன் சொல்வதைக் கவனமாய் கேட்டு, “பெரும் வல்லமை என்று சொல்லப்படும் தெய்வீக வல்லமை இந்த மனிதனே” என்றார்கள்.
11 သ ဗဟုကာလာန် မာယာဝိကြိယယာ သရွွာန် အတီဝ မောဟယာဉ္စကာရ, တသ္မာတ် တေ တံ မေနိရေ၊
சீமோன் தனது மந்திரவித்தையினால் அவர்களை வெகுகாலமாய் வியக்கப்பண்ணினதால், அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள்.
12 ကိန္တွီၑွရသျ ရာဇျသျ ယီၑုခြီၐ္ဋသျ နာမ္နၑ္စာချာနပြစာရိဏး ဖိလိပသျ ကထာယာံ ဝိၑွသျ တေၐာံ သ္တြီပုရုၐောဘယလောကာ မဇ္ဇိတာ အဘဝန်၊
ஆனால் பிலிப்பு இறைவனுடைய அரசைப்பற்றிய நற்செய்தியையும் இயேசுகிறிஸ்துவின் பெயரையும் குறித்துப் பிரசங்கித்தபோது, அவர்கள் விசுவாசித்தார்கள். ஆண்களும் பெண்களுமாக திருமுழுக்குப் பெற்றார்கள்.
13 ၑေၐေ သ ၑိမောနပိ သွယံ ပြတျဲတ် တတော မဇ္ဇိတး သန် ဖိလိပေန ကၖတာမ် အာၑ္စရျျကြိယာံ လက္ၐဏဉ္စ ဝိလောကျာသမ္ဘဝံ မနျမာနသ္တေန သဟ သ္ထိတဝါန်၊
சீமோனும் விசுவாசித்து திருமுழுக்குப் பெற்றான். அவன் தான் கண்ட பெரிதான அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் வியப்புற்று, பிலிப்புவைப் பின்பற்றி எல்லா இடங்களுக்கும் சென்றான்.
14 ဣတ္ထံ ၑောမိရောဏ္ဒေၑီယလောကာ ဤၑွရသျ ကထာမ် အဂၖဟ္လန် ဣတိ ဝါရ္တ္တာံ ယိရူၑာလမ္နဂရသ္ထပြေရိတား ပြာပျ ပိတရံ ယောဟနဉ္စ တေၐာံ နိကဋေ ပြေၐိတဝန္တး၊
சமாரியாவிலுள்ளவர்கள் இறைவனின் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டார்கள் என்று எருசலேமிலுள்ள அப்போஸ்தலர் கேள்விப்பட்டபோது, பேதுருவையும் யோவானையும் அங்கே அனுப்பினார்கள்.
15 တတသ္တော် တတ် သ္ထာနမ် ဥပသ္ထာယ လောကာ ယထာ ပဝိတြမ် အာတ္မာနံ ပြာပ္နုဝန္တိ တဒရ္ထံ ပြာရ္ထယေတာံ၊
இவர்கள் அங்கேபோய்ச் சேர்ந்தபோது, அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி, அங்குள்ள மக்களுக்காக மன்றாடினார்கள்.
16 ယတသ္တေ ပုရာ ကေဝလပြဘုယီၑော ရ္နာမ္နာ မဇ္ဇိတမာတြာ အဘဝန်, န တု တေၐာံ မဓျေ ကမပိ ပြတိ ပဝိတြသျာတ္မန အာဝိရ္ဘာဝေါ ဇာတး၊
ஏனெனில், அதுவரை அவர்களில் யாருக்கும் பரிசுத்த ஆவியானவர் அருளப்படவில்லை. அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரில் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள்.
17 ကိန္တု ပြေရိတာဘျာံ တေၐာံ ဂါတြေၐု ကရေၐွရ္ပိတေၐု သတ္သု တေ ပဝိတြမ် အာတ္မာနမ် ပြာပ္နုဝန်၊
பேதுருவும் யோவானும் அவர்கள்மேல் தங்கள் கைகளை வைத்து மன்றாடியபோது, அவர்கள் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார்கள்.
18 ဣတ္ထံ လောကာနာံ ဂါတြေၐု ပြေရိတယေား ကရာရ္ပဏေန တာန် ပဝိတြမ် အာတ္မာနံ ပြာပ္တာန် ဒၖၐ္ဋွာ သ ၑိမောန် တယေား သမီပေ မုဒြာ အာနီယ ကထိတဝါန်;
அப்போஸ்தலர் கைகளை வைத்து மன்றாடும்போது, பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுவதைக் கண்ட சீமோன், அவர்களிடம் பணத்தைக் கொடுத்து,
19 အဟံ ယသျ ဂါတြေ ဟသ္တမ် အရ္ပယိၐျာမိ တသျာပိ ယထေတ္ထံ ပဝိတြာတ္မပြာပ္တိ ရ္ဘဝတိ တာဒၖၑီံ ၑက္တိံ မဟျံ ဒတ္တံ၊
“நான் எவர்கள்மேல் கைகளை வைக்கிறேனோ, அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளும்படி, எனக்கும் இந்த வல்லமையைத் தாருங்கள்” என்று கேட்டான்.
20 ကိန္တု ပိတရသ္တံ ပြတျဝဒတ် တဝ မုဒြာသ္တွယာ ဝိနၑျန္တု ယတ ဤၑွရသျ ဒါနံ မုဒြာဘိး ကြီယတေ တွမိတ္ထံ ဗုဒ္ဓဝါန်;
அப்பொழுது பேதுரு அவனிடம், “இறைவனுடைய நன்கொடையைப் பணத்தினால் வாங்கலாம் என்று நீ நினைத்தபடியால், உனது பணம் உன்னுடனேயே அழிந்து போகட்டும்!
21 ဤၑွရာယ တာဝန္တးကရဏံ သရလံ နဟိ, တသ္မာဒ် အတြ တဝါံၑော'ဓိကာရၑ္စ ကောပိ နာသ္တိ၊
இந்த ஊழியத்திலே உனக்கு எந்தவித பங்கும் இல்லை, பாகமும் இல்லை. உனது இருதயம் இறைவனுக்கு முன்பாக நீதியாய் இருக்கவில்லையே.
22 အတ ဧတတ္ပာပဟေတေား ခေဒါနွိတး သန် ကေနာပိ ပြကာရေဏ တဝ မနသ ဧတသျား ကုကလ္ပနာယား က္ၐမာ ဘဝတိ, ဧတဒရ္ထမ် ဤၑွရေ ပြာရ္ထနာံ ကုရု;
எனவே, இந்தத் தீமையைவிட்டு நீ மனந்திரும்பி, கர்த்தரிடம் மன்றாடு. நீ உன் இருதயத்தில் இப்படிப்பட்ட எண்ணம் கொண்டிருப்பதை ஒருவேளை அவர் மன்னிப்பார்.
23 ယတသ္တွံ တိက္တပိတ္တေ ပါပသျ ဗန္ဓနေ စ ယဒသိ တန္မယာ ဗုဒ္ဓမ်၊
ஏனெனில், நீ முழுவதும் கசப்பிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருப்பதை நான் காண்கிறேன்” என்றான்.
24 တဒါ ၑိမောန် အကထယတ် တရှိ ယုဝါဘျာမုဒိတာ ကထာ မယိ ယထာ န ဖလတိ တဒရ္ထံ ယုဝါံ မန္နိမိတ္တံ ပြဘော် ပြာရ္ထနာံ ကုရုတံ၊
அப்பொழுது சீமோன், “நீங்கள் சொன்னது ஒன்றும் எனக்கு நடக்காதபடி கர்த்தரிடம் எனக்காக மன்றாடுங்கள்” என்றான்.
25 အနေန ပြကာရေဏ တော် သာက္ၐျံ ဒတ္တွာ ပြဘေား ကထာံ ပြစာရယန္တော် ၑောမိရောဏီယာနာမ် အနေကဂြာမေၐု သုသံဝါဒဉ္စ ပြစာရယန္တော် ယိရူၑာလမ္နဂရံ ပရာဝၖတျ ဂတော်၊
பேதுருவும் யோவானும் சாட்சி கூறி, கர்த்தரின் வார்த்தையையும் பிரசித்தப்படுத்தினார்கள். அவர்கள் சமாரியரின் பல கிராமங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கித்துக்கொண்டு, எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
26 တတး ပရမ် ဤၑွရသျ ဒူတး ဖိလိပမ် ဣတျာဒိၑတ်, တွမုတ္ထာယ ဒက္ၐိဏသျာံ ဒိၑိ ယော မာရ္ဂော ပြာန္တရသျ မဓျေန ယိရူၑာလမော 'သာနဂရံ ယာတိ တံ မာရ္ဂံ ဂစ္ဆ၊
கர்த்தரின் தூதன் பிலிப்புவிடம், “நீ எழுந்து எருசலேமிலிருந்து காசாவுக்குச் செல்லும் வழியாகத் தெற்கு நோக்கிப் போ” என்றார்.
27 တတး သ ဥတ္ထာယ ဂတဝါန်; တဒါ ကန္ဒာကီနာမ္နး ကူၑ္လောကာနာံ ရာဇ္ဉျား သရွွသမ္ပတ္တေရဓီၑး ကူၑဒေၑီယ ဧကး ၐဏ္ဍော ဘဇနာရ္ထံ ယိရူၑာလမ္နဂရမ် အာဂတျ
எனவே அவன் புறப்பட்டுப்போய், அண்ணகனாய் இருந்த ஒரு எத்தியோப்பியனை வழியிலே சந்தித்தான். இவன் எத்தியோப்பியரின் அரசியான கந்தாகே என்பவளின் எல்லாச் சொத்துக்களுக்கும் பொறுப்பாயிருந்த, ஒரு முக்கிய அதிகாரி. இந்த எத்தியோப்பியன் வழிபடும்படி எருசலேமுக்குச் சென்றிருந்தான்.
28 ပုနရပိ ရထမာရုဟျ ယိၑယိယနာမ္နော ဘဝိၐျဒွါဒိနော ဂြန္ထံ ပဌန် ပြတျာဂစ္ဆတိ၊
அந்த அதிகாரி தனது வீட்டிற்குத் திரும்பிப் போய்க்கொண்டிருக்கும்போது, வழியிலே தனது தேரில் உட்கார்ந்து, இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான்.
29 ဧတသ္မိန် သမယေ အာတ္မာ ဖိလိပမ် အဝဒတ်, တွမ် ရထသျ သမီပံ ဂတွာ တေန သာရ္ဒ္ဓံ မိလ၊
பரிசுத்த ஆவியானவர் பிலிப்புவிடம், “நீ அந்தத் தேரை நோக்கிப் போய், அதன் அருகே செல்” என்றார்.
30 တသ္မာတ် သ ဓာဝန် တသျ သန္နိဓာဝုပသ္ထာယ တေန ပဌျမာနံ ယိၑယိယထဝိၐျဒွါဒိနော ဝါကျံ ၑြုတွာ ပၖၐ္ဋဝါန် ယတ် ပဌသိ တတ် ကိံ ဗုဓျသေ?
பிலிப்பு அந்தத் தேரை நோக்கி ஓடிச்சென்றப் போது, அவன் இறைவாக்கினன் ஏசாயாவின் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது பிலிப்பு அவனிடம், “நீ வாசிப்பதன் பொருள் உனக்குத் தெரிகின்றதா?” எனக் கேட்டான்.
31 တတး သ ကထိတဝါန် ကေနစိန္န ဗောဓိတောဟံ ကထံ ဗုဓျေယ? တတး သ ဖိလိပံ ရထမာရောဎုံ သွေန သာရ္ဒ္ဓမ် ဥပဝေၐ္ဋုဉ္စ နျဝေဒယတ်၊
“அதற்கு அவன், யாராவது எனக்கு அதை விவரித்துச் சொல்லாவிட்டால், எனக்கு எப்படி விளங்கும்?” என்று சொல்லி, பிலிப்புவைத் தன்னுடனேகூட வந்து உட்காரும்படி அழைத்தான்.
32 သ ၑာသ္တြသျေတဒွါကျံ ပဌိတဝါန် ယထာ, သမာနီယတ ဃာတာယ သ ယထာ မေၐၑာဝကး၊ လောမစ္ဆေဒကသာက္ၐာစ္စ မေၐၑ္စ နီရဝေါ ယထာ၊ အာဗဓျ ဝဒနံ သွီယံ တထာ သ သမတိၐ္ဌတ၊
அந்த அதிகாரி வாசித்துக்கொண்டிருந்த வேதவசனப் பகுதியில்: “அவர் கொல்லப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டைப்போல் இருந்தார். மயிர்க்கத்தரிப்பவனுக்கு முன்பாக மவுனமாயிருக்கும் ஆட்டுக்குட்டியைப்போல், அவர் தமது வாயைத் திறவாதிருந்தார்.
33 အနျာယေန ဝိစာရေဏ သ ဥစ္ဆိန္နော 'ဘဝတ် တဒါ၊ တတ္ကာလီနမနုၐျာန် ကော ဇနော ဝရ္ဏယိတုံ က္ၐမး၊ ယတော ဇီဝန္နၖဏာံ ဒေၑာတ် သ ဥစ္ဆိန္နော 'ဘဝတ် ဓြုဝံ၊
அவர் அவமதிக்கப்படுகையில், அவருக்கு நீதி கிடைக்கவில்லை. அவருடைய சந்ததியைக்குறித்து யாரால் என்ன சொல்லமுடியும்? அவருடைய உயிர் பூமியிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டதே” என்றிருந்தது.
34 အနန္တရံ သ ဖိလိပမ် အဝဒတ် နိဝေဒယာမိ, ဘဝိၐျဒွါဒီ ယာမိမာံ ကထာံ ကထယာမာသ သ ကိံ သွသ္မိန် ဝါ ကသ္မိံၑ္စိဒ် အနျသ္မိန်?
அந்த அதிகாரி பிலிப்புவிடம், “இறைவாக்கினர் யாரைக்குறித்து இதைச் சொல்கிறார்? தம்மைக்குறித்தா, அல்லது வேறு ஒருவரைக்குறித்தா?” தயவுசெய்து எனக்குச் சொல்லும் என்றான்.
35 တတး ဖိလိပသ္တတ္ပြကရဏမ် အာရဘျ ယီၑောရုပါချာနံ တသျာဂြေ ပြာသ္တော်တ်၊
அப்பொழுது பிலிப்பு, அதே வேதவசனப் பகுதியைக்குறித்துப் பேசத்தொடங்கி, இயேசுவைப்பற்றிய நற்செய்தியை அவனுக்குச் சொன்னான்.
36 ဣတ္ထံ မာရ္ဂေဏ ဂစ္ဆန္တော် ဇလာၑယသျ သမီပ ဥပသ္ထိတော်; တဒါ က္လီဗော'ဝါဒီတ် ပၑျာတြ သ္ထာနေ ဇလမာသ္တေ မမ မဇ္ဇနေ ကာ ဗာဓာ?
அவர்கள் பிரயாணமாய் போய்க்கொண்டிருக்கையில், தண்ணீர் உள்ள ஒரு இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அந்த அதிகாரி பிலிப்புவிடம், “பார், இங்கே தண்ணீர் இருக்கிறது. நான் ஏன் திருமுழுக்கு பெறக்கூடாது?” என்றான்.
37 တတး ဖိလိပ ဥတ္တရံ ဝျာဟရတ် သွာန္တးကရဏေန သာကံ ယဒိ ပြတျေၐိ တရှိ ဗာဓာ နာသ္တိ၊ တတး သ ကထိတဝါန် ယီၑုခြီၐ္ဋ ဤၑွရသျ ပုတြ ဣတျဟံ ပြတျေမိ၊
அதற்குப் பிலிப்பு, “நீ உனது முழு இருதயத்தோடும் விசுவாசித்தால், நீ திருமுழுக்கு பெற்றுக்கொள்ளலாம்” என்றான். அதற்கு அந்த அதிகாரி, “இயேசுகிறிஸ்து இறைவனுடைய மகன் என்று நான் விசுவாசிக்கிறேன்” என்றான்.
38 တဒါ ရထံ သ္ထဂိတံ ကရ္တ္တုမ် အာဒိၐ္ဋေ ဖိလိပက္လီဗော် ဒွေါ် ဇလမ် အဝါရုဟတာံ; တဒါ ဖိလိပသ္တမ် မဇ္ဇယာမာသ၊
எனவே அவன் தேரை நிறுத்தும்படி உத்தரவு கொடுத்தான். பிலிப்புவும் அந்த அதிகாரியும் தண்ணீரில் இறங்கினார்கள். பிலிப்பு அவனுக்குத் திருமுழுக்கு கொடுத்தான்.
39 တတ္ပၑ္စာတ် ဇလမဓျာဒ် ဥတ္ထိတယေား သတေား ပရမေၑွရသျာတ္မာ ဖိလိပံ ဟၖတွာ နီတဝါန်, တသ္မာတ် က္လီဗး ပုနသ္တံ န ဒၖၐ္ဋဝါန် တထာပိ ဟၖၐ္ဋစိတ္တး သန် သွမာရ္ဂေဏ ဂတဝါန်၊
அவர்கள் தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது, திடீரென கர்த்தரின் ஆவியானவர் பிலிப்புவை அங்கிருந்து கொண்டுபோய்விட்டார். அந்த அதிகாரி அதற்குப் பின்பு பிலிப்புவைக் காணாமல், அவன் மகிழ்ச்சியுடன் தன் வழியே சென்றான்.
40 ဖိလိပၑ္စာသ္ဒောဒ္နဂရမ် ဥပသ္ထာယ တသ္မာတ် ကဲသရိယာနဂရ ဥပသ္ထိတိကာလပရျျနတံ သရွွသ္မိန္နဂရေ သုသံဝါဒံ ပြစာရယန် ဂတဝါန်၊
பிலிப்புவோ ஆசோத்திலே காணப்பட்டான். அவன் அங்கிருந்து பிரயாணம் செய்து, எல்லாப் பட்டணங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கம் பண்ணிக்கொண்டு, செசரியாவைச் சென்றடைந்தான்.

< ပြေရိတား 8 >