< ပြေရိတား 28 >

1 ဣတ္ထံ သရွွေၐု ရက္ၐာံ ပြာပ္တေၐု တတြတျောပဒွီပသျ နာမ မိလီတေတိ တေ ဇ္ဉာတဝန္တး၊
நாங்கள் தப்பிக் கரையைச் சேர்ந்தப்பின்பு, அந்தத் தீவின் பெயர் மெலித்தா என்று அறிந்தோம்.
2 အသဘျလောကာ ယထေၐ္ဋမ် အနုကမ္ပာံ ကၖတွာ ဝရ္တ္တမာနဝၖၐ္ဋေး ၑီတာစ္စ ဝဟ္နိံ ပြဇ္ဇွာလျာသ္မာကမ် အာတိထျမ် အကုရွွန်၊
அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த நேரத்திலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள்.
3 ကိန္တု ပေါ်လ ဣန္ဓနာနိ သံဂၖဟျ ယဒါ တသ္မိန် အဂြော် နိရက္ၐိပတ်, တဒါ ဝဟ္နေး ပြတာပါတ် ဧကး ကၖၐ္ဏသရ္ပော နိရ္ဂတျ တသျ ဟသ္တေ ဒြၐ္ဋဝါန်၊
பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடும்போது, ஒரு விரியன்பாம்பு வெப்பம் தாங்காமல் வெளியே வந்து அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது.
4 တေ'သဘျလောကာသ္တသျ ဟသ္တေ သရ္ပမ် အဝလမ္ဗမာနံ ဒၖၐ္ဋွာ ပရသ္ပရမ် ဥက္တဝန္တ ဧၐ ဇနော'ဝၑျံ နရဟာ ဘဝိၐျတိ, ယတော ယဒျပိ ဇလဓေ ရက္ၐာံ ပြာပ္တဝါန် တထာပိ ပြတိဖလဒါယက ဧနံ ဇီဝိတုံ န ဒဒါတိ၊
விரியன்பாம்பு அவன் கையிலே தொங்குகிறதை அறிமுகமில்லாத அந்தத் தீவின் மக்கள் கண்டபோது, இந்த மனிதன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் கடலிலிருந்து தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்க விடவில்லை என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
5 ကိန္တု သ ဟသ္တံ ဝိဓုနွန် တံ သရ္ပမ် အဂ္နိမဓျေ နိက္ၐိပျ ကာမပိ ပီဍာံ နာပ္တဝါန်၊
அவன் அந்த விரியன் பாம்பை தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான்.
6 တတော ဝိၐဇွာလယာ ဧတသျ ၑရီရံ သ္ဖီတံ ဘဝိၐျတိ ယဒွါ ဟဌာဒယံ ပြာဏာန် တျက္ၐျတီတိ နိၑ္စိတျ လောကာ ဗဟုက္ၐဏာနိ ယာဝတ် တဒ် ဒြၐ္ဋုံ သ္ထိတဝန္တး ကိန္တု တသျ ကသျာၑ္စိဒ် ဝိပဒေါ'ဃဋနာတ် တေ တဒွိပရီတံ ဝိဇ္ဉာယ ဘာၐိတဝန္တ ဧၐ ကၑ္စိဒ် ဒေဝေါ ဘဝေတ်၊
அவனுக்கு வீக்கங்கொண்டு, அல்லது அவன் உடனடியாக விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாகப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, தங்களுடைய எண்ணத்தை மாற்றி, அவர் ஒரு தெய்வம் என்று சொல்லிக்கொண்டார்கள்.
7 ပုဗ္လိယနာမာ ဇန ဧကသ္တသျောပဒွီပသျာဓိပတိရာသီတ် တတြ တသျ ဘူမျာဒိ စ သ္ထိတံ၊ သ ဇနော'သ္မာန် နိဇဂၖဟံ နီတွာ သော်ဇနျံ ပြကာၑျ ဒိနတြယံ ယာဝဒ် အသ္မာကံ အာတိထျမ် အကရောတ်၊
தீவிற்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பெயர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்கு அருகில் இருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்று நாட்கள் அன்போடு உபசரித்தான்.
8 တဒါ တသျ ပုဗ္လိယသျ ပိတာ ဇွရာတိသာရေဏ ပီဍျမာနး သန် ၑယျာယာမ် အာသီတ်; တတး ပေါ်လသ္တသျ သမီပံ ဂတွာ ပြာရ္ထနာံ ကၖတွာ တသျ ဂါတြေ ဟသ္တံ သမရ္ပျ တံ သွသ္ထံ ကၖတဝါန်၊
புபிலியுவினுடைய தகப்பன் காய்ச்சலாலும் இரத்த பேதியினாலும் வியாதிப்பட்டு கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப்போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கரங்களை வைத்து, அவனைக் குணமாக்கினான்.
9 ဣတ္ထံ ဘူတေ တဒွီပနိဝါသိန ဣတရေပိ ရောဂိလောကာ အာဂတျ နိရာမယာ အဘဝန်၊
இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரர்களும் வந்து குணமாக்கப்பட்டார்கள்.
10 တသ္မာတ္တေ'သ္မာကမ် အတီဝ သတ္ကာရံ ကၖတဝန္တး, ဝိၑေၐတး ပြသ္ထာနသမယေ ပြယောဇနီယာနိ နာနဒြဝျာဏိ ဒတ္တဝန္တး၊
௧0அவர்கள் எங்களுக்கு அதிக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள்.
11 ဣတ္ထံ တတြ တြိၐု မာသေၐု ဂတေၐု ယသျ စိဟ္နံ ဒိယသ္ကူရီ တာဒၖၑ ဧကး သိကန္ဒရီယနဂရသျ ပေါတး ၑီတကာလံ ယာပယန် တသ္မိန် ဥပဒွီပေ 'တိၐ္ဌတ် တမေဝ ပေါတံ ဝယမ် အာရုဟျ ယာတြာမ် အကုရ္မ္မ၊
௧௧மூன்று மாதங்கள் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்கு தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலில் நாங்கள் ஏறிப் புறப்பட்டு,
12 တတး ပြထမတး သုရာကူသနဂရမ် ဥပသ္ထာယ တတြ တြီဏိ ဒိနာနိ သ္ထိတဝန္တး၊
௧௨சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம்.
13 တသ္မာဒ် အာဝၖတျ ရီဂိယနဂရမ် ဥပသ္ထိတား ဒိနဲကသ္မာတ် ပရံ ဒက္ၐိဏဝယော် သာနုကူလျေ သတိ ပရသ္မိန် ဒိဝသေ ပတိယလီနဂရမ် ဥပါတိၐ္ဌာမ၊
௧௩அந்த இடத்தைவிட்டுக் கரையோரமாகச் சுற்றி பயணம்செய்து, ரேகியு துறைமுகத்திற்கு வந்துசேர்ந்தோம். மறுநாளில் தென்றல் காற்றடிக்கும்போது புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலி பட்டணத்திற்கு வந்து,
14 တတော'သ္မာသု တတြတျံ ဘြာတၖဂဏံ ပြာပ္တေၐု တေ သွဲး သာရ္ဒ္ဓမ် အသ္မာန် သပ္တ ဒိနာနိ သ္ထာပယိတုမ် အယတန္တ, ဣတ္ထံ ဝယံ ရောမာနဂရမ် ပြတျဂစ္ဆာမ၊
௧௪அங்கே சகோதரர்களைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாட்கள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம்.
15 တသ္မာတ် တတြတျား ဘြာတရော'သ္မာကမ် အာဂမနဝါရ္တ္တာံ ၑြုတွာ အာပ္ပိယဖရံ တြိၐ္ဋာဝရ္ဏီဉ္စ ယာဝဒ် အဂြေသရား သန္တောသ္မာန် သာက္ၐာတ် ကရ္တ္တုမ် အာဂမန်; တေၐာံ ဒရ္ၑနာတ် ပေါ်လ ဤၑွရံ ဓနျံ ဝဒန် အာၑွာသမ် အာပ္တဝါန်၊
௧௫அந்த இடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபரம்வரைக்கும், சிலர் மூன்று தங்கும் விடுதி என்ற இடம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தார்கள்.
16 အသ္မာသု ရောမာနဂရံ ဂတေၐု ၑတသေနာပတိး သရွွာန် ဗန္ဒီန် ပြဓာနသေနာပတေး သမီပေ သမာရ္ပယတ် ကိန္တု ပေါ်လာယ သွရက္ၐကပဒါတိနာ သဟ ပၖထဂ် ဝသ္တုမ် အနုမတိံ ဒတ္တဝါန်၊
௧௬நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூறுபேருக்குத் தலைவன் தன் காவலலிருந்தவர்களைப் போர்த்தலைவனிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற போர்ச்சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான்.
17 ဒိနတြယာတ် ပရံ ပေါ်လသ္တဒ္ဒေၑသ္ထာန် ပြဓာနယိဟူဒိန အာဟူတဝါန် တတသ္တေၐု သမုပသ္ထိတေၐု သ ကထိတဝါန်, ဟေ ဘြာတၖဂဏ နိဇလောကာနာံ ပူရွွပုရုၐာဏာံ ဝါ ရီတေ ရွိပရီတံ ကိဉ္စန ကရ္မ္မာဟံ နာကရဝံ တထာပိ ယိရူၑာလမနိဝါသိနော လောကာ မာံ ဗန္ဒိံ ကၖတွာ ရောမိလောကာနာံ ဟသ္တေၐု သမရ္ပိတဝန္တး၊
௧௭மூன்று நாட்களுக்குப்பின்பு, பவுல் யூதர்களில் முக்கியமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரர்களே, நம்முடைய மக்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் பழக்கங்களுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர்கள் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.
18 ရောမိလောကာ ဝိစာရျျ မမ ပြာဏဟနနာရှံ ကိမပိ ကာရဏံ န ပြာပျ မာံ မောစယိတုမ် အဲစ္ဆန်;
௧௮அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்திற்குரிய குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள்.
19 ကိန္တု ယိဟူဒိလောကာနာမ် အာပတ္တျာ မယာ ကဲသရရာဇသျ သမီပေ ဝိစာရသျ ပြာရ္ထနာ ကရ္တ္တဝျာ ဇာတာ နောစေတ် နိဇဒေၑီယလောကာန် ပြတိ မမ ကောပျဘိယောဂေါ နာသ္တိ၊
௧௯யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனிடத்தில் முறையிடவேண்டியதாயிருந்தது; ஆனாலும் என் மக்கள்மேல் எந்தவொரு குற்றஞ்சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை.
20 ဧတတ္ကာရဏာဒ် အဟံ ယုၐ္မာန် ဒြၐ္ဋုံ သံလပိတုဉ္စာဟူယမ် ဣသြာယေလွၑီယာနာံ ပြတျာၑာဟေတောဟမ် ဧတေန ၑုင်္ခလေန ဗဒ္ဓေါ'ဘဝမ်၊
௨0இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களோடு பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான்.
21 တဒါ တေ တမ် အဝါဒိၐုး, ယိဟူဒီယဒေၑာဒ် ဝယံ တွာမဓိ ကိမပိ ပတြံ န ပြာပ္တာ ယေ ဘြာတရး သမာယာတာသ္တေၐာံ ကောပိ တဝ ကာမပိ ဝါရ္တ္တာံ နာဝဒတ် အဘဒြမပိ နာကထယစ္စ၊
௨௧அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் கடிதம் ஒன்றும் வரவுமில்லை, வந்த சகோதரர்களில் ஒருவனும் உன்பேரில் ஒரு தீங்கானக் காரியத்தையும் அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை.
22 တဝ မတံ ကိမိတိ ဝယံ တွတ္တး ၑြောတုမိစ္ဆာမး၊ ယဒ် ဣဒံ နဝီနံ မတမုတ္ထိတံ တတ် သရွွတြ သရွွေၐာံ နိကဋေ နိန္ဒိတံ ဇာတမ ဣတိ ဝယံ ဇာနီမး၊
௨௨எங்கும் இந்த மதப்பிரிவிற்கு விரோதமாகப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய கருத்து என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள்.
23 တဲသ္တဒရ္ထမ် ဧကသ္မိန် ဒိနေ နိရူပိတေ တသ္မိန် ဒိနေ ဗဟဝ ဧကတြ မိလိတွာ ပေါ်လသျ ဝါသဂၖဟမ် အာဂစ္ဆန် တသ္မာတ် ပေါ်လ အာ ပြာတးကာလာတ် သန္ဓျာကာလံ ယာဝန် မူသာဝျဝသ္ထာဂြန္ထာဒ် ဘဝိၐျဒွါဒိနာံ ဂြန္ထေဘျၑ္စ ယီၑေား ကထာမ် ဥတ္ထာပျ ဤၑွရသျ ရာဇျေ ပြမာဏံ ဒတွာ တေၐာံ ပြဝၖတ္တိံ ဇနယိတုံ စေၐ္ဋိတဝါန်၊
௨௩அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அந்த நாளில் அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலைதுவங்கி மாலைவரை மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவிற்குரியவைகளை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துச் சாட்சிக்கொடுத்து வலியுறுத்திப் பேசினான்.
24 ကေစိတ္တု တသျ ကထာံ ပြတျာယန် ကေစိတ္တု န ပြတျာယန်;
௨௪அவன் சொன்னவைகளைச் சிலர் ஏற்றுக்கொண்டனர், சிலர் விசுவாசிக்காமலிருந்தார்கள்.
25 ဧတတ္ကာရဏာတ် တေၐာံ ပရသ္ပရမ် အနဲကျာတ် သရွွေ စလိတဝန္တး; တထာပိ ပေါ်လ ဧတာံ ကထာမေကာံ ကထိတဝါန် ပဝိတြ အာတ္မာ ယိၑယိယသျ ဘဝိၐျဒွက္တု ရွဒနာဒ် အသ္မာကံ ပိတၖပုရုၐေဘျ ဧတာံ ကထာံ ဘဒြံ ကထယာမာသ, ယထာ,
௨௫இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் கருத்து வேறுபட்டவர்களாக, புறப்பட்டுப்போகும்போது, பவுல் அவர்களுக்குச் சொன்ன வார்த்தையாவது:
26 "ဥပဂတျ ဇနာနေတာန် တွံ ဘာၐသွ ဝစသ္တွိဒံ၊ ကရ္ဏဲး ၑြောၐျထ ယူယံ ဟိ ကိန္တု ယူယံ န ဘောတ္သျထ၊ နေတြဲ ရ္ဒြက္ၐျထ ယူယဉ္စ ဇ္ဉာတုံ ယူယံ န ၑက္ၐျထ၊
௨௬நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பார்க்காதிருப்பீர்கள்.
27 တေ မာနုၐာ ယထာ နေတြဲး ပရိပၑျန္တိ နဲဝ ဟိ၊ ကရ္ဏဲး ရျထာ န ၑၖဏွန္တိ ဗုဓျန္တေ န စ မာနသဲး၊ ဝျာဝရ္တ္တယတ္သု စိတ္တာနိ ကာလေ ကုတြာပိ တေၐု ဝဲ၊ မတ္တသ္တေ မနုဇား သွသ္ထာ ယထာ နဲဝ ဘဝန္တိ စ၊ တထာ တေၐာံ မနုၐျာဏာံ သန္တိ သ္ထူလာ ဟိ ဗုဒ္ဓယး၊ ဗဓိရီဘူတကရ္ဏာၑ္စ ဇာတာၑ္စ မုဒြိတာ ဒၖၑး။
௨௭இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த மக்களின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாகக் கேட்டுத் தங்களுடைய கண்களை மூடிக்கொண்டார்கள்’ என்று இந்த மக்களினிடத்திற்குப்போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்த ஆவியானவர் ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய முற்பிதாக்களுடனே நன்றாகச் சொல்லியிருக்கிறார்.
28 အတ ဤၑွရာဒ် ယတ် ပရိတြာဏံ တသျ ဝါရ္တ္တာ ဘိန္နဒေၑီယာနာံ သမီပံ ပြေၐိတာ တဧဝ တာံ ဂြဟီၐျန္တီတိ ယူယံ ဇာနီတ၊
௨௮ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு யூதரல்லாதவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான்.
29 ဧတာဒၖၑျာံ ကထာယာံ ကထိတာယာံ သတျာံ ယိဟူဒိနး ပရသ္ပရံ ဗဟုဝိစာရံ ကုရွွန္တော ဂတဝန္တး၊
௨௯இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் விவாதம்பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள்.
30 ဣတ္ထံ ပေါ်လး သမ္ပူရ္ဏံ ဝတ္သရဒွယံ ယာဝဒ် ဘာဋကီယေ ဝါသဂၖဟေ ဝသန် ယေ လောကာသ္တသျ သန္နိဓိမ် အာဂစ္ဆန္တိ တာန် သရွွာနေဝ ပရိဂၖဟ္လန်,
௩0பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருடங்கள் முழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த அனைவரையும் ஏற்றுக்கொண்டு,
31 နိရွိဃ္နမ် အတိၑယနိးက္ၐောဘမ် ဤၑွရီယရာဇတွသျ ကထာံ ပြစာရယန် ပြဘော် ယီၑော် ခြီၐ္ဋေ ကထား သမုပါဒိၑတ်၊ ဣတိ။
௩௧மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.

< ပြေရိတား 28 >