< ပြေရိတား 15 >

1 ယိဟူဒါဒေၑာတ် ကိယန္တော ဇနာ အာဂတျ ဘြာတၖဂဏမိတ္ထံ ၑိက္ၐိတဝန္တော မူသာဝျဝသ္ထယာ ယဒိ ယုၐ္မာကံ တွက္ဆေဒေါ န ဘဝတိ တရှိ ယူယံ ပရိတြာဏံ ပြာပ္တုံ န ၑက္ၐျထ၊
சிலர் யூதேயாவிலிருந்து அந்தியோகியாவுக்கு வந்து, அங்கிருந்த சகோதரருக்குப் போதித்துக் கொண்டிருந்தார்கள்: அவர்கள், “மோசே போதித்த முறைப்படி நீங்கள் விருத்தசேதனம் செய்யாவிட்டால், நீங்கள் இரட்சிக்கப்பட முடியாது” என்றார்கள்.
2 ပေါ်လဗရ္ဏဗ္ဗော် တဲး သဟ ဗဟူန် ဝိစာရာန် ဝိဝါဒါံၑ္စ ကၖတဝန္တော်, တတော မဏ္ဍလီယနောကာ ဧတသျား ကထာယာသ္တတ္တွံ ဇ္ဉာတုံ ယိရူၑာလမ္နဂရသ္ထာန် ပြေရိတာန် ပြာစီနာံၑ္စ ပြတိ ပေါ်လဗရ္ဏဗ္ဗာပြဘၖတီန် ကတိပယဇနာန် ပြေၐယိတုံ နိၑ္စယံ ကၖတဝန္တး၊
இதனால் பவுல், பர்னபா ஆகியோருக்கும் அவர்களுக்குமிடையில் கடுமையான தகராறும், வாக்குவாதமும் ஏற்பட்டன. எனவே இந்தக் கேள்வியைக்குறித்து, அப்போஸ்தலரையும் சபைத்தலைவர்களையும் கலந்து பேசும்படி, எருசலேமுக்குப் போவதற்கென பவுலும் பர்னபாவும் நியமிக்கப்பட்டார்கள். இவர்களுடனேகூட, சில விசுவாசிகளும் நியமிக்கப்பட்டார்கள்.
3 တေ မဏ္ဍလျာ ပြေရိတား သန္တး ဖဲဏီကီၑောမိရောန္ဒေၑာဘျာံ ဂတွာ ဘိန္နဒေၑီယာနာံ မနးပရိဝရ္တ္တနသျ ဝါရ္တ္တယာ ဘြာတၖဏာံ ပရမာဟ္လာဒမ် အဇနယန်၊
திருச்சபை அவர்களை வழியனுப்பி வைத்தது. அவர்கள் பெனிக்கே வழியாகவும், சமாரியா வழியாகவும் பயணம் பண்ணுகையில், யூதரல்லாத மக்கள் எவ்விதம் கர்த்தரிடம் மனந்திரும்பி இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள். இந்தச் செய்தி சகோதரர் எல்லோருக்கும் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது.
4 ယိရူၑာလမျုပသ္ထာယ ပြေရိတဂဏေန လောကပြာစီနဂဏေန သမာဇေန စ သမုပဂၖဟီတား သန္တး သွဲရီၑွရော ယာနိ ကရ္မ္မာဏိ ကၖတဝါန် တေၐာံ သရွွဝၖတ္တာန္တာန် တေၐာံ သမက္ၐမ် အကထယန်၊
அவர்கள் எருசலேமுக்கு வந்தபோது, திருச்சபையினாலும், அப்போஸ்தலராலும், சபைத்தலைவர்களாலும் வரவேற்கப்பட்டார்கள். பவுலும் பர்னபாவும் தங்களைக்கொண்டு இறைவன் செய்த எல்லாவற்றையும் அவர்களுக்கு அறிவித்தார்கள்.
5 ကိန္တု ဝိၑွာသိနး ကိယန္တး ဖိရူၑိမတဂြာဟိဏော လောကာ ဥတ္ထာယ ကထာမေတာံ ကထိတဝန္တော ဘိန္နဒေၑီယာနာံ တွက္ဆေဒံ ကရ္တ္တုံ မူသာဝျဝသ္ထာံ ပါလယိတုဉ္စ သမာဒေၐ္ဋဝျမ်၊
அப்பொழுது பரிசேயர் குழுவைச் சேர்ந்த சில விசுவாசிகள் எழுந்து நின்று, “யூதரல்லாத மக்களும் விருத்தசேதனம் பெற்றுக்கொண்டு, மோசேயின் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும்” என்றார்கள்.
6 တတး ပြေရိတာ လောကပြာစီနာၑ္စ တသျ ဝိဝေစနာံ ကရ္တ္တုံ သဘာယာံ သ္ထိတဝန္တး၊
அப்பொழுது அப்போஸ்தலரும் சபைத்தலைவர்களும் இந்தக் காரியத்தைக்குறித்து ஆலோசிப்பதற்கு ஒன்றுகூடினார்கள்.
7 ဗဟုဝိစာရေၐု ဇာတၐု ပိတရ ဥတ္ထာယ ကထိတဝါန်, ဟေ ဘြာတရော ယထာ ဘိန္နဒေၑီယလောကာ မမ မုခါတ် သုသံဝါဒံ ၑြုတွာ ဝိၑွသန္တိ တဒရ္ထံ ဗဟုဒိနာတ် ပူရွွမ် ဤၑွရောသ္မာကံ မဓျေ မာံ ဝၖတွာ နိယုက္တဝါန်၊
அதிக நேரம் கலந்துரையாடிய பின்பு, பேதுரு எழுந்து நின்று, அவர்களிடம் பேசத் தொடங்கினான்: “சகோதரரே, யூதரல்லாத மக்களும் நற்செய்தியைக் கேட்டு விசுவாசிப்பதற்கென, இறைவன் உங்கள் மத்தியிலிருந்து என்னைச் சிறிதுகாலத்துக்கு முன்பு தெரிந்துகொண்டார் என்று நீங்கள் அறிவீர்கள். யூதரல்லாத மக்களும் என் உதடுகளிலிருந்து நற்செய்தியைக் கேட்டு விசுவாசிக்க வேண்டுமென்றே அவர் என்னைத் தெரிந்துகொண்டார்.
8 အန္တရျျာမီၑွရော ယထာသ္မဘျံ တထာ ဘိန္နဒေၑီယေဘျး ပဝိတြမာတ္မာနံ ပြဒါယ ဝိၑွာသေန တေၐာမ် အန္တးကရဏာနိ ပဝိတြာဏိ ကၖတွာ
இருதயத்தை அறிந்திருக்கிற இறைவன், நமக்கு பரிசுத்த ஆவியானவரைக் கொடுத்ததுபோல, யூதரல்லாத மக்களுக்கும் கொடுத்து, அவர்களையும் அவர் ஏற்றுக்கொண்டார் என்பதைக் காண்பித்தார்.
9 တေၐာမ် အသ္မာကဉ္စ မဓျေ ကိမပိ ဝိၑေၐံ န သ္ထာပယိတွာ တာနဓိ သွယံ ပြမာဏံ ဒတ္တဝါန် ဣတိ ယူယံ ဇာနီထ၊
இறைவன் விசுவாசத்தினாலேயே அவர்களுடைய இருதயங்களை சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லாதபடிச் செய்தார்
10 အတဧဝါသ္မာကံ ပူရွွပုရုၐာ ဝယဉ္စ သွယံ ယဒျုဂသျ ဘာရံ သောဎုံ န ၑက္တား သမ္ပြတိ တံ ၑိၐျဂဏသျ သ္ကန္ဓေၐု နျသိတုံ ကုတ ဤၑွရသျ ပရီက္ၐာံ ကရိၐျထ?
இப்படியிருக்க, யூதரல்லாத விசுவாசிகளின் கழுத்தின்மேல் நம்மாலோ, நம் தந்தையராலோ சுமக்க முடியாத நுகத்தை சுமத்துவதினால், ஏன் இறைவனைச் சோதிக்கிறீர்கள்?
11 ပြဘော ရျီၑုခြီၐ္ဋသျာနုဂြဟေဏ တေ ယထာ ဝယမပိ တထာ ပရိတြာဏံ ပြာပ္တုမ် အာၑာံ ကုရ္မ္မး၊
எனவே, கர்த்தராகிய இயேசுவின் கிருபையின் மூலமே, நாம் இரட்சிக்கப்படுகிறோம் என்று விசுவாசிக்கிறோம். அவர்களும் அப்படித்தான் இரட்சிக்கப்படுகிறார்கள்” என்றான்.
12 အနန္တရံ ဗရ္ဏဗ္ဗာပေါ်လာဘျာမ် ဤၑွရော ဘိန္နဒေၑီယာနာံ မဓျေ ယဒျဒ် အာၑ္စရျျမ် အဒ္ဘုတဉ္စ ကရ္မ္မ ကၖတဝါန် တဒွၖတ္တာန္တံ တော် သွမုခါဘျာမ် အဝရ္ဏယတာံ သဘာသ္ထား သရွွေ နီရဝါး သန္တး ၑြုတဝန္တး၊
பின்பு பர்னபாவும் பவுலும் தங்கள் மூலமாக யூதரல்லாத மக்கள் மத்தியில் இறைவன் செய்த அற்புதங்களையும், அதிசயங்களையும் பற்றிச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது கூடியிருந்த அனைவரும் மவுனமாய் இருந்தார்கள்.
13 တယေား ကထာယာံ သမာပ္တာယာံ သတျာံ ယာကူဗ် ကထယိတုမ် အာရဗ္ဓဝါန္
அவர்கள் பேசி முடித்ததும், யாக்கோபு பேசத் தொடங்கினான்: சகோதரரே, நான் சொல்வதைக் கேளுங்கள்.
14 ဟေ ဘြာတရော မမ ကထာယာမ် မနော နိဓတ္တ၊ ဤၑွရး သွနာမာရ္ထံ ဘိန္နဒေၑီယလောကာနာမ် မဓျာဒ် ဧကံ လောကသံဃံ ဂြဟီတုံ မတိံ ကၖတွာ ယေန ပြကာရေဏ ပြထမံ တာန် ပြတိ ကၖပါဝလေကနံ ကၖတဝါန် တံ ၑိမောန် ဝရ္ဏိတဝါန်၊
இறைவன் எப்படி யூதரல்லாத மக்களிலிருந்து தமது பெயருக்கென்று மக்களைத் தெரிந்துகொள்ளும்படி, முதன்முதலில் அவர்களுக்கு தயவு காண்பித்தார் என்பதைக்குறித்து, சீமோன் நமக்கு விவரமாய் சொல்லியிருக்கிறான்.
15 ဘဝိၐျဒွါဒိဘိရုက္တာနိ ယာနိ ဝါကျာနိ တဲး သာရ္ဒ္ဓမ် ဧတသျဲကျံ ဘဝတိ ယထာ လိခိတမာသ္တေ၊
எழுதப்பட்டிருக்கிறதன்படி, இறைவாக்கினரின் வார்த்தைகளும் இவற்றிற்கு ஒத்திருக்கின்றன:
16 သရွွေၐာံ ကရ္မ္မဏာံ ယသ္တု သာဓကး ပရမေၑွရး၊ သ ဧဝေဒံ ဝဒေဒွါကျံ ၑေၐား သကလမာနဝါး၊ ဘိန္နဒေၑီယလောကာၑ္စ ယာဝန္တော မမ နာမတး၊ ဘဝန္တိ ဟိ သုဝိချာတာသ္တေ ယထာ ပရမေၑိတုး၊
“‘இதற்குப் பின்பு நான் திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தைத் திரும்பவும் கட்டுவேன். அதில் பாழடைந்து போனவற்றைக் கட்டுவேன். நான் அதைத் திரும்பவும் புதுப்பிப்பேன்.
17 တတွံ သမျက် သမီဟန္တေ တန္နိမိတ္တမဟံ ကိလ၊ ပရာဝၖတျ သမာဂတျ ဒါယူဒး ပတိတံ ပုနး၊ ဒူၐျမုတ္ထာပယိၐျာမိ တဒီယံ သရွွဝသ္တု စ၊ ပတိတံ ပုနရုထာပျ သဇ္ဇယိၐျာမိ သရွွထာ။
அப்பொழுது மீந்திருக்கும் மக்கள் கர்த்தரைத் தேடுவார்கள், எனது பெயரை வைத்துக்கொண்டிருக்கிற யூதரல்லாத மக்கள் அனைவரும் கர்த்தரைத் தேடுவார்கள் என்று நித்திய காலத்தை அறிந்தவரும்,
18 အာ ပြထမာဒ် ဤၑွရး သွီယာနိ သရွွကရ္မ္မာဏိ ဇာနာတိ၊ (aiōn g165)
இவற்றை எல்லாம் செய்கிறவருமாய் இருக்கிற கர்த்தர் சொல்கிறார்.’ (aiōn g165)
19 အတဧဝ မမ နိဝေဒနမိဒံ ဘိန္နဒေၑီယလောကာနာံ မဓျေ ယေ ဇနာ ဤၑွရံ ပြတိ ပရာဝရ္တ္တန္တ တေၐာမုပရိ အနျံ ကမပိ ဘာရံ န နျသျ
“எனவே யூதரல்லாத மக்கள் இறைவனிடம் திரும்புகிறதற்கு, நாம் அவர்களுக்கு அதிக கஷ்டங்கொடுக்கக்கூடாது. இதுவே எனது தீர்மானம்.
20 ဒေဝတာပြသာဒါၑုစိဘက္ၐျံ ဝျဘိစာရကရ္မ္မ ကဏ္ဌသမ္ပီဍနမာရိတပြာဏိဘက္ၐျံ ရက္တဘက္ၐျဉ္စ ဧတာနိ ပရိတျက္တုံ လိခါမး၊
ஆயினும், அவர்கள் இறைவன் அல்லாதவைகளினால் கறைப்பட்ட உணவைத் தவிர்க்கவேண்டும் என்றும், முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது என்றும், நெரித்துக் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது என்றும், இரத்தத்தை சாப்பிடக்கூடாது என்றும் நாம் எழுதி அறிவிக்கவேண்டும்.
21 ယတး ပူရွွကာလတော မူသာဝျဝသ္ထာပြစာရိဏော လောကာ နဂရေ နဂရေ သန္တိ ပြတိဝိၑြာမဝါရဉ္စ ဘဇနဘဝနေ တသျား ပါဌော ဘဝတိ၊
ஏனெனில் ஒவ்வொரு பட்டணத்திலும் முந்தைய காலங்களில் இருந்து மோசேயின் இந்த சட்டங்கள் பிரசங்கிக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஒவ்வொரு ஓய்வுநாளிலும் ஜெப ஆலயங்களில் அவை வாசிக்கப்படுகிறதே” என்றான்.
22 တတး ပရံ ပြေရိတဂဏော လောကပြာစီနဂဏး သရွွာ မဏ္ဍလီ စ သွေၐာံ မဓျေ ဗရ္ၑဗ္ဗာ နာမ္နာ ဝိချာတော မနောနီတော် ကၖတွာ ပေါ်လဗရ္ဏဗ္ဗာဘျာံ သာရ္ဒ္ဓမ် အာန္တိယခိယာနဂရံ ပြတိ ပြေၐဏမ် ဥစိတံ ဗုဒ္ဓွာ တာဘျာံ ပတြံ ပြဲၐယန်၊
பின்பு அப்போஸ்தலரும், சபைத்தலைவர்களும், திருச்சபையார் அனைவரும் தங்களில் சிலரைத் தெரிந்து, அவர்களை பவுலுடனும் பர்னபாவுடனும் அந்தியோகியாவுக்கு அனுப்பத் தீர்மானித்தார்கள். அவர்கள் இதற்கு பர்சபா எனப்பட்ட யூதாவையும் சீலாவையும் தெரிந்துகொண்டார்கள். இந்த இருவரும் சகோதரர் மத்தியில் தலைவர்களாய் இருந்தார்கள்.
23 တသ္မိန် ပတြေ လိခိတမိံဒ, အာန္တိယခိယာ-သုရိယာ-ကိလိကိယာဒေၑသ္ထဘိန္နဒေၑီယဘြာတၖဂဏာယ ပြေရိတဂဏသျ လောကပြာစီနဂဏသျ ဘြာတၖဂဏသျ စ နမသ္ကာရး၊
அவர்களுடன் இவ்வாறு ஒரு கடிதத்தையும் எழுதி அனுப்பினார்கள்: உங்கள் சகோதரர்களான அப்போஸ்தலரும், சபைத்தலைவர்களும், அந்தியோகியா, சீரியா, சிலிசியா ஆகிய இடங்களில் இருக்கிற யூதரல்லாத விசுவாசிகளான உங்களுக்கு எழுதுகிறதாவது: உங்களுக்கு வாழ்த்துகள்.
24 ဝိၑေၐတော'သ္မာကမ် အာဇ္ဉာမ် အပြာပျာပိ ကိယန္တော ဇနာ အသ္မာကံ မဓျာဒ် ဂတွာ တွက္ဆေဒေါ မူသာဝျဝသ္ထာ စ ပါလယိတဝျာဝိတိ ယုၐ္မာန် ၑိက္ၐယိတွာ ယုၐ္မာကံ မနသာမသ္ထဲရျျံ ကၖတွာ ယုၐ္မာန် သသန္ဒေဟာန် အကုရွွန် ဧတာံ ကထာံ ဝယမ် အၑၖန္မ၊
எங்கள் அதிகாரம் பெறாத சிலர், எங்களிடமிருந்து புறப்பட்டு வந்தார்கள் என்றும், அவர்கள் தாங்கள் சொன்ன காரியங்களினாலே, உங்களுக்கு மனக்குழப்பத்தை உண்டாக்கி, உங்களைக் குழப்பமடையச் செய்திருக்கிறார்கள் என்றும், நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.
25 တတ္ကာရဏာဒ် ဝယမ် ဧကမန္တြဏား သန္တး သဘာယာံ သ္ထိတွာ ပြဘော ရျီၑုခြီၐ္ဋသျ နာမနိမိတ္တံ မၖတျုမုခဂတာဘျာမသ္မာကံ
எனவே, நாங்கள் அனைவரும் எங்களில் சிலரைத் தெரிந்தெடுத்து, எங்கள் அன்புக்குரியவர்களான பர்னபாவுடனும் பவுலுடனும் அனுப்புவதற்கு உடன்பட்டிருக்கிறோம்.
26 ပြိယဗရ္ဏဗ္ဗာပေါ်လာဘျာံ သာရ္ဒ္ဓံ မနောနီတလောကာနာံ ကေၐာဉ္စိဒ် ယုၐ္မာကံ သန္နိဓော် ပြေၐဏမ် ဥစိတံ ဗုဒ္ဓဝန္တး၊
இவர்கள், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயருக்காக உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள்.
27 အတော ယိဟူဒါသီလော် ယုၐ္မာန် ပြတိ ပြေၐိတဝန္တး, ဧတယော ရ္မုခါဘျာံ သရွွာံ ကထာံ ဇ္ဉာသျထ၊
எனவே, நாங்கள் எழுதுவதை வாயின் வார்த்தையினால் உறுதிப்படுத்தும்படி, யூதாவையும் சீலாவையும் அனுப்புகிறோம்.
28 ဒေဝတာပြသာဒဘက္ၐျံ ရက္တဘက္ၐျံ ဂလပီဍနမာရိတပြာဏိဘက္ၐျံ ဝျဘိစာရကရ္မ္မ စေမာနိ သရွွာဏိ ယုၐ္မာဘိသ္တျာဇျာနိ; ဧတတ္ပြယောဇနီယာဇ္ဉာဝျတိရေကေန ယုၐ္မာကမ် ဥပရိ ဘာရမနျံ န နျသိတုံ ပဝိတြသျာတ္မနော'သ္မာကဉ္စ ဥစိတဇ္ဉာနမ် အဘဝတ်၊
கீழ்க்காணும் முக்கியமானவற்றைத் தவிர, வேறு எந்தப் பாரத்தையும் உங்கள்மேல் சுமத்தாமல் இருப்பது நலமென்று, பரிசுத்த ஆவியானவருக்கும் எங்களுக்கும் தோன்றியது:
29 အတဧဝ တေဘျး သရွွေဘျး သွေၐု ရက္ၐိတေၐု ယူယံ ဘဒြံ ကရ္မ္မ ကရိၐျထ၊ ယုၐ္မာကံ မင်္ဂလံ ဘူယာတ်၊
நீங்கள் இறைவன் அல்லாதவைகளுக்குப் பலியிடப்பட்ட உணவைத் தவிர்க்கவேண்டும், இரத்தத்தையும், நெரித்துக் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியையும் விலக்கிக்கொள்ள வேண்டும், முறைகேடான பாலுறவுகளில் ஈடுபடக்கூடாது. இவ்வாறான காரியங்களைத் தவிர்த்துக்கொள்ள எல்லா முயற்சிகளையும் செய்வது நல்லது. உங்களுக்கு நலமுண்டாவதாக.
30 တေ ဝိသၖၐ္ဋား သန္တ အာန္တိယခိယာနဂရ ဥပသ္ထာယ လောကနိဝဟံ သံဂၖဟျ ပတြမ် အဒဒန်၊
எனவே அவர்கள் வழியனுப்பப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்தனர். அங்கே அவர்கள் திருச்சபையை ஒன்றுகூட்டி, அந்தக் கடிதத்தைக் கொடுத்தார்கள்.
31 တတသ္တေ တတ္ပတြံ ပဌိတွာ သာန္တွနာံ ပြာပျ သာနန္ဒာ အဘဝန်၊
மக்கள் அதை வாசித்து, அந்த ஊக்கப்படுத்தும் வார்த்தைகளைக்குறித்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.
32 ယိဟူဒါသီလော် စ သွယံ ပြစာရကော် ဘူတွာ ဘြာတၖဂဏံ နာနောပဒိၑျ တာန် သုသ္ထိရာန် အကုရုတာမ်၊
யூதாவும் சீலாவும் இறைவாக்கினராய் இருந்தார்கள். எனவே அவர்கள் அந்த விசுவாசிகளை ஊக்குவிப்பதற்கும், உறுதிப்படுத்துவதற்கும் பல காரியங்களைச் சொன்னார்கள்.
33 ဣတ္ထံ တော် တတြ တဲး သာကံ ကတိပယဒိနာနိ ယာပယိတွာ ပၑ္စာတ် ပြေရိတာနာံ သမီပေ ပြတျာဂမနာရ္ထံ တေၐာံ သန္နိဓေး ကလျာဏေန ဝိသၖၐ္ဋာဝဘဝတာံ၊
சிறிதுகாலம் அங்கு தங்கியபின், அவர்கள் தங்களை அனுப்பியவர்களிடம் திரும்பிப்போகும்படி, அங்கிருந்த விசுவாசிகள் அவர்களைச் சமாதானத்தின் ஆசீர்வாதத்துடன் அனுப்பிவைத்தார்கள்.
34 ကိန္တု သီလသ္တတြ သ္ထာတုံ ဝါဉ္ဆိတဝါန်၊
ஆனால் சீலாவோ, அங்கேயே தங்கியிருக்கத் தீர்மானித்தான்.
35 အပရံ ပေါ်လဗရ္ဏဗ္ဗော် ဗဟဝး ၑိၐျာၑ္စ လောကာန် ဥပဒိၑျ ပြဘေား သုသံဝါဒံ ပြစာရယန္တ အာန္တိယခိယာယာံ ကာလံ ယာပိတဝန္တး၊
பவுலும் பர்னபாவும்கூட, அந்தியோகியாவிலே சிறிதுகாலம் தங்கியிருந்தார்கள். அங்கே அவர்கள் வேறு பலருடன் சேர்ந்து கர்த்தரின் வார்த்தையை போதித்துக்கொண்டும் பிரசங்கித்துக்கொண்டும் இருந்தார்கள்.
36 ကတိပယဒိနေၐု ဂတေၐု ပေါ်လော ဗရ္ဏဗ္ဗာမ် အဝဒတ် အာဂစ္ဆာဝါံ ယေၐု နဂရေၐွီၑွရသျ သုသံဝါဒံ ပြစာရိတဝန္တော် တာနိ သရွွနဂရာဏိ ပုနရ္ဂတွာ ဘြာတရး ကီဒၖၑား သန္တီတိ ဒြၐ္ဋုံ တာန် သာက္ၐာတ် ကုရွွး၊
சில நாட்களுக்குப்பின்பு பவுல் பர்னபாவிடம், “நாம் கர்த்தரின் வார்த்தையைப் பிரசங்கித்த எல்லாப் பட்டணங்களிலும் உள்ள விசுவாசிகளிடம் திரும்பிப்போய், அவர்கள் எப்படியிருக்கிறார்கள் என்று பார்ப்போம்” என்றான்.
37 တေန မာရ္ကနာမ္နာ ဝိချာတံ ယောဟနံ သင်္ဂိနံ ကရ္တ္တုံ ဗရ္ဏဗ္ဗာ မတိမကရောတ်,
பர்னபாவும் அதற்கு விருப்பப்பட்டு, மாற்கு என்று அழைக்கப்பட்ட யோவானைத் தங்களுடன் கூட்டிக்கொண்டுபோக விரும்பினான்.
38 ကိန္တု သ ပူရွွံ တာဘျာံ သဟ ကာရျျာရ္ထံ န ဂတွာ ပါမ္ဖူလိယာဒေၑေ တော် တျက္တဝါန် တတ္ကာရဏာတ် ပေါ်လသ္တံ သင်္ဂိနံ ကရ္တ္တုမ် အနုစိတံ ဇ္ဉာတဝါန်၊
ஆனால் மாற்கு பம்பிலியாவிலே தங்களைவிட்டுப் பிரிந்து, தங்களுடன் ஊழியத்தில் வராமல் போனதால், அவனைக் கூட்டிக்கொண்டு போவது நல்லதல்ல என்று பவுல் நினைத்தான்.
39 ဣတ္ထံ တယောရတိၑယဝိရောဓသျောပသ္ထိတတွာတ် တော် ပရသ္ပရံ ပၖထဂဘဝတာံ တတော ဗရ္ဏဗ္ဗာ မာရ္ကံ ဂၖဟီတွာ ပေါတေန ကုပြောပဒွီပံ ဂတဝါန်;
இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுமையான விவாதம் ஏற்பட்டதனால், அவர்கள் பிரிந்து சென்றார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் மூலமாக சீப்புரு தீவுக்குப் போனான்.
40 ကိန္တု ပေါ်လး သီလံ မနောနီတံ ကၖတွာ ဘြာတၖဘိရီၑွရာနုဂြဟေ သမရ္ပိတး သန် ပြသ္ထာယ
பவுலோ சீலாவைத் தெரிந்தெடுத்து விசுவாசிகளால் கர்த்தருடைய கிருபைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு அவனுடன் போனான்.
41 သုရိယာကိလိကိယာဒေၑာဘျာံ မဏ္ဍလီး သ္ထိရီကုရွွန် အဂစ္ဆတ်၊
பவுல் சீரியா, சிலிசியா வழியாகப்போய் திருச்சபைகளைப் பெலப்படுத்தினான்.

< ပြေရိတား 15 >