< ၂ ကရိန္ထိနး 12 >

1 အာတ္မၑ္လာဃာ မမာနုပယုက္တာ ကိန္တွဟံ ပြဘော ရ္ဒရ္ၑနာဒေၑာနာမ် အာချာနံ ကထယိတုံ ပြဝရ္တ္တေ၊
மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியானது இல்லையே; ஆனாலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
2 ဣတၑ္စတုရ္ဒၑဝတ္သရေဘျး ပူရွွံ မယာ ပရိစိတ ဧကော ဇနသ္တၖတီယံ သွရ္ဂမနီယတ, သ သၑရီရေဏ နိးၑရီရေဏ ဝါ တတ် သ္ထာနမနီယတ တဒဟံ န ဇာနာမိ ကိန္တွီၑွရော ဇာနာတိ၊
கிறிஸ்துவிற்குள்ளான ஒரு மனிதனை அறிவேன்; அவன் பதினான்கு வருடத்திற்கு முன்பே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார்.
3 သ မာနဝး သွရ္ဂံ နီတး သန် အကထျာနိ မရ္တ္တျဝါဂတီတာနိ စ ဝါကျာနိ ၑြုတဝါန်၊
அந்த மனிதன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனிதன் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமான வார்த்தைகளைக் கேட்டான் என்று அறிந்திருக்கிறேன்.
4 ကိန္တု တဒါနီံ သ သၑရီရော နိးၑရီရော ဝါသီတ် တန္မယာ န ဇ္ဉာယတေ တဒ် ဤၑွရေဏဲဝ ဇ္ဉာယတေ၊
அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார்.
5 တမဓျဟံ ၑ္လာဃိၐျေ မာမဓိ နာနျေန ကေနစိဒ် ဝိၐယေဏ ၑ္လာဃိၐျေ ကေဝလံ သွဒေါ်ရ္ဗ္ဗလျေန ၑ္လာဃိၐျေ၊
இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களைத்தவிர, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.
6 ယဒျဟမ် အာတ္မၑ္လာဃာံ ကရ္တ္တုမ် ဣစ္ဆေယံ တထာပိ နိရ္ဗ္ဗောဓ ဣဝ န ဘဝိၐျာမိ ယတး သတျမေဝ ကထယိၐျာမိ, ကိန္တု လောကာ မာံ ယာဒၖၑံ ပၑျန္တိ မမ ဝါကျံ ၑြုတွာ ဝါ ယာဒၖၑံ မာံ မနျတေ တသ္မာတ် ၑြေၐ္ဌံ မာံ ယန္န ဂဏယန္တိ တဒရ္ထမဟံ တတော ဝိရံသျာမိ၊
சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட விரும்பினாலும், நான் புத்தியீனன் இல்லை, ஆனாலும் ஒருவனும் என்னிடம் பார்த்ததற்கும், கேட்டதற்கும் மேலாக என்னை நினைக்காமலிருக்க நான் அப்படிச் செய்யாதிருப்பேன்.
7 အပရမ် ဥတ္ကၖၐ္ဋဒရ္ၑနပြာပ္တိတော ယဒဟမ် အာတ္မာဘိမာနီ န ဘဝါမိ တဒရ္ထံ ၑရီရဝေဓကမ် ဧကံ ၑူလံ မဟျမ် အဒါယိ တတ် မဒီယာတ္မာဘိမာနနိဝါရဏာရ္ထံ မမ တာဍယိတာ ၑယတာနော ဒူတး၊
அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினால் நான் என்னை உயர்த்தாமல் இருக்க, என் சரீரத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; நான் என்னை உயர்த்தாமல் இருக்க, அது என்னைக் குத்தும் சாத்தானுடைய தூதனாக இருக்கிறது.
8 မတ္တသ္တသျ ပြသ္ထာနံ ယာစိတုမဟံ တြိသ္တမဓိ ပြဘုမုဒ္ဒိၑျ ပြာရ္ထနာံ ကၖတဝါန်၊
அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன்.
9 တတး သ မာမုက္တဝါန် မမာနုဂြဟသ္တဝ သရွွသာဓကး, ယတော ဒေါ်ရ္ဗ္ဗလျာတ် မမ ၑက္တိး ပူရ္ဏတာံ ဂစ္ဆတီတိ၊ အတး ခြီၐ္ဋသျ ၑက္တိ ရျန္မာမ် အာၑြယတိ တဒရ္ထံ သွဒေါ်ရ္ဗ္ဗလျေန မမ ၑ္လာဃနံ သုခဒံ၊
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாக இருக்கும் என்றார். எனவே, கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாக மேன்மைபாராட்டுவேன்.
10 တသ္မာတ် ခြီၐ္ဋဟေတော ရ္ဒော်ရ္ဗ္ဗလျနိန္ဒာဒရိဒြတာဝိပက္ၐတာကၐ္ဋာဒိၐု သန္တုၐျာမျဟံ၊ ယဒါဟံ ဒုရ္ဗ္ဗလော'သ္မိ တဒဲဝ သဗလော ဘဝါမိ၊
௧0அப்படியே நான் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவனாக இருக்கிறேன்; எனவே கிறிஸ்துவுக்காக எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.
11 ဧတေနာတ္မၑ္လာဃနေနာဟံ နိရ္ဗ္ဗောဓ ဣဝါဘဝံ ကိန္တု ယူယံ တသျ ကာရဏံ ယတော မမ ပြၑံသာ ယုၐ္မာဘိရေဝ ကရ္တ္တဝျာသီတ်၊ ယဒျပျမ် အဂဏျော ဘဝေယံ တထာပိ မုချတမေဘျး ပြေရိတေဘျး ကေနာပိ ပြကာရေဏ နာဟံ နျူနော'သ္မိ၊
௧௧மேன்மைபாராட்டி, புத்தியீனன் ஆனேன்; நீங்களே இதற்கு என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லை என்றாலும், பிரதான அப்போஸ்தலர்களுக்கும் நான் சிறிதளவும் குறைந்தவனாக இல்லாதபடியால், உங்களாலே பாராட்டப்பட வேண்டியதாக இருந்ததே.
12 သရွွထာဒ္ဘုတကြိယာၑက္တိလက္ၐဏဲး ပြေရိတသျ စိဟ္နာနိ ယုၐ္မာကံ မဓျေ သဓဲရျျံ မယာ ပြကာၑိတာနိ၊
௧௨அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடத்தப்பட்டதே.
13 မမ ပါလနာရ္ထံ ယူယံ မယာ ဘာရာကြာန္တာ နာဘဝတဲတဒ် ဧကံ နျူနတွံ ဝိနာပရာဘျး သမိတိဘျော ယုၐ္မာကံ ကိံ နျူနတွံ ဇာတံ? အနေန မမ ဒေါၐံ က္ၐမဓွံ၊
௧௩எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாக இருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்திற்காக என்னை மன்னியுங்கள்.
14 ပၑျတ တၖတီယဝါရံ ယုၐ္မတ္သမီပံ ဂန္တုမုဒျတော'သ္မိ တတြာပျဟံ ယုၐ္မာန် ဘာရာကြာန္တာန် န ကရိၐျာမိ၊ ယုၐ္မာကံ သမ္ပတ္တိမဟံ န မၖဂယေ ကိန္တု ယုၐ္မာနေဝ, ယတး ပိတြေား ကၖတေ သန္တာနာနာံ ဓနသဉ္စယော'နုပယုက္တး ကိန္တု သန္တာနာနာံ ကၖတေ ပိတြော ရ္ဓနသဉ္စယ ဥပယုက္တး၊
௧௪இதோ, உங்களிடம் மூன்றாவது முறையும் வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவது இல்லை; நான் உங்களுடையவைகளை அல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றோருக்குக் குழந்தைகள் இல்லை, குழந்தைகளுக்குப் பெற்றோர்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.
15 အပရဉ္စ ယုၐ္မာသု ဗဟု ပြီယမာဏော'ပျဟံ ယဒိ ယုၐ္မတ္တော'လ္ပံ ပြမ လဘေ တထာပိ ယုၐ္မာကံ ပြာဏရက္ၐာရ္ထံ သာနန္ဒံ ဗဟု ဝျယံ သရွွဝျယဉ္စ ကရိၐျာမိ၊
௧௫எனவே, நான் உங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேனோ அவ்வளவு குறைவாக உங்களால் நான் நேசிக்கப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாக நான் உங்களுடைய ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.
16 ယူယံ မယာ ကိဉ္စိဒပိ န ဘာရာကြာန္တာ ဣတိ သတျံ, ကိန္တွဟံ ဓူရ္တ္တး သန် ဆလေန ယုၐ္မာန် ဝဉ္စိတဝါန် ဧတတ် ကိံ ကေနစိဒ် ဝက္တဝျံ?
௧௬அப்படியே ஆகட்டும், நான் உங்களுக்குச் சுமையாக இருக்கவில்லை; ஆனாலும், உதவி செய்கிறவனாக இருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம்.
17 ယုၐ္မတ္သမီပံ မယာ ယေ လောကား ပြဟိတာသ္တေၐာမေကေန ကိံ မမ ကော'ပျရ္ထလာဘော ဇာတး?
௧௭நான் உங்களிடம் அனுப்பினவர்களில் எவன் மூலமாவது உங்களிடம் நன்மையைத் தேடினது உண்டா?
18 အဟံ တီတံ ဝိနီယ တေန သာရ္ဒ္ဓံ ဘြာတရမေကံ ပြေၐိတဝါန် ယုၐ္မတ္တသ္တီတေန ကိမ် အရ္ထော လဗ္ဓး? ဧကသ္မိန် ဘာဝ ဧကသျ ပဒစိဟ္နေၐု စာဝါံ ကိံ န စရိတဝန္တော်?
௧௮தீத்து உங்களிடம் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனோடுகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடம் ஏதாவது நன்மையைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியை உடையவர்களாக, ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோம் அல்லவா?
19 ယုၐ္မာကံ သမီပေ ဝယံ ပုန ရ္ဒောၐက္ၐာလနကထာံ ကထယာမ ဣတိ ကိံ ဗုဓျဓွေ? ဟေ ပြိယတမား, ယုၐ္မာကံ နိၐ္ဌာရ္ထံ ဝယမီၑွရသျ သမက္ၐံ ခြီၐ္ဋေန သရွွာဏျေတာနိ ကထယာမး၊
௧௯நாங்கள் யோக்கியமானவர்கள் என்று தெரியும்படி உங்களிடம் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களோ? தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவிற்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, எல்லாவற்றையும் உங்களுடைய பக்திவளர்ச்சிக்காகச் செய்கிறோம்.
20 အဟံ ယဒါဂမိၐျာမိ, တဒါ ယုၐ္မာန် ယာဒၖၑာန် ဒြၐ္ဋုံ နေစ္ဆာမိ တာဒၖၑာန် ဒြက္ၐျာမိ, ယူယမပိ မာံ ယာဒၖၑံ ဒြၐ္ဋုံ နေစ္ဆထ တာဒၖၑံ ဒြက္ၐျထ, ယုၐ္မန္မဓျေ ဝိဝါဒ ဤရ္ၐျာ ကြောဓော ဝိပက္ၐတာ ပရာပဝါဒး ကရ္ဏေဇပနံ ဒရ္ပး ကလဟၑ္စဲတေ ဘဝိၐျန္တိ;
௨0ஆனாலும் நான் வந்து, உங்களை என் மனவிருப்பத்தின்படி இருக்கிறவர்களாகப் பார்க்காமலும், நானும் உங்களுடைய மனவிருப்பத்தின்படி இருக்கிறவனாகப் பார்க்கப்படாமல் இருப்பேனோ என்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோள் சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோ என்றும்;
21 တေနာဟံ ယုၐ္မတ္သမီပံ ပုနရာဂတျ မဒီယေၑွရေဏ နမယိၐျေ, ပူရွွံ ကၖတပါပါန် လောကာန် သွီယာၑုစိတာဝေၑျာဂမနလမ္ပဋတာစရဏာဒ် အနုတာပမ် အကၖတဝန္တော ဒၖၐ္ဋွာ စ တာနဓိ မမ ၑောကော ဇနိၐျတ ဣတိ ဗိဘေမိ၊
௨௧மீண்டும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடம் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன்பு பாவம் செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் செய்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும்விட்டு மனம்திரும்பாமல் இருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படவேண்டியதாக இருக்குமோ என்றும் பயந்திருக்கிறேன்.

< ၂ ကရိန္ထိနး 12 >