< ၁ ပိတရး 1 >

1 ပန္တ-ဂါလာတိယာ-ကပ္ပဒကိယာ-အာၑိယာ-ဗိထုနိယာဒေၑေၐု ပြဝါသိနော ယေ ဝိကီရ္ဏလောကား
இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனான பேதுரு, இறைவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களான பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய நாடுகளில் சிதறுண்டு, இந்த உலகத்தில் அந்நியராய் இருக்கிற உங்களுக்கு எழுதுகிறதாவது:
2 ပိတုရီၑွရသျ ပူရွွနိရ္ဏယာဒ် အာတ္မနး ပါဝနေန ယီၑုခြီၐ္ဋသျာဇ္ဉာဂြဟဏာယ ၑောဏိတပြောက္ၐဏာယ စာဘိရုစိတာသ္တာန် ပြတိ ယီၑုခြီၐ္ဋသျ ပြေရိတး ပိတရး ပတြံ လိခတိ၊ ယုၐ္မာန် ပြတိ ဗာဟုလျေန ၑာန္တိရနုဂြဟၑ္စ ဘူယာသ္တာံ၊
நீங்கள் பிதாவாகிய இறைவனுடைய முன்னறிவின்படியே தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள் கீழ்ப்படிந்திருக்கவும், அவருடைய இரத்தத்தினால் தெளிக்கப்படவும், ஆவியானவரின் பரிசுத்தமாகுதலினால் தெரிந்தெடுக்கப்பட்டு இருக்கிறீர்கள். கிருபையும் சமாதானமும் உங்களுடன் நிறைவாய் இருப்பதாக.
3 အသ္မာကံ ပြဘော ရျီၑုခြီၐ္ဋသျ တာတ ဤၑွရော ဓနျး, ယတး သ သွကီယဗဟုကၖပါတော မၖတဂဏမဓျာဒ် ယီၑုခြီၐ္ဋသျောတ္ထာနေန ဇီဝနပြတျာၑာရ္ထမ် အရ္ထတော
நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவும் இறைவனுமாய் இருக்கிறவருக்கு, துதி உண்டாவதாக! அவர் தமது பெரிதான இரக்கத்தினாலே, இறந்தோரிலிருந்து இயேசுகிறிஸ்துவை உயிர்த்தெழச்செய்ததின் மூலமாக, நமக்கு ஒரு புதுபிறப்பைக் கொடுத்திருக்கிறார். இதனால் நமக்கு ஒரு உயிருள்ள நம்பிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது.
4 'က္ၐယနိၐ္ကလင်္ကာမ္လာနသမ္ပတ္တိပြာပ္တျရ္ထမ် အသ္မာန် ပုန ရ္ဇနယာမာသ၊ သာ သမ္ပတ္တိး သွရ္ဂေ 'သ္မာကံ ကၖတေ သဉ္စိတာ တိၐ္ဌတိ,
அந்த நம்பிக்கையுடன், நமக்கென உரிமைச்சொத்தும் பரலோகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது ஒருபோதும் அழிவதுமில்லை, பழுதடைவதுமில்லை, வாடிப்போவதுமில்லை;
5 ယူယဉ္စေၑွရသျ ၑက္တိတး ၑေၐကာလေ ပြကာၑျပရိတြာဏာရ္ထံ ဝိၑွာသေန ရက္ၐျဓွေ၊
நீங்களோ, அந்த இரட்சிப்பு வரும்வரைக்கும், விசுவாசத்தின் மூலமாக இறைவனுடைய வல்லமையினாலே பாதுகாக்கப்படுகிறீர்கள். அந்த இரட்சிப்பு கடைசி காலத்தில் வெளிப்படுவதற்கென ஆயத்தமாக்கப்பட்டிருக்கிறது.
6 တသ္မာဒ် ယူယံ ယဒျပျာနန္ဒေန ပြဖုလ္လာ ဘဝထ တထာပိ သာမ္ပြတံ ပြယောဇနဟေတေား ကိယတ္ကာလပရျျန္တံ နာနာဝိဓပရီက္ၐာဘိး က္လိၑျဓွေ၊
இந்த இரட்சிப்பைக்குறித்து நீங்கள் பெருமகிழ்ச்சியடைகிறீர்கள். ஆனால் இப்பொழுது, சிறிது காலத்திற்கு பலவித சோதனைகளின் நிமித்தம், நீங்கள் துன்பம் அனுபவிக்க வேண்டியிருக்கும்.
7 ယတော ဝဟ္နိနာ ယသျ ပရီက္ၐာ ဘဝတိ တသ္မာတ် နၑွရသုဝရ္ဏာဒပိ ဗဟုမူလျံ ယုၐ္မာကံ ဝိၑွာသရူပံ ယတ် ပရီက္ၐိတံ သွရ္ဏံ တေန ယီၑုခြီၐ္ဋသျာဂမနသမယေ ပြၑံသာယား သမာဒရသျ ဂေါ်ရဝသျ စ ယောဂျတာ ပြာပ္တဝျာ၊
தங்கம் நெருப்பினால் புடமிடப்பட்டாலும், அது அழிந்தேபோகிறது. ஆனால் தங்கத்திலும் அதிக மதிப்புவாய்ந்த உங்கள் விசுவாசமோ, உண்மையானது என நிரூபிக்கப்படும்படியே, இத்துன்பங்கள் உங்களுக்கு நேரிட்டன. இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, அந்த விசுவாசத்தின் காரணமாக, இறைவனுக்குத் துதியும், மகிமையும், கனமும் உண்டாகும்.
8 ယူယံ တံ ခြီၐ္ဋမ် အဒၖၐ္ဋွာပိ တသ္မိန် ပြီယဓွေ သာမ္ပြတံ တံ န ပၑျန္တော'ပိ တသ္မိန် ဝိၑွသန္တော 'နိရွွစနီယေန ပြဘာဝယုက္တေန စာနန္ဒေန ပြဖုလ္လာ ဘဝထ,
நீங்கள் கிறிஸ்துவைக் கண்டதில்லை, ஆனாலும் அவரில் அன்பாயிருக்கிறீர்கள். நீங்கள் அவரைக் காணாதிருந்தும், இப்பொழுது அவரில் விசுவாசமாயிருக்கிறீர்கள். சொல்ல முடியாத மகிமையான சந்தோஷத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
9 သွဝိၑွာသသျ ပရိဏာမရူပမ် အာတ္မနာံ ပရိတြာဏံ လဘဓွေ စ၊
இவ்வாறு நீங்கள் உங்களுடைய ஆத்துமாவின் இரட்சிப்பாகிய விசுவாசத்தின் இலக்கைப் பெறுகிறீர்கள்.
10 ယုၐ္မာသု ယော 'နုဂြဟော ဝရ္တ္တတေ တဒွိၐယေ ယ ဤၑွရီယဝါကျံ ကထိတဝန္တသ္တေ ဘဝိၐျဒွါဒိနသ္တသျ ပရိတြာဏသျာနွေၐဏမ် အနုသန္ဓာနဉ္စ ကၖတဝန္တး၊
உங்களுக்கு வரவிருந்த கிருபையைப்பற்றிச் சொன்ன இறைவாக்கினர், இந்த இரட்சிப்பைக் குறித்தே மிக உன்னிப்பாய் ஆராய்ந்து பார்த்தார்கள்.
11 ဝိၑေၐတသ္တေၐာမန္တရွွာသီ ယး ခြီၐ္ဋသျာတ္မာ ခြီၐ္ဋေ ဝရ္တ္တိၐျမာဏာနိ ဒုးခါနိ တဒနုဂါမိပြဘာဝဉ္စ ပူရွွံ ပြာကာၑယတ် တေန ကး ကီဒၖၑော ဝါ သမယော နိရဒိၑျတဲတသျာနုသန္ဓာနံ ကၖတဝန္တး၊
தங்களில் உள்ள கிறிஸ்துவின் ஆவியானவர், கிறிஸ்துவின் பாடுகளையும், அதைத் தொடர்ந்து வரப்போகிற மகிமையையும் முன்னறிவித்தபோது, அவர் எந்தக் காலத்தை, எந்த சூழ்நிலைகளை குறிப்பிட்டுக் காண்பிக்கிறார் என்பதை அவர்கள் கண்டறிய முயன்றார்கள்.
12 တတသ္တဲ ရွိၐယဲသ္တေ ယန္န သွာန် ကိန္တွသ္မာန် ဥပကုရွွန္တျေတတ် တေၐာံ နိကဋေ ပြာကာၑျတ၊ ယာံၑ္စ တာန် ဝိၐယာန် ဒိဝျဒူတာ အပျဝနတၑိရသော နိရီက္ၐိတုမ် အဘိလၐန္တိ တေ ဝိၐယား သာမ္ပြတံ သွရ္ဂာတ် ပြေၐိတသျ ပဝိတြသျာတ္မနး သဟာယျာဒ် ယုၐ္မတ္သမီပေ သုသံဝါဒပြစာရယိတၖဘိး ပြာကာၑျန္တ၊
அவர்கள் தங்களுக்காக அல்ல, பிற்காலத்தில் வரும் உங்களுக்காகவே ஊழியம் செய்தார்கள் என்பது அவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது. பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியானவரால், உங்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கித்தவர்கள் இப்பொழுது சொன்னவற்றைப்பற்றி, அப்பொழுதே அவர்களுக்கு முன்னறிவிக்கப்பட்டது. இறைவனுடைய தூதர்களும் இந்தக் காரியங்களை உற்றுப்பார்க்க வாஞ்சையாக இருக்கிறார்கள்.
13 အတဧဝ ယူယံ မနးကဋိဗန္ဓနံ ကၖတွာ ပြဗုဒ္ဓါး သန္တော ယီၑုခြီၐ္ဋသျ ပြကာၑသမယေ ယုၐ္မာသု ဝရ္တ္တိၐျမာနသျာနုဂြဟသျ သမ္ပူရ္ဏာံ ပြတျာၑာံ ကုရုတ၊
ஆகையால் செயல்படுவதற்கு உங்களுடைய மனங்களை ஆயத்தப்படுத்துங்கள். தன்னடக்கம் உடையவர்களாய் இருங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது, உங்களுக்கு கொடுக்கப்படப்போகும் கிருபையின்மேல் உங்கள் முழு நம்பிக்கையையும் வையுங்கள்.
14 အပရံ ပူရွွီယာဇ္ဉာနတာဝသ္ထာယား ကုတ္သိတာဘိလာၐာဏာံ ယောဂျမ် အာစာရံ န ကုရွွန္တော ယုၐ္မဒါဟွာနကာရီ ယထာ ပဝိတြော 'သ္တိ
நீங்கள் அறியாமையில் வாழ்ந்தபோது, உங்களிடம் காணப்பட்ட தீய ஆசைகளின்படி இனியும் நடந்துகொள்ளாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாய் இருங்கள்.
15 ယူယမပျာဇ္ဉာဂြာဟိသန္တာနာ ဣဝ သရွွသ္မိန် အာစာရေ တာဒၖက် ပဝိတြာ ဘဝတ၊
உங்களை அழைத்தவர் பரிசுத்தமாய் இருக்கிறதுபோல, நீங்கள் செய்கின்ற எல்லாவற்றிலும் பரிசுத்தராயிருங்கள்.
16 ယတော လိခိတမ် အာသ္တေ, ယူယံ ပဝိတြာသ္တိၐ္ဌတ ယသ္မာဒဟံ ပဝိတြး၊
ஏனெனில், “நான் பரிசுத்தர், நீங்களும் பரிசுத்தராய் இருங்கள்” என்று எழுதியிருக்கிறதே.
17 အပရဉ္စ ယော ဝိနာပက္ၐပါတမ် ဧကဲကမာနုၐသျ ကရ္မ္မာနုသာရာဒ် ဝိစာရံ ကရောတိ သ ယဒိ ယုၐ္မာဘိသ္တာတ အာချာယတေ တရှိ သွပြဝါသသျ ကာလော ယုၐ္မာဘိ ရ္ဘီတျာ ယာပျတာံ၊
ஒவ்வொருவருடைய செயலையும் பாரபட்சமின்றி நியாயந்தீர்க்கின்ற பிதாவை நீங்கள் ஆராதிக்கிறபடியால், இங்கே நீங்கள் அந்நியர்களாக உங்களுடைய வாழ்க்கையை பயபக்தியுடன் வாழுங்கள்.
18 ယူယံ နိရရ္ထကာတ် ပဲတၖကာစာရာတ် က္ၐယဏီယဲ ရူပျသုဝရ္ဏာဒိဘိ ရ္မုက္တိံ န ပြာပျ
ஏனெனில் நீங்கள் அறிந்திருக்கிறபடி, உங்கள் முற்பிதாக்களினால் உங்களுக்கு கையளிக்கப்பட்ட வெறுமையான வாழ்க்கை முறையிலிருந்து வெள்ளி, தங்கம் போன்ற அழிந்துபோகும் பொருட்களினால் நீங்கள் மீட்கப்படவில்லை.
19 နိၐ္ကလင်္ကနိရ္မ္မလမေၐၑာဝကသျေဝ ခြီၐ္ဋသျ ဗဟုမူလျေန ရုဓိရေဏ မုက္တိံ ပြာပ္တဝန္တ ဣတိ ဇာနီထ၊
குற்றமோ, குறைபாடோ இல்லாத ஆட்டுக்குட்டியானவராகிய, கிறிஸ்துவின் உயர்மதிப்புடைய இரத்தத்தினாலேயே மீட்கப்பட்டீர்கள்.
20 သ ဇဂတော ဘိတ္တိမူလသ္ထာပနာတ် ပူရွွံ နိယုက္တး ကိန္တု စရမဒိနေၐု ယုၐ္မဒရ္ထံ ပြကာၑိတော 'ဘဝတ်၊
உலகம் படைக்கப்படும் முன்பாகவே, அவர் முன்குறிக்கப்பட்டார். ஆனால் உங்களுக்காகவே இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்படுத்தப்பட்டார்.
21 ယတသ္တေနဲဝ မၖတဂဏာတ် တသျောတ္ထာပယိတရိ တသ္မဲ ဂေါ်ရဝဒါတရိ စေၑွရေ ဝိၑွသိထ တသ္မာဒ် ဤၑွရေ ယုၐ္မာကံ ဝိၑွာသး ပြတျာၑာ စာသ္တေ၊
அவர் மூலமாகவே நீங்கள் இறைவனில் விசுவாசமாய் இருக்கிறீர்கள். உங்கள் விசுவாசமும், நம்பிக்கையும் இறைவனிலேயே இருக்கும்படி, இறைவனே அவரை இறந்தோரிலிருந்து உயிருடன் எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார்.
22 ယူယမ် အာတ္မနာ သတျမတသျာဇ္ဉာဂြဟဏဒွါရာ နိၐ္ကပဋာယ ဘြာတၖပြေမ္နေ ပါဝိတမနသော ဘူတွာ နိရ္မ္မလာန္တးကရဏဲး ပရသ္ပရံ ဂါဎံ ပြေမ ကုရုတ၊
இப்பொழுது நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்ததினாலே, உங்களைச் சுத்திகரித்துக்கொண்டீர்கள். இதனால் உங்கள் சகோதரரைக்குறித்து உண்மையான அன்புள்ளவர்களாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒருவரில் ஒருவர் உண்மையான உள்ளத்துடன் ஆழ்ந்த அன்பு செலுத்துங்கள்.
23 ယသ္မာဒ် ယူယံ က္ၐယဏီယဝီရျျာတ် နဟိ ကိန္တွက္ၐယဏီယဝီရျျာဒ် ဤၑွရသျ ဇီဝနဒါယကေန နိတျသ္ထာယိနာ ဝါကျေန ပုနရ္ဇန္မ ဂၖဟီတဝန္တး၊ (aiōn g165)
ஏனெனில், நீங்கள் புதிதான பிறப்பைப் பெற்றிருக்கிறீர்கள். இந்த பிறப்பு அழிந்துபோகின்ற விதையினால் உண்டாகவில்லை. அழியாத விதையான இறைவனுடைய வார்த்தையினாலேயே உண்டானது. அந்த வார்த்தை உயிருள்ளதும் நிலைத்து நிற்பதுமானது. (aiōn g165)
24 သရွွပြာဏီ တၖဏဲသ္တုလျသ္တတ္တေဇသ္တၖဏပုၐ္ပဝတ်၊ တၖဏာနိ ပရိၑုၐျတိ ပုၐ္ပာဏိ နိပတန္တိ စ၊
ஏனெனில், “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள். அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன. புல் வாடுகிறது, பூக்கள் உதிருகின்றன,
25 ကိန္တု ဝါကျံ ပရေၑသျာနန္တကာလံ ဝိတိၐ္ဌတေ၊ တဒေဝ စ ဝါကျံ သုသံဝါဒေန ယုၐ္မာကမ် အန္တိကေ ပြကာၑိတံ၊ (aiōn g165)
ஆனால் இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று இந்த வார்த்தை உங்களுக்கு நற்செய்தியாய் பிரசங்கிக்கப்பட்டது. (aiōn g165)

< ၁ ပိတရး 1 >