< ၁ ယောဟနး 2 >

1 ဟေ ပြိယဗာလကား, ယုၐ္မာဘိ ရျတ် ပါပံ န ကြိယေတ တဒရ္ထံ ယုၐ္မာန် ပြတျေတာနိ မယာ လိချန္တေ၊ ယဒိ တု ကေနာပိ ပါပံ ကြိယတေ တရှိ ပိတုး သမီပေ 'သ္မာကံ ဧကး သဟာယော 'ရ္ထတော ဓာရ္မ္မိကော ယီၑုး ခြီၐ္ဋော ဝိဒျတေ၊
என் அன்பான பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதபடிக்கு நான் உங்களுக்கு இதை எழுதுகிறேன். ஆனால், யாராவது பாவம்செய்தால், நமக்காக பிதாவினிடத்தில் பரிந்துபேசுகிற ஒருவர் இருக்கிறார். நீதியுள்ளவரான இயேசுகிறிஸ்துவே அவர்.
2 သ စာသ္မာကံ ပါပါနာံ ပြာယၑ္စိတ္တံ ကေဝလမသ္မာကံ နဟိ ကိန္တု လိခိလသံသာရသျ ပါပါနာံ ပြာယၑ္စိတ္တံ၊
நம்முடைய பாவங்களுக்கான நிவாரணப்பலி அவரே. நம்முடைய பாவங்களுக்கு மாத்திரமல்ல, முழு உலகத்தவருடைய பாவங்களுக்குமான நிவாரணப்பலி அவரே.
3 ဝယံ တံ ဇာနီမ ဣတိ တဒီယာဇ္ဉာပါလနေနာဝဂစ္ဆာမး၊
இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தால், நாம் அவரை அறிந்திருக்கிறோம் என்பதை உறுதியாய் அறிந்துகொள்கிறோம்.
4 အဟံ တံ ဇာနာမီတိ ဝဒိတွာ ယသ္တသျာဇ္ဉာ န ပါလယတိ သော 'နၖတဝါဒီ သတျမတဉ္စ တသျာန္တရေ န ဝိဒျတေ၊
“இறைவனை நான் அறிந்திருக்கிறேன்” என்று சொல்லும் ஒருவன், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாவிட்டால் அவன் ஒரு பொய்யன்; சத்தியம் அவனுக்குள் இல்லை.
5 ယး ကၑ္စိတ် တသျ ဝါကျံ ပါလယတိ တသ္မိန် ဤၑွရသျ ပြေမ သတျရူပေဏ သိဓျတိ ဝယံ တသ္မိန် ဝရ္တ္တာမဟေ တဒ် ဧတေနာဝဂစ္ဆာမး၊
ஆனால் யாராவது, இறைவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தால், இறைவனின் அன்பு உண்மையிலேயே அவனில் முழுநிறைவு பெறுகிறது. நாம் இறைவனில் இருக்கிறோம் என்பதை இவ்விதமாகத்தான் அறிந்துகொள்கிறோம்:
6 အဟံ တသ္မိန် တိၐ္ဌာမီတိ ယော ဂဒတိ တသျေဒမ် ဥစိတံ ယတ် ခြီၐ္ဋော ယာဒၖဂ် အာစရိတဝါန် သော 'ပိ တာဒၖဂ် အာစရေတ်၊
ஒருவன் தான் இறைவனில் வாழ்வதாகச் சொல்லிக்கொண்டால், அவன் இயேசுவைப் போலவே தானும் நடக்கவேண்டும்.
7 ဟေ ပြိယတမား, ယုၐ္မာန် ပြတျဟံ နူတနာမာဇ္ဉာံ လိခါမီတိ နဟိ ကိန္တွာဒိတော ယုၐ္မာဘိ ရ္လဗ္ဓာံ ပုရာတနာမာဇ္ဉာံ လိခါမိ၊ အာဒိတော ယုၐ္မာဘိ ရျဒ် ဝါကျံ ၑြုတံ သာ ပုရာတနာဇ္ဉာ၊
அன்பான நண்பர்களே, நான் உங்களுக்கு எழுதும் செய்தி ஒரு புதிய கட்டளை அல்ல; பழைய கட்டளையைத்தான் எழுதுகிறேன். அது உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்று நீங்கள் கேட்ட செய்தியே அந்த முந்திய கட்டளை.
8 ပုနရပိ ယုၐ္မာန် ပြတိ နူတနာဇ္ဉာ မယာ လိချတ ဧတဒပိ တသ္မိန် ယုၐ္မာသု စ သတျံ, ယတော 'န္ဓကာရော ဝျတျေတိ သတျာ ဇျောတိၑ္စေဒါနီံ ပြကာၑတေ;
ஆனால், இது ஒரு புதிய கட்டளையாகவும் இருக்கிறது; இந்த சத்தியம் கிறிஸ்துவிலும் உங்களிலும் காணப்படுகிறது. ஏனெனில் இருள் அகன்றுபோகிறது, சத்திய ஒளி பிரகாசிக்கத் தொடங்கியிருக்கிறது.
9 အဟံ ဇျောတိၐိ ဝရ္တ္တ ဣတိ ဂဒိတွာ ယး သွဘြာတရံ ဒွေၐ္ဋိ သော 'ဒျာပိ တမိသြေ ဝရ္တ္တတေ၊
தான் இறைவனுடைய ஒளியில் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் யாராவது, தன் சகோதரனை வெறுத்தால், அவன் இன்னும் இருளில்தான் இருக்கிறான்.
10 သွဘြာတရိ ယး ပြီယတေ သ ဧဝ ဇျောတိၐိ ဝရ္တ္တတေ ဝိဃ္နဇနကံ ကိမပိ တသ္မိန် န ဝိဒျတေ၊
தன் சகோதரனை நேசிக்கிறவனோ, இறைவனுடைய வெளிச்சத்தில் இருக்கிறான். மற்றவர்களை இடறிவிழச் செய்யத்தக்க எதுவும் அவனுக்குள் இல்லை.
11 ကိန္တု သွဘြာတရံ ယော ဒွေၐ္ဋိ သ တိမိရေ ဝရ္တ္တတေ တိမိရေ စရတိ စ တိမိရေဏ စ တသျ နယနေ 'န္ဓီကြိယေတေ တသ္မာတ် က္က ယာမီတိ သ ဇ္ဉာတုံ န ၑက္နောတိ၊
ஆனால் யாராவது தன் சகோதரனை வெறுத்தால், அவன் இருளிலேயே இருக்கிறான், அவன் இருளிலேயே நடக்கிறான்; தான் எங்கு போகிறான் என்றும் அவன் அறியாதிருக்கிறான். ஏனெனில், இருள் அவனைக் குருடாக்கிவிட்டது.
12 ဟေ ၑိၑဝး, ယူယံ တသျ နာမ္နာ ပါပက္ၐမာံ ပြာပ္တဝန္တသ္တသ္မာဒ် အဟံ ယုၐ္မာန် ပြတိ လိခါမိ၊
அன்பான பிள்ளைகளே, அவருடைய பெயரின் நிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு இருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
13 ဟေ ပိတရး, ယ အာဒိတော ဝရ္တ္တမာနသ္တံ ယူယံ ဇာနီထ တသ္မာဒ် ယုၐ္မာန် ပြတိ လိခါမိ၊ ဟေ ယုဝါနး ယူယံ ပါပတ္မာနံ ဇိတဝန္တသ္တသ္မာဒ် ယုၐ္မာန် ပြတိ လိခါမိ၊ ဟေ ဗာလကား, ယူယံ ပိတရံ ဇာနီထ တသ္မာဒဟံ ယုၐ္မာန် ပြတိ လိခိတဝါန်၊
தந்தையரே, தொடக்கத்திலிருந்தே இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞரே, தீயவனை நீங்கள் மேற்கொண்டிருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
14 ဟေ ပိတရး, အာဒိတော ယော ဝရ္တ္တမာနသ္တံ ယူယံ ဇာနီထ တသ္မာဒ် ယုၐ္မာန် ပြတိ လိခိတဝါန်၊ ဟေ ယုဝါနး, ယူယံ ဗလဝန္တ အာဓွေ, ဤၑွရသျ ဝါကျဉ္စ ယုၐ္မဒန္တရေ ဝရ္တတေ ပါပါတ္မာ စ ယုၐ္မာဘိး ပရာဇိဂျေ တသ္မာဒ် ယုၐ္မာန် ပြတိ လိခိတဝါန်၊
அன்பான பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். தந்தையரே, தொடக்கத்திலிருந்தே இருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறபடியால், நான் உங்களுக்கு எழுதுகிறேன். இளைஞரே, நீங்கள் பலம் உள்ளவர்களாகவும், இறைவனுடைய வார்த்தை உங்களுக்குள் குடியிருப்பதாலும், நீங்கள் தீயவனை மேற்கொண்டிருப்பதாலும், நான் உங்களுக்கு எழுதுகிறேன்.
15 ယူယံ သံသာရေ သံသာရသ္ထဝိၐယေၐု စ မာ ပြီယဓွံ ယး သံသာရေ ပြီယတေ တသျာန္တရေ ပိတုး ပြေမ န တိၐ္ဌတိ၊
உலகத்திலும் உலகத்திலுள்ள எவற்றிலும் அன்புகொள்ள வேண்டாம். யாராவது உலகத்தில் அன்புகொள்வானாகில், பிதாவின் அன்பு அவனில் இல்லை.
16 ယတး သံသာရေ ယဒျတ် သ္ထိတမ် အရ္ထတး ၑာရီရိကဘာဝသျာဘိလာၐော ဒရ္ၑနေန္ဒြိယသျာဘိလာၐော ဇီဝနသျ ဂရွွၑ္စ သရွွမေတတ် ပိတၖတော န ဇာယတေ ကိန္တု သံသာရဒေဝ၊
ஏனெனில் உலகத்திலுள்ளவைகளான சரீர ஆசைகள், கண்களின் ஆசை, வாழ்வின் பெருமை ஆகிய எல்லாம் பிதாவினிடத்திலிருந்து வருவதில்லை; இவை உலகத்திலிருந்தே வருகின்றன.
17 သံသာရသ္တဒီယာဘိလာၐၑ္စ ဝျတျေတိ ကိန္တု ယ ဤၑွရသျေၐ္ဋံ ကရောတိ သော 'နန္တကာလံ ယာဝတ် တိၐ္ဌတိ၊ (aiōn g165)
உலகமும் உலகத்திற்குரிய ஆசைகளும் நிலையற்று மறைந்துபோகின்றன. ஆனால் இறைவனுடைய சித்தத்தைச் செய்கிறவனோ என்றென்றும் வாழ்கிறான். (aiōn g165)
18 ဟေ ဗာလကား, ၑေၐကာလော'ယံ, အပရံ ခြီၐ္ဋာရိဏောပသ္ထာဝျမိတိ ယုၐ္မာဘိ ရျထာ ၑြုတံ တထာ ဗဟဝး ခြီၐ္ဋာရယ ဥပသ္ထိတာသ္တသ္မာဒယံ ၑေၐကာလော'သ္တီတိ ဝယံ ဇာနီမး၊
அன்பான பிள்ளைகளே, இதுவே கடைசி மணிவேளை; கிறிஸ்து விரோதி வருவான் என நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறபடி, கிறிஸ்து விரோதிகள் பலர் இப்பொழுதே வந்திருக்கிறார்கள். இதனாலேயே, இதுவே கடைசி மணிவேளை என்று நாம் அறிந்துகொள்கிறோம்.
19 တေ 'သ္မန္မဓျာန် နိရ္ဂတဝန္တး ကိန္တွသ္မဒီယာ နာသန် ယဒျသ္မဒီယာ အဘဝိၐျန် တရှျသ္မတ္သင်္ဂေ 'သ္ထာသျန်, ကိန္တု သရွွေ 'သ္မဒီယာ န သန္တျေတသျ ပြကာၑ အာဝၑျက အာသီတ်၊
நம்மைவிட்டு அவர்கள் பிரிந்து போனார்கள். ஆனால் உண்மையிலேயே அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்களாய் இருந்திருந்தால், அவர்கள் நம்மோடு தொடர்ந்து இருந்திருப்பார்கள். ஆனால் அவர்கள் பிரிந்துபோனது, அவர்களில் எவருமே நம்மைச் சேர்ந்தவர்களல்ல என்பதைக் காட்டியது.
20 ယး ပဝိတြသ္တသ္မာဒ် ယူယမ် အဘိၐေကံ ပြာပ္တဝန္တသ္တေန သရွွာဏိ ဇာနီထ၊
ஆனால் நீங்களோ, பரிசுத்த ஆவியானவரிடமிருந்து அபிஷேகம் பெற்றிருக்கிறீர்கள். மேலும் நீங்கள் எல்லோரும் சத்தியத்தை அறிந்திருக்கிறீர்கள்.
21 ယူယံ သတျမတံ န ဇာနီထ တတ္ကာရဏာဒ် အဟံ ယုၐ္မာန် ပြတိ လိခိတဝါန် တန္နဟိ ကိန္တု ယူယံ တတ် ဇာနီထ သတျမတာစ္စ ကိမပျနၖတဝါကျံ နောတ္ပဒျတေ တတ္ကာရဏာဒေဝ၊
உங்களுக்கு சத்தியம் தெரியாது என்பதற்காக அல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறீர்கள் என்பதாலும், சத்தியத்திலிருந்து பொய் ஒருபோதும் வருவதில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பதாலுமே நான் இதை எழுதுகிறேன்.
22 ယီၑုရဘိၐိက္တသ္တြာတေတိ ယော နာင်္ဂီကရောတိ တံ ဝိနာ ကော 'ပရော 'နၖတဝါဒီ ဘဝေတ်? သ ဧဝ ခြီၐ္ဋာရိ ရျး ပိတရံ ပုတြဉ္စ နာင်္ဂီကရောတိ၊
யார் பொய்யன்? மனிதனாக வந்த இயேசுவை கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனே பொய்யன். இப்படிப்பட்டவனே கிறிஸ்து விரோதி, அவன் பிதாவையும் அவருடைய மகனையும் மறுதலிக்கிறான்.
23 ယး ကၑ္စိတ် ပုတြံ နာင်္ဂီကရောတိ သ ပိတရမပိ န ဓာရယတိ ယၑ္စ ပုတြမင်္ဂီကရောတိ သ ပိတရမပိ ဓာရယတိ၊
மகனை மறுதலிக்கிற எவனுடனும் பிதா இருப்பதில்லை; மகனை ஏற்றுக்கொள்கிறவனோடுதான் பிதாவும் இருக்கிறார்.
24 အာဒိတော ယုၐ္မာဘိ ရျတ် ၑြုတံ တဒ် ယုၐ္မာသု တိၐ္ဌတု, အာဒိတး ၑြုတံ ဝါကျံ ယဒိ ယုၐ္မာသု တိၐ္ဌတိ, တရှိ ယူယမပိ ပုတြေ ပိတရိ စ သ္ထာသျထ၊
எனவே, நீங்கள் தொடக்கத்திலிருந்து கேட்டறிந்தவை, உங்களில் நிலைத்திருக்கும்படி கவனமாயிருங்கள். அவை அப்படி நிலைத்திருந்தால், நீங்கள் மகனாகிய கிறிஸ்துவிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.
25 သ စ ပြတိဇ္ဉယာသ္မဘျံ ယတ် ပြတိဇ္ဉာတဝါန် တဒ် အနန္တဇီဝနံ၊ (aiōnios g166)
அவர் நமக்குத் தருவதாக வாக்குக்கொடுத்திருக்கிற நித்தியவாழ்வு இதுவே. (aiōnios g166)
26 ယေ ဇနာ ယုၐ္မာန် ဘြာမယန္တိ တာနဓျဟမ် ဣဒံ လိခိတဝါန်၊
உங்களை வழிவிலகப்பண்ண முயற்சிக்கிறவர்களின் சூழ்ச்சியை எண்ணியே உங்களுக்கு இவற்றை நான் எழுதுகிறேன்.
27 အပရံ ယူယံ တသ္မာဒ် ယမ် အဘိၐေကံ ပြာပ္တဝန္တး သ ယုၐ္မာသု တိၐ္ဌတိ တတး ကော'ပိ ယဒ် ယုၐ္မာန် ၑိက္ၐယေတ် တဒ် အနာဝၑျကံ, သ စာဘိၐေကော ယုၐ္မာန် သရွွာဏိ ၑိက္ၐယတိ သတျၑ္စ ဘဝတိ န စာတထျး, အတး သ ယုၐ္မာန် ယဒွဒ် အၑိက္ၐယတ် တဒွတ် တတြ သ္ထာသျထ၊
உங்களைப் பொறுத்தவரையில், கிறிஸ்துவிடமிருந்து நீங்கள் பெற்றுக்கொண்ட பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகம் உங்களில் இன்னும் நிலைத்திருக்கிறது. அதனால், வேறு யாரும் உங்களுக்குக் போதிக்கவேண்டிய அவசியம் இல்லை; பரிசுத்த ஆவியானவரே உங்களுக்கு எல்லாவற்றையும் போதிப்பார். அவருடைய போதனை சத்தியமாயிருக்கிறது; அது போலியானது அல்ல. ஆகவே, ஆவியானவர் போதித்தபடி, கிறிஸ்துவில் நிலைத்திருங்கள்.
28 အတဧဝ ဟေ ပြိယဗာလကာ ယူယံ တတြ တိၐ္ဌတ, တထာ သတိ သ ယဒါ ပြကာၑိၐျတေ တဒါ ဝယံ ပြတိဘာနွိတာ ဘဝိၐျာမး, တသျာဂမနသမယေ စ တသျ သာက္ၐာန္န တြပိၐျာမဟေ၊
இப்பொழுதும் அன்பான பிள்ளைகளே, நீங்கள் தொடர்ந்து கிறிஸ்துவில் வாழுங்கள். அப்படியானால், அவர் மீண்டும் வரும்போது, நாம் அவருக்கு முன்பாக மனவுறுதி உடையவர்களாயும் வெட்கப்படாதவர்களாயும் இருப்போம்.
29 သ ဓာရ္မ္မိကော 'သ္တီတိ ယဒိ ယူယံ ဇာနီထ တရှိ ယး ကၑ္စိဒ် ဓရ္မ္မာစာရံ ကရောတိ သ တသ္မာတ် ဇာတ ဣတျပိ ဇာနီတ၊
இறைவன் நீதியுள்ளவர் என்பதை நீங்கள் அறிந்திருந்தால், நீதியாய் நடக்கிற ஒவ்வொருவனும் அவரால் பிறந்த அவருடைய பிள்ளையாய் இருக்கிறான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

< ၁ ယောဟနး 2 >