< ၁ ကရိန္ထိနး 3 >

1 ဟေ ဘြာတရး, အဟမာတ္မိကဲရိဝ ယုၐ္မာဘိး သမံ သမ္ဘာၐိတုံ နာၑက္နဝံ ကိန္တု ၑာရီရိကာစာရိဘိး ခြီၐ္ဋဓရ္မ္မေ ၑိၑုတုလျဲၑ္စ ဇနဲရိဝ ယုၐ္မာဘိး သဟ သမဘာၐေ၊
மேலும், சகோதரர்களே, நான் உங்களை ஆவியானவருக்குரியவர்கள் என்று நினைத்து உங்களோடு பேசாமல், மாம்சத்திற்குரியவர்களென்றும், கிறிஸ்துவிற்குள் குழந்தைகளென்றும் நினைத்துப் பேசவேண்டியதாக இருக்கிறது.
2 ယုၐ္မာန် ကဌိနဘက္ၐျံ န ဘောဇယန် ဒုဂ္ဓမ် အပါယယံ ယတော ယူယံ ဘက္ၐျံ ဂြဟီတုံ တဒါ နာၑက္နုတ ဣဒါနီမပိ န ၑက္နုထ, ယတော ဟေတောရဓုနာပိ ၑာရီရိကာစာရိဏ အာဓွေ၊
நீங்கள் பெலன் இல்லாதவர்களானதால், உங்களுக்கு உணவு கொடுக்காமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் சரீரத்திற்குரியவர்களாக இருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை.
3 ယုၐ္မန္မဓျေ မာတ္သရျျဝိဝါဒဘေဒါ ဘဝန္တိ တတး ကိံ ၑာရီရိကာစာရိဏော နာဓွေ မာနုၐိကမာရ္ဂေဏ စ န စရထ?
பொறாமையும் வாக்குவாதமும் வேறுபாடுகளும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாக இருந்து மனித வழிமுறையில் நடக்கிறீர்களல்லவா?
4 ပေါ်လသျာဟမိတျာပလ္လောရဟမိတိ ဝါ ယဒွါကျံ ယုၐ္မာကံ ကဲၑ္စိတ် ကဲၑ္စိတ် ကထျတေ တသ္မာဒ် ယူယံ ၑာရီရိကာစာရိဏ န ဘဝထ?
ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், மற்றொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் சரீரத்திற்குரியவர்களல்லவா?
5 ပေါ်လး ကး? အာပလ္လော ရွာ ကး? တော် ပရိစာရကမာတြော် တယောရေကဲကသ္မဲ စ ပြဘု ရျာဒၖက် ဖလမဒဒါတ် တဒွတ် တယောရ္ဒွါရာ ယူယံ ဝိၑွာသိနော ဇာတား၊
பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு கிருபை அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு காரணமாக இருந்த ஊழியக்காரர்கள்தானே.
6 အဟံ ရောပိတဝါန် အာပလ္လောၑ္စ နိၐိက္တဝါန် ဤၑွရၑ္စာဝရ္ဒ္ဓယတ်၊
நான் நட்டேன், அப்பொல்லோ தண்ணீர்ப் பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.
7 အတော ရောပယိတၖသေက္တာရာဝသာရော် ဝရ္ဒ္ဓယိတေၑွရ ဧဝ သာရး၊
அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, தண்ணீர்ப் பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாம் ஆகும்.
8 ရောပယိတၖသေက္တာရော် စ သမော် တယောရေကဲကၑ္စ သွၑြမယောဂျံ သွဝေတနံ လပ္သျတေ၊
மேலும் நடுகிறவனும் தண்ணீர்ப் பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தகுந்தபடி கூலியைப் பெறுவான்.
9 အာဝါမီၑွရေဏ သဟ ကရ္မ္မကာရိဏော်, ဤၑွရသျ ယတ် က္ၐေတြမ် ဤၑွရသျ ယာ နိရ္မ္မိတိး သာ ယူယမေဝ၊
நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாக இருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாக இருக்கிறீர்கள்.
10 ဤၑွရသျ ပြသာဒါတ် မယာ ယတ် ပဒံ လဗ္ဓံ တသ္မာတ် ဇ္ဉာနိနာ ဂၖဟကာရိဏေဝ မယာ ဘိတ္တိမူလံ သ္ထာပိတံ တဒုပရိ စာနျေန နိစီယတေ၊ ကိန္တု ယေန ယန္နိစီယတေ တတ် တေန ဝိဝိစျတာံ၊
௧0எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்ப ஆசாரியைப்போல அஸ்திபாரம் போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் எப்படிக் கட்டுகிறான் என்று கவனமாக இருக்கவேண்டும்.
11 ယတော ယီၑုခြီၐ္ဋရူပံ ယဒ် ဘိတ္တိမူလံ သ္ထာပိတံ တဒနျတ် ကိမပိ ဘိတ္တိမူလံ သ္ထာပယိတုံ ကေနာပိ န ၑကျတေ၊
௧௧போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறு அஸ்திபாரத்தைப்போட ஒருவனாலும் முடியாது.
12 ဧတဒ္ဘိတ္တိမူလသျောပရိ ယဒိ ကေစိတ် သွရ္ဏရူပျမဏိကာၐ္ဌတၖဏနလာန် နိစိနွန္တိ,
௧௨ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக்கொண்டு கட்டினால்,
13 တရှျေကဲကသျ ကရ္မ္မ ပြကာၑိၐျတေ ယတး သ ဒိဝသသ္တတ် ပြကာၑယိၐျတိ၊ ယတော ဟတောသ္တန ဒိဝသေန ဝဟ္နိမယေနောဒေတဝျံ တတ ဧကဲကသျ ကရ္မ္မ ကီဒၖၑမေတသျ ပရီက္ၐာ ဗဟ္နိနာ ဘဝိၐျတိ၊
௧௩அவனவனுடைய வேலைப்பாடு வெளிப்படும்; நியாயத்தீர்ப்பு நாளானது அதை வெளிப்படுத்தும். ஏனென்றால், அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளது என்று அக்கினியானது பரிசோதிக்கும்.
14 ယသျ နိစယနရူပံ ကရ္မ္မ သ္ထာသ္နု ဘဝိၐျတိ သ ဝေတနံ လပ္သျတေ၊
௧௪அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான்.
15 ယသျ စ ကရ္မ္မ ဓက္ၐျတေ တသျ က္ၐတိ ရ္ဘဝိၐျတိ ကိန္တု ဝဟ္နေ ရ္နိရ္ဂတဇန ဣဝ သ သွယံ ပရိတြာဏံ ပြာပ္သျတိ၊
௧௫ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியில் அகப்பட்டுத் தப்பினதுபோல இருக்கும்.
16 ယူယမ် ဤၑွရသျ မန္ဒိရံ ယုၐ္မန္မဓျေ စေၑွရသျာတ္မာ နိဝသတီတိ ကိံ န ဇာနီထ?
௧௬நீங்கள் தேவனுடைய ஆலயமாக இருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாசமாக இருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?
17 ဤၑွရသျ မန္ဒိရံ ယေန ဝိနာၑျတေ သော'ပီၑွရေဏ ဝိနာၑယိၐျတေ ယတ ဤၑွရသျ မန္ဒိရံ ပဝိတြမေဝ ယူယံ တု တန္မန္ဒိရမ် အာဓွေ၊
௧௭ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக் கெடுத்தால், தேவன் அவனைக் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாக இருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்.
18 ကောပိ သွံ န ဝဉ္စယတာံ၊ ယုၐ္မာကံ ကၑ္စန စေဒိဟလောကသျ ဇ္ဉာနေန ဇ္ဉာနဝါနဟမိတိ ဗုဓျတေ တရှိ သ ယတ် ဇ္ဉာနီ ဘဝေတ် တဒရ္ထံ မူဎော ဘဝတု၊ (aiōn g165)
௧௮ஒருவனும் தன்னைத்தானே ஏமாற்றாமல் இருக்கட்டும்; இந்த உலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று நினைத்தால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகவேண்டும். (aiōn g165)
19 ယသ္မာဒိဟလောကသျ ဇ္ဉာနမ် ဤၑွရသျ သာက္ၐာတ် မူဎတွမေဝ၊ ဧတသ္မိန် လိခိတမပျာသ္တေ, တီက္ၐ္ဏာ ယာ ဇ္ဉာနိနာံ ဗုဒ္ဓိသ္တယာ တာန် ဓရတီၑွရး၊
௧௯ஏனெனில், இந்த உலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாக இருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும்,
20 ပုနၑ္စ၊ ဇ္ဉာနိနာံ ကလ္ပနာ ဝေတ္တိ ပရမေၑော နိရရ္ထကား၊
௨0ஞானிகளுடைய எண்ணங்கள் வீணாக இருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது.
21 အတဧဝ ကော'ပိ မနုဇဲရာတ္မာနံ န ၑ္လာဃတာံ ယတး သရွွာဏိ ယုၐ္မာကမေဝ,
௨௧இப்படியிருக்க, ஒருவனும் மனிதர்களைக்குறித்து மேன்மைபாராட்டாமலிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே;
22 ပေါ်လ ဝါ အာပလ္လော ရွာ ကဲဖာ ဝါ ဇဂဒ် ဝါ ဇီဝနံ ဝါ မရဏံ ဝါ ဝရ္တ္တမာနံ ဝါ ဘဝိၐျဒွါ သရွွာဏျေဝ ယုၐ္မာကံ,
௨௨பவுலானாலும், அப்பொல்லோவானாலும், கேபாவானாலும், உலகமானாலும், ஜீவனானாலும் மரணமானாலும், நிகழ்காரியங்களானாலும், வரும்காரியங்களானாலும், எல்லாம் உங்களுடையது;
23 ယူယဉ္စ ခြီၐ္ဋသျ, ခြီၐ္ဋၑ္စေၑွရသျ၊
௨௩நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.

< ၁ ကရိန္ထိနး 3 >