< ၁ ကရိန္ထိနး 3 >

1 ဟေ ဘြာတရး, အဟမာတ္မိကဲရိဝ ယုၐ္မာဘိး သမံ သမ္ဘာၐိတုံ နာၑက္နဝံ ကိန္တု ၑာရီရိကာစာရိဘိး ခြီၐ္ဋဓရ္မ္မေ ၑိၑုတုလျဲၑ္စ ဇနဲရိဝ ယုၐ္မာဘိး သဟ သမဘာၐေ၊
பிரியமானவர்களே, நான் ஆவிக்குரியவர்களிடம் பேசுவதைப்போல், என்னால் உங்களுடன் பேச முடியவில்லை. உலகப்பிரகாரமானவர்களாக, கிறிஸ்துவில் குழந்தைகள் என்று எண்ணியே பேச வேண்டியதாயிற்று.
2 ယုၐ္မာန် ကဌိနဘက္ၐျံ န ဘောဇယန် ဒုဂ္ဓမ် အပါယယံ ယတော ယူယံ ဘက္ၐျံ ဂြဟီတုံ တဒါ နာၑက္နုတ ဣဒါနီမပိ န ၑက္နုထ, ယတော ဟေတောရဓုနာပိ ၑာရီရိကာစာရိဏ အာဓွေ၊
நான் உங்களுக்குப் பாலையே கொடுத்தேன். பலமான உணவை உங்களுக்குக் கொடுக்கவில்லை. ஏனெனில், நீங்கள் அதை உட்கொள்ளக்கூடிய நிலையில் இருக்கவில்லை. இன்னும் நீங்கள் அதை உட்கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறீர்கள்.
3 ယုၐ္မန္မဓျေ မာတ္သရျျဝိဝါဒဘေဒါ ဘဝန္တိ တတး ကိံ ၑာရီရိကာစာရိဏော နာဓွေ မာနုၐိကမာရ္ဂေဏ စ န စရထ?
ஏனெனில், இன்னமும் உலகத்திற்குரியவர்களாகவே இருக்கிறீர்கள். இன்னும் உங்களிடையே பொறாமையும் சண்டை சச்சரவுகளும் இருக்கிறபடியால், நீங்கள் உலகத்திற்குரியவர்கள்தானே. நீங்கள் சாதாரண மனிதர்களைப்போல் அல்லவா நடந்துகொள்கிறீர்கள்?
4 ပေါ်လသျာဟမိတျာပလ္လောရဟမိတိ ဝါ ယဒွါကျံ ယုၐ္မာကံ ကဲၑ္စိတ် ကဲၑ္စိတ် ကထျတေ တသ္မာဒ် ယူယံ ၑာရီရိကာစာရိဏ န ဘဝထ?
“நான் பவுலைப் பின்பற்றுகிறவன்” என்று ஒருவன் சொல்லும்போது, மற்றவன், “நான் அப்பொல்லோவைப் பின்பற்றுகிறவன்” என்கிறான். அப்படியென்றால், நீங்கள் சாதாரண மனித இயல்பின்படிதானே நடந்துகொள்கிறீர்கள்.
5 ပေါ်လး ကး? အာပလ္လော ရွာ ကး? တော် ပရိစာရကမာတြော် တယောရေကဲကသ္မဲ စ ပြဘု ရျာဒၖက် ဖလမဒဒါတ် တဒွတ် တယောရ္ဒွါရာ ယူယံ ဝိၑွာသိနော ဇာတား၊
அப்பொல்லோ யார்? பவுல் யார்? உங்களை விசுவாசத்திற்கு வழிநடத்திய கர்த்தரின் ஊழியர்கள்தானே. அப்படியே ஒவ்வொருவரும் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த பணியையே அவர்கள் செய்கிறார்கள்.
6 အဟံ ရောပိတဝါန် အာပလ္လောၑ္စ နိၐိက္တဝါန် ဤၑွရၑ္စာဝရ္ဒ္ဓယတ်၊
நான் விதையை நட்டேன், அப்பொல்லோ தண்ணீர் ஊற்றினான், ஆனால் இறைவனே அதை வளரச்செய்தார்.
7 အတော ရောပယိတၖသေက္တာရာဝသာရော် ဝရ္ဒ္ဓယိတေၑွရ ဧဝ သာရး၊
எனவே நடுகிறவனும், தண்ணீர் ஊற்றுகிறவனும் முக்கியமானவர்களல்ல. அவற்றை வளரச்செய்கிற இறைவன் மட்டுமே முக்கியமானவர்.
8 ရောပယိတၖသေက္တာရော် စ သမော် တယောရေကဲကၑ္စ သွၑြမယောဂျံ သွဝေတနံ လပ္သျတေ၊
நடுகிறவனுக்கும் தண்ணீர் ஊற்றுகிறவனுக்கும் ஒரே நோக்கமே உண்டு. அவர்கள் ஒவ்வொருவரும் தமது உழைப்புக்கேற்ற கூலியைப் பெறுவார்கள்.
9 အာဝါမီၑွရေဏ သဟ ကရ္မ္မကာရိဏော်, ဤၑွရသျ ယတ် က္ၐေတြမ် ဤၑွရသျ ယာ နိရ္မ္မိတိး သာ ယူယမေဝ၊
நாங்கள் இறைவனின் உடன் வேலையாட்கள்; நீங்களோ இறைவனின் வயல்நிலம், இறைவனின் கட்டிடம்.
10 ဤၑွရသျ ပြသာဒါတ် မယာ ယတ် ပဒံ လဗ္ဓံ တသ္မာတ် ဇ္ဉာနိနာ ဂၖဟကာရိဏေဝ မယာ ဘိတ္တိမူလံ သ္ထာပိတံ တဒုပရိ စာနျေန နိစီယတေ၊ ကိန္တု ယေန ယန္နိစီယတေ တတ် တေန ဝိဝိစျတာံ၊
இறைவன் எனக்குத் தந்த கிருபையின்படி, ஒரு கட்டிட நிபுணனைப்போல நான் ஓர் அஸ்திபாம் போட்டேன். வேறு ஒருவன் அதன்மேல் கட்டுகிறான். ஆனால் ஒவ்வொருவனும், தான் எவ்வாறு கட்டுகிறான் என்பதைக்குறித்துக் கவனமாயிருக்க வேண்டும்.
11 ယတော ယီၑုခြီၐ္ဋရူပံ ယဒ် ဘိတ္တိမူလံ သ္ထာပိတံ တဒနျတ် ကိမပိ ဘိတ္တိမူလံ သ္ထာပယိတုံ ကေနာပိ န ၑကျတေ၊
ஏற்கெனவே போடப்பட்ட அஸ்திபாரத்தைத் தவிர, வேறு அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் முடியாது. அந்த அஸ்திபாரம் இயேசுகிறிஸ்துவே.
12 ဧတဒ္ဘိတ္တိမူလသျောပရိ ယဒိ ကေစိတ် သွရ္ဏရူပျမဏိကာၐ္ဌတၖဏနလာန် နိစိနွန္တိ,
யாராவது இந்த அஸ்திபாரத்தின்மேல் கட்டும்போது தங்கம், வெள்ளி, மாணிக்கக் கற்கள், மரம், புல், அல்லது வைக்கோல் ஆகியவற்றைக்கொண்டு கட்டலாம்.
13 တရှျေကဲကသျ ကရ္မ္မ ပြကာၑိၐျတေ ယတး သ ဒိဝသသ္တတ် ပြကာၑယိၐျတိ၊ ယတော ဟတောသ္တန ဒိဝသေန ဝဟ္နိမယေနောဒေတဝျံ တတ ဧကဲကသျ ကရ္မ္မ ကီဒၖၑမေတသျ ပရီက္ၐာ ဗဟ္နိနာ ဘဝိၐျတိ၊
ஆனால் கிறிஸ்துவின் நாளில், அவனவனுடைய வேலைப்பாடு உண்மையாகவே எப்படியானது என்று வெளிப்படும். அது நெருப்பினால் வெளிப்படுத்தப்படும். மேலும், ஒவ்வொரு மனிதனுடைய வேலையின் தரத்தையும் நெருப்பு பரிசோதிக்கும்.
14 ယသျ နိစယနရူပံ ကရ္မ္မ သ္ထာသ္နု ဘဝိၐျတိ သ ဝေတနံ လပ္သျတေ၊
அவன் கட்டியது நிலைத்திருந்தால், அவன் தனக்குரிய வெகுமதியைப் பெறுவான்.
15 ယသျ စ ကရ္မ္မ ဓက္ၐျတေ တသျ က္ၐတိ ရ္ဘဝိၐျတိ ကိန္တု ဝဟ္နေ ရ္နိရ္ဂတဇန ဣဝ သ သွယံ ပရိတြာဏံ ပြာပ္သျတိ၊
அவன் கட்டியது எரிந்துபோகுமாயின், அவன் நஷ்டமடைவான்; ஆனால் அவனோ இரட்சிக்கப்படுவான். ஆயினும் அவனுடைய நிலை அக்கினி ஜுவாலையில் அகப்பட்டுத் தப்பிய ஒருவனைப்போல் இருக்கும்.
16 ယူယမ် ဤၑွရသျ မန္ဒိရံ ယုၐ္မန္မဓျေ စေၑွရသျာတ္မာ နိဝသတီတိ ကိံ န ဇာနီထ?
நீங்கள் இறைவனின் ஆலயமாயிருக்கிறீர்கள் என்றும், இறைவனுடைய ஆவியானவர் உங்களுக்குள் குடிகொண்டிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?
17 ဤၑွရသျ မန္ဒိရံ ယေန ဝိနာၑျတေ သော'ပီၑွရေဏ ဝိနာၑယိၐျတေ ယတ ဤၑွရသျ မန္ဒိရံ ပဝိတြမေဝ ယူယံ တု တန္မန္ဒိရမ် အာဓွေ၊
யாராகிலும் ஒருவன் இறைவனுடைய ஆலயத்தை அழித்தால், இறைவன் அவனை அழித்துப்போடுவார். ஏனெனில், இறைவனின் ஆலயம் பரிசுத்தமானது; நீங்களே அந்த ஆலயம்.
18 ကောပိ သွံ န ဝဉ္စယတာံ၊ ယုၐ္မာကံ ကၑ္စန စေဒိဟလောကသျ ဇ္ဉာနေန ဇ္ဉာနဝါနဟမိတိ ဗုဓျတေ တရှိ သ ယတ် ဇ္ဉာနီ ဘဝေတ် တဒရ္ထံ မူဎော ဘဝတု၊ (aiōn g165)
உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதிருங்கள். உங்களில் யாராவது ஒருவன் இவ்வுலக மதிப்பீட்டின்படி, தன்னை உண்மையாகவே ஞானமுள்ளவன் என எண்ணினால் அவன் மூடனாக வேண்டும். அப்பொழுதே அவன் ஞானமுள்ளவனாவான். (aiōn g165)
19 ယသ္မာဒိဟလောကသျ ဇ္ဉာနမ် ဤၑွရသျ သာက္ၐာတ် မူဎတွမေဝ၊ ဧတသ္မိန် လိခိတမပျာသ္တေ, တီက္ၐ္ဏာ ယာ ဇ္ဉာနိနာံ ဗုဒ္ဓိသ္တယာ တာန် ဓရတီၑွရး၊
இவ்வுலகத்தின் ஞானம் இறைவனின் பார்வையில் மூடத்தனமாயிருக்கிறது. எழுதியிருக்கிறபடி: “இறைவன் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலேயே பிடிக்கிறார்.”
20 ပုနၑ္စ၊ ဇ္ဉာနိနာံ ကလ္ပနာ ဝေတ္တိ ပရမေၑော နိရရ္ထကား၊
மேலும், “ஞானிகளுடைய சிந்தனைகள் வீணானவைகள் என்று கர்த்தர் அறிவார்” எனவும் எழுதப்பட்டிருக்கிறது.
21 အတဧဝ ကော'ပိ မနုဇဲရာတ္မာနံ န ၑ္လာဃတာံ ယတး သရွွာဏိ ယုၐ္မာကမေဝ,
எனவே, இனிமேல் மனிதர்களைக்குறித்துப் பெருமைகொள்ள வேண்டாம்! எல்லாக் காரியங்களும் உங்களுடையவைதான்.
22 ပေါ်လ ဝါ အာပလ္လော ရွာ ကဲဖာ ဝါ ဇဂဒ် ဝါ ဇီဝနံ ဝါ မရဏံ ဝါ ဝရ္တ္တမာနံ ဝါ ဘဝိၐျဒွါ သရွွာဏျေဝ ယုၐ္မာကံ,
பவுலானாலும், அப்பொல்லோவானாலும், கேபாவானாலும், அவர்கள் எல்லோரும் உங்களுடையவர்களே. இந்த உலகமானாலும், வாழ்வானாலும், மரணமானாலும், நிகழ்காலமானாலும், எதிர்காலமானாலும், அவையெல்லாமே உங்களுடையதே.
23 ယူယဉ္စ ခြီၐ္ဋသျ, ခြီၐ္ဋၑ္စေၑွရသျ၊
நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள், கிறிஸ்து இறைவனுக்குரியவர்.

< ၁ ကရိန္ထိနး 3 >