< মথিঃ 4 >

1 ততঃ পরং যীশুঃ প্রতারকেণ পরীক্ষিতো ভৱিতুম্ আত্মনা প্রান্তরম্ আকৃষ্টঃ
அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
2 সন্ চৎৱারিংশদহোরাত্রান্ অনাহারস্তিষ্ঠন্ ক্ষুধিতো বভূৱ|
அவர் இரவும் பகலும் நாற்பதுநாட்கள் உபவாசமாக இருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டானது.
3 তদানীং পরীক্ষিতা তৎসমীপম্ আগত্য ৱ্যাহৃতৱান্, যদি ৎৱমীশ্ৱরাত্মজো ভৱেস্তর্হ্যাজ্ঞযা পাষাণানেতান্ পূপান্ ৱিধেহি|
அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: “நீர் தேவனுடைய குமாரனென்றால், இந்தக் கற்கள் அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்” என்றான்.
4 ততঃ স প্রত্যব্রৱীৎ, ইত্থং লিখিতমাস্তে, "মনুজঃ কেৱলপূপেন ন জীৱিষ্যতি, কিন্ত্ৱীশ্ৱরস্য ৱদনাদ্ যানি যানি ৱচাংসি নিঃসরন্তি তৈরেৱ জীৱিষ্যতি| "
அவர் மறுமொழியாக: “மனிதன் அப்பத்தினால்மட்டுமில்லை, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்றார்.
5 তদা প্রতারকস্তং পুণ্যনগরং নীৎৱা মন্দিরস্য চূডোপরি নিধায গদিতৱান্,
அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்தின் உச்சியில் அவரை நிறுத்தி:
6 ৎৱং যদিশ্ৱরস্য তনযো ভৱেস্তর্হীতোঽধঃ পত, যত ইত্থং লিখিতমাস্তে, আদেক্ষ্যতি নিজান্ দূতান্ রক্ষিতুং ৎৱাং পরমেশ্ৱরঃ| যথা সর্ৱ্ৱেষু মার্গেষু ৎৱদীযচরণদ্ৱযে| ন লগেৎ প্রস্তরাঘাতস্ত্ৱাং ঘরিষ্যন্তি তে করৈঃ||
“நீர் தேவனுடைய குமாரனென்றால் கீழே குதியும்; ஏனென்றால், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தங்களுடைய கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்று எழுதியிருக்கிறதே” என்றான்.
7 তদানীং যীশুস্তস্মৈ কথিতৱান্ এতদপি লিখিতমাস্তে, "ৎৱং নিজপ্রভুং পরমেশ্ৱরং মা পরীক্ষস্ৱ| "
அதற்கு இயேசு: உன் தேவனாகிய யெகோவாவைச் சோதித்துப்பார்க்காமல் இருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே” என்றார்.
8 অনন্তরং প্রতারকঃ পুনরপি তম্ অত্যুঞ্চধরাধরোপরি নীৎৱা জগতঃ সকলরাজ্যানি তদৈশ্ৱর্য্যাণি চ দর্শযাশ্চকার কথযাঞ্চকার চ,
மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் எல்லா ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
9 যদি ৎৱং দণ্ডৱদ্ ভৱন্ মাং প্রণমেস্তর্হ্যহম্ এতানি তুভ্যং প্রদাস্যামি|
“நீர் சாஷ்டாங்கமாக விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்” என்று சொன்னான்;
10 ১০ তদানীং যীশুস্তমৱোচৎ, দূরীভৱ প্রতারক, লিখিতমিদম্ আস্তে, "ৎৱযা নিজঃ প্রভুঃ পরমেশ্ৱরঃ প্রণম্যঃ কেৱলঃ স সেৱ্যশ্চ| "
௧0அப்பொழுது இயேசு: “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே” என்றார்.
11 ১১ ততঃ প্রতারকেণ স পর্য্যত্যাজি, তদা স্ৱর্গীযদূতৈরাগত্য স সিষেৱে|
௧௧அப்பொழுது பிசாசு அவரைவிட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்கு பணிவிடை செய்தார்கள்.
12 ১২ তদনন্তরং যোহন্ কারাযাং ববন্ধে, তদ্ৱার্ত্তাং নিশম্য যীশুনা গালীল্ প্রাস্থীযত|
௧௨யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவிற்குத் திரும்பிப்போனார்.
13 ১৩ ততঃ পরং স নাসরন্নগরং ৱিহায জলঘেস্তটে সিবূলূন্নপ্তালী এতযোরুৱভযোঃ প্রদেশযোঃ সীম্নোর্মধ্যৱর্ত্তী য: কফর্নাহূম্ তন্নগরম্ ইৎৱা ন্যৱসৎ|
௧௩பின்பு, அவர் நாசரேத்தைவிட்டு, செபுலோன், நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகில் உள்ள கப்பர்நகூமிற்கு வந்து தங்கியிருந்தார்.
14 ১৪ তস্মাৎ, অন্যাদেশীযগালীলি যর্দ্দন্পারেঽব্ধিরোধসি| নপ্তালিসিবূলূন্দেশৌ যত্র স্থানে স্থিতৌ পুরা|
௧௪கடற்கரை அருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலும் உள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடுமாகிய யூதரல்லாதவர்களுடைய கலிலேயாவிலே,
15 ১৫ তত্রত্যা মনুজা যে যে পর্য্যভ্রাম্যন্ তমিস্রকে| তৈর্জনৈর্বৃহদালোকঃ পরিদর্শিষ্যতে তদা| অৱসন্ যে জনা দেশে মৃত্যুচ্ছাযাস্ৱরূপকে| তেষামুপরি লোকানামালোকঃ সংপ্রকাশিতঃ||
௧௫இருளில் இருக்கும் மக்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையில் இருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தோன்றினது” என்று,
16 ১৬ যদেতদ্ৱচনং যিশযিযভৱিষ্যদ্ৱাদিনা প্রোক্তং, তৎ তদা সফলম্ অভূৎ|
௧௬ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
17 ১৭ অনন্তরং যীশুঃ সুসংৱাদং প্রচারযন্ এতাং কথাং কথযিতুম্ আরেভে, মনাংসি পরাৱর্ত্তযত, স্ৱর্গীযরাজৎৱং সৱিধমভৱৎ|
௧௭அதுமுதல் இயேசு: “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் அருகில் இருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
18 ১৮ ততঃ পরং যীশু র্গালীলো জলধেস্তটেন গচ্ছন্ গচ্ছন্ আন্দ্রিযস্তস্য ভ্রাতা শিমোন্ অর্থতো যং পিতরং ৱদন্তি এতাৱুভৌ জলঘৌ জালং ক্ষিপন্তৌ দদর্শ, যতস্তৌ মীনধারিণাৱাস্তাম্|
௧௮இயேசு கலிலேயாக் கடலோரமாக நடந்துபோகும்போது, மீனவர்களாக இருந்த இரண்டு சகோதரர்களாகிய பேதுரு என்ற சீமோனும், அவனுடைய சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலையைப் போட்டுக்கொண்டிருக்கின்றபோது, அவர்களைக் கண்டு:
19 ১৯ তদা স তাৱাহূয ৱ্যাজহার, যুৱাং মম পশ্চাদ্ আগচ্ছতং, যুৱামহং মনুজধারিণৌ করিষ্যামি|
௧௯“என் பின்னே வாருங்கள், உங்களை மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக ஆக்குவேன்” என்றார்.
20 ২০ তেনৈৱ তৌ জালং ৱিহায তস্য পশ্চাৎ আগচ্ছতাম্|
௨0உடனே அவர்கள் வலைகளைவிட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
21 ২১ অনন্তরং তস্মাৎ স্থানাৎ ৱ্রজন্ ৱ্রজন্ সিৱদিযস্য সুতৌ যাকূব্ যোহন্নামানৌ দ্ৱৌ সহজৌ তাতেন সার্দ্ধং নৌকোপরি জালস্য জীর্ণোদ্ধারং কুর্ৱ্ৱন্তৌ ৱীক্ষ্য তাৱাহূতৱান্|
௨௧அவர் அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, வேறு இரண்டு சகோதரர்களாகிய செபெதேயுவின் குமாரர்களான யாக்கோபும், யோவானும் தங்களுடைய தகப்பன் செபெதேயுவோடு படகிலிருந்து, தங்களுடைய வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார்.
22 ২২ তৎক্ষণাৎ তৌ নাৱং স্ৱতাতঞ্চ ৱিহায তস্য পশ্চাদ্গামিনৌ বভূৱতুঃ|
௨௨உடனே அவர்கள் படகையும் தங்களுடைய தகப்பனையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.
23 ২৩ অনন্তরং ভজনভৱনে সমুপদিশন্ রাজ্যস্য সুসংৱাদং প্রচারযন্ মনুজানাং সর্ৱ্ৱপ্রকারান্ রোগান্ সর্ৱ্ৱপ্রকারপীডাশ্চ শমযন্ যীশুঃ কৃৎস্নং গালীল্দেশং ভ্রমিতুম্ আরভত|
௨௩பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி குணமாக்கினார்.
24 ২৪ তেন কৃৎস্নসুরিযাদেশস্য মধ্যং তস্য যশো ৱ্যাপ্নোৎ, অপরং ভূতগ্রস্তা অপস্মারর্গীণঃ পক্ষাধাতিপ্রভৃতযশ্চ যাৱন্তো মনুজা নানাৱিধৱ্যাধিভিঃ ক্লিষ্টা আসন্, তেষু সর্ৱ্ৱেষু তস্য সমীপম্ আনীতেষু স তান্ স্ৱস্থান্ চকার|
௨௪அவருடைய புகழ் சீரியா தேசமெங்கும் பரவியது. அப்பொழுது பலவிதமான வியாதிகளிலும் வேதனைகளிலும் இருந்த எல்லா நோயாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும், வலிப்பு நோயாளிகளையும், பக்கவாதக்காரர்களையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைக் குணமாக்கினார்.
25 ২৫ এতেন গালীল্-দিকাপনি-যিরূশালম্-যিহূদীযদেশেভ্যো যর্দ্দনঃ পারাঞ্চ বহৱো মনুজাস্তস্য পশ্চাদ্ আগচ্ছন্|
௨௫கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலுமிருந்து அநேக மக்கள் வந்து, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

< মথিঃ 4 >