< প্ৰকাশিতং 8 >
1 ১ অনন্তৰং সপ্তমমুদ্ৰাযাং তেন মোচিতাযাং সাৰ্দ্ধদণ্ডকালং স্ৱৰ্গো নিঃশব্দোঽভৱৎ|
௧அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரம் வரை அமைதி உண்டானது.
2 ২ অপৰম্ অহম্ ঈশ্ৱৰস্যান্তিকে তিষ্ঠতঃ সপ্তদূতান্ অপশ্যং তেভ্যঃ সপ্ততূৰ্য্যোঽদীযন্ত|
௨பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையும் பார்த்தேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.
3 ৩ ততঃ পৰম্ অন্য একো দূত আগতঃ স স্ৱৰ্ণধূপাধাৰং গৃহীৎৱা ৱেদিমুপাতিষ্ঠৎ স চ যৎ সিংহাসনস্যান্তিকে স্থিতাযাঃ সুৱৰ্ণৱেদ্যা উপৰি সৰ্ৱ্ৱেষাং পৱিত্ৰলোকানাং প্ৰাৰ্থনাসু ধূপান্ যোজযেৎ তদৰ্থং প্ৰচুৰধূপাস্তস্মৈ দত্তাঃ|
௩வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் எல்லாப் பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடு அதிகமான தூபவர்க்கம் செலுத்தும்படி அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
4 ৪ ততস্তস্য দূতস্য কৰাৎ পৱিত্ৰলোকানাং প্ৰাৰ্থনাভিঃ সংযুক্তধূপানাং ধূম ঈশ্ৱৰস্য সমক্ষং উদতিষ্ঠৎ|
௪அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையில் இருந்து தேவனுக்குமுன்பாக எழும்பியது.
5 ৫ পশ্চাৎ স দূতো ধূপাধাৰং গৃহীৎৱা ৱেদ্যা ৱহ্নিনা পূৰযিৎৱা পৃথিৱ্যাং নিক্ষিপ্তৱান্ তেন ৰৱা মেঘগৰ্জ্জনানি ৱিদ্যুতো ভূমিকম্পশ্চাভৱন্|
௫பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமி அதிர்ச்சியும் உண்டானது.
6 ৬ ততঃ পৰং সপ্ততূৰী ৰ্ধাৰযন্তঃ সপ্তদূতাস্তূৰী ৰ্ৱাদযিতুম্ উদ্যতা অভৱন্|
௬அப்பொழுது, ஏழு எக்காளங்களை வைத்திருந்த ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.
7 ৭ প্ৰথমেন তূৰ্য্যাং ৱাদিতাযাং ৰক্তমিশ্ৰিতৌ শিলাৱহ্নী সম্ভূয পৃথিৱ্যাং নিক্ষিপ্তৌ তেন পৃথিৱ্যাস্তৃতীযাংশো দগ্ধঃ, তৰূণামপি তৃতীযাংশো দগ্ধঃ, হৰিদ্ৱৰ্ণতৃণানি চ সৰ্ৱ্ৱাণি দগ্ধানি|
௭முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தம் கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றில் ஒரு பங்கு வெந்துபோனது, பசும்புல்லெல்லாம் எரிந்துபோனது.
8 ৮ অনন্তৰং দ্ৱিতীযদূতেন তূৰ্য্যাং ৱাদিতাযাং ৱহ্নিনা প্ৰজ্ৱলিতো মহাপৰ্ৱ্ৱতঃ সাগৰে নিক্ষিপ্তস্তেন সাগৰস্য তৃতীযাংশো ৰক্তীভূতঃ
௮இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோல ஒன்று கடலிலே போடப்பட்டது. அதனால் கடலில் மூன்றில் ஒரு பங்கு இரத்தமாக மாறியது.
9 ৯ সাগৰে স্থিতানাং সপ্ৰাণানাং সৃষ্টৱস্তূনাং তৃতীযাংশো মৃতঃ, অৰ্ণৱযানানাম্ অপি তৃতীযাংশো নষ্টঃ|
௯கடலில் இருந்த உயிருள்ள படைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு மரித்துப்போனது; கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு சேதமானது.
10 ১০ অপৰং তৃতীযদূতেন তূৰ্য্যাং ৱাদিতাযাং দীপ ইৱ জ্ৱলন্তী একা মহতী তাৰা গগণাৎ নিপত্য নদীনাং জলপ্ৰস্ৰৱণানাঞ্চোপৰ্য্যাৱতীৰ্ণা|
௧0மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றில் ஒருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது.
11 ১১ তস্যাস্তাৰাযা নাম নাগদমনকমিতি, তেন তোযানাং তৃতীযাংশে নাগদমনকীভূতে তোযানাং তিক্তৎৱাৎ বহৱো মানৱা মৃতাঃ|
௧௧அந்த நட்சத்திரத்திற்கு எட்டி என்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றில் ஒரு பங்கு எட்டியைப்போலக் கசப்பானது; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனிதர்களில் அநேகர் மரித்தார்கள்.
12 ১২ অপৰং চতুৰ্থদূতেন তূৰ্য্যাং ৱাদিতাযাং সূৰ্য্যস্য তৃতীযাংশশ্চন্দ্ৰস্য তৃতীযাংশো নক্ষত্ৰাণাঞ্চ তৃতীযাংশঃ প্ৰহৃতঃ, তেন তেষাং তৃতীযাংশে ঽন্ধকাৰীভূতে দিৱসস্তৃতীযাংশকালং যাৱৎ তেজোহীনো ভৱতি নিশাপি তামেৱাৱস্থাং গচ্ছতি|
௧௨நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றில் ஒருபங்கும், சந்திரனில் மூன்றில் ஒருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றில் ஒருபங்கும் சேதமானது, அவைகளில் மூன்றில் ஒரு பங்கு இருள் அடைந்தது; பகலிலும் மூன்றில் ஒரு பங்கு பிரகாசம் இல்லாமல்போனது, இரவிலும் அப்படியே ஆனது.
13 ১৩ তদা নিৰীক্ষমাণেন মযাকাশমধ্যেনাভিপতত একস্য দূতস্য ৰৱঃ শ্ৰুতঃ স উচ্চৈ ৰ্গদতি, অপৰৈ ৰ্যৈস্ত্ৰিভি ৰ্দূতৈস্তূৰ্য্যো ৱাদিতৱ্যাস্তেষাম্ অৱশিষ্টতূৰীধ্ৱনিতঃ পৃথিৱীনিৱাসিনাং সন্তাপঃ সন্তাপঃ সন্তাপশ্চ সম্ভৱিষ্যতি|
௧௩பின்பு, ஒரு கழுகு வானத்தின் நடுவிலே பறந்து வருவதைப் பார்த்தேன்; அவன் அதிக சத்தமாக: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதர்களுடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்வதைக்கேட்டேன்.