< প্ৰকাশিতং 21 >

1 অনন্তৰং নৱীনম্ আকাশমণ্ডলং নৱীনা পৃথিৱী চ মযা দৃষ্টে যতঃ প্ৰথমম্ আকাশমণ্ডলং প্ৰথমা পৃথিৱী চ লোপং গতে সমুদ্ৰো ঽপি ততঃ পৰং ন ৱিদ্যতে|
பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் பார்த்தேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; கடலும் இல்லாமல்போனது.
2 অপৰং স্ৱৰ্গাদ্ অৱৰোহন্তী পৱিত্ৰা নগৰী, অৰ্থতো নৱীনা যিৰূশালমপুৰী মযা দৃষ্টা, সা ৱৰায ৱিভূষিতা কন্যেৱ সুসজ্জিতাসীৎ|
யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்திலிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதைப் பார்த்தேன்; அது தன் கணவனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.
3 অনন্তৰং স্ৱৰ্গাদ্ এষ মহাৰৱো মযা শ্ৰুতঃ পশ্যাযং মানৱৈঃ সাৰ্দ্ধম্ ঈশ্ৱৰস্যাৱাসঃ, স তৈঃ সাৰ্দ্ধং ৱৎস্যতি তে চ তস্য প্ৰজা ভৱিষ্যন্তি, ঈশ্ৱৰশ্চ স্ৱযং তেষাম্ ঈশ্ৱৰো ভূৎৱা তৈঃ সাৰ্দ্ধং স্থাস্যতি|
மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெரிய சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனிதர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலம் இருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாக இருப்பார்; அவர்களும் அவருடைய மக்களாக இருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடு இருந்து அவர்களுடைய தேவனாக இருப்பார்.
4 তেষাং নেত্ৰেভ্যশ্চাশ্ৰূণি সৰ্ৱ্ৱাণীশ্ৱৰেণ প্ৰমাৰ্ক্ষ্যন্তে মৃত্যুৰপি পুন ৰ্ন ভৱিষ্যতি শোকৱিলাপক্লেশা অপি পুন ৰ্ন ভৱিষ্যন্তি, যতঃ প্ৰথমানি সৰ্ৱ্ৱাণি ৱ্যতীতিনি|
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று சொன்னது.
5 অপৰং সিংহাসনোপৱিষ্টো জনোঽৱদৎ পশ্যাহং সৰ্ৱ্ৱাণি নূতনীকৰোমি| পুনৰৱদৎ লিখ যত ইমানি ৱাক্যানি সত্যানি ৱিশ্ৱাস্যানি চ সন্তি|
சிங்காசனத்தின்மேல் உட்காருந்திருந்தவர்: இதோ, நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும் அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்.
6 পন ৰ্মাম্ অৱদৎ সমাপ্তং, অহং কঃ ক্ষশ্চ, অহম্ আদিৰন্তশ্চ যঃ পিপাসতি তস্মা অহং জীৱনদাযিপ্ৰস্ৰৱণস্য তোযং ৱিনামূল্যং দাস্যামি|
அன்றியும், அவர் என்னைப் பார்த்து: ஆயிற்று, நான் அல்பாவும், ஓமெகாவும், தொடக்கமும், முடிவுமாக இருக்கிறேன். தாகமாக இருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீர் ஊற்றிலிருந்து இலவசமாகக் கொடுப்பேன்.
7 যো জযতি স সৰ্ৱ্ৱেষাম্ অধিকাৰী ভৱিষ্যতি, অহঞ্চ তস্যেশ্ৱৰো ভৱিষ্যামি স চ মম পুত্ৰো ভৱিষ্যতি|
ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாக இருப்பேன், அவன் என் குமாரனாக இருப்பான்.
8 কিন্তু ভীতানাম্ অৱিশ্ৱাসিনাং ঘৃণ্যানাং নৰহন্তৃণাং ৱেশ্যাগামিনাং মোহকানাং দেৱপূজকানাং সৰ্ৱ্ৱেষাম্ অনৃতৱাদিনাঞ্চাংশো ৱহ্নিগন্ধকজ্ৱলিতহ্ৰদে ভৱিষ্যতি, এষ এৱ দ্ৱিতীযো মৃত্যুঃ| (Limnē Pyr g3041 g4442)
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகர்களும், விபசாரக்காரர்களும், சூனியக்காரர்களும், விக்கிரக ஆராதனைக்காரர்களும், பொய்யர்கள் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். (Limnē Pyr g3041 g4442)
9 অনন্তৰং শেষসপ্তদণ্ডৈঃ পৰিপূৰ্ণাঃ সপ্ত কংসা যেষাং সপ্তদূতানাং কৰেষ্ৱাসন্ তেষামেক আগত্য মাং সম্ভাষ্যাৱদৎ, আগচ্ছাহং তাং কন্যাম্ অৰ্থতো মেষশাৱকস্য ভাৱিভাৰ্য্যাং ৎৱাং দৰ্শযামি|
பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணமகளை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி,
10 ১০ ততঃ স আত্মাৱিষ্টং মাম্ অত্যুচ্চং মহাপৰ্ৱ্ৱতমেংক নীৎৱেশ্ৱৰস্য সন্নিধিতঃ স্ৱৰ্গাদ্ অৱৰোহন্তীং যিৰূশালমাখ্যাং পৱিত্ৰাং নগৰীং দৰ্শিতৱান্|
௧0பெரிதும் உயரமுமான ஒரு மலையின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான்.
11 ১১ সা ঈশ্ৱৰীযপ্ৰতাপৱিশিষ্টা তস্যাস্তেজো মহাৰ্ঘৰত্নৱদ্ অৰ্থতঃ সূৰ্য্যকান্তমণিতেজস্তুল্যং|
௧௧அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கின் ஒளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது.
12 ১২ তস্যাঃ প্ৰাচীৰং বৃহদ্ উচ্চঞ্চ তত্ৰ দ্ৱাদশ গোপুৰাণি সন্তি তদ্গোপুৰোপৰি দ্ৱাদশ স্ৱৰ্গদূতা ৱিদ্যন্তে তত্ৰ চ দ্ৱাদশ নামান্যৰ্থত ইস্ৰাযেলীযানাং দ্ৱাদশৱংশানাং নামানি লিখিতানি|
௧௨அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன.
13 ১৩ পূৰ্ৱ্ৱদিশি ত্ৰীণি গোপুৰাণি উত্তৰদিশি ত্ৰীণি গোপুৰাণি দক্ষিণদিষি ত্ৰীণি গোপুৰাণি পশ্চীমদিশি চ ত্ৰীণি গোপুৰাণি সন্তি|
௧௩வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் வம்சத்தில் உள்ள பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன.
14 ১৪ নগৰ্য্যাঃ প্ৰাচীৰস্য দ্ৱাদশ মূলানি সন্তি তত্ৰ মেষাশাৱাকস্য দ্ৱাদশপ্ৰেৰিতানাং দ্ৱাদশ নামানি লিখিতানি|
௧௪நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்கள் இருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு பெயர்களும் பதிந்திருந்தன.
15 ১৫ অনৰং নগৰ্য্যাস্তদীযগোপুৰাণাং তৎপ্ৰাচীৰস্য চ মাপনাৰ্থং মযা সম্ভাষমাণস্য দূতস্য কৰে স্ৱৰ্ণময একঃ পৰিমাণদণ্ড আসীৎ|
௧௫என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான்.
16 ১৬ নগৰ্য্যা আকৃতিশ্চতুৰস্ৰা তস্যা দৈৰ্ঘ্যপ্ৰস্থে সমে| ততঃ পৰং স তেগ পৰিমাণদণ্ডেন তাং নগৰীং পৰিমিতৱান্ তস্যাঃ পৰিমাণং দ্ৱাদশসহস্ৰনল্ৱাঃ| তস্যা দৈৰ্ঘ্যং প্ৰস্থম্ উচ্চৎৱঞ্চ সমানানি|
௧௬அந்த நகரம் சதுரமாக இருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாக இருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது இரண்டாயிரத்து இருநூறு கிலோமீட்டர் தூர அளவாக இருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாக இருந்தது.
17 ১৭ অপৰং স তস্যাঃ প্ৰাচীৰং পৰিমিতৱান্ তস্য মানৱাস্যাৰ্থতো দূতস্য পৰিমাণানুসাৰতস্তৎ চতুশ্চৎৱাৰিংশদধিকাশতহস্তপৰিমিতং |
௧௭அவன் அதின் மதிலை அளந்தபோது, மனித அளவின்படியே அது நூற்றுநாற்பத்துநான்கு முழமாக இருந்தது.
18 ১৮ তস্য প্ৰাচীৰস্য নিৰ্ম্মিতিঃ সূৰ্য্যকান্তমণিভি ৰ্নগৰী চ নিৰ্ম্মলকাচতুল্যেন শুদ্ধসুৱৰ্ণেন নিৰ্ম্মিতা|
௧௮அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாக இருந்தது.
19 ১৯ নগৰ্য্যাঃ প্ৰাচীৰস্য মূলানি চ সৰ্ৱ্ৱৱিধমহাৰ্ঘমণিভি ৰ্ভূষিতানি| তেষাং প্ৰথমং ভিত্তিমূলং সূৰ্য্যকান্তস্য, দ্ৱিতীযং নীলস্য, তৃতীযং তাম্ৰমণেঃ, চতুৰ্থং মৰকতস্য,
௧௯நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் எல்லாவகை இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம்,
20 ২০ পঞ্চমং ৱৈদূৰ্য্যস্য, ষষ্ঠং শোণৰত্নস্য, সপ্তমং চন্দ্ৰকান্তস্য, অষ্টমং গোমেদস্য, নৱমং পদ্মৰাগস্য, দশমং লশূনীযস্য, একাদশং ষেৰোজস্য, দ্ৱাদশং মৰ্টীষ্মণেশ্চাস্তি|
௨0ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே.
21 ২১ দ্ৱাদশগোপুৰাণি দ্ৱাদশমুক্তাভি ৰ্নিৰ্ম্মিতানি, একৈকং গোপুৰম্ একৈকযা মুক্তযা কৃতং নগৰ্য্যা মহামাৰ্গশ্চাচ্ছকাচৱৎ নিৰ্ম্মলসুৱৰ্ণেন নিৰ্ম্মিতং|
௨௧பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாக இருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாக இருந்தது.
22 ২২ তস্যা অন্তৰ একমপি মন্দিৰং মযা ন দৃষ্টং সতঃ সৰ্ৱ্ৱশক্তিমান্ প্ৰভুঃ পৰমেশ্ৱৰো মেষশাৱকশ্চ স্ৱযং তস্য মন্দিৰং|
௨௨அதிலே தேவாலயத்தை நான் பார்க்கவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம்.
23 ২৩ তস্যৈ নগৰ্য্যৈ দীপ্তিদানাৰ্থং সূৰ্য্যাচন্দ্ৰমসোঃ প্ৰযোজনং নাস্তি যত ঈশ্ৱৰস্য প্ৰতাপস্তাং দীপযতি মেষশাৱকশ্চ তস্যা জ্যোতিৰস্তি|
௨௩நகரத்திற்கு வெளிச்சம் கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டியதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.
24 ২৪ পৰিত্ৰাণপ্ৰাপ্তলোকনিৱহাশ্চ তস্যা আলোকে গমনাগমনে কুৰ্ৱ্ৱন্তি পৃথিৱ্যা ৰাজানশ্চ স্ৱকীযং প্ৰতাপং গৌৰৱঞ্চ তন্মধ্যম্ আনযন্তি|
௨௪இரட்சிக்கப்படுகிற மக்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்களுடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
25 ২৫ তস্যা দ্ৱাৰাণি দিৱা কদাপি ন ৰোৎস্যন্তে নিশাপি তত্ৰ ন ভৱিষ্যতি|
௨௫அங்கே இரவு இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை.
26 ২৬ সৰ্ৱ্ৱজাতীনাং গৌৰৱপ্ৰতাপৌ তন্মধ্যম্ আনেষ্যেতে|
௨௬உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள்.
27 ২৭ পৰন্ত্ৱপৱিত্ৰং ঘৃণ্যকৃদ্ অনৃতকৃদ্ ৱা কিমপি তন্মধ্যং ন প্ৰৱেক্ষ্যতি মেষশাৱকস্য জীৱনপুস্তকে যেষাং নামানি লিখিতানি কেৱলং ত এৱ প্ৰৱেক্ষ্যন্তি|
௨௭தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் செல்வதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுத்தகத்தில் எழுதப்பட்டவர்கள்மட்டும் அதில் செல்வார்கள்.

< প্ৰকাশিতং 21 >