< প্ৰকাশিতং 13 >

1 ততঃ পৰমহং সাগৰীযসিকতাযাং তিষ্ঠন্ সাগৰাদ্ উদ্গচ্ছন্তম্ একং পশুং দৃষ্টৱান্ তস্য দশ শৃঙ্গাণি সপ্ত শিৰাংসি চ দশ শৃঙ্গেষু দশ কিৰীটানি শিৰঃসু চেশ্ৱৰনিন্দাসূচকানি নামানি ৱিদ্যন্তে|
பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது கடலிலிருந்து ஒரு மிருகம் எழும்பிவருவதைப் பார்த்தேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக்கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து கிரீடங்களும், அதின் தலைகளின்மேல் தேவனை அவமதிக்கும் பெயர்களும் இருந்தன.
2 মযা দৃষ্টঃ স পশুশ্চিত্ৰৱ্যাঘ্ৰসদৃশঃ কিন্তু তস্য চৰণৌ ভল্লূকস্যেৱ ৱদনঞ্চ সিংহৱদনমিৱ| নাগনে তস্মৈ স্ৱীযপৰাক্ৰমঃ স্ৱীযং সিংহাসনং মহাধিপত্যঞ্চাদাযি|
நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போல இருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; இராட்சசப் பாம்பானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது.
3 মযি নিৰীক্ষমাণে তস্য শিৰসাম্ একম্ অন্তকাঘাতেন ছেদিতমিৱাদৃশ্যত, কিন্তু তস্যান্তকক্ষতস্য প্ৰতীকাৰো ঽক্ৰিযত ততঃ কৃৎস্নো নৰলোকস্তং পশুমধি চমৎকাৰং গতঃ,
அதின் தலைகளில் ஒன்றில் மரணத்திற்குரிய காயமடைந்திருப்பதைப் பார்த்தேன்; ஆனாலும் மரணத்திற்குரிய அந்தக் காயம் குணமாக்கப்பட்டது. பூமியிலுள்ள எல்லோரும் ஆச்சரியத்தோடு அந்த மிருகத்தைப் பின்பற்றி,
4 যশ্চ নাগস্তস্মৈ পশৱে সামৰ্থ্যং দত্তৱান্ সৰ্ৱ্ৱে তং প্ৰাণমন্ পশুমপি প্ৰণমন্তো ঽকথযন্, কো ৱিদ্যতে পশোস্তুল্যস্তেন কো যোদ্ধুমৰ্হতি|
அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரம் கொடுத்த இராட்சசப் பாம்பை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு நிகரானவன் யார்? அதோடு யுத்தம் செய்பவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.
5 অনন্তৰং তস্মৈ দৰ্পৱাক্যেশ্ৱৰনিন্দাৱাদি ৱদনং দ্ৱিচৎৱাৰিংশন্মাসান্ যাৱদ্ অৱস্থিতেঃ সামৰ্থ্যঞ্চাদাযি|
பெருமையானவைகளையும் அவதூறான வார்த்தைகளையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; மேலும், நாற்பத்திரண்டு மாதங்கள் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
6 ততঃ স ঈশ্ৱৰনিন্দনাৰ্থং মুখং ৱ্যাদায তস্য নাম তস্যাৱাসং স্ৱৰ্গনিৱাসিনশ্চ নিন্দিতুম্ আৰভত|
அது தேவனை அவமதிப்பதற்காகத் தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய இருப்பிடத்தையும், பரலோகத்தில் வசிக்கிறவர்களையும் அவமதித்து.
7 অপৰং ধাৰ্ম্মিকৈঃ সহ যোধনস্য তেষাং পৰাজযস্য চানুমতিঃ সৰ্ৱ্ৱজাতীযানাং সৰ্ৱ্ৱৱংশীযানাং সৰ্ৱ্ৱভাষাৱাদিনাং সৰ্ৱ্ৱদেশীযানাঞ্চাধিপত্যমপি তস্মা অদাযি|
மேலும், பரிசுத்தவான்களோடு யுத்தம்செய்து அவர்களை ஜெயிக்கும்படி அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது, ஒவ்வொரு கோத்திரம், மொழி, தேசம் மற்றும் மக்களின்மேலும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
8 ততো জগতঃ সৃষ্টিকালাৎ ছেদিতস্য মেষৱৎসস্য জীৱনপুস্তকে যাৱতাং নামানি লিখিতানি ন ৱিদ্যন্তে তে পৃথিৱীনিৱাসিনঃ সৰ্ৱ্ৱে তং পশুং প্ৰণংস্যন্তি|
உலகம் உண்டானதுமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியில் வசிக்கின்ற மக்கள் எல்லோரும் அதை வணங்குவார்கள்.
9 যস্য শ্ৰোত্ৰং ৱিদ্যতে স শৃণোতু|
காதுள்ளவன் எவனோ அவன் கேட்கவேண்டும்.
10 ১০ যো জনো ঽপৰান্ ৱন্দীকৃত্য নযতি স স্ৱযং ৱন্দীভূয স্থানান্তৰং গমিষ্যতি, যশ্চ খঙ্গেন হন্তি স স্ৱযং খঙ্গেন ঘানিষ্যতে| অত্ৰ পৱিত্ৰলোকানাং সহিষ্ণুতযা ৱিশ্ৱাসেন চ প্ৰকাশিতৱ্যং|
௧0சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே வெளிப்படும்.
11 ১১ অনন্তৰং পৃথিৱীত উদ্গচ্ছন্ অপৰ একঃ পশু ৰ্মযা দৃষ্টঃ স মেষশাৱকৱৎ শৃঙ্গদ্ৱযৱিশিষ্ট আসীৎ নাগৱচ্চাভাষত|
௧௧பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்புவதைப் பார்த்தேன்; அது ஒரு ஆட்டுக்குட்டியைப்போல இரண்டு கொம்புகளை உடையதாக இருந்து, இராட்சசப் பாம்பைப்போலப் பேசினது.
12 ১২ স প্ৰথমপশোৰন্তিকে তস্য সৰ্ৱ্ৱং পৰাক্ৰমং ৱ্যৱহৰতি ৱিশেষতো যস্য প্ৰথমপশোৰন্তিকক্ষতং প্ৰতীকাৰং গতং তস্য পূজাং পৃথিৱীং তন্নিৱাসিনশ্চ কাৰযতি|
௧௨அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடத்திக்காட்டி, மரணத்திற்குரிய காயத்திலிருந்தும் குணமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதில் வாழும் மக்களையும் வணங்கும்படிச் செய்தது.
13 ১৩ অপৰং মানৱানাং সাক্ষাদ্ আকাশতো ভুৱি ৱহ্নিৱৰ্ষণাদীনি মহাচিত্ৰাণি কৰোতি|
௧௩அன்றியும், அது மனிதர்களுக்கு முன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணும்விதமாகப் பெரிய அற்புதங்களை நடத்திக்காட்டி,
14 ১৪ তস্য পশোঃ সাক্ষাদ্ যেষাং চিত্ৰকৰ্ম্মণাং সাধনায সামৰ্থ্যং তস্মৈ দত্তং তৈঃ স পৃথিৱীনিৱাসিনো ভ্ৰামযতি, ৱিশেষতো যঃ পশুঃ খঙ্গেন ক্ষতযুক্তো ভূৎৱাপ্যজীৱৎ তস্য প্ৰতিমানিৰ্ম্মাণং পৃথিৱীনিৱাসিন আদিশতি|
௧௪மிருகத்தின் முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட அடையாளங்களினாலே பூமியின் மக்களை ஏமாற்றி, வாளினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு உருவம் உண்டாக்கவேண்டும் என்று பூமியின் மக்களுக்குச் சொன்னது.
15 ১৫ অপৰং তস্য পশোঃ প্ৰতিমা যথা ভাষতে যাৱন্তশ্চ মানৱাস্তাং পশুপ্ৰতিমাং ন পূজযন্তি তে যথা হন্যন্তে তথা পশুপ্ৰতিমাযাঃ প্ৰাণপ্ৰতিষ্ঠাৰ্থং সামৰ্থ্যং তস্মা অদাযি|
௧௫மேலும் அந்த மிருகத்தின் உருவம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் உருவத்தை வணங்காத எல்லோரையும் கொலைசெய்வதற்காகவும், மிருகத்தின் உருவத்திற்கு சுவாசத்தைக் கொடுக்கும்படி அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
16 ১৬ অপৰং ক্ষুদ্ৰমহদ্ধনিদৰিদ্ৰমুক্তদাসান্ সৰ্ৱ্ৱান্ দক্ষিণকৰে ভালে ৱা কলঙ্কং গ্ৰাহযতি|
௧௬அது சிறியவர்கள், பெரியவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள், சுதந்திரமானவர்கள், அடிமைகள், இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் வலது கைகளிலோ அல்லது நெற்றிகளிலோ ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும்,
17 ১৭ তস্মাদ্ যে তং কলঙ্কমৰ্থতঃ পশো ৰ্নাম তস্য নাম্নঃ সংখ্যাঙ্কং ৱা ধাৰযন্তি তান্ ৱিনা পৰেণ কেনাপি ক্ৰযৱিক্ৰযে কৰ্ত্তুং ন শক্যেতে|
௧௭அந்த மிருகத்தின் முத்திரையையோ, பெயரையோ, அந்த பெயரின் எண்ணையோ அணிந்துகொள்ளுகிறவனைத்தவிர வேறொருவனும் வாங்கவும் விற்கவும் முடியாதபடிக்கும் செய்தது.
18 ১৮ অত্ৰ জ্ঞানেন প্ৰকাশিতৱ্যং| যো বুদ্ধিৱিশিষ্টঃ স পশোঃ সংখ্যাং গণযতু যতঃ সা মানৱস্য সংখ্যা ভৱতি| সা চ সংখ্যা ষট্ষষ্ট্যধিকষট্শতানি|
௧௮இதைப் புரிந்துகொள்ள ஞானம் தேவை; அந்த மிருகத்தின் எண்ணைப் புத்தியுடையவன் கணக்குப் பார்க்கவேண்டும்; அது மனிதனுடைய எண்ணாக இருக்கிறது; அதினுடைய எண் அறுநூற்று அறுபத்தி ஆறு 666.

< প্ৰকাশিতং 13 >