< মাৰ্কঃ 6 >
1 ১ অনন্তৰং স তৎস্থানাৎ প্ৰস্থায স্ৱপ্ৰদেশমাগতঃ শিষ্যাশ্চ তৎপশ্চাদ্ গতাঃ|
௧இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, அவர் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீடர்களும் அவரோடு வந்தார்கள்.
2 ২ অথ ৱিশ্ৰামৱাৰে সতি স ভজনগৃহে উপদেষ্টুমাৰব্ধৱান্ ততোঽনেকে লোকাস্তৎকথাং শ্ৰুৎৱা ৱিস্মিত্য জগদুঃ, অস্য মনুজস্য ঈদৃশী আশ্চৰ্য্যক্ৰিযা কস্মাজ্ জাতা? তথা স্ৱকৰাভ্যাম্ ইত্থমদ্ভুতং কৰ্ম্ম কৰ্ত্তাম্ এতস্মৈ কথং জ্ঞানং দত্তম্?
௨ஓய்வுநாளானபோது, ஜெப ஆலயத்தில் போதகம்பண்ணினார். அதைக் கேட்ட அனைவரும் ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகளைச் செய்ய இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
3 ৩ কিমযং মৰিযমঃ পুত্ৰস্তজ্ঞা নো? কিমযং যাকূব্-যোসি-যিহুদা-শিমোনাং ভ্ৰাতা নো? অস্য ভগিন্যঃ কিমিহাস্মাভিঃ সহ নো? ইত্থং তে তদৰ্থে প্ৰত্যূহং গতাঃ|
௩இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் என்பவர்களுடைய சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறல் அடைந்தார்கள்.
4 ৪ তদা যীশুস্তেভ্যোঽকথযৎ স্ৱদেশং স্ৱকুটুম্বান্ স্ৱপৰিজনাংশ্চ ৱিনা কুত্ৰাপি ভৱিষ্যদ্ৱাদী অসৎকৃতো ন ভৱতি|
௪இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் சொந்த ஊரிலும், தன் உறவினர்களிலும், தன் வீட்டிலும்தான் மதிக்கப்படமாட்டான். மற்ற எல்லா இடங்களிலும் மதிக்கப்படுவான் என்றார்.
5 ৫ অপৰঞ্চ তেষামপ্ৰত্যযাৎ স ৱিস্মিতঃ কিযতাং ৰোগিণাং ৱপুঃষু হস্তম্ অৰ্পযিৎৱা কেৱলং তেষামাৰোগ্যকৰণাদ্ অন্যৎ কিমপি চিত্ৰকাৰ্য্যং কৰ্ত্তাং ন শক্তঃ|
௫அங்கே அவர் சில நோயாளிகள்மேல்மட்டும் கரங்களை வைத்து, அவர்களைக் குணமாக்கினார், வேறு அற்புதங்கள் எதுவும் செய்யமுடியாமல்.
6 ৬ অথ স চতুৰ্দিক্স্থ গ্ৰামান্ ভ্ৰমিৎৱা উপদিষ্টৱান্
௬அவர்களுக்கு விசுவாசம் இல்லாததினால் அதைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மற்ற கிராமங்களுக்குச்சென்று, போதகம்பண்ணினார்.
7 ৭ দ্ৱাদশশিষ্যান্ আহূয অমেধ্যভূতান্ ৱশীকৰ্ত্তাং শক্তিং দত্ত্ৱা তেষাং দ্ৱৌ দ্ৱৌ জনো প্ৰেষিতৱান্|
௭இயேசு பன்னிரண்டு சீடர்களையும் அழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து,
8 ৮ পুনৰিত্যাদিশদ্ যূযম্ একৈকাং যষ্টিং ৱিনা ৱস্ত্ৰসংপুটঃ পূপঃ কটিবন্ধে তাম্ৰখণ্ডঞ্চ এষাং কিমপি মা গ্ৰহ্লীত,
௮வழிக்குப் பையையோ, அப்பத்தையோ, இடுப்புக் கச்சையில் பணத்தையோ, எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியைமட்டும் எடுத்துக்கொண்டுபோகவும்;
9 ৯ মাৰ্গযাত্ৰাযৈ পাদেষূপানহৌ দত্ত্ৱা দ্ৱে উত্তৰীযে মা পৰিধদ্ৱ্ৱং|
௯காலணிகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளை அணிந்துகொள்ளாமலிருக்கவும் கட்டளையிட்டார்.
10 ১০ অপৰমপ্যুক্তং তেন যূযং যস্যাং পুৰ্য্যাং যস্য নিৱেশনং প্ৰৱেক্ষ্যথ তাং পুৰীং যাৱন্ন ত্যক্ষ্যথ তাৱৎ তন্নিৱেশনে স্থাস্যথ|
௧0பின்பு அவர்களைப் பார்த்து: நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டிற்குச் சென்றால், அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள்.
11 ১১ তত্ৰ যদি কেপি যুষ্মাকমাতিথ্যং ন ৱিদধতি যুষ্মাকং কথাশ্চ ন শৃণ্ৱন্তি তৰ্হি তৎস্থানাৎ প্ৰস্থানসমযে তেষাং ৱিৰুদ্ধং সাক্ষ্যং দাতুং স্ৱপাদানাস্ফাল্য ৰজঃ সম্পাতযত; অহং যুষ্মান্ যথাৰ্থং ৱচ্মি ৱিচাৰদিনে তন্নগৰস্যাৱস্থাতঃ সিদোমামোৰযো ৰ্নগৰযোৰৱস্থা সহ্যতৰা ভৱিষ্যতি|
௧௧யாராவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வசனங்களைக் கேட்காமலும் இருந்தால், நீங்கள் அந்த இடத்தைவிட்டுப் புறப்படும்போது, அவர்களுக்கு சாட்சியாக உங்களுடைய கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணத்திற்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார்.
12 ১২ অথ তে গৎৱা লোকানাং মনঃপৰাৱৰ্ত্তনীঃ কথা প্ৰচাৰিতৱন্তঃ|
௧௨அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து;
13 ১৩ এৱমনেকান্ ভূতাংশ্চ ত্যাজিতৱন্তস্তথা তৈলেন মৰ্দ্দযিৎৱা বহূন্ জনানৰোগানকাৰ্ষুঃ|
௧௩அநேக பிசாசுகளைத் துரத்தி, அநேக நோயாளிகளை எண்ணெய் பூசி சுகமாக்கினார்கள்.
14 ১৪ ইত্থং তস্য সুখ্যাতিশ্চতুৰ্দিশো ৱ্যাপ্তা তদা হেৰোদ্ ৰাজা তন্নিশম্য কথিতৱান্, যোহন্ মজ্জকঃ শ্মশানাদ্ উত্থিত অতোহেতোস্তেন সৰ্ৱ্ৱা এতা অদ্ভুতক্ৰিযাঃ প্ৰকাশন্তে|
௧௪இயேசுவினுடைய பெயர் பிரசித்தமானதினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: மரித்துப்போன யோவான்ஸ்நானன் உயிரோடு எழுந்தான், எனவே அவனிடம் இப்படிப்பட்டப் பலத்த செய்கைகள் வெளிப்படுகிறது என்றான்.
15 ১৫ অন্যেঽকথযন্ অযম্ এলিযঃ, কেপি কথিতৱন্ত এষ ভৱিষ্যদ্ৱাদী যদ্ৱা ভৱিষ্যদ্ৱাদিনাং সদৃশ একোযম্|
௧௫சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறுசிலர்: அவர் ஒரு தீர்க்கதரிசி அல்லது பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போல இருக்கிறார் என்று சொன்னார்கள்.
16 ১৬ কিন্তু হেৰোদ্ ইত্যাকৰ্ণ্য ভাষিতৱান্ যস্যাহং শিৰশ্ছিন্নৱান্ স এৱ যোহনযং স শ্মশানাদুদতিষ্ঠৎ|
௧௬ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன், நான் தலையை வெட்டிக்கொன்ற யோவான்தான்; அவன் உயிரோடு எழுந்தான் என்றான்.
17 ১৭ পূৰ্ৱ্ৱং স্ৱভ্ৰাতুঃ ফিলিপস্য পত্ন্যা উদ্ৱাহং কৃতৱন্তং হেৰোদং যোহনৱাদীৎ স্ৱভাতৃৱধূ ৰ্ন ৱিৱাহ্যা|
௧௭ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கி வைத்துக்கொண்டபோது,
18 ১৮ অতঃ কাৰণাৎ হেৰোদ্ লোকং প্ৰহিত্য যোহনং ধৃৎৱা বন্ধনালযে বদ্ধৱান্|
௧௮யோவான் ஏரோதைப் பார்த்து: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்ளுவது நியாயம் இல்லை என்று சொன்னதினால், ஏரோது போர்வீரர்களை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.
19 ১৯ হেৰোদিযা তস্মৈ যোহনে প্ৰকুপ্য তং হন্তুম্ ঐচ্ছৎ কিন্তু ন শক্তা,
௧௯ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆனாலும், அவளால் முடியாமல்போனது.
20 ২০ যস্মাদ্ হেৰোদ্ তং ধাৰ্ম্মিকং সৎপুৰুষঞ্চ জ্ঞাৎৱা সম্মন্য ৰক্ষিতৱান্; তৎকথাং শ্ৰুৎৱা তদনুসাৰেণ বহূনি কৰ্ম্মাণি কৃতৱান্ হৃষ্টমনাস্তদুপদেশং শ্ৰুতৱাংশ্চ|
௨0ஏனென்றால், யோவான் நீதியும் பரிசுத்தமும் உள்ளவன் என்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேகக் காரியங்களைச் செய்து, விருப்பத்தோடு அவன் சொல்லைக் கேட்டுவந்தான்.
21 ২১ কিন্তু হেৰোদ্ যদা স্ৱজন্মদিনে প্ৰধানলোকেভ্যঃ সেনানীভ্যশ্চ গালীল্প্ৰদেশীযশ্ৰেষ্ঠলোকেভ্যশ্চ ৰাত্ৰৌ ভোজ্যমেকং কৃতৱান্
௨௧ஏரோது தன்னுடைய பிறந்தநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், படைத்தளபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனிதர்களுக்கும் ஒரு விருந்துபண்ணினபோது,
22 ২২ তস্মিন্ শুভদিনে হেৰোদিযাযাঃ কন্যা সমেত্য তেষাং সমক্ষং সংনৃত্য হেৰোদস্তেন সহোপৱিষ্টানাঞ্চ তোষমজীজনৎ ততা নৃপঃ কন্যামাহ স্ম মত্তো যদ্ যাচসে তদেৱ তুভ্যং দাস্যে|
௨௨ஏரோதியாளின் மகள் சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடம் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொல்லி;
23 ২৩ শপথং কৃৎৱাকথযৎ চেদ্ ৰাজ্যাৰ্দ্ধমপি যাচসে তদপি তুভ্যং দাস্যে|
௨௩நீ என்னிடத்தில் எதைக்கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு வாக்குக்கொடுத்தான்.
24 ২৪ ততঃ সা বহি ৰ্গৎৱা স্ৱমাতৰং পপ্ৰচ্ছ কিমহং যাচিষ্যে? তদা সাকথযৎ যোহনো মজ্জকস্য শিৰঃ|
௨௪அப்பொழுது, அவள் வெளியேபோய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயிடம் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள்.
25 ২৫ অথ তূৰ্ণং ভূপসমীপম্ এত্য যাচমানাৱদৎ ক্ষণেস্মিন্ যোহনো মজ্জকস্য শিৰঃ পাত্ৰে নিধায দেহি, এতদ্ যাচেঽহং|
௨௫உடனே அவள் ராஜாவிடம் சீக்கிரமாக வந்து: நீர் இப்பொழுதே ஒரு தட்டில் யோவான்ஸ்நானனுடைய தலையை வைத்து எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள்.
26 ২৬ তস্মাৎ ভূপোঽতিদুঃখিতঃ, তথাপি স্ৱশপথস্য সহভোজিনাঞ্চানুৰোধাৎ তদনঙ্গীকৰ্ত্তুং ন শক্তঃ|
௨௬அப்பொழுது ராஜா அதிக துக்கமடைந்தான்; ஆனாலும், வாக்குக் கொடுத்ததினாலும், அவனோடுகூட பந்தியில் இருந்தவர்களுக்காகவும், அவள் கேட்டுக்கொண்டதை மறுக்க அவனுக்கு மனம் இல்லாமல்;
27 ২৭ তৎক্ষণং ৰাজা ঘাতকং প্ৰেষ্য তস্য শিৰ আনেতুমাদিষ্টৱান্|
௨௭உடனே யோவான்ஸ்நானனுடைய தலையைக் கொண்டுவரும்படி போர்வீரனுக்குக் கட்டளைக் கொடுத்து அனுப்பினான்.
28 ২৮ ততঃ স কাৰাগাৰং গৎৱা তচ্ছিৰশ্ছিৎৱা পাত্ৰে নিধাযানীয তস্যৈ কন্যাযৈ দত্তৱান্ কন্যা চ স্ৱমাত্ৰে দদৌ|
௨௮அப்படியே அவன்போய், காவல்கூடத்திலே அவனுடைய தலையை வெட்டி, அவன் தலையை ஒரு தட்டிலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறு பெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
29 ২৯ অননতৰং যোহনঃ শিষ্যাস্তদ্ৱাৰ্ত্তাং প্ৰাপ্যাগত্য তস্য কুণপং শ্মশানেঽস্থাপযন্|
௨௯அவனுடைய சீடர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் சரீரத்தை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
30 ৩০ অথ প্ৰেষিতা যীশোঃ সন্নিধৌ মিলিতা যদ্ যচ্ চক্ৰুঃ শিক্ষযামাসুশ্চ তৎসৰ্ৱ্ৱৱাৰ্ত্তাস্তস্মৈ কথিতৱন্তঃ|
௩0அப்பொழுது அப்போஸ்தலர்கள் இயேசுவிடம் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் போதித்தவைகள் எல்லாவற்றையும் அவருக்கு அறிவித்தார்கள்.
31 ৩১ স তানুৱাচ যূযং ৱিজনস্থানং গৎৱা ৱিশ্ৰাম্যত যতস্তৎসন্নিধৌ বহুলোকানাং সমাগমাৎ তে ভোক্তুং নাৱকাশং প্ৰাপ্তাঃ|
௩௧அவர் அவர்களைப் பார்த்து: வனாந்திரமான ஒரு இடத்திற்குச் சென்று தனிமையில் கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் வாருங்கள் என்றார்; ஏனென்றால், அநேக மக்கள் அவரிடம் வருகிறதும் போகிறதுமாக இருந்ததினால் அவர்களுக்கு சாப்பிட நேரமில்லாமல் இருந்தது.
32 ৩২ ততস্তে নাৱা ৱিজনস্থানং গুপ্তং গগ্মুঃ|
௩௨அப்படியே அவர்கள் தனிமையாக ஒரு படகில் ஏறி வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்கள்.
33 ৩৩ ততো লোকনিৱহস্তেষাং স্থানান্তৰযানং দদৰ্শ, অনেকে তং পৰিচিত্য নানাপুৰেভ্যঃ পদৈৰ্ৱ্ৰজিৎৱা জৱেন তৈষামগ্ৰে যীশোঃ সমীপ উপতস্থুঃ|
௩௩அவர்கள் புறப்பட்டுப் போகிறதை மக்கள் பார்த்தார்கள். அவரை அறிந்த மக்கள் எல்லாப் பட்டணங்களிலுமிருந்து கால்நடையாகவே அந்த இடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்பே அங்கு சென்றுசேர்ந்து, அவரிடம் கூடிவந்தார்கள்.
34 ৩৪ তদা যীশু ৰ্নাৱো বহিৰ্গত্য লোকাৰণ্যানীং দৃষ্ট্ৱা তেষু কৰুণাং কৃতৱান্ যতস্তেঽৰক্ষকমেষা ইৱাসন্ তদা স তান নানাপ্ৰসঙ্গান্ উপদিষ্টৱান্|
௩௪இயேசு கரையில் வந்து, அங்கே கூடிவந்த மக்களைப் பார்த்து, அவர்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல இருந்ததினால், அவர்கள்மேல் மனதுருகி, அநேகக் காரியங்களை அவர்களுக்குப் போதிக்கத்தொடங்கினார்.
35 ৩৫ অথ দিৱান্তে সতি শিষ্যা এত্য যীশুমূচিৰে, ইদং ৱিজনস্থানং দিনঞ্চাৱসন্নং|
௩௫அதிகநேரம் ஆனபின்பு, அவருடைய சீடர்கள் அவரிடம் வந்து: இது வனாந்திரமான இடம், அதிகநேரமும் ஆனது;
36 ৩৬ লোকানাং কিমপি খাদ্যং নাস্তি, অতশ্চতুৰ্দিক্ষু গ্ৰামান্ গন্তুং ভোজ্যদ্ৰৱ্যাণি ক্ৰেতুঞ্চ ভৱান্ তান্ ৱিসৃজতু|
௩௬சாப்பிடுகிறதற்கும் இவர்களிடம் ஒன்றும் இல்லை; எனவே இவர்கள் சுற்றிலும் இருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும்போய், அப்பங்களை வாங்கிக்கொள்ள இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.
37 ৩৭ তদা স তানুৱাচ যূযমেৱ তান্ ভোজযত; ততস্তে জগদু ৰ্ৱযং গৎৱা দ্ৱিশতসংখ্যকৈ ৰ্মুদ্ৰাপাদৈঃ পূপান্ ক্ৰীৎৱা কিং তান্ ভোজযিষ্যামঃ?
௩௭அவர் அவர்களைப் பார்த்து: நீங்களே அவர்களுக்கு உணவுகொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள்போய், இருநூறு வெள்ளிக்காசுகளுக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குச் சாப்பிடக் கொடுக்கலாமா? என்றார்கள்.
38 ৩৮ তদা স তান্ পৃষ্ঠৱান্ যুষ্মাকং সন্নিধৌ কতি পূপা আসতে? গৎৱা পশ্যত; ততস্তে দৃষ্ট্ৱা তমৱদন্ পঞ্চ পূপা দ্ৱৌ মৎস্যৌ চ সন্তি|
௩௮அதற்கு அவர்: உங்களிடம் எத்தனை அப்பங்கள் இருக்கிறது என்று போய்ப் பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் இருக்கிறது என்றார்கள்.
39 ৩৯ তদা স লোকান্ শস্পোপৰি পংক্তিভিৰুপৱেশযিতুম্ আদিষ্টৱান্,
௩௯அப்பொழுது எல்லோரையும் பசும்புல்லின்மேல் பந்தி உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
40 ৪০ ততস্তে শতং শতং জনাঃ পঞ্চাশৎ পঞ্চাশজ্জনাশ্চ পংক্তিভি ৰ্ভুৱি সমুপৱিৱিশুঃ|
௪0அப்படியே வரிசை வரிசையாக, நூறுநூறுபேராகவும் ஐம்பதுஐம்பதுபேராகவும் உட்கார்ந்தார்கள்.
41 ৪১ অথ স তান্ পঞ্চপূপান্ মৎস্যদ্ৱযঞ্চ ধৃৎৱা স্ৱৰ্গং পশ্যন্ ঈশ্ৱৰগুণান্ অন্ৱকীৰ্ত্তযৎ তান্ পূপান্ ভংক্ত্ৱা লোকেভ্যঃ পৰিৱেষযিতুং শিষ্যেভ্যো দত্তৱান্ দ্ৱা মৎস্যৌ চ ৱিভজ্য সৰ্ৱ্ৱেভ্যো দত্তৱান্|
௪௧அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறத் தம்முடைய சீடர்களிடம் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லோருக்கும் பங்கிட்டார்.
42 ৪২ ততঃ সৰ্ৱ্ৱে ভুক্ত্ৱাতৃপ্যন্|
௪௨எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தி அடைந்தார்கள்.
43 ৪৩ অনন্তৰং শিষ্যা অৱশিষ্টৈঃ পূপৈ ৰ্মৎস্যৈশ্চ পূৰ্ণান্ দ্ৱদশ ডল্লকান্ জগৃহুঃ|
௪௩மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துண்டுகளைப் பன்னிரண்டு கூடை நிறைய எடுத்தார்கள்.
44 ৪৪ তে ভোক্তাৰঃ প্ৰাযঃ পঞ্চ সহস্ৰাণি পুৰুষা আসন্|
௪௪அப்பங்கள் சாப்பிட்ட ஆண்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராக இருந்தார்கள்.
45 ৪৫ অথ স লোকান্ ৱিসৃজন্নেৱ নাৱমাৰোঢুং স্ৱস্মাদগ্ৰে পাৰে বৈৎসৈদাপুৰং যাতুঞ্চ শ্ষ্যিন্ ৱাঢমাদিষ্টৱান্|
௪௫அவர் மக்களை அனுப்பிவிடும்போது, தம்முடைய சீடர்கள் படகில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவிற்கு, தமக்கு முன்பே போகச்சொல்லி, அவர்களை துரிதப்படுத்தினார்.
46 ৪৬ তদা স সৰ্ৱ্ৱান্ ৱিসৃজ্য প্ৰাৰ্থযিতুং পৰ্ৱ্ৱতং গতঃ|
௪௬அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, ஜெபம்பண்ணுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்.
47 ৪৭ ততঃ সন্ধ্যাযাং সত্যাং নৌঃ সিন্ধুমধ্য উপস্থিতা কিন্তু স একাকী স্থলে স্থিতঃ|
௪௭மாலைநேரமானபோது படகு நடுக்கடலில் இருந்தது; அவரோ கரையிலே தனிமையாக இருந்தார்.
48 ৪৮ অথ সম্মুখৱাতৱহনাৎ শিষ্যা নাৱং ৱাহযিৎৱা পৰিশ্ৰান্তা ইতি জ্ঞাৎৱা স নিশাচতুৰ্থযামে সিন্ধূপৰি পদ্ভ্যাং ৱ্ৰজন্ তেষাং সমীপমেত্য তেষামগ্ৰে যাতুম্ উদ্যতঃ|
௪௮அப்பொழுது எதிர்க்காற்று வீசிக்கொண்டிருந்ததால், அவர்கள் கஷ்டப்பட்டு துடுப்பு போடுகிறதை அவர் பார்த்து, அதிகாலையில் கடலின்மேல் நடந்து அவர்களிடம் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல காணப்பட்டார்.
49 ৪৯ কিন্তু শিষ্যাঃ সিন্ধূপৰি তং ৱ্ৰজন্তং দৃষ্ট্ৱা ভূতমনুমায ৰুৰুৱুঃ,
௪௯அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் பார்த்து, அவரை பிசாசு என்று நினைத்து, சத்தமிட்டு அலறினார்கள்.
50 ৫০ যতঃ সৰ্ৱ্ৱে তং দৃষ্ট্ৱা ৱ্যাকুলিতাঃ| অতএৱ যীশুস্তৎক্ষণং তৈঃ সহালপ্য কথিতৱান্, সুস্থিৰা ভূত, অযমহং মা ভৈষ্ট|
௫0அவர்கள் எல்லோரும் அவரைப் பார்த்து கலக்கம் அடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடு பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாமல் இருங்கள் என்று சொல்லி.
51 ৫১ অথ নৌকামাৰুহ্য তস্মিন্ তেষাং সন্নিধিং গতে ৱাতো নিৱৃত্তঃ; তস্মাত্তে মনঃসু ৱিস্মিতা আশ্চৰ্য্যং মেনিৰে|
௫௧அவர்கள் இருந்த படகில் ஏறினார். அப்பொழுது காற்று அமைதியானது; எனவே அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.
52 ৫২ যতস্তে মনসাং কাঠিন্যাৎ তৎ পূপীযম্ আশ্চৰ্য্যং কৰ্ম্ম ন ৱিৱিক্তৱন্তঃ|
௫௨அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாக இருந்ததினால் அப்பங்களைக்குறித்து அவர்கள் உணராமல் போனார்கள்.
53 ৫৩ অথ তে পাৰং গৎৱা গিনেষৰৎপ্ৰদেশমেত্য তট উপস্থিতাঃ|
௫௩அவர்கள் கடலைக்கடந்து கெனேசரேத்து என்னும் நாட்டிற்கு வந்து, கரை ஏறினார்கள்.
54 ৫৪ তেষু নৌকাতো বহিৰ্গতেষু তৎপ্ৰদেশীযা লোকাস্তং পৰিচিত্য
௫௪அவர்கள் படகில் இருந்து இறங்கினவுடனே, மக்கள் அவரை அறிந்து,
55 ৫৫ চতুৰ্দিক্ষু ধাৱন্তো যত্ৰ যত্ৰ ৰোগিণো নৰা আসন্ তান্ সৰ্ৱ্ৱান খট্ৱোপৰি নিধায যত্ৰ কুত্ৰচিৎ তদ্ৱাৰ্ত্তাং প্ৰাপুঃ তৎ স্থানম্ আনেতুম্ আৰেভিৰে|
௫௫அந்தச் சுற்றுபுறமெல்லாம் ஓடிச்சென்று, நோயாளிகளைப் படுக்கைகளில் படுக்கவைத்து, அவர் வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்துகொண்டுவந்தார்கள்;
56 ৫৬ তথা যত্ৰ যত্ৰ গ্ৰামে যত্ৰ যত্ৰ পুৰে যত্ৰ যত্ৰ পল্ল্যাঞ্চ তেন প্ৰৱেশঃ কৃতস্তদ্ৱৰ্ত্মমধ্যে লোকাঃ পীডিতান্ স্থাপযিৎৱা তস্য চেলগ্ৰন্থিমাত্ৰং স্প্ৰষ্টুম্ তেষামৰ্থে তদনুজ্ঞাং প্ৰাৰ্থযন্তঃ যাৱন্তো লোকাঃ পস্পৃশুস্তাৱন্ত এৱ গদান্মুক্তাঃ|
௫௬இவைகள் இல்லாமல், அவர் சென்ற கிராமங்கள், பட்டணங்கள், நாடுகள் எல்லாவற்றிலும் சந்தைவெளிகளிலே நோயாளிகளைக் கொண்டுவந்து, அவருடைய ஆடையின் ஓரத்தையாவது அவர்கள் தொடுவதற்கு அனுமதிக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட எல்லோரும் சுகம் பெற்றுக்கொண்டார்கள்.