< লূকঃ 1 >

1 প্ৰথমতো যে সাক্ষিণো ৱাক্যপ্ৰচাৰকাশ্চাসন্ তেঽস্মাকং মধ্যে যদ্যৎ সপ্ৰমাণং ৱাক্যমৰ্পযন্তি স্ম
மதிப்புக்குரிய தெயோப்பிலுவே, நமது மத்தியில் நிறைவேறிய நிகழ்வுகளின் விவரத்தை ஒழுங்காக எழுத, அநேகர் முன்வந்தார்கள்.
2 তদনুসাৰতোঽন্যেপি বহৱস্তদ্ৱৃত্তান্তং ৰচযিতুং প্ৰৱৃত্তাঃ|
துவக்கத்திலிருந்து கண்கண்ட சாட்சிகளாகவும், வார்த்தையை அறிவிக்கும் ஊழியர்களாகவும் இருந்த அவர்கள், எங்களுக்குக் கொடுக்கப்பட்டபடியே எழுதினார்கள்.
3 অতএৱ হে মহামহিমথিযফিল্ ৎৱং যা যাঃ কথা অশিক্ষ্যথাস্তাসাং দৃঢপ্ৰমাণানি যথা প্ৰাপ্নোষি
நானும் உமக்கு அவற்றை ஒழுங்காக எழுதுவதற்குத் தீர்மானித்தேன். துவக்கத்திலிருந்து நடந்த எல்லாவற்றையும் கவனமாய் விசாரித்தறிந்து, இதை எழுதுகிறேன்.
4 তদৰ্থং প্ৰথমমাৰভ্য তানি সৰ্ৱ্ৱাণি জ্ঞাৎৱাহমপি অনুক্ৰমাৎ সৰ্ৱ্ৱৱৃত্তান্তান্ তুভ্যং লেখিতুং মতিমকাৰ্ষম্|
இதனால் உமக்குப் போதிக்கப்பட்ட விஷயங்கள் நிச்சயமாக உண்மையானவை என்பதை நீர் அறிந்துகொள்ளலாம்.
5 যিহূদাদেশীযহেৰোদ্নামকে ৰাজৎৱং কুৰ্ৱ্ৱতি অবীযযাজকস্য পৰ্য্যাযাধিকাৰী সিখৰিযনামক একো যাজকো হাৰোণৱংশোদ্ভৱা ইলীশেৱাখ্যা
ஏரோது அரசன் யூதேயாவை ஆட்சி செய்த காலத்தில், சகரியா என்னும் பெயருடைய ஒரு ஆசாரியன் இருந்தான். இவன் அபியாவின் ஆசாரியப் பிரிவைச் சேர்ந்தவன். இவனுடைய மனைவி எலிசபெத்தும், ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியைச் சேர்ந்தவள்.
6 তস্য জাযা দ্ৱাৱিমৌ নিৰ্দোষৌ প্ৰভোঃ সৰ্ৱ্ৱাজ্ঞা ৱ্যৱস্থাশ্চ সংমন্য ঈশ্ৱৰদৃষ্টৌ ধাৰ্ম্মিকাৱাস্তাম্|
அவர்கள் இருவரும் இறைவனின் பார்வையில் நீதிமான்களாக இருந்தார்கள். மற்றவர்களால் குற்றஞ்சாட்டப்பட இடமில்லாமல், கர்த்தருடைய எல்லாக் கட்டளைகளையும் ஒழுங்குவிதிகளையும் கைக்கொண்டார்கள்.
7 তযোঃ সন্তান একোপি নাসীৎ, যত ইলীশেৱা বন্ধ্যা তৌ দ্ৱাৱেৱ ৱৃদ্ধাৱভৱতাম্|
ஆனாலும் எலிசபெத் மலடியாக இருந்ததினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; அவர்கள் இருவரும், இப்பொழுது வயது சென்றவர்களாய் இருந்தார்கள்.
8 যদা স্ৱপৰ্য্যানুক্ৰমেণ সিখৰিয ঈশ্ৱাস্য সমক্ষং যাজকীযং কৰ্ম্ম কৰোতি
ஒருமுறை அபியாவின் பிரிவை சேர்ந்தவர்கள், ஆலயத்தில் பணிபுரிந்தபோது, சகரியாவும் இறைவனுக்கு முன்பாக ஆசாரியப் பணியைச் செய்தான்.
9 তদা যজ্ঞস্য দিনপৰিপায্যা পৰমেশ্ৱৰস্য মন্দিৰে প্ৰৱেশকালে ধূপজ্ৱালনং কৰ্ম্ম তস্য কৰণীযমাসীৎ|
ஒரு நாள் ஆசாரியர்களின் வழக்கத்தின்படி கடமைகளைச் செய்வதற்கு சீட்டு போட்டபோது, கர்த்தருடைய ஆலயத்திற்குள் போய் தூபங்காட்டும் பணியைச் செய்வதற்கு சகரியா தெரிந்தெடுக்கப்பட்டான்.
10 ১০ তদ্ধূপজ্ৱালনকালে লোকনিৱহে প্ৰাৰ্থনাং কৰ্তুং বহিস্তিষ্ঠতি
தூபங்காட்டும் வேளை வந்தபோது வழிபாட்டிற்கு கூடிவந்த மக்கள் வெளியே மன்றாடிக்கொண்டிருந்தார்கள்.
11 ১১ সতি সিখৰিযো যস্যাং ৱেদ্যাং ধূপং জ্ৱালযতি তদ্দক্ষিণপাৰ্শ্ৱে পৰমেশ্ৱৰস্য দূত এক উপস্থিতো দৰ্শনং দদৌ|
அப்பொழுது கர்த்தரின் தூதன் ஒருவன், தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று சகரியாவுக்குக் காட்சியளித்தான்.
12 ১২ তং দৃষ্ট্ৱা সিখৰিয উদ্ৱিৱিজে শশঙ্কে চ|
சகரியா அவனைக் கண்டு திடுக்கிட்டுப் பயந்தான்.
13 ১৩ তদা স দূতস্তং বভাষে হে সিখৰিয মা ভৈস্তৱ প্ৰাৰ্থনা গ্ৰাহ্যা জাতা তৱ ভাৰ্য্যা ইলীশেৱা পুত্ৰং প্ৰসোষ্যতে তস্য নাম যোহন্ ইতি কৰিষ্যসি|
அந்தத் தூதனோ அவனைப் பார்த்து: “சகரியாவே, பயப்படாதே; உனது மன்றாட்டு கேட்கப்பட்டது. உனது மனைவி எலிசபெத் உனக்கு ஒரு மகனைப் பெறுவாள், நீ அவனுக்கு யோவான் என்று பெயரிட வேண்டும்.
14 ১৪ কিঞ্চ ৎৱং সানন্দঃ সহৰ্ষশ্চ ভৱিষ্যসি তস্য জন্মনি বহৱ আনন্দিষ্যন্তি চ|
அவன் உனக்கு மகிழ்ச்சியும் மனக்களிப்புமாய் இருப்பான். அவனுடைய பிறப்பின் நிமித்தம், அநேகர் பெருமகிழ்ச்சியடைவார்கள்;
15 ১৫ যতো হেতোঃ স পৰমেশ্ৱৰস্য গোচৰে মহান্ ভৱিষ্যতি তথা দ্ৰাক্ষাৰসং সুৰাং ৱা কিমপি ন পাস্যতি, অপৰং জন্মাৰভ্য পৱিত্ৰেণাত্মনা পৰিপূৰ্ণঃ
அவன் கர்த்தருடைய பார்வையில் பெரியவனாயிருப்பான். அவன் ஒருபோதும் திராட்சை இரசத்தையோ, மதுபானத்தையோ அருந்த மாட்டான், அவன் தனது தாயின் வயிற்றில் இருக்கும்போதே பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவான்.
16 ১৬ সন্ ইস্ৰাযেল্ৱংশীযান্ অনেকান্ প্ৰভোঃ পৰমেশ্ৱৰস্য মাৰ্গমানেষ্যতি|
அவன் இஸ்ரயேல் மக்களில் பலரை அவர்களுடைய இறைவனாகிய கர்த்தரிடத்திற்குத் திரும்பவும் கொண்டுவருவான்.
17 ১৭ সন্তানান্ প্ৰতি পিতৃণাং মনাংসি ধৰ্ম্মজ্ঞানং প্ৰত্যনাজ্ঞাগ্ৰাহিণশ্চ পৰাৱৰ্ত্তযিতুং, প্ৰভোঃ পৰমেশ্ৱৰস্য সেৱাৰ্থম্ একাং সজ্জিতজাতিং ৱিধাতুঞ্চ স এলিযৰূপাত্মশক্তিপ্ৰাপ্তস্তস্যাগ্ৰে গমিষ্যতি|
அவன் எலியாவின் ஆவியோடும் வல்லமையோடும் கர்த்தருக்கு முன்பாகப் போவான்; தந்தையரின் இருதயத்தைப் பிள்ளைகள் பக்கமாகத் திருப்புவான், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்குத் திருப்புவான். இவ்விதமாய் கர்த்தருக்காக முன்னேற்பாடு செய்திருக்கிற மக்களை அவன் ஆயத்தம் செய்வான்” என்றான்.
18 ১৮ তদা সিখৰিযো দূতমৱাদীৎ কথমেতদ্ ৱেৎস্যামি? যতোহং ৱৃদ্ধো মম ভাৰ্য্যা চ ৱৃদ্ধা|
அப்பொழுது சகரியா அந்தத் தூதனிடம், “இது நடக்கும் என்று நான் எப்படி நம்பலாம்? நான் கிழவனாய் இருக்கிறேன், என் மனைவியும் வயது சென்றவளாய் இருக்கிறாளே” என்றான்.
19 ১৯ ততো দূতঃ প্ৰত্যুৱাচ পশ্যেশ্ৱৰস্য সাক্ষাদ্ৱৰ্ত্তী জিব্ৰাযেল্নামা দূতোহং ৎৱযা সহ কথাং গদিতুং তুভ্যমিমাং শুভৱাৰ্ত্তাং দাতুঞ্চ প্ৰেষিতঃ|
அதற்கு அந்தத் தூதன், “நான் இறைவனின் சமுகத்தில் நிற்கின்ற காபிரியேல்; உன்னுடன் பேசுவதற்காகவும், இந்த நற்செய்தியை உனக்கு அறிவிப்பதற்காகவும் நான் அனுப்பப்பட்டிருக்கிறேன்.
20 ২০ কিন্তু মদীযং ৱাক্যং কালে ফলিষ্যতি তৎ ৎৱযা ন প্ৰতীতম্ অতঃ কাৰণাদ্ যাৱদেৱ তানি ন সেৎস্যন্তি তাৱৎ ৎৱং ৱক্তুংমশক্তো মূকো ভৱ|
நீயோ எனது வார்த்தைகளை நம்பவில்லை, ஆதலால் இவை நிகழும் நாள்வரைக்கும் நீ பேச முடியாமல் ஊமையாயிருப்பாய்; நான் சொன்னவையோ நியமித்த காலத்தில் நிறைவேறும்” என்றான்.
21 ২১ তদানীং যে যে লোকাঃ সিখৰিযমপৈক্ষন্ত তে মধ্যেমন্দিৰং তস্য বহুৱিলম্বাদ্ আশ্চৰ্য্যং মেনিৰে|
அதேவேளையில், சகரியாவின் வருகைக்காக வெளியே காத்துக்கொண்டிருந்த மக்கள், அவன் ஏன் ஆலயத்தில் நீண்ட நேரமாய் இருக்கிறான் என யோசிக்கத் தொடங்கினார்கள்.
22 ২২ স বহিৰাগতো যদা কিমপি ৱাক্যং ৱক্তুমশক্তঃ সঙ্কেতং কৃৎৱা নিঃশব্দস্তস্যৌ তদা মধ্যেমন্দিৰং কস্যচিদ্ দৰ্শনং তেন প্ৰাপ্তম্ ইতি সৰ্ৱ্ৱে বুবুধিৰে|
அவன் வெளியே வந்தபோது, அவர்களோடு பேச அவனால் முடியவில்லை. அவன் அவர்களுக்கு சைகை காட்டியதால், அவன் ஆலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டிருக்கிறான் என்று அவர்கள் அறிந்துகொண்டார்கள். ஆனால் அவன் பேசமுடியாதவனாகவே இருந்தான்.
23 ২৩ অনন্তৰং তস্য সেৱনপৰ্য্যাযে সম্পূৰ্ণে সতি স নিজগেহং জগাম|
அவனது பணிசெய்யும் காலம் முடிவடைந்தபோது, அவன் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
24 ২৪ কতিপযদিনেষু গতেষু তস্য ভাৰ্য্যা ইলীশেৱা গৰ্ব্ভৱতী বভূৱ
இந்த நாட்களுக்குப்பின் அவன் மனைவி எலிசபெத் கருத்தரித்தாள், அவள் ஐந்து மாதங்களாக பிறர் கண்களில் படாதிருந்தாள்.
25 ২৫ পশ্চাৎ সা পঞ্চমাসান্ সংগোপ্যাকথযৎ লোকানাং সমক্ষং মমাপমানং খণ্ডযিতুং পৰমেশ্ৱৰো মযি দৃষ্টিং পাতযিৎৱা কৰ্ম্মেদৃশং কৃতৱান্|
அப்பொழுது அவள், “கர்த்தரே இதைச் செய்தார், இந்த நாட்களில் அவர் எனக்குத் தயவுகாட்டி, என் மக்களிடையே எனக்கிருந்த அவமானத்தை நீக்கிவிட்டார்” என்றாள்.
26 ২৬ অপৰঞ্চ তস্যা গৰ্ব্ভস্য ষষ্ঠে মাসে জাতে গালীল্প্ৰদেশীযনাসৰৎপুৰে
ஆறாம் மாதத்தில், கலிலேயாவிலுள்ள நாசரேத் என்னும் ஒரு பட்டணத்திற்கு இறைவன் காபிரியேல் தூதனை,
27 ২৭ দাযূদো ৱংশীযায যূষফ্নাম্নে পুৰুষায যা মৰিযম্নামকুমাৰী ৱাগ্দত্তাসীৎ তস্যাঃ সমীপং জিব্ৰাযেল্ দূত ঈশ্ৱৰেণ প্ৰহিতঃ|
ஒரு கன்னிகையிடம் அனுப்பினார்; அவள் தாவீதின் சந்ததியானாகிய யோசேப்பு என்னும் பெயருள்ள ஒருவனுக்கு திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அந்தக் கன்னிகையின் பெயர் மரியாள்.
28 ২৮ স গৎৱা জগাদ হে ঈশ্ৱৰানুগৃহীতকন্যে তৱ শুভং ভূযাৎ প্ৰভুঃ পৰমেশ্ৱৰস্তৱ সহাযোস্তি নাৰীণাং মধ্যে ৎৱমেৱ ধন্যা|
கர்த்தருடைய தூதன் அவளிடம் போய், “மிகவும் தயவு பெற்றவளே வாழ்க! கர்த்தர் உன்னுடன் இருக்கிறார்” என்றான்.
29 ২৯ তদানীং সা তং দৃষ্ট্ৱা তস্য ৱাক্যত উদ্ৱিজ্য কীদৃশং ভাষণমিদম্ ইতি মনসা চিন্তযামাস|
தூதன் சொன்ன வார்த்தையைக் கேட்ட மரியாள் மிகவும் கலக்கமடைந்து, இந்த வாழ்த்துதல் எத்தகையதோ என்று யோசிக்கத் தொடங்கினாள்.
30 ৩০ ততো দূতোঽৱদৎ হে মৰিযম্ ভযং মাকাৰ্ষীঃ, ৎৱযি পৰমেশ্ৱৰস্যানুগ্ৰহোস্তি|
ஆனால் அந்தத் தூதன் அவளிடம், “மரியாளே, பயப்படாதே! நீ இறைவனிடத்தில் தயவு பெற்றிருக்கிறாய்.
31 ৩১ পশ্য ৎৱং গৰ্ব্ভং ধৃৎৱা পুত্ৰং প্ৰসোষ্যসে তস্য নাম যীশুৰিতি কৰিষ্যসি|
நீ கருத்தரித்து ஒரு மகனைப் பெற்றெடுப்பாய், அவருக்கு இயேசு என்று பெயரிட வேண்டும்.
32 ৩২ স মহান্ ভৱিষ্যতি তথা সৰ্ৱ্ৱেভ্যঃ শ্ৰেষ্ঠস্য পুত্ৰ ইতি খ্যাস্যতি; অপৰং প্ৰভুঃ পৰমেশ্ৱৰস্তস্য পিতুৰ্দাযূদঃ সিংহাসনং তস্মৈ দাস্যতি;
அவர் பெரியவராயிருப்பார், மகா உன்னதமானவரின் மகன் என அழைக்கப்படுவார். அவருடைய தந்தையாகிய தாவீதின் அரியணையை இறைவனாகிய கர்த்தர் அவருக்குக் கொடுப்பார்.
33 ৩৩ তথা স যাকূবো ৱংশোপৰি সৰ্ৱ্ৱদা ৰাজৎৱং কৰিষ্যতি, তস্য ৰাজৎৱস্যান্তো ন ভৱিষ্যতি| (aiōn g165)
அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றும் ஆட்சி செய்வார்; அவருடைய அரசு ஒருபோதும் முடிவுபெறாது” என்றான். (aiōn g165)
34 ৩৪ তদা মৰিযম্ তং দূতং বভাষে নাহং পুৰুষসঙ্গং কৰোমি তৰ্হি কথমেতৎ সম্ভৱিষ্যতি?
அப்பொழுது மரியாள் அந்தத் தூதனிடம், “இது எப்படியாகும், நான் கன்னியாய் இருக்கிறேனே?” என்றாள்.
35 ৩৫ ততো দূতোঽকথযৎ পৱিত্ৰ আত্মা ৎৱামাশ্ৰাযিষ্যতি তথা সৰ্ৱ্ৱশ্ৰেষ্ঠস্য শক্তিস্তৱোপৰি ছাযাং কৰিষ্যতি ততো হেতোস্তৱ গৰ্ব্ভাদ্ যঃ পৱিত্ৰবালকো জনিষ্যতে স ঈশ্ৱৰপুত্ৰ ইতি খ্যাতিং প্ৰাপ্স্যতি|
அதற்கு தூதன், “பரிசுத்த ஆவியானவர் உன்மேல் வருவார், மகா உன்னதமானவரின் வல்லமை உன்மேல் நிழலிடும். எனவே பிறக்கும் பரிசுத்த குழந்தை இறைவனின் மகன் என அழைக்கப்படுவார்.
36 ৩৬ অপৰঞ্চ পশ্য তৱ জ্ঞাতিৰিলীশেৱা যাং সৰ্ৱ্ৱে বন্ধ্যামৱদন্ ইদানীং সা ৱাৰ্দ্ধক্যে সন্তানমেকং গৰ্ব্ভেঽধাৰযৎ তস্য ষষ্ঠমাসোভূৎ|
உனது உறவினராகிய எலிசபெத்தும் தனது முதிர்வயதில் ஒரு குழந்தையைப் பெற இருக்கிறாள். மலடி எனப்பட்டவள் இப்பொழுது கருத்தரித்து ஆறு மாதங்களாகின்றன.
37 ৩৭ কিমপি কৰ্ম্ম নাসাধ্যম্ ঈশ্ৱৰস্য|
இறைவனால் செய்ய முடியாதது ஒன்றும் இல்லை” என்றான்.
38 ৩৮ তদা মৰিযম্ জগাদ, পশ্য প্ৰভেৰহং দাসী মহ্যং তৱ ৱাক্যানুসাৰেণ সৰ্ৱ্ৱমেতদ্ ঘটতাম্; অননতৰং দূতস্তস্যাঃ সমীপাৎ প্ৰতস্থে|
அதற்கு மரியாள், “இதோ நான் கர்த்தரின் அடிமை; நீர் சொன்னபடியே எனக்கு நடக்கட்டும்” என்றாள். அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவளைவிட்டுப் போனான்.
39 ৩৯ অথ কতিপযদিনাৎ পৰং মৰিযম্ তস্মাৎ পৰ্ৱ্ৱতমযপ্ৰদেশীযযিহূদাযা নগৰমেকং শীঘ্ৰং গৎৱা
அந்நாட்களில் மரியாள் புறப்பட்டு யூதேயாவின் மலைநாட்டிலுள்ள ஒரு பட்டணத்திற்கு விரைவாகப் போனாள்;
40 ৪০ সিখৰিযযাজকস্য গৃহং প্ৰৱিশ্য তস্য জাযাম্ ইলীশেৱাং সম্বোধ্যাৱদৎ|
அங்கே அவள் சகரியாவின் வீட்டிற்குள் போய், எலிசபெத்தை வாழ்த்தினாள்.
41 ৪১ ততো মৰিযমঃ সম্বোধনৱাক্যে ইলীশেৱাযাঃ কৰ্ণযোঃ প্ৰৱিষ্টমাত্ৰে সতি তস্যা গৰ্ব্ভস্থবালকো ননৰ্ত্ত| তত ইলীশেৱা পৱিত্ৰেণাত্মনা পৰিপূৰ্ণা সতী
மரியாளுடைய வாழ்த்துதலை எலிசபெத் கேட்டபோது, அவளுடைய கருப்பையில் இருந்த குழந்தை துள்ளியது. அப்பொழுது எலிசபெத் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
42 ৪২ প্ৰোচ্চৈৰ্গদিতুমাৰেভে, যোষিতাং মধ্যে ৎৱমেৱ ধন্যা, তৱ গৰ্ব্ভস্থঃ শিশুশ্চ ধন্যঃ|
உரத்த குரலில் சொன்னதாவது: “நீ பெண்களுக்குள்ளே ஆசீர்வதிக்கப்பட்டவள். நீ பெற்றெடுக்கப்போகும் பிள்ளையும் ஆசீர்வதிக்கப்பட்டது!
43 ৪৩ ৎৱং প্ৰভোৰ্মাতা, মম নিৱেশনে ৎৱযা চৰণাৱৰ্পিতৌ, মমাদ্য সৌভাগ্যমেতৎ|
என் கர்த்தரின் தாய் என்னிடம் வருவதற்கு, நான் இவ்வளவாய் தயவுபெற்றேன்.
44 ৪৪ পশ্য তৱ ৱাক্যে মম কৰ্ণযোঃ প্ৰৱিষ্টমাত্ৰে সতি মমোদৰস্থঃ শিশুৰানন্দান্ ননৰ্ত্ত|
உனது வாழ்த்துதலின் சத்தம் எனது காதில்பட்டதுமே, எனது கருப்பையில் இருக்கும் குழந்தை மகிழ்ச்சியினால் துள்ளிற்று.
45 ৪৫ যা স্ত্ৰী ৱ্যশ্ৱসীৎ সা ধন্যা, যতো হেতোস্তাং প্ৰতি পৰমেশ্ৱৰোক্তং ৱাক্যং সৰ্ৱ্ৱং সিদ্ধং ভৱিষ্যতি|
கர்த்தர் தனக்குச் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே!” என்றாள்.
46 ৪৬ তদানীং মৰিযম্ জগাদ| ধন্যৱাদং পৰেশস্য কৰোতি মামকং মনঃ|
அப்பொழுது மரியாள் சொன்னதாவது: “என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது,
47 ৪৭ মমাত্মা তাৰকেশে চ সমুল্লাসং প্ৰগচ্ছতি|
என் ஆவி என் இரட்சகராகிய இறைவனில் பெருமகிழ்ச்சியடைகிறது.
48 ৪৮ অকৰোৎ স প্ৰভু ৰ্দুষ্টিং স্ৱদাস্যা দুৰ্গতিং প্ৰতি| পশ্যাদ্যাৰভ্য মাং ধন্যাং ৱক্ষ্যন্তি পুৰুষাঃ সদা|
ஏனெனில், அவர் தமது அடிமையின் தாழ்மை நிலையைத் தயவுடன் பார்த்தார். இப்பொழுதிலிருந்து எல்லாத் தலைமுறையினரும் என்னை ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று அழைப்பார்கள்;
49 ৪৯ যঃ সৰ্ৱ্ৱশক্তিমান্ যস্য নামাপি চ পৱিত্ৰকং| স এৱ সুমহৎকৰ্ম্ম কৃতৱান্ মন্নিমিত্তকং|
வல்லமையுள்ளவர் எனக்கு அரும்பெரும் காரியங்களைச் செய்தார்; பரிசுத்தர் என்பது அவருடைய பெயர்.
50 ৫০ যে বিভ্যতি জনাস্তস্মাৎ তেষাং সন্তানপংক্তিষু| অনুকম্পা তদীযা চ সৰ্ৱ্ৱদৈৱ সুতিষ্ঠতি|
அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு, தலைமுறை தலைமுறையாக அவர் இரக்கம் காண்பிக்கிறார்.
51 ৫১ স্ৱবাহুবলতস্তেন প্ৰাকাশ্যত পৰাক্ৰমঃ| মনঃকুমন্ত্ৰণাসাৰ্দ্ধং ৱিকীৰ্য্যন্তেঽভিমানিনঃ|
அவர் தமது புயத்தினால் வல்லமையான செயல்களை நிறைவேற்றினார்; தங்களுடைய உள்ளத்தில் அகந்தையான நினைவு கொண்டவர்களை அவர் சிதறடித்தார்.
52 ৫২ সিংহাসনগতাল্লোকান্ বলিনশ্চাৱৰোহ্য সঃ| পদেষূচ্চেষু লোকাংস্তু ক্ষুদ্ৰান্ সংস্থাপযত্যপি|
ஆளுநர்களை அவர்களுடைய அரியணைகளில் இருந்து கீழே வீழ்த்தினார். ஆனால், தாழ்மையானவர்களையோ அவர் உயர்த்தினார்.
53 ৫৩ ক্ষুধিতান্ মানৱান্ দ্ৰৱ্যৈৰুত্তমৈঃ পৰিতৰ্প্য সঃ| সকলান্ ধনিনো লোকান্ ৱিসৃজেদ্ ৰিক্তহস্তকান্|
அவர் பசியாய் இருந்தவர்களை நன்மைகளால் நிரப்பினார். ஆனால் செல்வந்தர்களையோ வெறுமையாய் அனுப்பினார்.
54 ৫৪ ইব্ৰাহীমি চ তদ্ৱংশে যা দযাস্তি সদৈৱ তাং| স্মৃৎৱা পুৰা পিতৃণাং নো যথা সাক্ষাৎ প্ৰতিশ্ৰুতং| (aiōn g165)
அவர் தமது வேலைக்காரனாகிய இஸ்ரயேலுக்கு உதவி செய்தார்.
55 ৫৫ ইস্ৰাযেল্সেৱকস্তেন তথোপক্ৰিযতে স্ৱযং||
நம்முடைய தந்தையர்களுக்கு அவர் வாக்களித்தபடியே, ஆபிரகாமுக்கும் அவனுடைய தலைமுறையினருக்கும் என்றென்றுமுள்ள இரக்கத்தை அவர் நினைத்தபடியே செய்திருக்கிறார்” என்று பாடினாள். (aiōn g165)
56 ৫৬ অনন্তৰং মৰিযম্ প্ৰাযেণ মাসত্ৰযম্ ইলীশেৱযা সহোষিৎৱা ৱ্যাঘুয্য নিজনিৱেশনং যযৌ|
மரியாள் எலிசபெத்துடன் மூன்று மாதங்கள் தங்கியிருந்து, அதற்குப் பின்பு தன் வீட்டிற்குத் திரும்பிப் போனாள்.
57 ৫৭ তদনন্তৰম্ ইলীশেৱাযাঃ প্ৰসৱকাল উপস্থিতে সতি সা পুত্ৰং প্ৰাসোষ্ট|
எலிசபெத்திற்குப் பிள்ளைபெறும் காலம் வந்தபோது, அவள் ஒரு மகனைப் பெற்றாள்.
58 ৫৮ ততঃ পৰমেশ্ৱৰস্তস্যাং মহানুগ্ৰহং কৃতৱান্ এতৎ শ্ৰুৎৱা সমীপৱাসিনঃ কুটুম্বাশ্চাগত্য তযা সহ মুমুদিৰে|
அவளுடைய அயலவர்களும் உறவினர்களும் கர்த்தர் அவளுக்குப் பெரிதான இரக்கம் காண்பித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டபோது, அவளுடன்கூட மகிழ்ச்சி அடைந்தார்கள்.
59 ৫৯ তথাষ্টমে দিনে তে বালকস্য ৎৱচং ছেত্তুম্ এত্য তস্য পিতৃনামানুৰূপং তন্নাম সিখৰিয ইতি কৰ্ত্তুমীষুঃ|
அவர்களுடைய அயலவர்களும் உறவினர்களும் எட்டாம் நாளில் அந்தப் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யும்படி வந்து சேர்ந்தார்கள். அவர்கள் குழந்தைக்கு அவனுடைய தகப்பனின் பெயரின்படியே சகரியா என்று பெயரிட நினைத்தார்கள்.
60 ৬০ কিন্তু তস্য মাতাকথযৎ তন্ন, নামাস্য যোহন্ ইতি কৰ্ত্তৱ্যম্|
ஆனால் குழந்தையின் தாயோ, “இல்லை! அவன் யோவான் என்றே அழைக்கப்பட வேண்டும்” என்று சொன்னாள்.
61 ৬১ তদা তে ৱ্যাহৰন্ তৱ ৱংশমধ্যে নামেদৃশং কস্যাপি নাস্তি|
அதற்கு அவர்கள் அவளிடம், “உனது உறவினரில் அந்தப் பெயருள்ளவன் ஒருவனும் இல்லையே” என்றார்கள்.
62 ৬২ ততঃ পৰং তস্য পিতৰং সিখৰিযং প্ৰতি সঙ্কেত্য পপ্ৰচ্ছুঃ শিশোঃ কিং নাম কাৰিষ্যতে?
அப்பொழுது அவர்கள் பிள்ளையின் தகப்பன் என்ன பெயரிட விரும்புகிறான் என்று அறிவதற்கு, அவனிடம் சைகை மூலம் கேட்டார்கள்.
63 ৬৩ ততঃ স ফলকমেকং যাচিৎৱা লিলেখ তস্য নাম যোহন্ ভৱিষ্যতি| তস্মাৎ সৰ্ৱ্ৱে আশ্চৰ্য্যং মেনিৰে|
அவன் ஒரு கற்பலகையைக் கேட்டுவாங்கி, அவர்கள் எல்லோரும் வியப்படையத்தக்கதாக, “இவனுடைய பெயர் யோவான்” என்று எழுதினான்.
64 ৬৪ তৎক্ষণং সিখৰিযস্য জিহ্ৱাজাড্যেঽপগতে স মুখং ৱ্যাদায স্পষ্টৱৰ্ণমুচ্চাৰ্য্য ঈশ্ৱৰস্য গুণানুৱাদং চকাৰ|
உடனே அவனது வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவு கட்டவிழ்ந்தது. அவன் இறைவனைப் புகழ்ந்து பேசத் தொடங்கினான்.
65 ৬৫ তস্মাচ্চতুৰ্দিক্স্থাঃ সমীপৱাসিলোকা ভীতা এৱমেতাঃ সৰ্ৱ্ৱাঃ কথা যিহূদাযাঃ পৰ্ৱ্ৱতমযপ্ৰদেশস্য সৰ্ৱ্ৱত্ৰ প্ৰচাৰিতাঃ|
அயலவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இந்தக் காரியங்களைக்குறித்து, யூதேயாவின் மலைநாடு எங்கும் மக்கள் பேசிக்கொண்டார்கள்.
66 ৬৬ তস্মাৎ শ্ৰোতাৰো মনঃসু স্থাপযিৎৱা কথযাম্বভূৱুঃ কীদৃশোযং বালো ভৱিষ্যতি? অথ পৰমেশ্ৱৰস্তস্য সহাযোভূৎ|
இதைக் கேள்விப்பட்ட எல்லோரும் வியப்படைந்து, “இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாய் இருக்குமோ?” என்றார்கள் கர்த்தருடைய கரம் அந்த பிள்ளையோடு இருந்தது.
67 ৬৭ তদা যোহনঃ পিতা সিখৰিযঃ পৱিত্ৰেণাত্মনা পৰিপূৰ্ণঃ সন্ এতাদৃশং ভৱিষ্যদ্ৱাক্যং কথযামাস|
அந்தப் பிள்ளையின் தகப்பனான சகரியா பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு இறைவாக்கு உரைத்ததாவது:
68 ৬৮ ইস্ৰাযেলঃ প্ৰভু ৰ্যস্তু স ধন্যঃ পৰমেশ্ৱৰঃ| অনুগৃহ্য নিজাল্লোকান্ স এৱ পৰিমোচযেৎ|
“இஸ்ரயேலின் இறைவனாகிய கர்த்தருக்குத் துதி உண்டாவதாக, அவர் வந்து தம்முடைய மக்களை மீட்டுக்கொண்டார்.
69 ৬৯ ৱিপক্ষজনহস্তেভ্যো যথা মোচ্যামহে ৱযং| যাৱজ্জীৱঞ্চ ধৰ্ম্মেণ সাৰল্যেন চ নিৰ্ভযাঃ|
அவர் தமது தாசனாகிய தாவீதின் வம்சத்திலிருந்து, நாம் இரட்சிப்பு அடைவதற்கான இரட்சணியக்கொம்பை எழுப்பியிருக்கிறார்.
70 ৭০ সেৱামহৈ তমেৱৈকম্ এতৎকাৰণমেৱ চ| স্ৱকীযং সুপৱিত্ৰঞ্চ সংস্মৃত্য নিযমং সদা|
அவர் தம்முடைய பரிசுத்த இறைவாக்கினர் மூலமாய், நெடுங்காலத்திற்கு முன்பே சொல்லியிருந்தார். (aiōn g165)
71 ৭১ কৃপযা পুৰুষান্ পূৰ্ৱ্ৱান্ নিকষাৰ্থাত্তু নঃ পিতুঃ| ইব্ৰাহীমঃ সমীপে যং শপথং কৃতৱান্ পুৰা|
நம்முடைய பகைவரிடமிருந்தும், நம்மை வெறுக்கும் எல்லோருடைய கைகளிலிருந்தும் நமக்கு விடுதலையை ஏற்படுத்துவேன் என்றும்,
72 ৭২ তমেৱ সফলং কৰ্ত্তং তথা শত্ৰুগণস্য চ| ঋতীযাকাৰিণশ্চৈৱ কৰেভ্যো ৰক্ষণায নঃ|
அவருடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்து, நம்முடைய தந்தையருக்கு இரக்கம் காண்பிப்பேன் என்றும் சொல்லியிருந்தார்.
73 ৭৩ সৃষ্টেঃ প্ৰথমতঃ স্ৱীযৈঃ পৱিত্ৰৈ ৰ্ভাৱিৱাদিভিঃ| (aiōn g165)
அவர் நமது தந்தையான ஆபிரகாமுக்கு ஆணையிட்டு:
74 ৭৪ যথোক্তৱান্ তথা স্ৱস্য দাযূদঃ সেৱকস্য তু|
நம்முடைய பகைவருடைய கையினின்று நம்மைத் தப்புவித்து, நமது நாட்களெல்லாம் பயமின்றிப் பணிசெய்யும்படி,
75 ৭৫ ৱংশে ত্ৰাতাৰমেকং স সমুৎপাদিতৱান্ স্ৱযম্|
பரிசுத்தத்திலும் நீதியிலும் அவருக்கு முன்பாக என்றும் வாக்குக் கொடுத்திருந்தார்.
76 ৭৬ অতো হে বালক ৎৱন্তু সৰ্ৱ্ৱেভ্যঃ শ্ৰেষ্ঠ এৱ যঃ| তস্যৈৱ ভাৱিৱাদীতি প্ৰৱিখ্যাতো ভৱিষ্যসি| অস্মাকং চৰণান্ ক্ষেমে মাৰ্গে চালযিতুং সদা| এৱং ধ্ৱান্তেঽৰ্থতো মৃত্যোশ্ছাযাযাং যে তু মানৱাঃ|
“என் பிள்ளையே, நீயோ, உன்னதமானவருடைய இறைவாக்கினன் என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழியை ஆயத்தம்பண்ணும்படி, அவருக்கு முன்பாகப் போவாய்.
77 ৭৭ উপৱিষ্টাস্তু তানেৱ প্ৰকাশযিতুমেৱ হি| কৃৎৱা মহানুকম্পাং হি যামেৱ পৰমেশ্ৱৰঃ|
நம்முடைய இறைவனின் மிகுந்த இரக்கத்தின் நிமித்தம் அவருடைய மக்களுக்கு பாவங்கள் மன்னிக்கப்படுவதன் மூலமாய், இரட்சிப்பின் அறிவைக் கொடுப்பாய்.
78 ৭৮ ঊৰ্দ্ৱ্ৱাৎ সূৰ্য্যমুদায্যৈৱাস্মভ্যং প্ৰাদাত্তু দৰ্শনং| তযানুকম্পযা স্ৱস্য লোকানাং পাপমোচনে|
இருளில் வாழ்கிறவர்களுக்கும் மரண இருளில் இருக்கிறவர்களுக்கும் ஒளியைத் தருவதற்கும்,
79 ৭৯ পৰিত্ৰাণস্য তেভ্যো হি জ্ঞানৱিশ্ৰাণনায চ| প্ৰভো ৰ্মাৰ্গং পৰিষ্কৰ্ত্তুং তস্যাগ্ৰাযী ভৱিষ্যসি||
நமது கால்களை சமாதானத்தின் வழியில் நடத்துவதற்கும், பரலோகத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.”
80 ৮০ অথ বালকঃ শৰীৰেণ বুদ্ধ্যা চ ৱৰ্দ্ধিতুমাৰেভে; অপৰঞ্চ স ইস্ৰাযেলো ৱংশীযলোকানাং সমীপে যাৱন্ন প্ৰকটীভূতস্তাস্তাৱৎ প্ৰান্তৰে ন্যৱসৎ|
அந்தப் பிள்ளை வளர்ந்து ஆவியில் வலிமையடைந்தது; அவன் வெளியரங்கமாக இஸ்ரயேலரின்முன் வரும் காலம்வரைக்கும் பாலைவனத்தில் வாழ்ந்தான்.

< লূকঃ 1 >