< যোহনঃ 13 >

1 নিস্তাৰোৎসৱস্য কিঞ্চিৎকালাৎ পূৰ্ৱ্ৱং পৃথিৱ্যাঃ পিতুঃ সমীপগমনস্য সমযঃ সন্নিকৰ্ষোভূদ্ ইতি জ্ঞাৎৱা যীশুৰাপ্ৰথমাদ্ যেষু জগৎপ্ৰৱাসিষ্ৱাত্মীযলোকেষ প্ৰেম কৰোতি স্ম তেষু শেষং যাৱৎ প্ৰেম কৃতৱান্|
பஸ்காபண்டிகைக்கு முன்பே, இயேசு இந்த உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இந்த உலகத்தில் இருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுவரைக்கும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.
2 পিতা তস্য হস্তে সৰ্ৱ্ৱং সমৰ্পিতৱান্ স্ৱযম্ ঈশ্ৱৰস্য সমীপাদ্ আগচ্ছদ্ ঈশ্ৱৰস্য সমীপং যাস্যতি চ, সৰ্ৱ্ৱাণ্যেতানি জ্ঞাৎৱা ৰজন্যাং ভোজনে সম্পূৰ্ণে সতি,
சீமோனின் மகனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் மாலை உணவு சாப்பிடும்போது;
3 যদা শৈতান্ তং পৰহস্তেষু সমৰ্পযিতুং শিমোনঃ পুত্ৰস্য ঈষ্কাৰিযোতিযস্য যিহূদা অন্তঃকৰণে কুপ্ৰৱৃত্তিং সমাৰ্পযৎ,
தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தார் என்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து;
4 তদা যীশু ৰ্ভোজনাসনাদ্ উত্থায গাত্ৰৱস্ত্ৰং মোচযিৎৱা গাত্ৰমাৰ্জনৱস্ত্ৰং গৃহীৎৱা তেন স্ৱকটিম্ অবধ্নাৎ,
பந்தியிலிருந்து எழுந்து, தம்முடைய மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து, இடுப்பிலே கட்டிக்கொண்டு,
5 পশ্চাদ্ একপাত্ৰে জলম্ অভিষিচ্য শিষ্যাণাং পাদান্ প্ৰক্ষাল্য তেন কটিবদ্ধগাত্ৰমাৰ্জনৱাসসা মাৰ্ষ্টুং প্ৰাৰভত|
பின்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சீடர்களுடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த துண்டால் துடைக்கவும் தொடங்கினார்.
6 ততঃ শিমোন্পিতৰস্য সমীপমাগতে স উক্তৱান্ হে প্ৰভো ভৱান্ কিং মম পাদৌ প্ৰক্ষালযিষ্যতি?
அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா? என்றான்.
7 যীশুৰুদিতৱান্ অহং যৎ কৰোমি তৎ সম্প্ৰতি ন জানাসি কিন্তু পশ্চাজ্ জ্ঞাস্যসি|
இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் செய்கிறது என்னவென்று இப்பொழுது உனக்கு தெரியாது, இனிமேல் தெரியும் என்றார்.
8 ততঃ পিতৰঃ কথিতৱান্ ভৱান্ কদাপি মম পাদৌ ন প্ৰক্ষালযিষ্যতি| যীশুৰকথযদ্ যদি ৎৱাং ন প্ৰক্ষালযে তৰ্হি মযি তৱ কোপ্যংশো নাস্তি| (aiōn g165)
பேதுரு அவரைப் பார்த்து: நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவகூடாது என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். (aiōn g165)
9 তদা শিমোন্পিতৰঃ কথিতৱান্ হে প্ৰভো তৰ্হি কেৱলপাদৌ ন, মম হস্তৌ শিৰশ্চ প্ৰক্ষালযতু|
அதற்குச் சீமோன்பேதுரு: ஆண்டவரே, என் கால்களை மட்டுமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூட கழுவவேண்டும் என்றான்.
10 ১০ ততো যীশুৰৱদদ্ যো জনো ধৌতস্তস্য সৰ্ৱ্ৱাঙ্গপৰিষ্কৃতৎৱাৎ পাদৌ ৱিনান্যাঙ্গস্য প্ৰক্ষালনাপেক্ষা নাস্তি| যূযং পৰিষ্কৃতা ইতি সত্যং কিন্তু ন সৰ্ৱ্ৱে,
௧0இயேசு அவனைப் பார்த்து: குளித்தவன் தன் கால்களைமட்டும் கழுவவேண்டியதாக இருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாக இருக்கிறான்; நீங்களும் சுத்தமாக இருக்கிறீர்கள்; ஆனாலும் எல்லோரும் அல்ல என்றார்.
11 ১১ যতো যো জনস্তং পৰকৰেষু সমৰ্পযিষ্যতি তং স জ্ঞাতৱান; অতএৱ যূযং সৰ্ৱ্ৱে ন পৰিষ্কৃতা ইমাং কথাং কথিতৱান্|
௧௧தம்மைக் காட்டிக் கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்கள் எல்லோரும் சுத்தமுள்ளவர்கள் இல்லை என்றார்.
12 ১২ ইত্থং যীশুস্তেষাং পাদান্ প্ৰক্ষাল্য ৱস্ত্ৰং পৰিধাযাসনে সমুপৱিশ্য কথিতৱান্ অহং যুষ্মান্ প্ৰতি কিং কৰ্ম্মাকাৰ্ষং জানীথ?
௧௨அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய ஆடைகளை அணிந்துகொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா?
13 ১৩ যূযং মাং গুৰুং প্ৰভুঞ্চ ৱদথ তৎ সত্যমেৱ ৱদথ যতোহং সএৱ ভৱামি|
௧௩நீங்கள் என்னைப் போதகர் என்றும், ஆண்டவர் என்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான்.
14 ১৪ যদ্যহং প্ৰভু ৰ্গুৰুশ্চ সন্ যুষ্মাকং পাদান্ প্ৰক্ষালিতৱান্ তৰ্হি যুষ্মাকমপি পৰস্পৰং পাদপ্ৰক্ষালনম্ উচিতম্|
௧௪ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்களுடைய கால்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவவேண்டும்.
15 ১৫ অহং যুষ্মান্ প্ৰতি যথা ৱ্যৱাহৰং যুষ্মান্ তথা ৱ্যৱহৰ্ত্তুম্ একং পন্থানং দৰ্শিতৱান্|
௧௫நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்.
16 ১৬ অহং যুষ্মানতিযথাৰ্থং ৱদামি, প্ৰভো ৰ্দাসো ন মহান্ প্ৰেৰকাচ্চ প্ৰেৰিতো ন মহান্|
௧௬உண்மையாகவே உண்மையாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானைவிட பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரைவிட பெரியவனல்ல.
17 ১৭ ইমাং কথাং ৱিদিৎৱা যদি তদনুসাৰতঃ কৰ্ম্মাণি কুৰুথ তৰ্হি যূযং ধন্যা ভৱিষ্যথ|
௧௭நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாக இருப்பீர்கள்.
18 ১৮ সৰ্ৱ্ৱেষু যুষ্মাসু কথামিমাং কথযামি ইতি ন, যে মম মনোনীতাস্তানহং জানামি, কিন্তু মম ভক্ষ্যাণি যো ভুঙ্ক্তে মৎপ্ৰাণপ্ৰাতিকূল্যতঃ| উত্থাপযতি পাদস্য মূলং স এষ মানৱঃ| যদেতদ্ ধৰ্ম্মপুস্তকস্য ৱচনং তদনুসাৰেণাৱশ্যং ঘটিষ্যতে|
௧௮உங்கள் எல்லோரையும் குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆனாலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பத்தை சாப்பிடுகிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான்.
19 ১৯ অহং স জন ইত্যত্ৰ যথা যুষ্মাকং ৱিশ্ৱাসো জাযতে তদৰ্থং এতাদৃশঘটনাৎ পূৰ্ৱ্ৱম্ অহমিদানীং যুষ্মভ্যমকথযম্|
௧௯அது நடக்கும்போது நானே அவர் என்று நீங்கள் விசுவாசிப்பதற்கு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
20 ২০ অহং যুষ্মানতীৱ যথাৰ্থং ৱদামি, মযা প্ৰেৰিতং জনং যো গৃহ্লাতি স মামেৱ গৃহ্লাতি যশ্চ মাং গৃহ্লাতি স মৎপ্ৰেৰকং গৃহ্লাতি|
௨0நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
21 ২১ এতাং কথাং কথযিৎৱা যীশু ৰ্দুঃখী সন্ প্ৰমাণং দত্ত্ৱা কথিতৱান্ অহং যুষ্মানতিযথাৰ্থং ৱদামি যুষ্মাকম্ একো জনো মাং পৰকৰেষু সমৰ্পযিষ্যতি|
௨௧இயேசு இவைகளைச் சொன்னபின்பு ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று உண்மையாகவே உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார்.
22 ২২ ততঃ স কমুদ্দিশ্য কথামেতাং কথিতৱান্ ইত্যত্ৰ সন্দিগ্ধাঃ শিষ্যাঃ পৰস্পৰং মুখমালোকযিতুং প্ৰাৰভন্ত|
௨௨அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீடர்கள் சந்தேகப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்தார்கள்.
23 ২৩ তস্মিন্ সমযে যীশু ৰ্যস্মিন্ অপ্ৰীযত স শিষ্যস্তস্য ৱক্ষঃস্থলম্ অৱালম্বত|
௨௩அந்தச் நேரத்தில் அவருடைய சீடர்களில் இயேசுவிற்கு அன்பானவனாக இருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.
24 ২৪ শিমোন্পিতৰস্তং সঙ্কেতেনাৱদৎ, অযং কমুদ্দিশ্য কথামেতাম্ কথযতীতি পৃচ্ছ|
௨௪யாரைக்குறித்துச் சொல்லுகிறார் என்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.
25 ২৫ তদা স যীশো ৰ্ৱক্ষঃস্থলম্ অৱলম্ব্য পৃষ্ঠৱান্, হে প্ৰভো স জনঃ কঃ?
௨௫அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான்.
26 ২৬ ততো যীশুঃ প্ৰত্যৱদদ্ একখণ্ডং পূপং মজ্জযিৎৱা যস্মৈ দাস্যামি সএৱ সঃ; পশ্চাৎ পূপখণ্ডমেকং মজ্জযিৎৱা শিমোনঃ পুত্ৰায ঈষ্কৰিযোতীযায যিহূদৈ দত্তৱান্|
௨௬இயேசு மறுமொழியாக: நான் இந்த அப்பத்துண்டைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துண்டைத் தோய்த்து, சீமோன் மகனாகிய யூதாஸ்காரியோத்திற்குக் கொடுத்தார்.
27 ২৭ তস্মিন্ দত্তে সতি শৈতান্ তমাশ্ৰযৎ; তদা যীশুস্তম্ অৱদৎ ৎৱং যৎ কৰিষ্যসি তৎ ক্ষিপ্ৰং কুৰু|
௨௭அந்த அப்பத் துண்டை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனைப் பார்த்து: நீ செய்கிறதைச் சீக்கிரமாகச் செய் என்றார்.
28 ২৮ কিন্তু স যেনাশযেন তাং কথামকথাযৎ তম্ উপৱিষ্টলোকানাং কোপি নাবুধ্যত;
௨௮அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் யாருக்கும் புரியவில்லை.
29 ২৯ কিন্তু যিহূদাঃ সমীপে মুদ্ৰাসম্পুটকস্থিতেঃ কেচিদ্ ইত্থম্ অবুধ্যন্ত পাৰ্ৱ্ৱণাসাদনাৰ্থং কিমপি দ্ৰৱ্যং ক্ৰেতুং ৱা দৰিদ্ৰেভ্যঃ কিঞ্চিদ্ ৱিতৰিতুং কথিতৱান্|
௨௯யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன்போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் வாங்குவதற்காவது, ஏழைகளுக்கு ஏதாவது கொடுப்பதற்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.
30 ৩০ তদা পূপখণ্ডগ্ৰহণাৎ পৰং স তূৰ্ণং বহিৰগচ্ছৎ; ৰাত্ৰিশ্চ সমুপস্যিতা|
௩0அவன் அந்த அப்பத் துண்டை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இரவு நேரமாக இருந்தது.
31 ৩১ যিহূদে বহিৰ্গতে যীশুৰকথযদ্ ইদানীং মানৱসুতস্য মহিমা প্ৰকাশতে তেনেশ্ৱৰস্যাপি মহিমা প্ৰকাশতে|
௩௧அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனிதகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார்.
32 ৩২ যদি তেনেশ্ৱৰস্য মহিমা প্ৰকাশতে তৰ্হীশ্ৱৰোপি স্ৱেন তস্য মহিমানং প্ৰকাশযিষ্যতি তূৰ্ণমেৱ প্ৰকাশযিষ্যতি|
௩௨தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாக அவரை மகிமைப்படுத்துவார்.
33 ৩৩ হে ৱৎসা অহং যুষ্মাভিঃ সাৰ্দ্ধং কিঞ্চিৎকালমাত্ৰম্ আসে, ততঃ পৰং মাং মৃগযিষ্যধ্ৱে কিন্ত্ৱহং যৎস্থানং যামি তৎস্থানং যূযং গন্তুং ন শক্ষ্যথ, যামিমাং কথাং যিহূদীযেভ্যঃ কথিতৱান্ তথাধুনা যুষ্মভ্যমপি কথযামি|
௩௩பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களோடு இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்திற்கு நீங்கள் வரக்கூடாது என்று நான் யூதர்களிடம் சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன்.
34 ৩৪ যূযং পৰস্পৰং প্ৰীযধ্ৱম্ অহং যুষ্মাসু যথা প্ৰীযে যূযমপি পৰস্পৰম্ তথৈৱ প্ৰীযধ্ৱং, যুষ্মান্ ইমাং নৱীনাম্ আজ্ঞাম্ আদিশামি|
௩௪நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள்; நான் உங்களில் அன்பாக இருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாக இருங்கள் என்கிற புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
35 ৩৫ তেনৈৱ যদি পৰস্পৰং প্ৰীযধ্ৱে তৰ্হি লক্ষণেনানেন যূযং মম শিষ্যা ইতি সৰ্ৱ্ৱে জ্ঞাতুং শক্ষ্যন্তি|
௩௫நீங்கள் ஒருவரிலொருவர் அன்பு உள்ளவர்களாக இருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள் என்றார்.
36 ৩৬ শিমোনপিতৰঃ পৃষ্ঠৱান্ হে প্ৰভো ভৱান্ কুত্ৰ যাস্যতি? ততো যীশুঃ প্ৰত্যৱদৎ, অহং যৎস্থানং যামি তৎস্থানং সাম্প্ৰতং মম পশ্চাদ্ গন্তুং ন শক্নোষি কিন্তু পশ্চাদ্ গমিষ্যসি|
௩௬சீமோன்பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்கு மறுமொழியாக: நான் போகிற இடத்திற்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார்.
37 ৩৭ তদা পিতৰঃ প্ৰত্যুদিতৱান্, হে প্ৰভো সাম্প্ৰতং কুতো হেতোস্তৱ পশ্চাদ্ গন্তুং ন শক্নোমি? ৎৱদৰ্থং প্ৰাণান্ দাতুং শক্নোমি|
௩௭பேதுரு அவரைப் பார்த்து: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப்பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான்.
38 ৩৮ ততো যীশুঃ প্ৰত্যুক্তৱান্ মন্নিমিত্তং কিং প্ৰাণান্ দাতুং শক্নোষি? ৎৱামহং যথাৰ্থং ৱদামি, কুক্কুটৰৱণাৎ পূৰ্ৱ্ৱং ৎৱং ত্ৰি ৰ্মাম্ অপহ্নোষ্যসে|
௩௮இயேசு அவனுக்கு மறுமொழியாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்பே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

< যোহনঃ 13 >