< ইব্ৰিণঃ 9 >
1 ১ স প্ৰথমো নিযম আৰাধনাযা ৱিৱিধৰীতিভিৰৈহিকপৱিত্ৰস্থানেন চ ৱিশিষ্ট আসীৎ|
௧அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்குரிய முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த இடமும் உடையதாக இருந்தது.
2 ২ যতো দূষ্যমেকং নিৰমীযত তস্য প্ৰথমকোষ্ঠস্য নাম পৱিত্ৰস্থানমিত্যাসীৎ তত্ৰ দীপৱৃক্ষো ভোজনাসনং দৰ্শনীযপূপানাং শ্ৰেণী চাসীৎ|
௨எப்படியென்றால், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவ சமுகத்து அப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த இடம் எனப்படும்.
3 ৩ তৎপশ্চাদ্ দ্ৱিতীযাযাস্তিৰষ্কৰিণ্যা অভ্যন্তৰে ঽতিপৱিত্ৰস্থানমিতিনামকং কোষ্ঠমাসীৎ,
௩இரண்டாம் திரைக்கு உள்ளே மகா பரிசுத்த இடம் என்று சொல்லப்பட்ட கூடாரம் இருந்தது.
4 ৪ তত্ৰ চ সুৱৰ্ণমযো ধূপাধাৰঃ পৰিতঃ সুৱৰ্ণমণ্ডিতা নিযমমঞ্জূষা চাসীৎ তন্মধ্যে মান্নাযাঃ সুৱৰ্ণঘটো হাৰোণস্য মঞ্জৰিতদণ্ডস্তক্ষিতৌ নিযমপ্ৰস্তৰৌ,
௪அதிலே தங்கத்தால் செய்த தூபகலசமும், முழுவதும் தங்கத்தகடு பதிக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட தங்கப்பாத்திரமும், ஆரோனுடைய துளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
5 ৫ তদুপৰি চ কৰুণাসনে ছাযাকাৰিণৌ তেজোমযৌ কিৰূবাৱাস্তাম্, এতেষাং ৱিশেষৱৃত্তান্তকথনায নাযং সমযঃ|
௫அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைப்பற்றி விளக்கிச்சொல்ல இப்பொழுது நேரமில்லை.
6 ৬ এতেষ্ৱীদৃক্ নিৰ্ম্মিতেষু যাজকা ঈশ্ৱৰসেৱাম্ অনুতিষ্ঠনতো দূষ্যস্য প্ৰথমকোষ্ঠং নিত্যং প্ৰৱিশন্তি|
௬இவைகள் இவ்விதமாக ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்ற முதலாம் கூடாரத்திற்குள் எப்பொழுதும் பிரவேசிப்பார்கள்.
7 ৭ কিন্তু দ্ৱিতীযং কোষ্ঠং প্ৰতিৱৰ্ষম্ এককৃৎৱ একাকিনা মহাযাজকেন প্ৰৱিশ্যতে কিন্ত্ৱাত্মনিমিত্তং লোকানাম্ অজ্ঞানকৃতপাপানাঞ্চ নিমিত্তম্ উৎসৰ্জ্জনীযং ৰুধিৰম্ অনাদায তেন ন প্ৰৱিশ্যতে|
௭இரண்டாம் கூடாரத்திற்குள் பிரதான ஆசாரியன்மட்டும் வருடத்திற்கு ஒருமுறை இரத்தத்தை எடுத்துக்கொண்டு உள்ளே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் மக்களுடைய தவறுகளுக்காகவும் செலுத்துவான்.
8 ৮ ইত্যনেন পৱিত্ৰ আত্মা যৎ জ্ঞাপযতি তদিদং তৎ প্ৰথমং দূষ্যং যাৱৎ তিষ্ঠতি তাৱৎ মহাপৱিত্ৰস্থানগামী পন্থা অপ্ৰকাশিতস্তিষ্ঠতি|
௮அதினாலே, முதலாம் கூடாரம் நிற்கும்வரைக்கும் மகா பரிசுத்த இடத்திற்குப் போகிற வழி இன்னும் வெளிப்படவில்லை என்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்.
9 ৯ তচ্চ দূষ্যং ৱৰ্ত্তমানসমযস্য দৃষ্টান্তঃ, যতো হেতোঃ সাম্প্ৰতং সংশোধনকালং যাৱদ্ যন্নিৰূপিতং তদনুসাৰাৎ সেৱাকাৰিণো মানসিকসিদ্ধিকৰণেঽসমৰ্থাভিঃ
௯அந்தக் கூடாரம் இந்தக் காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாக இருக்கிறது; அதற்கேற்றபடி செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தமுடியாதவைகள்.
10 ১০ কেৱলং খাদ্যপেযেষু ৱিৱিধমজ্জনেষু চ শাৰীৰিকৰীতিভি ৰ্যুক্তানি নৈৱেদ্যানি বলিদানানি চ ভৱন্তি|
௧0உண்பதும், குடிப்பது, பலவிதமான குளியல்களும், சரீரத்திற்குரிய சடங்குகளேதவிர வேறோன்றும் இல்லை. இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் செய்வதற்கு கட்டளையிடப்பட்டது.
11 ১১ অপৰং ভাৱিমঙ্গলানাং মহাযাজকঃ খ্ৰীষ্ট উপস্থাযাহস্তনিৰ্ম্মিতেনাৰ্থত এতৎসৃষ্টে ৰ্বহিৰ্ভূতেন শ্ৰেষ্ঠেন সিদ্ধেন চ দূষ্যেণ গৎৱা
௧௧கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராக வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தப் படைப்பு சம்பந்தமான கூடாரத்தின்வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின்வழியாகவும்,
12 ১২ ছাগানাং গোৱৎসানাং ৱা ৰুধিৰম্ অনাদায স্ৱীযৰুধিৰম্ আদাযৈককৃৎৱ এৱ মহাপৱিত্ৰস্থানং প্ৰৱিশ্যানন্তকালিকাং মুক্তিং প্ৰাপ্তৱান্| (aiōnios )
௧௨வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (aiōnios )
13 ১৩ ৱৃষছাগানাং ৰুধিৰেণ গৱীভস্মনঃ প্ৰক্ষেপেণ চ যদ্যশুচিলোকাঃ শাৰীৰিশুচিৎৱায পূযন্তে,
௧௩அது எப்படியென்றால், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தம் உண்டாகப் பரிசுத்தப்படுத்துமென்றால்,
14 ১৪ তৰ্হি কিং মন্যধ্ৱে যঃ সদাতনেনাত্মনা নিষ্কলঙ্কবলিমিৱ স্ৱমেৱেশ্ৱৰায দত্তৱান্, তস্য খ্ৰীষ্টস্য ৰুধিৰেণ যুষ্মাকং মনাংস্যমৰেশ্ৱৰস্য সেৱাযৈ কিং মৃত্যুজনকেভ্যঃ কৰ্ম্মভ্যো ন পৱিত্ৰীকাৰিষ্যন্তে? (aiōnios )
௧௪நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (aiōnios )
15 ১৫ স নূতননিযমস্য মধ্যস্থোঽভৱৎ তস্যাভিপ্ৰাযোঽযং যৎ প্ৰথমনিযমলঙ্ঘনৰূপপাপেভ্যো মৃত্যুনা মুক্তৌ জাতাযাম্ আহূতলোকা অনন্তকালীযসম্পদঃ প্ৰতিজ্ঞাফলং লভেৰন্| (aiōnios )
௧௫ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். (aiōnios )
16 ১৬ যত্ৰ নিযমো ভৱতি তত্ৰ নিযমসাধকস্য বলে ৰ্মৃত্যুনা ভৱিতৱ্যং|
௧௬ஏனென்றால், எங்கே மரணசாசனம் உண்டோ, அங்கே அந்த சாசனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்.
17 ১৭ যতো হতেন বলিনা নিযমঃ স্থিৰীভৱতি কিন্তু নিযমসাধকো বলি ৰ্যাৱৎ জীৱতি তাৱৎ নিযমো নিৰৰ্থকস্তিষ্ঠতি|
௧௭எப்படியென்றால், மரணம் உண்டான பின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடு இருக்கும்போது அதற்குப் பயன் இல்லையே.
18 ১৮ তস্মাৎ স পূৰ্ৱ্ৱনিযমোঽপি ৰুধিৰপাতং ৱিনা ন সাধিতঃ|
௧௮அப்படியே, முதலாம் உடன்படிக்கையும் இரத்தம் இல்லாமல் உறுதி செய்யப்படவில்லை.
19 ১৯ ফলতঃ সৰ্ৱ্ৱলোকান্ প্ৰতি ৱ্যৱস্থানুসাৰেণ সৰ্ৱ্ৱা আজ্ঞাঃ কথযিৎৱা মূসা জলেন সিন্দূৰৱৰ্ণলোম্না এষোৱতৃণেন চ সাৰ্দ্ধং গোৱৎসানাং ছাগানাঞ্চ ৰুধিৰং গৃহীৎৱা গ্ৰন্থে সৰ্ৱ্ৱলোকেষু চ প্ৰক্ষিপ্য বভাষে,
௧௯எப்படியென்றால், மோசே, நியாயப்பிரமாணத்தினால், எல்லா மக்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டு முடியோடும், ஈசோப்போடும் எடுத்து, புத்தகத்தின் மேலும் மக்கள் எல்லோர்மேலும் தெளித்து:
20 ২০ যুষ্মান্ অধীশ্ৱৰো যং নিযমং নিৰূপিতৱান্ তস্য ৰুধিৰমেতৎ|
௨0தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்.
21 ২১ তদ্ৱৎ স দূষ্যেঽপি সেৱাৰ্থকেষু সৰ্ৱ্ৱপাত্ৰেষু চ ৰুধিৰং প্ৰক্ষিপ্তৱান্|
௨௧இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய எல்லாப் பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான்.
22 ২২ অপৰং ৱ্যৱস্থানুসাৰেণ প্ৰাযশঃ সৰ্ৱ্ৱাণি ৰুধিৰেণ পৰিষ্ক্ৰিযন্তে ৰুধিৰপাতং ৱিনা পাপমোচনং ন ভৱতি চ|
௨௨நியாயப்பிரமாணத்தின்படி ஏறக்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
23 ২৩ অপৰং যানি স্ৱৰ্গীযৱস্তূনাং দৃষ্টান্তাস্তেষাম্ এতৈঃ পাৱনম্ আৱশ্যকম্ আসীৎ কিন্তু সাক্ষাৎ স্ৱৰ্গীযৱস্তূনাম্ এতেভ্যঃ শ্ৰেষ্ঠে ৰ্বলিদানৈঃ পাৱনমাৱশ্যকং|
௨௩ஆகவே, பரலோகத்தில் உள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாக இருந்தது; பரலோகத்தில் உள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியவைகள்.
24 ২৪ যতঃ খ্ৰীষ্টঃ সত্যপৱিত্ৰস্থানস্য দৃষ্টান্তৰূপং হস্তকৃতং পৱিত্ৰস্থানং ন প্ৰৱিষ্টৱান্ কিন্ত্ৱস্মন্নিমিত্তম্ ইদানীম্ ঈশ্ৱৰস্য সাক্ষাদ্ উপস্থাতুং স্ৱৰ্গমেৱ প্ৰৱিষ্টঃ|
௨௪அப்படியே, உண்மையான பரிசுத்த இடத்திற்கு அடையாளமான கையினால் செய்யப்பட்ட பரிசுத்த இடத்திலே கிறிஸ்துவானவர் நுழையாமல், பரலோகத்திலே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமூகத்தில் வேண்டுதல் செய்வதற்காக நுழைந்திருக்கிறார்.
25 ২৫ যথা চ মহাযাজকঃ প্ৰতিৱৰ্ষং পৰশোণিতমাদায মহাপৱিত্ৰস্থানং প্ৰৱিশতি তথা খ্ৰীষ্টেন পুনঃ পুনৰাত্মোৎসৰ্গো ন কৰ্ত্তৱ্যঃ,
௨௫பிரதான ஆசாரியன் மற்றவர்களுடைய இரத்தத்தோடு ஒவ்வொரு வருடமும் பரிசுத்த இடத்திற்குள் நுழைவதுபோல, அவர் அநேகமுறை தம்மைப் பலியிடுவதற்காக நுழையவில்லை.
26 ২৬ কৰ্ত্তৱ্যে সতি জগতঃ সৃষ্টিকালমাৰভ্য বহুৱাৰং তস্য মৃত্যুভোগ আৱশ্যকোঽভৱৎ; কিন্ত্ৱিদানীং স আত্মোৎসৰ্গেণ পাপনাশাৰ্থম্ এককৃৎৱো জগতঃ শেষকালে প্ৰচকাশে| (aiōn )
௨௬அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். (aiōn )
27 ২৭ অপৰং যথা মানুষস্যৈককৃৎৱো মৰণং তৎ পশ্চাদ্ ৱিচাৰো নিৰূপিতোঽস্তি,
௨௭அன்றியும், ஒரேமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
28 ২৮ তদ্ৱৎ খ্ৰীষ্টোঽপি বহূনাং পাপৱহনাৰ্থং বলিৰূপেণৈককৃৎৱ উৎসসৃজে, অপৰং দ্ৱিতীযৱাৰং পাপাদ্ ভিন্নঃ সন্ যে তং প্ৰতীক্ষন্তে তেষাং পৰিত্ৰাণাৰ্থং দৰ্শনং দাস্যতি|
௨௮கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்ப்பதற்காக ஒரேமுறை பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாவதுமுறை பாவம் இல்லாமல் தரிசனமாவார்.