< ইব্ৰিণঃ 12 >

1 অতো হেতোৰেতাৱৎসাক্ষিমেঘৈ ৰ্ৱেষ্টিতাঃ সন্তো ৱযমপি সৰ্ৱ্ৱভাৰম্ আশুবাধকং পাপঞ্চ নিক্ষিপ্যাস্মাকং গমনায নিৰূপিতে মাৰ্গে ধৈৰ্য্যেণ ধাৱাম|
ஆகவே, மேகத்தைப்போல இத்தனை அதிகமான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான எல்லாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாக இருக்கிற இயேசுவைப் பார்த்து, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடுவோம்;
2 যশ্চাস্মাকং ৱিশ্ৱাসস্যাগ্ৰেসৰঃ সিদ্ধিকৰ্ত্তা চাস্তি তং যীশুং ৱীক্ষামহৈ যতঃ স স্ৱসম্মুখস্থিতানন্দস্য প্ৰাপ্ত্যৰ্থম্ অপমানং তুচ্ছীকৃত্য ক্ৰুশস্য যাতনাং সোঢৱান্ ঈশ্ৱৰীযসিংহাসনস্য দক্ষিণপাৰ্শ্ৱে সমুপৱিষ্টৱাংশ্চ|
அவர் தமக்குமுன்பாக வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை நினைக்காமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபக்கத்தில் வீற்றிருக்கிறார்.
3 যঃ পাপিভিঃ স্ৱৱিৰুদ্ধম্ এতাদৃশং ৱৈপৰীত্যং সোঢৱান্ তম্ আলোচযত তেন যূযং স্ৱমনঃসু শ্ৰান্তাঃ ক্লান্তাশ্চ ন ভৱিষ্যথ|
ஆகவே, நீங்கள் மனம் தளர்ந்தவர்களாக உங்களுடைய ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாமல் இருக்க, தமக்கு விரோதமாகப் பாவிகளால் செய்யப்பட்ட இந்தவிதமான வெறுக்கத்தக்க காரியங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.
4 যূযং পাপেন সহ যুধ্যন্তোঽদ্যাপি শোণিতৱ্যযপৰ্য্যন্তং প্ৰতিৰোধং নাকুৰুত|
பாவத்திற்கு விரோதமாகப் போராடுகிறதில் இரத்தம் சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே.
5 তথা চ পুত্ৰান্ প্ৰতীৱ যুষ্মান্ প্ৰতি য উপদেশ উক্তস্তং কিং ৱিস্মৃতৱন্তঃ? "পৰেশেন কৃতাং শাস্তিং হে মৎপুত্ৰ ন তুচ্ছয| তেন সংভৰ্ত্সিতশ্চাপি নৈৱ ক্লাম্য কদাচন|
அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய கண்டிப்பை அற்பமாக நினைக்காதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
6 পৰেশঃ প্ৰীযতে যস্মিন্ তস্মৈ শাস্তিং দদাতি যৎ| যন্তু পুত্ৰং স গৃহ্লাতি তমেৱ প্ৰহৰত্যপি| "
கர்த்தர் எவனை நேசிக்கிறாரோ அவனை அவர் கண்டித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதிகளை மறந்தீர்கள்.
7 যদি যূযং শাস্তিং সহধ্ৱং তৰ্হীশ্ৱৰঃ পুত্ৰৈৰিৱ যুষ্মাভিঃ সাৰ্দ্ধং ৱ্যৱহৰতি যতঃ পিতা যস্মৈ শাস্তিং ন দদাতি তাদৃশঃ পুত্ৰঃ কঃ?
நீங்கள் கண்டிக்கப்படுவதை சகிக்கிறவர்களாக இருந்தால் தேவன் உங்களைப் பிள்ளைகளாக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் கண்டிக்காத பிள்ளைகள் உண்டோ?
8 সৰ্ৱ্ৱে যস্যাঃ শাস্তেৰংশিনো ভৱন্তি সা যদি যুষ্মাকং ন ভৱতি তৰ্হি যূযম্ আত্মজা ন কিন্তু জাৰজা আধ্ৱে|
எல்லோருக்கும் கிடைக்கும் கண்டிப்பு உங்களுக்குக் கிடைக்காமல் இருந்தால் நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இல்லாமல் வேசியின் பிள்ளைகளாக இருப்பீர்களே.
9 অপৰম্ অস্মাকং শাৰীৰিকজন্মদাতাৰোঽস্মাকং শাস্তিকাৰিণোঽভৱন্ তে চাস্মাভিঃ সম্মানিতাস্তস্মাদ্ য আত্মনাং জনযিতা ৱযং কিং ততোঽধিকং তস্য ৱশীভূয ন জীৱিষ্যামঃ?
அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைக் கண்டிக்கும்போது, அவர்களுக்கு நாம் பயந்து நடந்திருக்க, நாம் பிழைப்பதற்காக ஆவிகளின் பிதாவிற்கு அதிகமாக அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
10 ১০ তে ৎৱল্পদিনানি যাৱৎ স্ৱমনোঽমতানুসাৰেণ শাস্তিং কৃতৱন্তঃ কিন্ত্ৱেষোঽস্মাকং হিতায তস্য পৱিত্ৰতাযা অংশিৎৱায চাস্মান্ শাস্তি|
௧0அவர்கள் தங்களுக்கு நல்லதென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் கண்டித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாவதற்காக நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைக் கண்டிக்கிறார்
11 ১১ শাস্তিশ্চ ৱৰ্ত্তমানসমযে কেনাপি নানন্দজনিকা কিন্তু শোকজনিকৈৱ মন্যতে তথাপি যে তযা ৱিনীযন্তে তেভ্যঃ সা পশ্চাৎ শান্তিযুক্তং ধৰ্ম্মফলং দদাতি|
௧௧எந்தக் கண்டித்தலும் தற்காலத்தில் சந்தோஷமாக இல்லாமல் துக்கமாக இருக்கும்; ஆனாலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.
12 ১২ অতএৱ যূযং শিথিলান্ হস্তান্ দুৰ্ব্বলানি জানূনি চ সবলানি কুৰুধ্ৱং|
௧௨ஆகவே, நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி,
13 ১৩ যথা চ দুৰ্ব্বলস্য সন্ধিস্থানং ন ভজ্যেত স্ৱস্থং তিষ্ঠেৎ তথা স্ৱচৰণাৰ্থং সৰলং মাৰ্গং নিৰ্ম্মাত|
௧௩முடமாக இருக்கிறது பெலவீனமாகிப்போகாமல் குணமாவதற்காக, உங்களுடைய பாதங்களுக்கு வழிகளைச் சீர்ப்படுத்துங்கள்.
14 ১৪ অপৰঞ্চ সৰ্ৱ্ৱৈঃ সাৰ্থম্ এক্যভাৱং যচ্চ ৱিনা পৰমেশ্ৱৰস্য দৰ্শনং কেনাপি ন লপ্স্যতে তৎ পৱিত্ৰৎৱং চেষ্টধ্ৱং|
௧௪எல்லோரோடும் சமாதானமாக இருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவும் விரும்புங்கள்; பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் கர்த்த்தரை தரிசிக்கமுடியாது.
15 ১৫ যথা কশ্চিদ্ ঈশ্ৱৰস্যানুগ্ৰহাৎ ন পতেৎ, যথা চ তিক্ততাযা মূলং প্ৰৰুহ্য বাধাজনকং ন ভৱেৎ তেন চ বহৱোঽপৱিত্ৰা ন ভৱেযুঃ,
௧௫ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாமல் இருக்கவும், எந்தவொரு கசப்பான வேர் முளைத்து எழும்பிக் கலகம் உண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாமல் இருக்கவும்,
16 ১৬ যথা চ কশ্চিৎ লম্পটো ৱা এককৃৎৱ আহাৰাৰ্থং স্ৱীযজ্যেষ্ঠাধিকাৰৱিক্ৰেতা য এষৌস্তদ্ৱদ্ অধৰ্ম্মাচাৰী ন ভৱেৎ তথা সাৱধানা ভৱত|
௧௬ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருநேர உணவிற்காக தன் புத்திரசுவிகாரத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்.
17 ১৭ যতঃ স এষৌঃ পশ্চাদ্ আশীৰ্ৱ্ৱাদাধিকাৰী ভৱিতুম্ ইচ্ছন্নপি নানুগৃহীত ইতি যূযং জানীথ, স চাশ্ৰুপাতেন মত্যন্তৰং প্ৰাৰ্থযমানোঽপি তদুপাযং ন লেভে|
௧௭ஏனென்றால், பின்பதாக அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும், தகுதியற்றவன் என்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடு தேடியும் மனம் மாறுதலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
18 ১৮ অপৰঞ্চ স্পৃশ্যঃ পৰ্ৱ্ৱতঃ প্ৰজ্ৱলিতো ৱহ্নিঃ কৃষ্ণাৱৰ্ণো মেঘো ঽন্ধকাৰো ঝঞ্ভ্শ তূৰীৱাদ্যং ৱাক্যানাং শব্দশ্চ নৈতেষাং সন্নিধৌ যূযম্ আগতাঃ|
௧௮அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிற மலையினிடமும், மந்தாரம், இருள், பெருங்காற்று ஆகிய இவைகளிடமும்,
19 ১৯ তং শব্দং শ্ৰুৎৱা শ্ৰোতাৰস্তাদৃশং সম্ভাষণং যৎ পুন ৰ্ন জাযতে তৎ প্ৰাৰ্থিতৱন্তঃ|
௧௯எக்காளமுழக்கத்தினிடமும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடமும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடி வேண்டிக்கொண்டார்கள்.
20 ২০ যতঃ পশুৰপি যদি ধৰাধৰং স্পৃশতি তৰ্হি স পাষাণাঘাতৈ ৰ্হন্তৱ্য ইত্যাদেশং সোঢুং তে নাশক্নুৱন্|
௨0ஏனென்றால், ஒரு மிருகமானாலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியப்பட்டு, அல்லது அம்பினால் எய்யப்பட்டுச் சாகவேண்டும் என்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமுடியாமல் இருந்தார்கள்.
21 ২১ তচ্চ দৰ্শনম্ এৱং ভযানকং যৎ মূসসোক্তং ভীতস্ত্ৰাসযুক্তশ্চাস্মীতি|
௨௧மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லும் அளவிற்கு அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது.
22 ২২ কিন্তু সীযোন্পৰ্ৱ্ৱতো ঽমৰেশ্ৱৰস্য নগৰং স্ৱৰ্গস্থযিৰূশালমম্ অযুতানি দিৱ্যদূতাঃ
௨௨நீங்களோ சீயோன் மலையினிடமும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமிடமும், ஆயிரமாயிரம் தேவதூதர்களிடமும்,
23 ২৩ স্ৱৰ্গে লিখিতানাং প্ৰথমজাতানাম্ উৎসৱঃ সমিতিশ্চ সৰ্ৱ্ৱেষাং ৱিচাৰাধিপতিৰীশ্ৱৰঃ সিদ্ধীকৃতধাৰ্ম্মিকানাম্ আত্মানো
௨௩பரலோகத்தில் பெயர் எழுதியிருக்கிற தலைப்பிள்ளைகளின் சர்வசங்கமாகிய சபையினிடமும், எல்லோருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடமும், பூரணர்களாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடமும்,
24 ২৪ নূতননিযমস্য মধ্যস্থো যীশুঃ, অপৰং হাবিলো ৰক্তাৎ শ্ৰেযঃ প্ৰচাৰকং প্ৰোক্ষণস্য ৰক্তঞ্চৈতেষাং সন্নিধৌ যূযম্ আগতাঃ|
௨௪புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடமும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைவிட நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடமும் வந்து சேர்ந்தீர்கள்.
25 ২৫ সাৱধানা ভৱত তং ৱক্তাৰং নাৱজানীত যতো হেতোঃ পৃথিৱীস্থিতঃ স ৱক্তা যৈৰৱজ্ঞাতস্তৈ ৰ্যদি ৰক্ষা নাপ্ৰাপি তৰ্হি স্ৱৰ্গীযৱক্তুঃ পৰাঙ্মুখীভূযাস্মাভিঃ কথং ৰক্ষা প্ৰাপ্স্যতে?
௨௫பேசுகிறவருக்கு நீங்கள் கவனிக்கமாட்டோம் என்று விலகாமல் இருக்க எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், பூமியிலே பேசினவருக்கு கவனிக்கமாட்டோம் என்று விலகினவர்கள் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்ளாமல் இருக்க, பரலோகத்தில் இருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்?
26 ২৬ তদা তস্য ৰৱাৎ পৃথিৱী কম্পিতা কিন্ত্ৱিদানীং তেনেদং প্ৰতিজ্ঞাতং যথা, "অহং পুনৰেককৃৎৱঃ পৃথিৱীং কম্পযিষ্যামি কেৱলং তন্নহি গগনমপি কম্পযিষ্যামি| "
௨௬அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணினது; இன்னும் ஒருமுறை நான் பூமியை மட்டுமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்.
27 ২৭ স এককৃৎৱঃ শব্দো নিশ্চলৱিষযাণাং স্থিতযে নিৰ্ম্মিতানামিৱ চঞ্চলৱস্তূনাং স্থানান্তৰীকৰণং প্ৰকাশযতি|
௨௭இன்னும் ஒருமுறை என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருப்பதற்காக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போகும் என்பதைக் குறிக்கிறது.
28 ২৮ অতএৱ নিশ্চলৰাজ্যপ্ৰাপ্তৈৰস্মাভিঃ সোঽনুগ্ৰহ আলম্বিতৱ্যো যেন ৱযং সাদৰং সভযঞ্চ তুষ্টিজনকৰূপেণেশ্ৱৰং সেৱিতুং শক্নুযাম|
௨௮ஆகவே, அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாக ஆராதனை செய்வதற்காக கிருபையைப் பற்றிக்கொள்ளவேண்டும்.
29 ২৯ যতোঽস্মাকম্ ঈশ্ৱৰঃ সংহাৰকো ৱহ্নিঃ|
௨௯நம்முடைய தேவன் சுட்டெரிக்கிற அக்கினியாக இருக்கிறாரே.

< ইব্ৰিণঃ 12 >