< ২ থিষলনীকিনঃ 3 >

1 হে ভ্ৰাতৰঃ, শেষে ৱদামি, যূযম্ অস্মভ্যমিদং প্ৰাৰ্থযধ্ৱং যৎ প্ৰভো ৰ্ৱাক্যং যুষ্মাকং মধ্যে যথা তথৈৱান্যত্ৰাপি প্ৰচৰেৎ মান্যঞ্চ ভৱেৎ;
கடைசியாக, சகோதரர்களே, உங்களிடம் கர்த்தருடைய வசனம் பரவி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரவி மகிமைப்படும்படிக்கும்,
2 যচ্চ ৱযম্ অৱিৱেচকেভ্যো দুষ্টেভ্যশ্চ লোকেভ্যো ৰক্ষাং প্ৰাপ্নুযাম যতঃ সৰ্ৱ্ৱেষাং ৱিশ্ৱাসো ন ভৱতি|
துன்மார்க்கமான பொல்லாத மனிதர்களுடைய கையிலிருந்து நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; விசுவாசம் எல்லோரிடத்திலும் இல்லையே.
3 কিন্তু প্ৰভু ৰ্ৱিশ্ৱাস্যঃ স এৱ যুষ্মান্ স্থিৰীকৰিষ্যতি দুষ্টস্য কৰাদ্ উদ্ধৰিষ্যতি চ|
கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை உறுதிப்படுத்தி, தீமையிலிருந்து விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.
4 যূযম্ অস্মাভি ৰ্যদ্ আদিশ্যধ্ৱে তৎ কুৰুথ কৰিষ্যথ চেতি ৱিশ্ৱাসো যুষ্মানধি প্ৰভুনাস্মাকং জাযতে|
மேலும், நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும், இனிமேலும் செய்வீர்களென்றும், உங்களைக்குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாக இருக்கிறோம்.
5 ঈশ্ৱৰস্য প্ৰেম্নি খ্ৰীষ্টস্য সহিষ্ণুতাযাঞ্চ প্ৰভুঃ স্ৱযং যুষ্মাকম্ অন্তঃকৰণানি ৱিনযতু|
கர்த்தர் உங்களுடைய இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராக நடத்துவாராக.
6 হে ভ্ৰাতৰঃ, অস্মৎপ্ৰভো ৰ্যীশুখ্ৰীষ্টস্য নাম্না ৱযং যুষ্মান্ ইদম্ আদিশামঃ, অস্মত্তো যুষ্মাভি ৰ্যা শিক্ষলম্ভি তাং ৱিহায কশ্চিদ্ ভ্ৰাতা যদ্যৱিহিতাচাৰং কৰোতি তৰ্হি যূযং তস্মাৎ পৃথগ্ ভৱত|
மேலும், சகோதரர்களே, எங்களிடம் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடக்காமல், சோம்பேறியாக இருக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டுவிலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.
7 যতো ৱযং যুষ্মাভিঃ কথম্ অনুকৰ্ত্তৱ্যাস্তদ্ যূযং স্ৱযং জানীথ| যুষ্মাকং মধ্যে ৱযম্ অৱিহিতাচাৰিণো নাভৱাম,
இன்னவிதமாக எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே சோம்பேறியாக நடக்காமல்,
8 ৱিনামূল্যং কস্যাপ্যন্নং নাভুংজ্মহি কিন্তু কোঽপি যদ্ অস্মাভি ৰ্ভাৰগ্ৰস্তো ন ভৱেৎ তদৰ্থং শ্ৰমেণ ক্লেশেন চ দিৱানিশং কাৰ্য্যম্ অকুৰ্ম্ম|
ஒருவனிடத்திலும் இலவசமாகச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாக இல்லாதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.
9 অত্ৰাস্মাকম্ অধিকাৰো নাস্তীত্থং নহি কিন্ত্ৱস্মাকম্ অনুকৰণায যুষ্মান্ দৃষ্টান্তং দৰ্শযিতুম্ ইচ্ছন্তস্তদ্ অকুৰ্ম্ম|
உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாக இருக்கவேண்டுமென்றே அப்படிச்செய்தோம்.
10 ১০ যতো যেন কাৰ্য্যং ন ক্ৰিযতে তেনাহাৰোঽপি ন ক্ৰিযতামিতি ৱযং যুষ্মৎসমীপ উপস্থিতিকালেঽপি যুষ্মান্ আদিশাম|
௧0ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும்கூடாதென்று நாங்கள் உங்களிடம் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.
11 ১১ যুষ্মন্মধ্যে ঽৱিহিতাচাৰিণঃ কেঽপি জনা ৱিদ্যন্তে তে চ কাৰ্য্যম্ অকুৰ্ৱ্ৱন্ত আলস্যম্ আচৰন্তীত্যস্মাভিঃ শ্ৰূযতে|
௧௧உங்களில் சிலர் எந்தவொரு வேலையும் செய்யாமல், மற்றவர்களுடைய வேலையில் தலையிட்டு, சோம்பேறிகளாகத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.
12 ১২ তাদৃশান্ লোকান্ অস্মতপ্ৰভো ৰ্যীশুখ্ৰীষ্টস্য নাম্না ৱযম্ ইদম্ আদিশাম আজ্ঞাপযামশ্চ, তে শান্তভাৱেন কাৰ্য্যং কুৰ্ৱ্ৱন্তঃ স্ৱকীযমন্নং ভুঞ্জতাং|
௧௨இப்படிப்பட்டவர்கள் அமைதலோடு வேலைசெய்து, தங்களுடைய சொந்த உணவைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.
13 ১৩ অপৰং হে ভ্ৰাতৰঃ, যূযং সদাচৰণে ন ক্লাম্যত|
௧௩சகோதரர்களே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமல் இருங்கள்.
14 ১৪ যদি চ কশ্চিদেতৎপত্ৰে লিখিতাম্ অস্মাকম্ আজ্ঞাং ন গৃহ্লাতি তৰ্হি যূযং তং মানুষং লক্ষযত তস্য সংসৰ্গং ত্যজত চ তেন স ত্ৰপিষ্যতে|
௧௪மேலும், இந்தக் கடிதத்தில் சொல்லிய எங்களுடைய வசனத்திற்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் கவனத்தில் கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனோடுகூட சேராமல் இருங்கள்.
15 ১৫ কিন্তু তং ন শত্ৰুং মন্যমানা ভ্ৰাতৰমিৱ চেতযত|
௧௫ஆனாலும் அவனை விரோதியாக நினைக்காமல், சகோதரனாக நினைத்து, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.
16 ১৬ শান্তিদাতা প্ৰভুঃ সৰ্ৱ্ৱত্ৰ সৰ্ৱ্ৱথা যুষ্মভ্যং শান্তিং দেযাৎ| প্ৰভু ৰ্যুষ্মাকং সৰ্ৱ্ৱেষাং সঙ্গী ভূযাৎ|
௧௬சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் எல்லாவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக.
17 ১৭ নমস্কাৰ এষ পৌলস্য মম কৰেণ লিখিতোঽভূৎ সৰ্ৱ্ৱস্মিন্ পত্ৰ এতন্মম চিহ্নম্ এতাদৃশৈৰক্ষৰৈ ৰ্মযা লিখ্যতে|
௧௭பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், என் கடிதங்கள் ஒவ்வொன்றுக்கும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன்.
18 ১৮ অস্মাকং প্ৰভো ৰ্যীশুখ্ৰীষ্টস্যানুগ্ৰহঃ সৰ্ৱ্ৱেষু যুষ্মাসু ভূযাৎ| আমেন্|
௧௮நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.

< ২ থিষলনীকিনঃ 3 >