< ১ তীমথিযঃ 3 >
1 ১ যদি কশ্চিদ্ অধ্যক্ষপদম্ আকাঙ্ক্ষতে তৰ্হি স উত্তমং কৰ্ম্ম লিপ্সত ইতি সত্যং|
௧கண்காணி பொறுப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.
2 ২ অতোঽধ্যক্ষেণানিন্দিতেনৈকস্যা যোষিতো ভৰ্ত্ৰা পৰিমিতভোগেন সংযতমনসা সভ্যেনাতিথিসেৱকেন শিক্ষণে নিপুণেন
௨எனவே கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய கணவனும், நிதானமுள்ளவனும், தெளிந்த புத்தி உள்ளவனும், யோக்கியதை உள்ளவனும், அந்நியர்களை உபசரிக்கிறவனும், திறமையாகப் போதிக்கிறவனுமாக இருக்கவேண்டும்.
3 ৩ ন মদ্যপেন ন প্ৰহাৰকেণ কিন্তু মৃদুভাৱেন নিৰ্ৱ্ৱিৱাদেন নিৰ্লোভেন
௩அவன் மதுபானத்திற்கு அடிமையானவனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவனுமாக இல்லாமல், பொறுமை உள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பணஆசை இல்லாதவனுமாக இருந்து,
4 ৪ স্ৱপৰিৱাৰাণাম্ উত্তমশাসকেন পূৰ্ণৱিনীতৎৱাদ্ ৱশ্যানাং সন্তানানাং নিযন্ত্ৰা চ ভৱিতৱ্যং|
௪தன் சொந்தக் குடும்பத்தை நன்றாக நடத்துகிறவனும், தன் குழந்தைகளை எல்லா நல்லொழுக்கமும் உள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாக இருக்கவேண்டும்.
5 ৫ যত আত্মপৰিৱাৰান্ শাসিতুং যো ন শক্নোতি তেনেশ্ৱৰস্য সমিতেস্তত্ত্ৱাৱধাৰণং কথং কাৰিষ্যতে?
௫ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்தத்தெரியாமல் இருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?
6 ৬ অপৰং স গৰ্ৱ্ৱিতো ভূৎৱা যৎ শযতান ইৱ দণ্ডযোগ্যো ন ভৱেৎ তদৰ্থং তেন নৱশিষ্যেণ ন ভৱিতৱ্যং|
௬அவன் பெருமை அடைந்து, சாத்தானைப்போல தண்டனையிலே விழாதபடிக்கு, புதிய சீடனாக இருக்கக்கூடாது.
7 ৭ যচ্চ নিন্দাযাং শযতানস্য জালে চ ন পতেৎ তদৰ্থং তেন বহিঃস্থলোকানামপি মধ্যে সুখ্যাতিযুক্তেন ভৱিতৱ্যং|
௭அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, விசுவாசமில்லாத மக்களிடம் நற்பெயர் பெற்றவனாக இருக்கவேண்டும்.
8 ৮ তদ্ৱৎ পৰিচাৰকৈৰপি ৱিনীতৈ ৰ্দ্ৱিৱিধৱাক্যৰহিতৈ ৰ্বহুমদ্যপানে ঽনাসক্তৈ ৰ্নিৰ্লোভৈশ্চ ভৱিতৱ্যং,
௮அப்படியே, உதவிக்காரர்களும் இருநாக்கு உள்ளவர்களாகவும், மதுபானத்திற்கு அடிமையானவர்களாகவும், இழிவான ஆதாயத்தை விரும்புகிறவர்களாகவும் இல்லாமல், நல்லொழுக்கம் உள்ளவர்களாகவும்,
9 ৯ নিৰ্ম্মলসংৱেদেন চ ৱিশ্ৱাসস্য নিগূঢৱাক্যং ধাতিৱ্যঞ্চ|
௯விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாகவும் இருக்கவேண்டும்.
10 ১০ অগ্ৰে তেষাং পৰীক্ষা ক্ৰিযতাং ততঃ পৰম্ অনিন্দিতা ভূৎৱা তে পৰিচৰ্য্যাং কুৰ্ৱ্ৱন্তু|
௧0மேலும், இவர்கள் முதலில் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களென்றால் உதவிக்காரர்களாக ஊழியம் செய்யலாம்.
11 ১১ অপৰং যোষিদ্ভিৰপি ৱিনীতাভিৰনপৱাদিকাভিঃ সতৰ্কাভিঃ সৰ্ৱ্ৱত্ৰ ৱিশ্ৱাস্যাভিশ্চ ভৱিতৱ্যং|
௧௧அப்படியே பெண்களும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலும் உண்மையுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.
12 ১২ পৰিচাৰকা একৈকযোষিতো ভৰ্ত্তাৰো ভৱেযুঃ, নিজসন্তানানাং পৰিজনানাঞ্চ সুশাসনং কুৰ্য্যুশ্চ|
௧௨மேலும், உதவிக்காரர்கள் ஒரே மனைவியையுடைய கணவனும், தங்களுடைய குழந்தைகளையும் சொந்தக் குடும்பத்தையும் நன்றாக நடத்துகிறவர்களுமாக இருக்கவேண்டும்.
13 ১৩ যতঃ সা পৰিচৰ্য্যা যৈ ৰ্ভদ্ৰৰূপেণ সাধ্যতে তে শ্ৰেষ্ঠপদং প্ৰাপ্নুৱন্তি খ্ৰীষ্টে যীশৌ ৱিশ্ৱাসেন মহোৎসুকা ভৱন্তি চ|
௧௩இப்படி உதவிக்காரர்களுடைய ஊழியத்தை நன்றாகச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவில் உள்ள விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள்.
14 ১৪ ৎৱাং প্ৰত্যেতৎপত্ৰলেখনসমযে শীঘ্ৰং ৎৱৎসমীপগমনস্য প্ৰত্যাশা মম ৱিদ্যতে|
௧௪நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாக வருவேன் என்று நம்பியிருக்கிறேன்.
15 ১৫ যদি ৱা ৱিলম্বেয তৰ্হীশ্ৱৰস্য গৃহে ঽৰ্থতঃ সত্যধৰ্ম্মস্য স্তম্ভভিত্তিমূলস্ৱৰূপাযাম্ অমৰেশ্ৱৰস্য সমিতৌ ৎৱযা কীদৃশ আচাৰঃ কৰ্ত্তৱ্যস্তৎ জ্ঞাতুং শক্ষ্যতে|
௧௫தாமதிப்பேன் என்றால், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய முறையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாக இருக்கிறது.
16 ১৬ অপৰং যস্য মহত্ত্ৱং সৰ্ৱ্ৱস্ৱীকৃতম্ ঈশ্ৱৰভক্তেস্তৎ নিগূঢৱাক্যমিদম্ ঈশ্ৱৰো মানৱদেহে প্ৰকাশিত আত্মনা সপুণ্যীকৃতো দূতৈঃ সন্দৃষ্টঃ সৰ্ৱ্ৱজাতীযানাং নিকটে ঘোষিতো জগতো ৱিশ্ৱাসপাত্ৰীভূতস্তেজঃপ্ৰাপ্তযে স্ৱৰ্গং নীতশ্চেতি|
௧௬அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது அனைவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் சரீரத்திலே வெளிப்பட்டார், ஆவியானவராலே நீதியுள்ளவர் என்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், யூதரல்லாதவர்களிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.