< ১ তীমথিযঃ 2 >

1 মম প্ৰথম আদেশোঽযং, প্ৰাৰ্থনাৱিনযনিৱেদনধন্যৱাদাঃ কৰ্ত্তৱ্যাঃ,
நான் முதலாவது சொல்லுகிற புத்தி என்னவென்றால், எல்லா மனிதருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் நன்றிசெலுத்துதலையும் செய்யவேண்டும்;
2 সৰ্ৱ্ৱেষাং মানৱানাং কৃতে ৱিশেষতো ৱযং যৎ শান্তৎৱেন নিৰ্ৱ্ৱিৰোধৎৱেন চেশ্চৰভক্তিং ৱিনীতৎৱঞ্চাচৰন্তঃ কালং যাপযামস্তদৰ্থং নৃপতীনাম্ উচ্চপদস্থানাঞ্চ কৃতে তে কৰ্ত্তৱ্যাঃ|
நாம் எல்லாப் பக்தியோடும், நல்லொழுக்கத்தோடும், சண்டை இல்லாமல் அமைதியான வாழ்க்கை வாழும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள எல்லோருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.
3 যতোঽস্মাকং তাৰকস্যেশ্ৱৰস্য সাক্ষাৎ তদেৱোত্তমং গ্ৰাহ্যঞ্চ ভৱতি,
நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாக இருக்கிறது.
4 স সৰ্ৱ্ৱেষাং মানৱানাং পৰিত্ৰাণং সত্যজ্ঞানপ্ৰাপ্তিঞ্চেচ্ছতি|
எல்லா மனிதர்களும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் விருப்பமுள்ளவராக இருக்கிறார்.
5 যত একোঽদ্ৱিতীয ঈশ্ৱৰো ৱিদ্যতে কিঞ্চেশ্ৱৰে মানৱেষু চৈকো ঽদ্ৱিতীযো মধ্যস্থঃ
தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனிதர்களுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.
6 স নৰাৱতাৰঃ খ্ৰীষ্টো যীশু ৰ্ৱিদ্যতে যঃ সৰ্ৱ্ৱেষাং মুক্তে ৰ্মূল্যম্ আত্মদানং কৃতৱান্| এতেন যেন প্ৰমাণেনোপযুক্তে সমযে প্ৰকাশিতৱ্যং,
எல்லோரையும் மீட்பதற்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த மனிதனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.
7 তদ্ঘোষযিতা দূতো ৱিশ্ৱাসে সত্যধৰ্ম্মে চ ভিন্নজাতীযানাম্ উপদেশকশ্চাহং ন্যযূজ্যে, এতদহং খ্ৰীষ্টস্য নাম্না যথাতথ্যং ৱদামি নানৃতং কথযামি|
இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், யூதரல்லாதோர்களுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன்.
8 অতো মমাভিমতমিদং পুৰুষৈঃ ক্ৰোধসন্দেহৌ ৱিনা পৱিত্ৰকৰান্ উত্তোল্য সৰ্ৱ্ৱস্মিন্ স্থানে প্ৰাৰ্থনা ক্ৰিযতাং|
அன்றியும், ஆண்கள் கோபமும், வாக்குவாதமும் இல்லாமல் பரிசுத்தமான கரங்களை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டும் என்று விரும்புகிறேன்.
9 তদ্ৱৎ নাৰ্য্যোঽপি সলজ্জাঃ সংযতমনসশ্চ সত্যো যোগ্যমাচ্ছাদনং পৰিদধতু কিঞ্চ কেশসংস্কাৰৈঃ কণকমুক্তাভি ৰ্মহাৰ্ঘ্যপৰিচ্ছদৈশ্চাত্মভূষণং ন কুৰ্ৱ্ৱত্যঃ
பெண்களும் மயிரைப் பின்னுவதினாலும், பொன்னினாலும் மற்றும் முத்துக்களினாலும், விலையுயர்ந்த ஆடைகளினாலும் தங்களை அலங்கரிக்காமல்,
10 ১০ স্ৱীকৃতেশ্ৱৰভক্তীনাং যোষিতাং যোগ্যৈঃ সত্যৰ্ম্মভিঃ স্ৱভূষণং কুৰ্ৱ্ৱতাং|
௧0தகுதியான ஆடையினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளுகிற பெண்களுக்குரிய நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும்.
11 ১১ নাৰী সম্পূৰ্ণৱিনীতৎৱেন নিৰ্ৱিৰোধং শিক্ষতাং|
௧௧பெண் என்பவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாக இருந்து, அமைதியோடு கற்றுக்கொள்ளவேண்டும்.
12 ১২ নাৰ্য্যাঃ শিক্ষাদানং পুৰুষাযাজ্ঞাদানং ৱাহং নানুজানামি তযা নিৰ্ৱ্ৱিৰোধৎৱম্ আচৰিতৱ্যং|
௧௨உபதேசம்பண்ணவும், ஆணின்மேல் அதிகாரம்பண்ணவும் பெண்ணிற்கு நான் அனுமதி கொடுப்பது இல்லை; அவள் அமைதியாக இருக்கவேண்டும்.
13 ১৩ যতঃ প্ৰথমম্ আদমস্ততঃ পৰং হৱাযাঃ সৃষ্টি ৰ্বভূৱ|
௧௩ஏனென்றால், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள்.
14 ১৪ কিঞ্চাদম্ ভ্ৰান্তিযুক্তো নাভৱৎ যোষিদেৱ ভ্ৰান্তিযুক্তা ভূৎৱাত্যাচাৰিণী বভূৱ|
௧௪மேலும், ஆதாம் ஏமாற்றப்படவில்லை, பெண்ணே ஏமாற்றப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.
15 ১৫ তথাপি নাৰীগণো যদি ৱিশ্ৱাসে প্ৰেম্নি পৱিত্ৰতাযাং সংযতমনসি চ তিষ্ঠতি তৰ্হ্যপত্যপ্ৰসৱৱৰ্ত্মনা পৰিত্ৰাণং প্ৰাপ্স্যতি|
௧௫அப்படி இருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைத்திருந்தால், குழந்தைப் பெறுவதினாலே காக்கப்படுவாள்.

< ১ তীমথিযঃ 2 >