< Апокалипса 17 >
1 Апой унул дин чей шапте ынӂерь каре циняу челе шапте потире а венит де а ворбит ку мине ши мь-а зис: „Вино сэ-ць арэт жудеката курвей челей марь, каре шаде пе апе марь.
௧ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் வந்து என்னோடு பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடு பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் மக்களும் வெறிகொண்டிருந்தார்களே;
2 Ку еа ау курвит ымпэраций пэмынтулуй ши локуиторий пэмынтулуй с-ау ымбэтат де винул курвией ей!”
௨அவளுக்கு வருகிற தண்டனையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
3 Ши м-а дус, ын Духул, ынтр-ун пустиу. Ши ам вэзут о фемее шезынд пе о фярэ де кулоаре стакожие, плинэ ку нуме де хулэ, ши авя шапте капете ши зече коарне.
௩ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் அவதூறான பெயர்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு பெண் ஏறியிருப்பதைப் பார்த்தேன்.
4 Фемея ачаста ера ымбрэкатэ ку пурпурэ ши стакожиу, ера ымподобитэ ку аур, ку петре скумпе ши ку мэргэритаре. Циня ын мынэ ун потир де аур плин де спуркэчунь ши де некурэцииле курвией ей.
௪அந்தப் பெண் இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையும் அணிந்து பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
5 Пе фрунте пурта скрис ун нуме, о тайнэ: „Бабилонул чел маре, мама курвелор ши спуркэчунилор пэмынтулуй”.
௫மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் பெயர் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
6 Ши ам вэзут пе фемея ачаста ымбэтатэ де сынӂеле сфинцилор ши де сынӂеле мученичилор луй Исус. Кынд ам вэзут-о, м-ам мират минуне маре.
௬அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைப் பார்த்தேன்; அவளைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
7 Ши ынӂерул мь-а зис: „Де че те мирь? Ыць вой спуне тайна ачестей фемей ши а фярей каре о поартэ ши каре аре челе шапте капете ши челе зече коарне.
௭அப்பொழுது, தூதனானவன் என்னைப் பார்த்து: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்தப் பெண்ணுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாக இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
8 Фяра пе каре ай вэзут-о ера ши ну май есте. Еа аре сэ се ридиче дин адынк ши аре сэ се дукэ ла перзаре. Ши локуиторий пэмынтулуй але кэрор нуме н-ау фост скрисе де ла ынтемееря лумий ын картя веций се вор мира кынд вор ведя кэ фяра ера, ну май есте ши ва вени. (Abyssos )
௮நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos )
9 Аич есте минтя плинэ де ынцелепчуне: челе шапте капете сунт шапте мунць пе каре шаде фемея.
௯ஞானமுள்ள மனம் இதைப் புரிந்துகொள்ளும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
10 Сунт ши шапте ымпэраць: чинч ау кэзут, унул есте, челэлалт н-а венит ынкэ ши, кынд ва вени, ел ва рэмыне пуцинэ време.
௧0அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் ஆட்சி செய்வான்.
11 Ши фяра, каре ера ши ну май есте, еа ынсэшь есте ал оптуля ымпэрат: есте дин нумэрул челор шапте ши мерӂе ла перзаре.
௧௧இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான்.
12 Челе зече коарне пе каре ле-ай вэзут сунт зече ымпэраць каре н-ау примит ынкэ ымпэрэция, чи вор прими путере ымпэрэтяскэ тимп де ун час ымпреунэ ку фяра.
௧௨நீ பார்த்த பத்துக்கொம்புகளும், பத்து ராஜாக்களே; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடன் ஒருமணி நேரம்வரை ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
13 Тоць ау ачелашь гынд ши дау фярей путеря ши стэпыниря лор.
௧௩இவர்கள் ஒரே மனதுடையவர்கள்; இவர்கள் தங்களுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
14 Ей се вор рэзбои ку Мелул, дар Мелул ый ва бируи, пентру кэ Ел есте Домнул домнилор ши Ымпэратул ымпэрацилор. Ши чей кемаць, алешь ши крединчошь каре сунт ку Ел, де асеменя, ый вор бируи.”
௧௪இவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடு யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறதினால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடு இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருக்கிறார்கள் என்றான்.
15 Апой мь-а зис: „Апеле пе каре ле-ай вэзут, пе каре шаде курва, сунт нороаде, глоате, нямурь ши лимбь.
௧௫பின்னும் அந்த தூதன் என்னைப் பார்த்து: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைப் பார்த்தாயே; அவைகள் மக்களும், திரள்கூட்டமும், தேசங்களும், பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களுமே.
16 Челе зече коарне пе каре ле-ай вэзут ши фяра вор уры пе курвэ, о вор пустии ши о вор лэса гоалэ. Карня й-о вор мынка ши о вор арде ку фок.
௧௬நீ மிருகத்தின்மேல் பார்த்த பத்துக்கொம்புகளைப் போன்றவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய சரீரத்தை நாசமாக்கி, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
17 Кэч Думнезеу ле-а пус ын инимэ сэ-Й адукэ ла ындеплинире планул Луй: сэ се ынвояскэ пе деплин ши сэ дя фярей стэпыниря лор ымпэрэтяскэ пынэ се вор ындеплини кувинтеле луй Думнезеу.
௧௭தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறும்வரையும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே மனதுடையவர்களாக இருந்து, தங்களுடைய ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
18 Ши фемея пе каре ай вэзут-о есте четатя чя маре, каре аре стэпынире песте ымпэраций пэмынтулуй.”
௧௮நீ பார்த்த அந்தப் பெண் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமே என்றான்.