< Псалмул 96 >
1 Кынтаць Домнулуй о кынтаре ноуэ! Кынтаць Домнулуй, тоць локуиторий пэмынтулуй!
யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள்.
2 Кынтаць Домнулуй, бинекувынтаць Нумеле Луй, вестиць дин зи ын зи мынтуиря Луй!
யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், அவர் பெயரைத் துதியுங்கள், நாள்தோறும் அவருடைய இரட்சிப்பை அறிவியுங்கள்.
3 Повестиць принтре нямурь слава Луй, принтре тоате попоареле минуниле Луй!
நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும், மக்கள் எல்லோருக்கும் அவரது அற்புத செயல்களையும் அறிவியுங்கள்.
4 Кэч Домнул есте маре ши фоарте вредник де лаудэ. Ел есте май де темут декыт тоць думнезеий.
ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்; எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பயப்படத்தக்கவர் அவரே.
5 Кэч тоць думнезеий попоарелор сунт ниште идоль, дар Домнул а фэкут черуриле.
நாடுகளின் தெய்வங்கள் எல்லாம் விக்கிரகங்களாகவே இருக்கின்றன; ஆனால் யெகோவாவே வானங்களை உண்டாக்கினார்.
6 Стрэлучиря ши мэреция сунт ынаинтя Фецей Луй, слава ши подоаба сунт ын Локашул Луй чел Сфынт.
மாட்சிமையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கின்றன; வல்லமையும் மகிமையும் அவருடைய பரிசுத்த இடத்தில் இருக்கின்றன.
7 Фамилииле попоарелор, даць Домнулуй, даць Домнулуй славэ ши чинсте!
நாடுகளின் குடும்பங்களே, மகிமையையும் வல்லமையையும் யெகோவாவுக்கு செலுத்துங்கள்; யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள்.
8 Даць Домнулуй слава кувенитэ Нумелуй Луй! Адучець дарурь де мынкаре ши интраць ын курциле Луй!
யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; காணிக்கையை எடுத்துக்கொண்டு அவருடைய ஆலய முற்றத்திற்கு வாருங்கள்.
9 Ынкинаци-вэ ынаинтя Домнулуй ымбрэкаць ку подоабе сфинте, тремураць ынаинтя Луй, тоць локуиторий пэмынтулуй!
அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள்; பூமியில் உள்ள யாவரும் அவருக்குமுன் நடுங்குங்கள்.
10 Спунець принтре нямурь: „Домнул ымпэрэцеште! Де ачея лумя есте таре ши ну се клатинэ.” Домнул жудекэ попоареле ку дрептате.
“யெகோவா ஆளுகிறார்” என்று நாடுகளின் மத்தியில் சொல்லுங்கள்; உலகம் உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அது அசையாது; அவர் நாடுகளை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.
11 Сэ се букуре черуриле ши сэ се веселяскэ пэмынтул; сэ муӂяскэ маря ку тот че купринде еа!
வானங்கள் மகிழட்டும், பூமி களிகூரட்டும்; கடலும் அதிலுள்ள அனைத்தும் சத்தமிடட்டும்.
12 Сэ тресалте кымпия ку тот че е пе еа, тоць копачий пэдурий сэ стриӂе де букурие
வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்; அப்பொழுது காட்டு மரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாய்ப் பாடட்டும்.
13 ынаинтя Домнулуй! Кэч Ел вине, вине сэ жудече пэмынтул. Ел ва жудека лумя ку дрептате ши попоареле дупэ крединчошия Луй.
யெகோவா வருகிறார், அதினால் அவருக்கு முன்பாக அனைத்துப் படைப்புகளும் மகிழ்ச்சியுடன் பாடட்டும்; ஏனெனில் அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் உலகத்தை நீதியுடனும் மக்களை அவருடைய சத்தியத்தின்படியும் நியாயந்தீர்ப்பார்.