< Псалмул 75 >
1 Те лэудэм, Думнезеуле, Те лэудэм; ной, каре кемэм Нумеле Тэу, вестим минуниле Тале!
“அழிக்காதே” என்ற இசையில் வாசிக்கும்படி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ஆசாபின் சங்கீதம். இறைவனே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்; உமது பெயர் சமீபமாயிருப்பதால் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்; மனிதர் உமது அதிசயமான செயல்களைப்பற்றிக் கூறுகிறார்கள்.
2 „Атунч кынд ва вени время хотэрытэ”, зиче Домнул, „вой жудека фэрэ пэртинире.
இறைவனோ, “நியமிக்கப்பட்ட காலத்தை நான் தெரிந்துகொண்டு, நீதியாய் நியாயந்தீர்பேன்.
3 Поате сэ се кутремуре пэмынтул ку локуиторий луй, кэч Еу ый ынтэреск стылпий.”
பூமியும் அதிலுள்ள எல்லா மக்களுடன் கரைந்துபோகின்றது; நான் அதின் தூண்களை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வேன்.
4 Еу зик челор че се фэлеск: „Ну вэ фэлиць!” ши челор рэй: „Ну ридикаць капул сус!”
அகங்காரம் உள்ளவர்களைப் பார்த்து, ‘இனிமேல் பெருமை பேசாதிருங்கள்’ என்றும், கொடியவர்களைப் பார்த்து, ‘உங்கள் கொம்பை உயர்த்தாதிருங்கள்’ என்றும் சொல்கிறார்.
5 Ну вэ ридикаць капул аша де сус, ну ворбиць ку атыта труфие!
உங்கள் கொம்பை வானங்களுக்கு விரோதமாக உயர்த்தாதிருங்கள்; தலைக்கனம் உடையவர்களாய்ப் பேசாதிருங்கள் என்றும் சொல்கிறார்.”
6 Кэч нич де ла рэсэрит, нич де ла апус, нич дин пустиу ну вине ынэлцаря.
கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ, அல்லது பாலைவனத்திலிருந்தோ உயர்வு வராது.
7 Чи Думнезеу есте Чел че жудекэ: Ел кобоарэ пе унул ши ыналцэ пе алтул.
ஆனால் நியாயந்தீர்க்கிறவர் இறைவனே: அவர் ஒருவனைத் தாழ்த்தி இன்னொருவனை உயர்த்துகிறார்.
8 Ын мына Домнулуй есте ун потир ын каре фербе ун вин плин де аместекэтурэ. Кынд ыл варсэ, тоць чей рэй де пе пэмынт суг, ыл сорб ши-л бяу пынэ ын фунд!
யெகோவாவினுடைய கரத்தில் நியாயத்தீர்ப்பென்னும் காரசாரமான நுரைக்கின்ற திராட்சை இரசம் நிறைந்த ஒரு கிண்ணம் இருக்கிறது; அவர் அதை ஊற்றுகிறார்; பூமியின் கொடியவர்கள் எல்லோரும் அதைக் கடைசிவரைக் குடிக்கிறார்கள்.
9 Еу ынсэ вой вести пуруря ачесте лукрурь, вой кынта лауде ын чинстя Думнезеулуй луй Иаков
நானோ, இதை எக்காலத்திலும் அறிவிப்பேன்; நான் யாக்கோபின் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
10 ши вой доборы тоате путериле челор рэй: путериле челуй неприхэнит ынсэ се вор ынэлца.
“கொடியவர்களின் கொம்பாகிய பலத்தை நான் வெட்டிப்போடுவேன்; ஆனால் நீதிமான்களின் கொம்பாகிய பலத்தை மேலும் உயர்த்துவேன்” என்று இறைவன் சொல்கிறார்.