< Псалмул 12 >

1 Вино ын ажутор, Доамне, кэч се дук оамений евлавиошь, пер крединчоший динтре фиий оаменилор!
செமினீத் என்னும் இராகத்தில் வாசிக்க பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம். யெகோவாவே, உதவிசெய்யும், இறை பக்தியுள்ளவர் ஒருவருமே இல்லை; மனிதருள் உண்மையுள்ளவர்கள் குறைந்துவிட்டார்கள்.
2 Оамений ышь спун минчунь уний алтора, пе бузе ау лукрурь лингушитоаре, ворбеск ку инимэ префэкутэ.
ஒவ்வொருவனும் தன் அயலானிடம் பொய்ப் பேசுகிறான்; அவர்களுடைய உதடுகளால் முகஸ்துதி பேசி இருதயத்தில் வஞ்சனை வைத்திருக்கிறார்கள்.
3 Нимичяскэ Домнул тоате бузеле лингушитоаре, лимба каре ворбеште ку труфие,
முகஸ்துதி பேசும் எல்லா உதடுகளையும் பெருமை பேசும் ஒவ்வொரு நாவையும் யெகோவா அறுத்துப் போடுவாராக.
4 пе чей че зик: „Сунтем тарь ку лимба ноастрэ, кэч бузеле ноастре сунт ку ной. Чине ар путя сэ фие стэпын песте ной?”
“எங்கள் நாவினாலேயே நாங்கள் வெற்றி கொள்வோம்; எங்கள் சொற்களே எங்களுக்குத் துணை; எங்களுக்குத் தலைவர் யார்?” என்று அவர்கள் சொல்லுகிறார்கள்.
5 „Пентру кэ чей ненорочиць сунт асуприць ши пентру кэ сэрачий ӂем, акум”, зиче Домнул, „Мэ скол ши адук мынтуире челор обиждуиць.”
“ஏழைகள் ஒடுக்கப்படுகிறார்கள்; எளியவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இதினால் நான் இப்பொழுது எழுந்து, அவர்களைத் துன்புறுத்துவோரிடமிருந்து காப்பாற்றுவேன்” என்று யெகோவா கூறுகிறார்.
6 Кувинтеле Домнулуй сунт кувинте курате, ун арӂинт лэмурит ын куптор де пэмынт ши курэцит де шапте орь.
யெகோவாவின் வார்த்தைகள் தூய்மையானவை. அவை களிமண் உலையில் ஏழு தரம் சுத்திகரிக்கப்பட்ட வெள்ளியைப்போல் இருக்கின்றன.
7 Ту, Доамне, ый вей пэзи ши-й вей апэра де нямул ачеста пе вечие.
யெகோவாவே, நீர் ஏழைகளாகிய அவர்களைப் பாதுகாப்பாய் வைத்துக்கொள்வீர்; கொடியவர்களிடமிருந்து எங்களை என்றென்றும் காத்துக்கொள்வீர்.
8 Претутиндень мишунэ чей рэй, кынд домнеште тикэлошия принтре фиий оаменилор.
இழிவான செயல்கள் மனிதர் மத்தியில் பாராட்டப்படுவதினால் கொடியவர்கள் வீம்புடன் சுற்றித் திரிகிறார்கள்.

< Псалмул 12 >