< МИКА 4 >

1 Ын времуриле де пе урмэ, мунтеле Касей Домнулуй ва фи ынтемеят таре, ка чел май ыналт мунте, се ва ынэлца дясупра дялурилор ши попоареле вор вени грэмадэ ла ел.
ஆனாலும், வரும் நாட்களில் யெகோவாவுடைய ஆலயமாகிய மலை, மலைகளின் உச்சியில் நிறுவப்பட்டு, மலைகளுக்கு மேலாக உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா மக்களும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.
2 Нямуриле се вор дуче ку грэмада ла ел ши вор зиче: „Вениць, хайдем сэ не суим ла мунтеле Домнулуй, ла Каса Думнезеулуй луй Иаков, ка сэ не ынвеце кэиле Луй ши сэ умблэм пе кэрэриле Луй!” Кэч дин Сион ва еши Леӂя ши дин Иерусалим, Кувынтул Домнулуй.
திரளான மக்கள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும்.
3 Ел ва жудека ынтре мулте попоаре, ва хотэры ынтре нямурь путерниче, депэртате. Дин сэбииле лор ышь вор фэури фере де плуг ши дин сулицеле лор, косоаре; ничун ням ну ва май траӂе сабия ымпотрива алтуя ши ну вор май ынвэца сэ факэ рэзбой,
அவர் திரளான மக்களுக்குள் நியாயம் தீர்த்து, தூரத்திலுள்ள பலம்மிகுந்த தேசங்களைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு தேசத்திற்கு விரோதமாக இன்னொரு தேசம் பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
4 чи фиекаре ва локуи суб вица луй ши суб смокинул луй ши нимень ну-л ва май тулбура. Кэч гура Домнулуй оштирилор а ворбит.
அவனவன் தன்தன் திராட்சைச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துபவர்கள் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று.
5 Пе кынд тоате попоареле умблэ фиекаре ын нумеле думнезеулуй сэу, ной вом умбла ын Нумеле Домнулуй Думнезеулуй ностру тотдяуна ши ын вечь де вечь!
சகல மக்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.
6 „Ын зиуа ачея”, зиче Домнул, „вой адуна пе чей шкьопь, вой стрынӂе грэмадэ пе чей изгониць ши пе ачея пе каре-й кинуисем.
யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளப்பட்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு,
7 Дин чей шкьопь вой фаче о рэмэшицэ, дин чей че ерау рисипиць, ун ням путерник, ши Домнул ва ымпэрэци песте ей, пе мунтеле Сионулуй, де акум ши пынэ-н вяк!
நொண்டியானவளை மீதியான மக்களாகவும், தூரமாகத் தள்ளப்பட்டுப்போனவளைப் பலத்த மக்களாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் யெகோவா சீயோன் மலையிலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாக இருப்பார்.
8 Яр ла тине, турн ал турмей, дял ал фийчей Сионулуй, ла тине ва вени ши ла тине ва ажунӂе векя стэпынире, ымпэрэция фийчей Иерусалимулуй!”
மந்தையின் காவற்கோபுரமே, மகளாகிய சீயோனின் பாதுகாப்பே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் மகளாகிய எருசலேமிடம் வரும்.
9 Пентру че стриӂь ту ынсэ акум аша де таре? Н-ай ымпэрат? Ну май ай сфетник де те апукэ дуреря ка пе о фемее ла наштере?
இப்போதும் நீ ஏன் சத்தமிட்டு கதறவேண்டும்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர்கள் அழிந்துபோனார்களோ? பிரசவிக்கிற பெண்ணுக்கு உண்டாகிற வேதனை உனக்கு உண்டாகும்.
10 Суферэ, фийка Сионулуй, ши ӂемь ка о фемее ла наштере! Кэч акум вей еши дин четате ши вей локуи ын кымп ши те вей дуче пынэ ла Бабилон! Аколо вей фи избэвитэ, аколо те ва рэскумпэра Домнул дин мына врэжмашилор тэй.
௧0மகளாகிய சீயோனே, பிரசவிக்கிற பெண்ணைப்போல பிரசவ வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன் வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே யெகோவா உன்னை உன் எதிரிகளின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.
11 Кэч акум мулте нямурь с-ау стрынс ымпотрива та ши зик: „Сэ фие пынгэритэ, ка сэ не вадэ окий ымплининду-ни-се доринца фацэ де Сион!”
௧௧சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக தேசத்தார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.
12 Дар ей ну куноск гындуриле Домнулуй, ну-Й ынцелег плануриле, ну штиу кэ й-а стрынс ка пе ниште снопь ын арие.
௧௨ஆனாலும் அவர்கள் யெகோவாவுடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.
13 „Скоалэ-те, фийка Сионулуй ши треерэ! Кэч ыць фак ун корн де фер ши о копитэ де арамэ, ка сэ сфэрымь мулте попоаре ши сэ ынкинь Домнулуй прада лор, сэ ынкинь Домнулуй ынтрегулуй пэмынт авериле лор!”
௧௩மகளாகிய சீயோனே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக மக்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய சொத்துக்களை முழு பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.

< МИКА 4 >