< Матей 11 >

1 Дупэ че а испрэвит де дат ынвэцэтурь ла чей дойспрезече ученичь ай Сэй, Исус а плекат де аколо, ка сэ ынвеце пе оамень ши сэ проповэдуяскэ ын четэциле лор.
இயேசு தமது பன்னிரண்டு சீடர்களுக்கு அறிவுரை கூறிமுடித்த பின்பு, அவர் அங்கிருந்து பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் கலிலேயாவிலுள்ள பட்டணங்களுக்குச் சென்றார்.
2 Иоан а аузит дин темницэ деспре лукрэриле луй Христос
யோவான் சிறையில் இருக்கையில், கிறிஸ்துவின் கிரியைகளைப்பற்றிக் கேள்விப்பட்டான். அப்போது அவன் தன் சீடர்களை அனுப்பி,
3 ши а тримис сэ-Л ынтребе прин ученичий сэй: „Ту ешть Ачела каре аре сэ винэ сау сэ аштептэм пе алтул?”
“வரப்போகிறவர் நீர்தானா அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா?” என்று அவரிடம் கேட்கும்படி சொன்னான்.
4 Дрепт рэспунс, Исус ле-а зис: „Дучеци-вэ де спунець луй Иоан че аузиць ши че ведець:
அதற்கு இயேசு, “நீங்கள் திரும்பிப்போய், கண்டதையும், கேட்டதையும் யோவானுக்கு அறிவியுங்கள்:
5 Орбийышь капэтэ ведеря, шкьопий умблэ, лепроший сунт курэциць, сурзий ауд, морций ынвие, ши сэрачилорли се проповэдуеште Евангелия.
பார்வையற்றோர் பார்வையடைகிறார்கள், கால் ஊனமுற்றோர் நடக்கிறார்கள், குஷ்ட வியாதியுடையோர் குணமடைகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், இறந்தவர் உயிருடன் எழுப்பப்படுகிறார்கள், ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது.
6 Фериче де ачела пентру каре Еу ну вой фиун прилеж де потикнире.”
என் நிமித்தம் இடறி விழாதவன் ஆசீர்வதிக்கப்பட்டவன்” என்றார்.
7 Пе кынд се дучяу ей, Исус а ынчепут сэ ворбяскэ нороаделор деспре Иоан: „Че аць ешит сэ ведець ын пустиу? О трестиеклэтинатэ де вынт?
யோவானின் சீடர்கள் இயேசுவைவிட்டுப் போகும்போது, அவர் கூடியிருந்த மக்களைப் பார்த்து, யோவானைப் பற்றிப் பேசத்தொடங்கினார்: “பாலைவனத்திலே எதைப்பார்க்கப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையா?
8 Дакэ ну, атунч че аць ешит сэ ведець? Ун ом ымбрэкат ын хайне мой? Ятэ кэ чей че поартэ хайне мой сунт ын каселе ымпэрацилор.
இல்லையென்றால் எதைப்பார்க்கப் போனீர்கள்? சிறப்பான உடை உடுத்திய ஒரு மனிதனையா? இல்லை, சிறப்பான உடைகளை உடுத்தியிருப்பவர்கள் அரசரின் அரண்மனைகளில் அல்லவா இருக்கிறார்கள்.
9 Атунч че аць ешит сэ ведець? Ун пророк? Да, вэ спун, шимай мулт декыт ун пророк;
அப்படியானால், எதைப் பார்ப்பதற்கு அங்கே போனீர்கள்? இறைவாக்கினனையா? ஆம், ஒரு இறைவாக்கினனைவிட மேலானவனையே என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
10 кэч ел есте ачела деспре каре с-а скрис: ‘Ятэ, тримит ынаинтя Фецей Тале пе солул Меу, каре Ыць ва прегэти каля ынаинтя Та.’
“‘உமக்கு முன்பாக நான் என்னுடைய தூதனை அனுப்புவேன்; அவன் உமக்கு முன்பாக உமது வழியை ஆயத்தப்படுத்துவான்,’ என்று இவனைப் பற்றியே இது எழுதப்பட்டுள்ளது.
11 Адевэрат вэ спун кэ, динтре чей нэскуць дин фемей, ну с-а скулат ничунул май маре декыт Иоан Ботезэторул. Тотушь, чел май мик ын Ымпэрэция черурилор есте май маре декыт ел.
“நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன்: மனிதர்களாய்ப் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானகனைவிடப் பெரியவன் ஒருவனும் இல்லை; ஆனால், பரலோக அரசில் சிறியவனாயிருக்கிறவன், அவனைவிடப் பெரியவனாயிருக்கிறான்.
12 Динзилеле луй Иоан Ботезэторул пынэ акум, Ымпэрэция черурилор се я ку нэвалэ, ши чей че дау нэвалэ пун мына пе еа.
யோவான் ஸ்நானகனின் நாட்கள் தொடங்கி, இந்நாள்வரையிலும் பரலோக அரசு வன்முறைக்கு உள்ளாகிறது. வன்முறையாளர் அதைக் கைப்பற்றிக்கொள்கின்றனர்.
13 Кэч пынэ ла Иоан ау пророчит тоцьпророчий ши Леӂя.
ஏனெனில் யோவான் வரை எல்லா இறைவாக்கினராலும், மோசேயின் சட்டத்தினாலும் இறைவாக்கு உரைக்கப்பட்டுள்ளது.
14 Ши, дакэ врець сэ ынцелеӂець, ел есте Илие, каре требуя сэ винэ.
வரவேண்டியிருந்த எலியா இவனே. நீங்கள் இதை ஏற்றுக்கொள்ள விரும்பினால் ஏற்றுக்கொள்ளுங்கள்.
15 Чинеаре урекь де аузит сэ аудэ.
கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும்.
16 Кучине вой асемэна нямул ачеста де оамень? Сямэнэ ку ниште копилашь каре шед ын пеце ши стригэ ла товарэший лор:
“இந்தத் தலைமுறையை நான் யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் சந்தைகூடும் இடங்களில் உட்கார்ந்திருந்து, விளையாடுவதற்கு மற்றவர்களைச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறவர்கள்:
17 ‘В-ам кынтат дин флуер, ши н-аць жукат; в-ам кынтат де жале, ши ну в-аць тынгуит.’
“‘நாங்கள் உங்களுக்காகப் புல்லாங்குழல் ஊதினோம், நீங்கள் நடனமாடவில்லை; ஒப்பாரி பாடினோம், நீங்கள் துக்கங்கொண்டாடவில்லை,’ என்று சொல்லுகிற பிள்ளைகளுக்கே ஒப்பிடுவேன்.
18 Кэч а венит Иоан, нич мынкынд, нич бынд, ши ей зик: ‘Аре драк!’
“ஏனெனில் யோவான் சிறப்பான உணவைச் சாப்பிடாதவனும், குடிக்காதவனுமாக வந்தான்; அவர்களோ, ‘அவனுக்குப் பிசாசு பிடித்திருக்கிறது’ என்கிறார்கள்.
19 А венит Фиул омулуй мынкынд ши бынд, ши ей зик: ‘Ятэ ун ом мынкэчос ши бэутор де вин, ун приетенал вамешилор ши ал пэкэтошилор!’ ТотушьЫнцелепчуня а фост ындрептэцитэ дин лукрэриле ей.”
மானிடமகனோ விருந்து உணவைச் சாப்பிடுகிறவராகவும், குடிக்கிறவராகவும் வந்தார். அவரைப் பார்த்து, ‘இவனோ உணவுப்பிரியன், மதுபானப்பிரியன், வரி வசூலிப்பவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்’ என்று சொல்கிறீர்கள். ஆனால் ஞானம் சரியானது என்று அதை ஏற்று நடக்கிறவர்களின் செயல்களாலேதான் அது நிரூபிக்கப்படுகிறது” என்றார்.
20 Атунч, Исус а ынчепут сэ мустре четэциле ын каре фусесерэ фэкуте челе май мулте дин минуниле Луй, пентру кэ ну се покэисерэ.
சில பட்டணங்களில் இயேசு அநேக அற்புதங்களைச் செய்தும், அப்பட்டணத்து மக்கள் மனந்திரும்பவில்லை. அதனால் அவர் அந்தப் பட்டணங்களைக் கடிந்துகொள்ளத் தொடங்கினார்.
21 „Вай де тине, Хоразине!”, а зис Ел. „Вай де тине, Бетсаидо! Кэч, дакэ ар фи фост фэкуте ын Тир ши Сидон минуниле каре ау фост фэкуте ын вой, демулт с-ар фи покэит кусак ши ченушэ.
“கோராசினே, உனக்கு ஐயோ! பெத்சாயிதாவே, உனக்கு ஐயோ! உங்களில் செய்யப்பட்ட அற்புதங்கள் தீருவிலும், சீதோனிலும் செய்யப்பட்டிருந்தால், அவர்கள் வெகு நாட்களுக்கு முன்பே மனந்திரும்பி இருப்பார்கள்; துக்கவுடை உடுத்தி, சாம்பலிலும் உட்கார்ந்திருப்பார்கள்.
22 Де ачея вэ спун кэ, ын зиуа жудекэций, вафи май ушор пентру Тир ши Сидон декыт пентру вой.
ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே தீருவுக்கும் சீதோனுக்கும் நடக்கப்போவதைப் பார்க்கிலும், உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும்.
23 Ши ту, Капернауме, вей фи ынэлцатоаре пынэ ла чер? Вей фи коборыт пынэ ла Локуинца морцилор; кэч дакэ ар фи фост фэкуте ын Содома минуниле каре ау фост фэкуте ын тине, еа ар фи рэмас ын пичоаре пынэ ын зиуа де астэзь. (Hadēs g86)
கப்பர்நகூமே! நீ வானத்திற்கு உயர்த்தப்படுவாயோ? இல்லவே இல்லை, நீ பாதாளம்வரை கீழே தாழ்த்தப்படுவாய். உன்னிலே செய்யப்பட்ட அற்புதங்கள் சோதோமிலே செய்யப்பட்டிருந்தால், இந்நாள்வரை அது அழியாது இருந்திருக்கும். (Hadēs g86)
24 Де ачея вэ спун кэ, ын зиуа жудекэций, ва фи май ушор пентруцинутул Содомей декыт пентру тине.”
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நியாயத்தீர்ப்பு நாளிலே சோதோம் நாட்டுக்கு நடக்கப்போவதைப் பார்க்கிலும், உங்களுக்கு நடக்கப்போவது கடினமானதாயிருக்கும்” என்றார்.
25 Ын время ачея, Исус а луат кувынтул ши а зис: „Те лауд, Татэ, Доамне ал черулуй ши ал пэмынтулуй, пентру кэ айаскунс ачесте лукрурь де чей ынцелепць ши причепуць шиле-ай дескоперит прунчилор.
அவ்வேளையில் இயேசு சொன்னதாவது: “பிதாவே, பரலோகத்திற்கும் பூமிக்கும் ஆண்டவரே, ஞானிகளுக்கும், கல்விமான்களுக்கும் இந்தக் காரியங்களை மறைத்து, குழந்தைகளுக்கு நீர் அவற்றை வெளிப்படுத்தியபடியால், உம்மைத் துதிக்கிறேன். ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாய் காணப்பட்டது.
26 Да, Татэ, Те лауд, пентру кэ аша ай гэсит Ту ку кале!
ஆம் பிதாவே, இதுவே உமக்குப் பிரியமாயிருந்தது.
27 Тоателукруриле Мь-ау фост дате ын мынь де Татэл Меу, шинимень ну куноаште деплин пе Фиул, афарэ де Татэл; тот астфел нимень ну куноаште деплин пе Татэл, афарэ де Фиул ши ачела кэруя вря Фиул сэ и-Л дескопере.
“என் பிதாவினால் எல்லாம் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிதாவைத் தவிர வேறொருவனும் மகனை அறியான், மகனைத் தவிர வேறொருவனும் பிதாவை அறியான்; யாருக்கெல்லாம் பிதாவை வெளிப்படுத்த மகன் தெரிந்துகொள்கிறாரோ, அவர்களைத்தவிர, வேறொருவரும் பிதா இன்னாரென்று அறியார்கள்.
28 Вениць ла Мине, тоць чей трудиць ши ымповэраць, ши Еу вэ вой да одихнэ.
“வருத்தத்துடன் மனப்பாரங்களை சுமந்து களைப்புற்றிருக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.
29 Луаць жугул Меу асупра воастрэ шиынвэцаць де ла Мине, кэч Еу сунт блынд ши смеритку инима; шивець гэси одихнэ пентру суфлетеле воастре.
எனது நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாவிலே ஆறுதல் பெறுவீர்கள். ஏனெனில், நான் தயவும் இருதயத்தில் தாழ்மையும் உடையவராய் இருக்கிறேன்.
30 Кэчжугул Меу есте бун ши сарчина Мя есте ушоарэ.”
எனது நுகம் இலகுவானது, எனது சுமை எளிதானது.”

< Матей 11 >