< Плынӂериле 1 >

1 Вай! Кум стэ пэрэситэ акум четатя ачаста атыт де плинэ де попор алтэдатэ! А рэмас ка о вэдувэ! Еа, каре алтэдатэ ера маре ынтре нямурь, фрунташэ принтре цэрь, а ажунс роабэ астэзь!
ஒருகாலத்தில் மக்களால் நிறைந்திருந்த எருசலேம் பட்டணம், இப்பொழுது எவ்வளவு பாழாய்க் கிடக்கிறது! ஒருகாலத்தில் நாடுகளின் மத்தியில் மிகவும் பெரியவளாய் இருந்தவள், இன்று ஒரு விதவையைப் போலானாளே! நாடுகளின் மத்தியில் அரசியாய் இருந்தவள் இப்பொழுது அடிமையானாளே.
2 Плынӂе амарник ноаптя ши-й кург лакримь пе ображь. Ничунул дин тоць чей че о юбяу н-о мынгые; тоць приетений ей ау пэрэсит-о ши и с-ау фэкут врэжмашь.
இரவில் அவள் மனங்கசந்து அழுகிறாள், அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வடிகிறது. அவளுக்குப் பிரியமானவர்களில் அவளை ஆறுதல் செய்வதற்கு ஒருவரும் இல்லை. அவளுடைய நண்பர்கள் அவளுக்கு துரோகம் செய்தார்கள்; அவர்கள் அவளின் விரோதிகளானார்கள்.
3 Иуда а плекат ын прибеӂие дин причина апэсэрий ши мунчилор греле. Локуеште ын мижлокул нямурилор ши ну гэсеште одихнэ! Тоць пригониторий луй л-ау ажунс токмай кынд ый ера май маре стрымтораря.
துன்பத்தையும், கொடுமையான அடிமை வேலையையும் அனுபவித்தபின், யூதா நாடுகடத்தப்பட்டுப் போனாள். பிறநாடுகளின் மத்தியில் அவள் குடியிருக்கிறாள்; ஆனால் அவளுக்கோ இளைப்பாறும் இடம் இல்லை. அவளுடைய துன்பத்தின் மத்தியில் அவளைப் பின்தொடர்ந்த யாவரும் அவளைப் பிடித்துக்கொண்டார்கள்.
4 Друмуриле Сионулуй сунт тристе, кэч нимень ну се май дуче ла сэрбэторь, тоате порциле луй сунт пустий, преоций луй офтязэ; фечоареле луй сунт мыхните ши ел ынсушь есте плин де амэрэчуне.
நியமிக்கப்பட்ட பண்டிகைகளுக்கு ஒருவரும் வராததால், சீயோனின் தெருக்கள் துக்கங்கொண்டாடுகின்றன. அவளுடைய வாசல்கள் யாவும் பாழாய்க் கிடக்கின்றன. அவளுடைய ஆசாரியர்கள் புலம்புகிறார்கள். அவளுடைய இளம்பெண்கள் துயரப்படுகிறார்கள், அவள் கசப்பான வேதனையில் இருக்கிறாள்.
5 Асуприторий луй сар бируиторь, врэжмаший луй сунт мулцумиць. Кэч Домнул л-а смерит дин причина мулцимий пэкателор луй; копиий луй ау мерс ын робие ынаинтя асуприторулуй.
அவளுடைய பகைவர்கள் அவளுக்கு தலைவர்களாகி விட்டார்கள்; அவளுடைய பகைவர்கள் சுகவாழ்வு அடைந்திருக்கிறார்கள். அவளுடைய அநேக பாவங்களின் நிமித்தம் யெகோவா அவளுக்கு துக்கத்தைக் கொடுத்தார். அவளுடைய பிள்ளைகள் எதிரிக்கு முன் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டனர்.
6 С-а дус де ла фийка Сионулуй тоатэ подоаба ей. Кэпетенииле ей ау ажунс ка ниште чербь каре ну гэсеск пэшуне ши мерг фэрэ путере ынаинтя челуй че-й гонеште.
சீயோன் மகளின் சீர்சிறப்பெல்லாம் அவளைவிட்டு நீங்கிற்று. அவளுடைய இளவரசர்கள் மேய்ச்சலை காணாத மான்களைப் போலானார்கள்; அவர்கள் தங்களை துரத்துகிறவர்களுக்கு முன்பாக பலவீனமுற்று தப்பி ஓடினார்கள்.
7 Ын зилеле неказулуй ши тикэлошией луй, Иерусалимул ышь адуче аминте де тоате бунэтэциле де каре а авут парте дин зилеле стрэбуне; кынд а кэзут попорул луй ын мына асуприторулуй, нимень ну й-а венит ын ажутор, яр врэжмаший се уйтау ла ел ши рыдяу де прэбуширя луй.
எருசலேம் துன்பப்பட்டு அலைந்த நாட்களில், முற்காலத்தில் தனக்குச் சொந்தமாயிருந்த செல்வங்களையெல்லாம் நினைவுகூருகிறாள். அவளுடைய மக்கள் பகைவரின் கையில் விழுந்தபோது, அவளுக்கு உதவிசெய்ய ஒருவருமே இருந்ததில்லை. மக்களுக்கு ஏற்பட்ட அழிவைக் கண்டு, அவளுடைய பகைவர் அவளைப் பார்த்து நகைத்தார்கள்.
8 Греу а пэкэтуит Иерусалимул! Де ачея а ажунс де скырбэ. Тоць чей че-л прецуяу ыл диспрецуеск акум, вэзынду-й голичуня, ши ел ынсушь се ынтоарче ын алтэ парте ши офтязэ.
எருசலேம் பெரும் பாவம் செய்து அசுத்தமடைந்தாள். அவளை கனம்பண்ணின யாவரும் அவளுடைய நிர்வாணத்தைக் கண்டதினால், அவளை அவமதிக்கிறார்கள்; அவள் தனக்குள் அழுது, தன் முகத்தை மறைத்துக் கொள்கிறாள்.
9 Некурэция стэтя липитэ пе поала хайней луй ши ну се гындя ла сфыршитул сэу. А кэзут греу де тот. Нимень ну-л мынгые. „Вези-мь тикэлошия, Доамне, кэч ятэ че семец есте врэжмашул!”
அவளுடைய அசுத்தம் அவளுடைய உடைகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது; அவள் தன்னுடைய எதிர்காலத்தை எண்ணிப்பார்க்கவில்லை. ஆகையினால் அவளுடைய வீழ்ச்சி அதிர்ச்சியாயிருந்தது; அவளை தேற்றுவார் ஒருவரும் இல்லை. “யெகோவாவே, என்னுடைய துன்பத்தைப் பாரும்; என்னுடைய பகைவன் என்னை வெற்றி கொண்டானே” என்று அழுகிறாள்.
10 Асуприторул а ынтинс мына ла тот че авя ел май скумп; ба ынкэ а вэзут кум, ын Локашул луй чел Сфынт, ау интрат нямуриле, кэрора Ту ле порунчисешь сэ ну интре ын адунаря Та!
பகைவன் எருசலேமின் இன்பமான எல்லாவற்றின்மேலும் தன் கைகளை வைத்தான். அவளுடைய பரிசுத்த இடத்திற்குள் பிறநாட்டினர் நுழைவதை அவள் கண்டாள். யெகோவா தடைசெய்தவர்கள் அவருடைய சபைக்குள் நுழைவதை அவள் கண்டாள்.
11 Тот попорул луй каутэ пыне суспинынд; шь-ау дат лукруриле скумпе пе хранэ, нумай ка сэ-шь цинэ вяца. „Уйтэ-Те, Доамне, ши привеште кыт де ынжосит сунт!”
அவளுடைய மக்கள் யாவரும் அப்பத்தைத் தேடித் தவிக்கிறார்கள். அவர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக தங்கள் திரவியங்களை உணவுக்காக பண்டம் மாற்றம் செய்கிறார்கள். அவள், “யெகோவாவே கவனித்துப் பாரும்! நான் அவமதிக்கப்பட்டிருக்கிறேன்” என்று துக்கிக்கிறாள்.
12 „О, вой, каре тречець пе лынгэ мине, привиць ши ведець дакэ есте врео дурере ка дуреря мя, ка дуреря ку каре м-а ловит Домнул ын зиуа мынией Луй апринсе!
“இந்த வழியாய் கடந்துபோகிறவர்களே, உங்களுக்கு இது ஒரு பொருட்டாய் தோன்றவில்லையோ? சுற்றிலும் நோக்கிப்பாருங்கள். யெகோவா தமது கடுங்கோபத்தின் நாளில், என்மேல் கொண்டுவந்த வேதனையைப்போன்ற வேதனை ஏதும் உண்டோ?
13 Мь-а азвырлит де сус ын оасе ун фок каре ле арде; мь-а ынтинс ун лац суб пичоаре ши м-а дат ынапой. М-а ловит ку пустиире ши ку о лынчезялэ де тоате зилеле!
“யெகோவா உயரத்திலிருந்து நெருப்பை அனுப்பினார். அதை எனது எலும்புகளுக்குள் இறங்கப் பண்ணினார். அவர் என்னுடைய கால்களுக்கு ஒரு வலையை விரித்து, என்னைப் பின்னோக்கி திருப்பிவிட்டார். அவர் என்னைப் பாழாக்கி, நாள்தோறும் மயக்கமடையச் செய்தார்.
14 Мына Луй а легат жугул нелеӂюирилор меле, каре стау ымплетите ши легате де гытул меу. Мь-а фрынт путеря. Домнул м-а дат ын мыниле ачелора кэрора ну пот сэ ле стау ымпотривэ.
“என்னுடைய பாவங்கள் ஒரு நுகமாக கட்டப்பட்டிருக்கின்றன; அவை அவருடைய கைகளால் ஒன்றாக்கப்பட்டு, என் கழுத்தின்மேல் போடப்பட்டுள்ளன. யெகோவா என் பெலனை குன்றப்பண்ணினார். என்னால் எதிர்க்க முடியாதவர்களிடத்தில் என்னை ஒப்புக்கொடுத்து விட்டார்.
15 Домнул а трынтит ла пэмынт пе тоць витежий дин мижлокул меу; а стрынс о оштире ымпотрива мя, ка сэ-мь прэпэдяскэ тинеретул; ка ын тяск а кэлкат Домнул пе фечоара, фийка луй Иуда.
“என் மத்தியிலிருந்த இராணுவவீரர்களையெல்லாம் யெகோவா புறக்கணித்துவிட்டார்; என்னிடமுள்ள என்னுடைய வாலிபரை நசுக்கும்படி, எனக்கெதிராக ஒரு படையை அழைத்திருக்கிறார். யூதாவின் கன்னிகையை யெகோவா தம் திராட்சை ஆலையில் மிதித்துப்போட்டார்.
16 Де ачея плынг, ымь варсэ лакримь окий, кэч С-а депэртат де ла мине Чел че требуя сэ мэ мынгые, Чел че требуя сэ-мь ынвиорезе вяца; фиий мей сунт здробиць, кэч врэжмашул а бируит.”
“இதனால்தான் நான் அழுகிறேன். என் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிகிறது. என்னைத் தேற்ற என் அருகில் யாரும் இல்லை. என் ஆவிக்கு புத்துயிர் அழிக்கவும் ஒருவரும் இல்லை. பகைவன் வெற்றிகொண்டபடியினால், என்னுடைய பிள்ளைகள் ஆதரவற்றுப் போனார்கள்.”
17 Сионул ынтинде мыниле ругэтор, ши нимень ну-л мынгые. Домнул а тримис ымпотрива луй Иаков, де жур ымпрежур, врэжмашь; Иерусалимул а ажунс де батжокурэ ын мижлокул лор.
சீயோன் தன் கைகளை உதவிக்காக நீட்டுகிறாள், அவளை ஆறுதல்படுத்த ஒருவரும் இல்லை. யாக்கோபின் அயலவர் அவனுக்குப் பகைவர்களாகும்படி யெகோவா நியமித்திருக்கிறார்; அவர்கள் மத்தியில் எருசலேம் ஒரு அசுத்தப் பொருளாயிற்று.
18 „Домнул есте дрепт, кэч м-ам рэзврэтит ымпотрива порунчилор Луй. Аскултаць, тоате попоареле, ши ведеци-мь дуреря! Фечоареле ши тинерий мей с-ау дус ын робие.
“யெகோவா நேர்மையுள்ளவர், இருந்தாலும் நான் அவருடைய கட்டளைக்கு எதிராகக் கலகம் செய்தேன். மக்கள் கூட்டங்களே, நீங்கள் எல்லோரும் கேளுங்கள்; என்னுடைய துன்பத்தைப் பாருங்கள். என் இளைஞரும், இளம்பெண்களும் நாடுகடத்தப்பட்டுப் போனார்கள்.
19 Мь-ам кемат приетений, дар м-ау ыншелат, преоций ши бэтрыний мей ау мурит ын четате, кэутынд хранэ ка сэ-шь цинэ вяца.
“நான் என் கூட்டாளிகளை கூப்பிட்டேன், அவர்களோ எனக்கு துரோகம் செய்தார்கள். என்னுடைய ஆசாரியரும், முதியோரும் தங்கள் உயிரைக் காக்க உணவு தேடுகையில், பட்டணத்தில் அழிந்துபோனார்கள்.
20 Доамне, уйтэ-Те ла неказул меу. Лэунтрул меу фербе, ми с-а ынторс инима ын мине, кэч ам фост неаскултэтор. Афарэ, сабия м-а лэсат фэрэ копий; ын касэ, моартя.
“யெகோவாவே பாரும்! நான் எவ்வளவாய் துயரப்பட்டிருக்கிறேன். நான் எனக்குள்ளே கடும் வேதனைப்படுகிறேன். என் இருதயத்தில் கலக்கமுற்றிருக்கிறேன். ஏனெனில் நான் அதிகமாய் கலகம் பண்ணினேன். வெளியே, வாள் அழிக்கிறது; உள்ளே, மரணம் மட்டுமே இருக்கிறது.
21 М-ау аузит суспинынд, дар нимень ну м-а мынгыят. Тоць врэжмаший мей, кынд ау афлат де ненорочиря мя, с-ау букурат кэ Ту ай адус-о, дар вей адуче, вей вести зиуа кынд ши ей вор фи ка мине.
“என்னுடைய புலம்பலை மக்கள் கேட்டிருக்கிறார்கள், ஆனால் என்னைத் தேற்றுவதற்கோ ஒருவரும் இல்லை. என் பகைவர்கள் யாவரும் எனக்கு வந்த துயரத்தைக் கேள்விப்பட்டு, நீர் அதை செய்தபடியால் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்களும் என்னைப் போலாகும்படி நீர் அறிவித்த நாளை வரப்பண்ணும்.
22 Аду тоатэ рэутатя лор ынаинтя Та ши фэ-ле кум мь-ай фэкут мие пентру тоате фэрэделеӂиле меле! Кэч суспинеле меле сунт мулте ши инима ымь есте болнавэ.”
“அவர்களுடைய கொடுமைகள் எல்லாம் உமக்கு முன்பாக வரட்டும்; என்னுடைய எல்லா பாவங்களுக்காக நீர் எனக்குச் செய்ததுபோலவே, அவர்களுக்கும் செய்யும். என் புலம்பல்கள் அநேகம், என் இருதயமும் சோர்ந்துபோகிறது.”

< Плынӂериле 1 >