< Жудекэторий 8 >

1 Бэрбаций луй Ефраим ау зис луй Гедеон: „Че ынсямнэ фелул ачеста де пуртаре фацэ де ной? Пентру че ну не-ай кемат кынд ай плекат сэ те лупць ымпотрива луй Мадиан?” Ши ау авут о маре чартэ ку ел.
அப்பொழுது எப்பிராயீம் மனிதர்கள் அவனை நோக்கி: நீ மீதியானியர்கள்மேல் யுத்தம் செய்யப்போகிறபோது, எங்களை அழைக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று, அவனோடு கடுமையாக வாக்குவாதம்செய்தார்கள்.
2 Гедеон ле-а рэспунс: „Че-ам фэкут еу пе лынгэ вой? Оаре ну фаче май мулт кулесул чоркинелор рэмасе ын вия луй Ефраим декыт кулесул ынтреӂий вий а луй Абиезер?
அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியர்களின் திராட்சை பழத்தின் முழு அறுவடையை விட, எப்பிராயீமர்களின் மீதியான அறுவடை அதிகம் அல்லவா?
3 Ын мыниле воастре а дат Думнезеу пе кэпетенииле луй Мадиан: Ореб ши Зееб. Че-ам путут фаче еу деч пе лынгэ вой?” Дупэ че ле-а ворбит астфел, ли с-а потолит мыния.
தேவன் உங்கள் கையிலே மீதியானியர்களின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன் மேலிருந்த அவர்களுடைய கோபம் நீங்கினது.
4 Гедеон а ажунс ла Йордан ши л-а трекут, ел ши чей трей суте де оамень каре ерау ку ел, обосиць, дар урмэринд мереу пе врэжмаш.
கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், களைப்பாக இருந்தும் (எதிரியை) பின்தொடர்ந்தார்கள்.
5 Ел а зис челор дин Сукот: „Даць, вэ рог, кытева пынь попорулуй каре мэ ынсоцеште, кэч сунт обосиць ши сунт ын урмэриря луй Зебах ши Цалмуна, ымпэраций Мадианулуй.”
அவன் சுக்கோத்தின் மனிதர்களை நோக்கி: என்னோடிருக்கிற மக்களுக்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் களைப்பாக இருக்கிறார்கள், நான் மீதியானியர்களின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான்.
6 Кэпетенииле дин Сукот ау рэспунс: „Есте оаре мына луй Зебах ши Цалмуна ын стэпыниря та, ка сэ дэм пыне оштирий тале?”
அதற்குச் சுக்கோத்தின் பிரபுக்கள்: உன் ராணுவத்திற்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன்னுடைய கைவசம் வந்ததோ என்றார்கள்.
7 Ши Гедеон а зис: „Ей бине, дупэ че Домнул ва да ын мыниле ноастре пе Зебах ши пе Цалмуна, вэ вой скэрпина карня ку спинь дин пустиу ши ку мэрэчинь.”
அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: யெகோவா சேபாவையும் சல்முனாவையும் என்னுடைய கையில் ஒப்புக்கொடுக்கும்போது, உங்கள் சரீரத்தை வனாந்திரத்தின் நெரிஞ்சில்முட்களால் கிழித்துவிடுவேன் என்று சொல்லி,
8 Де аколо с-а суит ла Пенуел ши а фэкут челор дин Пенуел ачеяшь ругэминте. Ей й-ау рэспунс кум ый рэспунсесерэ чей дин Сукот.
அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப் போய், அந்த ஊர்க்காரர்களிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனிதர்கள் பதில் சொன்னபடியே பெனூவேலின் மனிதர்களும் அவனுக்குச் சொன்னார்கள்.
9 Ши а зис ши челор дин Пенуел: „Кынд мэ вой ынтоарче ын паче, вой дэрыма турнул ачеста.”
அப்பொழுது அவன், பெனூவேலின் மனிதர்களைப் பார்த்து: நான் சமாதானத்தோடு திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான்.
10 Зебах ши Цалмуна ерау ла Каркор ымпреунэ ку оштиря лор де апроапе чинчспрезече мий де оамень; тоць чей че май рэмэсесерэ дин тоатэ оштиря фиилор Рэсэритулуй, о сутэ доуэзечь де мий де оамень каре скотяу сабия, фусесерэ учишь.
௧0சேபாவும் சல்முனாவும் அவர்களோடு அவர்களுடைய படைகளும் ஏறக்குறைய 15,000 பேர் கர்கோரில் இருந்தார்கள்; பட்டயம் உருவத்தக்கவர்கள் 1,20,000 பேர் விழுந்தபடியால், கிழக்குப்பகுதி மக்கள் எல்லா ராணுவத்திலும் இவர்கள் மட்டும் மீதியாக இருந்தார்கள்.
11 Гедеон с-а суит пе друмул челор че локуеск ын кортурь ла рэсэрит де Нобах ши де Иогбеха ши а бэтут оштиря каре се кредя ла адэпост.
௧௧கிதியோன் கூடாரங்களில் குடியிருக்கிறவர்கள் வழியாக நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கில் போய், அந்த ராணுவம் பயமில்லை என்று இருந்தபோது, அதை முறியடித்தான்.
12 Зебах ши Цалмуна ау луат фуга; Гедеон й-а урмэрит, а принс пе чей дой ымпэраць ай Мадианулуй, Зебах ши Цалмуна, ши а пус пе фугэ тоатэ оштиря.
௧௨சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியர்களின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, ராணுவம் முழுவதையும் கலங்கடித்தான்.
13 Гедеон, фиул луй Иоас, с-а ынторс де ла луптэ прин суишул Херес.
௧௩யோவாசின் மகனான கிதியோன் யுத்தம்செய்து, சூரியன் உதிக்கும் முன்னே திரும்பிவந்தபோது,
14 А принс динтре чей дин Сукот ун тынэр пе каре л-а ынтребат ши каре й-а дат ын скрис нумеле кэпетениилор ши бэтрынилор дин Сукот; ерау шаптезечь ши шапте де бэрбаць.
௧௪சுக்கோத்தின் மனிதர்களில் ஒரு வாலிபனைப் பிடித்து, அவனிடத்தில் விசாரித்தான்; அவன் சுக்கோத்தின் பிரபுக்களும் அதின் மூப்பர்களுமாகிய 77 மனிதர்களின் பேரை அவனுக்கு எழுதிக்கொடுத்தான்.
15 Апой а венит ла чей дин Сукот ши а зис: „Ятэ пе Зебах ши Цалмуна, пентру каре м-аць батжокорит зикынд: ‘Оаре мына луй Зебах ши Цалмуна есте ын стэпыниря та, ка сэ дэм пыне оаменилор тэй обосиць?’”
௧௫அவன் சுக்கோத்து ஊர்க்காரர்களிடத்தில் வந்து: இதோ, களைத்திருக்கிற உன் மனிதர்களுக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன்னுடைய கைவசம் வந்ததோ என்று நீங்கள் என்னை நிந்தித்துச் சொன்ன சேபாவும் சல்முனாவும் இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி,
16 Ши а луат пе бэтрыний четэций ши а педепсит пе оамений дин Сукот ку спинь дин пустиу ши ку мэрэчинь.
௧௬பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் நெரிஞ்சில்முட்களை கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனிதர்களுக்குப் புத்திவரச்செய்து,
17 А дэрымат ши турнул дин Пенуел ши а учис пе оамений четэций.
௧௭பெனூவேலின் கோபுரத்தை இடித்து, அந்த ஊர் மனிதர்களையும் கொன்றுபோட்டான்.
18 Ел а зис луй Зебах ши луй Цалмуна: „Кум ерау оамений пе каре й-аць учис ла Табор?” Ей ау рэспунс: „Ерау ка тине, фиекаре авя ынфэцишаря унуй фиу де ымпэрат.”
௧௮பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்றுபோட்ட அந்த மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போல் இருந்தான் என்றார்கள்.
19 Ел а зис: „Ерау фраций мей, фиий мамей меле. Виу есте Домнул кэ, дакэ й-аць фи лэсат ку вяцэ, ну в-аш учиде.”
௧௯அப்பொழுது அவன்: அவர்கள் என்னுடைய சகோதரர்களும் என்னுடைய தாயின் பிள்ளைகளுமாக இருந்தார்கள்; அவர்களை உயிரோடே வைத்திருந்தீர்களானால். உங்களைக் கொல்லாதிருப்பேன் என்று யெகோவாவின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி,
20 Ши а зис луй Иетер, ынтыюл луй нэскут: „Скоалэ-те ши учиде-й!” Дар тынэрул ну шь-а скос сабия, пентру кэ-й ера тямэ, кэч ера ынкэ ун копил.
௨0தன்னுடைய மூத்தமகனான யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் தான் இளைஞனானபடியால் பயந்து தன்னுடைய பட்டயத்தை உருவாமல் இருந்தான்.
21 Зебах ши Цалмуна ау зис: „Скоалэ-те ту ынсуць ши учиде-не! Кэч кум е омул аша е ши путеря луй.” Ши Гедеон с-а скулат ши а учис пе Зебах ши Цалмуна. А луат апой лунишоареле де ла гытул кэмилелор лор.
௨௧அப்பொழுது சேபாவும் சல்முனாவும்: நீரே எழுந்து எங்களைக் கொல்லும்; மனிதன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த பொன்னால் அலங்கரிக்கப்பட்ட பிறை வடிவமான ஆபரணங்களை எடுத்துக்கொண்டான்.
22 Бэрбаций луй Исраел ау зис луй Гедеон: „Домнеште песте ной, ту ши фиул тэу, ши фиул фиулуй тэу, кэч не-ай избэвит дин мына луй Мадиан.”
௨௨அப்பொழுது இஸ்ரவேல் மனிதர்கள் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர்கள் கைக்கு தப்புவித்தபடியால் நீரும் உம்முடைய மகனும், உம்முடைய மகனின் மகனும், எங்களை ஆண்டுகொள்ளக்கடவீர்கள் என்றார்கள்.
23 Гедеон ле-а зис: „Еу ну вой домни песте вой, нич фиий мей ну вор домни песте вой, чи Домнул ва домни песте вой.”
௨௩அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என்னுடைய மகனும் உங்களை ஆளமாட்டான்; யெகோவாவே உங்களை ஆளுவாராக என்றான்.
24 Гедеон ле-а зис: „Ам сэ вэ фак о ругэминте: даци-мь фиекаре вериӂиле де нас пе каре ле-аць луат ка прадэ.” (Врэжмаший авяу вериӂь де аур, кэч ерау исмаелиць.)
௨௪பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலர்களாக இருந்தபடியால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது.
25 Ей ау зис: „Ци ле вом да ку плэчере.” Ши ау ынтинс о манта, пе каре а арункат фиекаре вериӂиле пе каре ле прэдасе.
௨௫இஸ்ரவேலர்கள்: சந்தோஷமாகக் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு துணியை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள்.
26 Греутатя вериӂилор де аур пе каре ле-а черут Гедеон а фост де о мие шапте суте де сикли де аур, афарэ де лунишоаре, де черчеий де аур ши де хайнеле де пурпурэ пе каре ле пуртау ымпэраций Мадианулуй ши афарэ де лэнцишоареле де ла гытул кэмилелор лор.
௨௬பிறை வடிவிலான ஆபரணங்களும், ஆரங்களும், மீதியானியர்களின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த விலையுயர்ந்த ஊதா நிற ஆடைகளும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சங்கலிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாக இருந்தது.
27 Гедеон а фэкут дин еле ун ефод ши л-а пус ын четатя луй, ла Офра, унде а ажунс о причинэ де курвие пентру тот Исраелул ши а фост о курсэ пентру Гедеон ши пентру каса луй.
௨௭அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன்னுடைய ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலர்கள் எல்லோரும் அதைத் தொழுதுகொண்டதால் விபசாரம் செய்தவர்களானார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியானது.
28 Мадианул а фост смерит ынаинтя копиилор луй Исраел ши н-а май ридикат капул. Ши цара а авут одихнэ патрузечь де ань, ын тимпул веций луй Гедеон.
௨௮இப்படியாக மீதியானியர்கள் திரும்ப தலை தூக்காதபடி, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் 40 வருடங்கள் அமைதியாக இருந்தது.
29 Иерубаал, фиул луй Иоас, с-а ынторс ши а локуит ын каса луй.
௨௯யோவாசின் மகனான யெருபாகால் (கிதியோனின் மற்றொரு பெயர்) போய், தன்னுடைய வீட்டிலே வாழ்ந்து வந்தான்.
30 Гедеон а авут шаптезечь де фий ешиць дин ел, кэч а авут май мулте невесте.
௩0கிதியோனுக்கு அநேகம் மனைவிகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான மகன்கள் எழுபதுபேர்.
31 Циитоаря луй, каре ера ла Сихем, й-а нэскут де асеменя ун фиу, кэруя й-ау пус нумеле Абимелек.
௩௧சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு மகனைப்பெற்றாள்; அவனுக்கு அபிமெலேக்கு என்று பெயரிட்டான்.
32 Гедеон, фиул луй Иоас, а мурит дупэ о бэтрынеце феричитэ ши а фост ынгропат ын мормынтул татэлуй сэу Иоас, ла Офра, каре ера а фамилией луй Абиезер.
௩௨பின்பு யோவாசின் மகனான கிதியோன் நல்ல முதிர்வயதிலே இறந்து, ஒப்ராவிலே தன்னுடைய தகப்பனான யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டான்.
33 Дупэ моартя луй Гедеон, копиий луй Исраел ау ынчепут ярэшь сэ курвяскэ ку баалий ши ау луат пе Баал-Берит ка думнезеу ал лор.
௩௩கிதியோன் இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பவும் பாகால்களைத் தொழுதுகொண்டதால் விபசாரம் செய்தவர்களாகி, பாகால்பேரீத்தைத் தங்களுக்கு தேவனாக வைத்துக்கொண்டார்கள்.
34 Копиий луй Исраел ну шь-ау адус аминте де Домнул Думнезеул лор, каре-й избэвисе дин мына тутурор врэжмашилор каре-й ынконжурау.
௩௪இஸ்ரவேல் மக்கள் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லா எதிரிகளின் கைகளிலிருந்தும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய யெகோவாவை நினைக்காமலும்,
35 Ши н-ау цинут ла каса луй Иерубаал, а луй Гедеон, дупэ тот бинеле пе каре-л фэкусе ел луй Исраел.
௩௫கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலுக்குச் செய்த எல்லா நன்மைகளுக்குத்தகுந்த தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள்.

< Жудекэторий 8 >