< ИОНА 1 >
1 Кувынтул Домнулуй а ворбит луй Иона, фиул луй Амитай, астфел:
அமித்தாயின் மகனாகிய யோனாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது.
2 „Скоалэ-те, ду-те ла Ниниве, четатя чя маре, ши стригэ ымпотрива ей! Кэч рэутатя ей с-а суит пынэ ла Мине!”
“நீ பெரிய பட்டணமான நினிவேக்குப் போய், அதற்கு எதிராகப் பிரசங்கம்பண்ணு. ஏனெனில், அதன் கொடுமை எனக்கு முன்பாக வந்திருக்கிறது.”
3 Ши Иона с-а скулат сэ фугэ ла Тарс, департе де Фаца Домнулуй. С-а коборыт ла Иафо ши а гэсит аколо о корабие каре мерӂя ла Тарс. А плэтит прецул кэлэторией ши с-а суит ын корабие ка сэ мяргэ ымпреунэ ку кэлэторий ла Тарс, департе де Фаца Домнулуй.
ஆனால் யோனாவோ, யெகோவாவைவிட்டு ஓடி மறுதிசையிலிருக்கும் தர்ஷீசுக்குப் போகப் புறப்பட்டான். அவன் யோப்பாவுக்குப் போய் அங்கே தர்ஷீஸ் துறைமுகத்துக்குப் போகும் ஒரு கப்பலைக் கண்டான். அவன் பயணத்துக்கான கட்டணத்தைச் செலுத்தி, கப்பலேறி, யெகோவாவிடமிருந்து தப்பிக்கொள்வதற்காக தர்ஷீசுக்குப் பயணமானான்.
4 Дар Домнул а фэкут сэ суфле пе маре ун вынт нэпрасник ши а стырнит о маре фуртунэ. Корабия аменинца сэ се сфэрыме.
அப்பொழுது யெகோவா கடலில் பெருங்காற்றை அனுப்பினார். கப்பல் உடைந்துபோகுமென பயப்படத்தக்கதான, ஒரு பெரும்புயல் கடலில் உண்டாயிற்று.
5 Корэбиерий с-ау темут, а стригат фиекаре ла думнезеул луй ши ау арункат ын маре унелтеле дин корабие, ка с-о факэ май ушоарэ. Иона с-а коборыт ын фундул корабией, с-а кулкат ши а адормит дус.
கப்பலாட்கள் எல்லோரும் பயந்து, ஒவ்வொருவனும் தன்தன் தெய்வத்தை நோக்கிக் கதறினான். அத்துடன் அவர்கள் கப்பலின் பாரத்தைக் குறைப்பதற்காக, அதிலிருந்த சரக்குகள் எல்லாவற்றையும் கடலில் எறிந்தார்கள். ஆனால் யோனாவோ, கப்பலின் அடித்தளத்திற்குச் சென்று அங்கே படுத்து ஆழ்ந்த நித்திரையாயிருந்தான்.
6 Кырмачул с-а апропият де ел ши й-а зис: „Че дормь? Скоалэ-те ши кямэ пе Думнезеул тэу! Поате кэ Думнезеу ва вои сэ се гындяскэ ла ной, ши ну вом пери!”
அப்பொழுது மாலுமி அவனிடம் சென்று, “நீ எப்படி நித்திரை செய்யலாம்? எழுந்து நீயும் உன் தெய்வத்திடம் மன்றாடு; ஒருவேளை அவர் நம்மில் கவனம்கொண்டு, அழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றக்கூடும் என்றான்.”
7 Ши ау зис унул кэтре алтул: „Вениць сэ траӂем ла сорць, ка сэ штим дин причина куй а венит песте ной ненорочиря ачаста!” Ау трас ла сорць, ши сорцул а кэзут пе Иона.
அப்பொழுது கப்பலாட்கள் ஒருவரையொருவர் நோக்கி, “வாருங்கள், இந்த பேராபத்திற்குக் காரணம் யார் என்று அறியச் சீட்டுப் போடுவோம் என்றார்கள்.” அவர்கள் சீட்டுப் போட்டபொழுது, அது யோனாவின் பெயருக்கு விழுந்தது.
8 Атунч, ей й-ау зис: „Спуне-не дин причина куй а венит песте ной ненорочиря ачаста? Че месерие ай ши де унде вий? Каре ыць есте цара ши дин че попор ешть?”
எனவே அவர்கள் அவனிடம், “இந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் காரணம் யார்? என்று இப்பொழுது நீ எங்களுக்குச் சொல்லவேண்டும். நீ என்ன வேலைசெய்கிறாய்? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உனது நாடு எது? நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்?” எனக் கேட்டார்கள்.
9 Ел ле-а рэспунс: „Сунт евреу ши мэ тем де Домнул Думнезеул черурилор, каре а фэкут маря ши ускатул!”
அதற்கு அவன் அவர்களிடம், “நான் ஒரு எபிரெயன், கடலையும் நிலத்தையும் படைத்த பரலோகத்தின் இறைவனாகிய யெகோவாவை ஆராதிக்கிறவன்” எனப் பதிலளித்தான்.
10 Оамений ачея ау авут о маре тямэ ши й-ау зис: „Пентру че ай фэкут лукрул ачеста?” Кэч оамений ачея штияу кэ фуӂя де Фаца Домнулуй, пентру кэ ле спусесе ел.
அவன் தான் யெகோவாவைவிட்டு ஓடிப்போகிறவன் என்று ஏற்கெனவே அவர்களிடம் சொல்லியிருந்தான். எனவே அவர்கள் அதைப்பற்றி அறிந்ததால் மிகவும் பயந்து, நீ என்ன செய்துவிட்டாய்? என்று கேட்டார்கள்.
11 Ей й-ау зис: „Че сэ-ць фачем ка сэ се потоляскэ маря фацэ де ной?” Кэч маря ера дин че ын че май ынфуриятэ.
கடல் மென்மேலும் கொந்தளித்தது. எனவே அவர்கள், “கடலின் கொந்தளிப்பை அமைதிப்படுத்த, நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும்?” என அவனைக் கேட்டார்கள்.
12 Ел ле-а рэспунс: „Луаци-мэ ши арункаци-мэ ын маре, ши маря се ва линишти фацэ де вой! Кэч штиу кэ дин вина мя вине песте вой ачастэ маре фуртунэ!”
“என்னைத் தூக்கிக் கடலுக்குள் எறிந்துவிடுங்கள்; அப்பொழுது அது அமைதலாகும். என் குற்றத்தினாலேயே உங்கள்மேல் இப்பெரும் புயல் வந்திருக்கிறது என நான் அறிவேன்” என அவன் விடையளித்தான்.
13 Оамений ачештя высляу ка сэ ажунгэ ла ускат, дар ну путяу, пентру кэ маря се ынтэрыта тот май мулт ымпотрива лор.
ஆனாலும் அந்த மனிதர், கப்பலை தண்டுவலித்து கரைக்குக் கொண்டுபோகும்படி, தங்களால் இயன்றவரை முயற்சித்தனர். ஆனால் அது அவர்களால் முடியவில்லை. கடலோ முன்பு இருந்ததைவிட, மிக அதிகமாக கொந்தளித்துக் கொண்டேயிருந்தது.
14 Атунч ау стригат кэтре Домнул ши ау зис: „Доамне, ну не перде дин причина веций омулуй ачестуя ши ну не ымповэра ку сынӂе невиноват! Кэч Ту, Доамне, фачь че врей!”
அப்பொழுது அவர்கள் யெகோவாவிடம் வேண்டுதல்செய்து, “யெகோவாவே, இந்த மனிதனின் உயிரை எடுத்ததற்காக எங்களைச் சாகவிடாதேயும். குற்றமற்ற ஒரு மனிதனைக் கொன்றதற்கான பழியை எங்கள்மீது சுமத்தாதேயும். ஏனெனில், நீர் எப்பொழுதும் உமது விருப்பத்தின்படியே செய்திருக்கிறீர்” என அழுதார்கள்.
15 Апой ау луат пе Иона ши л-ау арункат ын маре. Ши фурия мэрий с-а потолит.
அதன்பின் அவர்கள் யோனாவைத் தூக்கிக் கப்பலைவிட்டு கடலுக்குள் எறிந்தார்கள். அப்பொழுது கொந்தளித்த கடல் அமைதியானது.
16 Пе оамений ачея й-а апукат о маре фрикэ де Домнул ши ау адус Домнулуй о жертфэ ши Й-ау фэкут журуинце.
இதைக் கண்ட அம்மனிதர்கள் யெகோவாவுக்கு மிகவும் பயந்து, அவருக்கு பலியைச் செலுத்தினார்கள்; அவருக்கு நேர்த்திக்கடன்களையும் செய்தார்கள்.
17 Домнул а тримис ун пеште маре сэ ынгитэ пе Иона ши Иона а стат ын пынтечеле пештелуй трей зиле ши трей нопць.
ஆனால் யெகோவாவோ, யோனாவை விழுங்கும்படி, ஒரு பெரிய மீனை ஆயத்தப்படுத்தியிருந்தார்; யோனா அந்த மீனின் வயிற்றில் மூன்றுநாள் இரவும் பகலும் இருந்தான்.