< Иеремия 28 >

1 Ын ачелашь ан, ла ынчепутул домнией луй Зедекия, ымпэратул луй Иуда, ын луна а чинчя а анулуй ал патруля, Ханания, фиул луй Азур, пророк дин Габаон, мь-а зис ын Каса Домнулуй, ын фаца преоцилор ши а ынтрегулуй попор:
யூதாவின் அரசன் சிதேக்கியாவின் ஆட்சியின் ஆரம்ப காலத்தில், நான்காம் வருடம் ஐந்தாம் மாதத்தில் இறைவாக்கினன் அனனியா சொன்னது இதுவே, கிபியோன் ஊரானாகிய அசூரின் மகனான இவன், யெகோவாவின் ஆலயத்தில் ஆசாரியருக்கும், மற்ற எல்லா மக்களுக்கும் முன்பாக என்னிடம் சொன்னதாவது:
2 „Аша ворбеште Домнул оштирилор, Думнезеул луй Исраел: ‘Еу сфэрым жугул ымпэратулуй Бабилонулуй!
“இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: ‘பாபிலோன் அரசனின் நுகத்தை முறிப்பேன்.
3 Песте дой ань, вой адуче ынапой ын локул ачеста тоате унелтеле Касей Домнулуй, пе каре ле-а ридикат Небукаднецар, ымпэратул Бабилонулуй, дин локул ачеста ши ле-а дус ын Бабилон.
பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார், இவ்விடத்திலிருந்து பாபிலோனுக்கு கொண்டுபோன யெகோவாவின் ஆலயத்திற்குரிய பொருட்கள் எல்லாவற்றையும் இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் இந்த இடத்திற்கு நான் கொண்டுவருவேன்.
4 Ши вой адуче ынапой, ын локул ачеста’, зиче Домнул, ‘пе Иекония, фиул луй Иоиаким, ымпэратул луй Иуда, ши пе тоць принший де рэзбой ай луй Иуда, каре с-ау дус ын Бабилон, кэч вой сфэрыма жугул ымпэратулуй Бабилонулуй.’”
பாபிலோனுக்குச் சென்ற யூதாவின் அரசன் யோயாக்கீமின் மகன் எகொனியாவையும், யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட எல்லோரையும் நான் இந்த இடத்திற்கு மீண்டும் கொண்டுவருவேன்.’ ஏனெனில் நான் ‘பாபிலோன் அரசனின் நுகத்தை உடைப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்’ என்றான்.”
5 Пророкул Иеремия а рэспунс пророкулуй Ханания ын фаца преоцилор ши а ынтрегулуй попор, каре стэтяу ын Каса Домнулуй.
அப்பொழுது எரேமியா, ஆசாரியருக்கும் யெகோவாவின் ஆலயத்தில் நின்றுகொண்டிருந்த எல்லா மக்களுக்கும் முன்பாக, இறைவாக்கினன் அனனியாவுக்குப் பதிலளித்தான்.
6 Иеремия, пророкул, а зис: „Амин! Аша сэ факэ Домнул! Сэ ымплиняскэ Домнул кувинтеле пе каре ле-ай пророчит ту ши сэ адукэ ынапой дин Бабилон ын локул ачеста унелтеле Касей Домнулуй ши пе тоць принший де рэзбой!
“ஆமென், யெகோவா அவ்வாறே செய்வாராக; பாபிலோனிலிருந்து யெகோவாவின் ஆலய பொருட்களையும், நாடுகடத்தப்பட்டோர் அனைவரையும், திரும்பவும் இந்த இடத்திற்குக் கொண்டுவருவதன் மூலம் நீ கூறிய வார்த்தைகளை யெகோவா நிறைவேற்றுவாராக.
7 Нумай аскултэ кувынтул пе каре-л ростеск еу ын аузул тэу ши ын аузул ынтрегулуй попор:
ஆயினும், நீயும் எல்லா மக்களும் கேட்கத்தக்கதாக நான் இப்பொழுது கூறப்போவதற்குச் செவிகொடு.
8 ‘Пророчий каре ау фост ынаинтя мя ши ынаинтя та, дин времуриле стрэвекь, ау пророчит рэзбой, фоамете ши чумэ ымпотрива унор цэрь путерниче ши ымпотрива унор ымпэрэций марь.
உனக்கும் எனக்கும் முன்வாழ்ந்த இறைவாக்கு உரைப்போர், முற்காலம் தொடங்கியே அநேக நாடுகளுக்கும், பெரும் அரசுகளுக்கும் விரோதமாக யுத்தத்தையும், பேராபத்தையும், கொள்ளைநோயையும் பற்றி இறைவாக்கு கூறினார்கள்.
9 Дар, дакэ ун пророк пророчеште пачя, нумай дупэ ымплиниря челор че пророчеште се ва куноаште кэ есте ку адевэрат тримис де Домнул.’”
ஆனால் சமாதானத்தை இறைவாக்காகக் கூறுகிற இறைவாக்கினனின் முன்னறிவிப்பு நிறைவேறினால் மட்டுமே, அவன் உண்மையாக யெகோவாவினால் அனுப்பப்பட்டவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுவான்” என்றான்.
10 Атунч, пророкул Ханания а ридикат жугул де пе грумазул пророкулуй Иеремия ши л-а сфэрымат.
அப்பொழுது இறைவாக்கினன் அனனியா, இறைவாக்கினன் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான்.
11 Ши Ханания а зис ын фаца ынтрегулуй попор: „Аша ворбеште Домнул: ‘Аша вой сфэрыма песте дой ань де пе грумазул тутурор нямурилор жугул луй Небукаднецар, ымпэратул Бабилонулуй!’” Пророкул Иеремия а плекат.
அதன்பின் அனனியா எல்லா மக்களுக்கு முன்பாகவும், “யெகோவா கூறுவது இதுவே: இதைப்போலவே நான் எல்லா தேசத்தாரின் கழுத்திலிருந்தும், பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரின் நுகத்தை இரண்டு வருடங்களுக்குள் உடைத்துப்போடுவேன் என்கிறார்” என்றான். இதைக் கேட்ட இறைவாக்கினன் எரேமியா தன் வழியே போனான்.
12 Дупэ че а сфэрымат пророкул Ханания жугул де пе грумазул пророкулуй Иеремия, Кувынтул Домнулуй а ворбит луй Иеремия астфел:
இறைவாக்கினன் எரேமியாவின் கழுத்திலிருந்த நுகத்தை இறைவாக்கினன் அனனியா முறித்துப்போட்ட சற்று நேரத்திற்குப்பின் எரேமியாவுக்கு யெகோவாவின் வார்த்தை வந்தது:
13 „Ду-те ши спуне луй Ханания: ‘Аша ворбеште Домнул: «Ай сфэрымат ун жуг де лемн, дар ку ачаста ай фэкут ын локул луй ун жуг де фер!»
அவர் அவனிடம், நீ போய் அனனியாவிடம், “யெகோவா சொல்வது இதுவே: நீ மரத்தினாலான நுகத்தை உடைத்து விட்டாய்; ஆனால், அதற்குப் பதிலாக இரும்பினாலான நுகம் உனக்குக் கிடைக்கும்.
14 Кэч аша ворбеште Домнул оштирилор, Думнезеул луй Исраел: «Пун ун жуг де фер пе грумазул тутурор ачестор нямурь, ка сэ фие субжугате де Небукаднецар, ымпэратул Бабилонулуй, ши-й вор служи; ши-й дау кяр ши фяреле кымпулуй!»’”
இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: இந்த எல்லா நாடுகளும் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாருக்குப் பணிசெய்யும்படி அவர்களுடைய கழுத்தின்மேல் இரும்பு நுகத்தை வைப்பேன். அவர்கள் அவனுக்குப் பணிசெய்வார்கள். காட்டு மிருகங்களின்மேலும் அவனுக்கு அதிகாரத்தைக் கொடுப்பேன் என்று சொல்” என்றார்.
15 Ши пророкул Иеремия а зис пророкулуй Ханания: „Аскултэ, Ханания! Домнул ну те-а тримис, чи ту инсуфль попорулуй о ынкредере минчиноасэ.
அப்பொழுது இறைவாக்கினன் எரேமியா, இறைவாக்கினன் அனனியாவிடம், “அனனியாவே! கேள், யெகோவா உன்னை அனுப்பவில்லை; ஆயினும் இந்த மக்கள் பொய்யை நம்பும்படி நீ அவர்களை தூண்டிவிட்டிருக்கிறாய்.
16 Де ачея, аша ворбеште Домнул: ‘Ятэ, те изгонеск де пе пэмынт ши вей мури кяр ын анул ачеста, кэч кувинтеле тале сунт о рэзврэтире ымпотрива Домнулуй.’”
ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: நான் உன்னைப் பூமியிலிருந்து நீக்கிவிடப் போகிறேன். நீ யெகோவாவுக்கு விரோதமாகக் கலகத்தைப் பிரசங்கித்திருக்கிறபடியால், இந்த வருடத்திலேயே நீ சாகப்போகிறாய்” என்றான்.
17 Ши пророкул Ханания а мурит кяр ын анул ачела, ын луна а шаптя.
அப்படியே இறைவாக்கினன் அனனியா அதே வருடம் ஏழாம் மாதத்தில் இறந்தான்.

< Иеремия 28 >