< Осея 8 >
1 Пуне трымбица ын гурэ! Врэжмашул вине ка ун вултур песте Каса Домнулуй! Кэч ау кэлкат легэмынтул Меу ши ау пэкэтуит ымпотрива Леӂий Меле.
“உங்கள் உதடுகளில் எக்காளத்தை வையுங்கள்; யெகோவாவின் ஆலயத்துக்கு மேலாக ஒரு எதிரி கழுகைப்போல் பறக்கிறான். ஏனெனில் அவர்கள் எனது உடன்படிக்கையை மீறி, எனது சட்டத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள்.
2 Атунч вор стрига кэтре Мине: ‘Думнезеуле, ной Те куноаштем, ной, Исраел!’
‘எங்கள் இறைவனே, நாங்கள் உம்மை அறிந்திருக்கிறோம்!’ என்று இஸ்ரயேலர் என்னை நோக்கிக் கதறுகிறார்கள்.
3 Исраел а лепэдат бинеле ку скырбэ; де ачея врэжмашул ыл ва урмэри.
ஆனால் இஸ்ரயேலர் நன்மையானதைப் புறக்கணித்துவிட்டார்கள்; அதனால் ஒரு பகைவன் அவர்களைப் பின்தொடர்வான்.
4 Ау пус ымпэраць фэрэ порунка Мя ши кэпетений фэрэ штиря Мя; ау фэкут идоль дин арӂинтул ши аурул лор, де ачея вор фи нимичиць.
என் மக்கள் எனது சம்மதம் இன்றி அரசர்களை ஏற்படுத்துகிறார்கள்; எனது அங்கீகாரம் இல்லாமல், அவர்கள் இளவரசர்களைத் தெரிந்துகொள்கிறார்கள். அவர்கள் தங்கள் வெள்ளியினாலும், தங்கத்தினாலும் தங்களுக்கென விக்கிரகங்களைச் செய்கிறார்கள்; இது அவர்களின் அழிவுக்கே ஏதுவாகும்.
5 Вицелул тэу есте о скырбэ, Самарио! Мыния Мя с-а апринс ымпотрива лор! Пынэ кынд ну вор вои ей сэ се цинэ кураць?
யெகோவா சொல்வதாவது: சமாரியாவே, உன் கன்றுக்குட்டி விக்கிரகத்தை எறிந்துவிடு; எனது கோபம் உனக்கெதிராக பற்றியெரிகிறது. எவ்வளவு காலத்திற்கு இவர்கள் தூய்மையடையாது இருப்பார்கள்?
6 Идолул ачеста вине дин Исраел, ун лукрэтор л-а фэкут, ши ну есте Думнезеу. Де ачея, вицелул Самарией ва фи фэкут букэць!
அந்த விக்கிரகம் இஸ்ரயேலிலிருந்து வந்தது; அது இறைவனல்ல, அதை ஒரு கைவினைஞன் செய்தான், எனவே சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாக உடைக்கப்படும்.
7 Фииндкэ ау семэнат вынт, вор сечера фуртунэ. Ну ле ва креште ун спик де грыу; че ва рэсэри ну ва да фэинэ ши, дакэ ар да, ар мынка-о стрэиний.
“ஏனெனில் அவர்கள் காற்றை விதைத்து, சுழல்காற்றை அறுவடை செய்கிறார்கள். பயிரின் தண்டில் கதிர் இல்லை; அதிலிருந்து மாவும் கிடைக்காது. அது தானியத்தைக் கொடுக்குமானால் அவற்றை அந்நியர் விழுங்குவார்கள்.
8 Исраел есте нимичит! Акум ей ау ажунс принтре нямурь ка ун вас фэрэ прец.
இஸ்ரயேல் விழுங்கப்பட்டது; இப்பொழுது அவர்கள் நாடுகளுக்குள்ளே ஒருவருக்கும் பயனற்ற பானையைப்போல் இருக்கிறார்கள்.
9 Кэч с-ау дус ын Асирия, ка ун мэгар сэлбатик каре умблэ рэзлец. Ефраим а дат дарурь ка сэ айбэ приетень!
அவர்கள் தனிமையில் அலைந்து திரியும் காட்டுக் கழுதைபோல் அசீரியாவுக்குப் போய்விட்டார்கள். எப்பிராயீமர் தன்னை தன் காதலர்களுக்கு விற்றுப் போட்டார்கள்.
10 Кяр дакэ ей дау дарурь нямурилор, тот ый вой апэса, ка сэ ынчетезе пентру пуцинэ време сэ май унгэ вреун ымпэрат ши домнь.
அப்படி அவர்கள் தங்களைப் பிற தேசத்தாருக்குள் விற்றிருந்தாலும், இப்பொழுது நான் அவர்களை ஒன்றுசேர்ப்பேன். வலிமைமிக்க அரசனின் கையின் ஒடுக்குதலின்கீழ், அவர்கள் வலிமை குன்றத் தொடங்குவார்கள்.
11 Кэч Ефраим а зидит мулте алтаре ка сэ пэкэтуяскэ, ши алтареле ачестя л-ау фэкут сэ кадэ ын пэкат.
“எப்பிராயீம் பாவநிவாரண காணிக்கைகளுக்காகப் பலிபீடங்களைக் கட்டினாலும், இவை பாவம் செய்வதற்கான பலிபீடங்களாயின.
12 Кяр дакэ-й скриу тоате порунчиле Леӂий Меле, тотушь еле сунт привите ка чева стрэин.
நான் அவர்களின் நலத்திற்காக எனது சட்டத்தைப்பற்றிய அநேக காரியங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்; ஆனால் அவர்கள் அவற்றை ஒரு அந்நியமான காரியமாக மதித்தார்கள்.
13 Ей ынжунгие вителе пе каре Ми ле адук ши карня ле-о мэнынкэ, де ачея Домнул ну ле примеште! Акум, Домнул Ышь адуче аминте де нелеӂюиря лор ши ле ва педепси пэкателе: се вор ынтоарче ын Еӂипт!
அவர்கள் எனக்குப் பலிகளைச் செலுத்தி, அதன் இறைச்சியை அவர்கள் சாப்பிடுகிறார்கள்; ஆனாலும் யெகோவா அவர்களின் செயல்களில் பிரியப்படவில்லை. இப்பொழுது யெகோவா அவர்களின் கொடுமையை நினைவில்கொண்டு, அவர்களுடைய பாவத்திற்காக அவர்களைத் தண்டிப்பார். அவர்கள் எகிப்திற்கே திரும்பிப் போவார்கள்.
14 Кэч Исраел а уйтат пе Чел че л-а фэкут, шь-а зидит палате ши Иуда а ынмулцит четэциле ынтэрите, де ачея вой тримите фок ын четэциле лор ши ле ва мистуи палателе.”
ஏனெனில் இஸ்ரயேல் தன்னை உண்டாக்கியவரை மறந்து, அரண்மனைகளைக் கட்டுகிறது; யூதா அநேக பட்டணங்களைச் சுற்றி அரண்களைக் கட்டியிருக்கிறது. ஆகவே நான் அவர்களுடைய பட்டணங்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்; அது அவர்களுடைய கோட்டைகளைச் சுட்டெரிக்கும்.”