< Езекиел 14 >

1 Кыцьва дин бэтрыний луй Исраел ау венит ла мине ши ау шезут ынаинтя мя.
இஸ்ரயேலின் முதியவர்கள் சிலர் எனக்கு முன்பாக வந்து அமர்ந்தார்கள்.
2 Ши кувынтул Домнулуй мь-а ворбит астфел:
அப்பொழுது யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது,
3 „Фиул омулуй, оамений ачештя ышь поартэ идолий ын инимэ ши ышь пиронеск привириле спре чея че й-а фэкут сэ кадэ ын нелеӂюире! Сэ Мэ лас Еу сэ фиу ынтребат де ей?
“மனுபுத்திரனே, இந்த மனிதர் தங்கள் இருதயங்களில் விக்கிரகங்களை வைத்திருக்கிறார்கள். தங்களை அக்கிரமத்திற்கு வழிநடத்தும் காரியங்களைத் தங்கள் கண்முன் வைத்திருக்கிறார்கள். இப்படியானவர்கள் என்னிடம் விசாரணை செய்ய நான் இடமளிக்க வேண்டுமோ?
4 Де ачея ворбеште-ле ши спуне-ле: ‘Аша ворбеште Домнул Думнезеу: «Орьче ом дин каса луй Исраел каре ышь поартэ идолий ын инимэ ши каре ышь пиронеште привириле спре чея че л-а фэкут сэ кадэ ын нелеӂюиря луй, дакэ ва вени сэ ворбяскэ пророкулуй, Еу, Домнул, ый вой рэспунде, ын чуда мулцимий идолилор луй,
ஆகையால் நீ அவர்களோடு பேசிச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: எந்தவொரு இஸ்ரயேலனாவது, தன் இருதயத்தில் விக்கிரகங்களை வைத்துக்கொண்டவனாய், தங்களை அக்கிரமத்திற்கு வழிநடத்தும் காரியங்களைத் தங்கள் கண்முன் வைத்துக்கொண்டு இறைவாக்கினன் ஒருவனிடம்போனால், யெகோவாவாகிய நான் அவனுடைய பெரும் விக்கிரக ஆராதனைக்கு ஏற்பவே பதிலளிப்பேன்.
5 ка сэ принд ын кяр инима лор пе ачея дин каса луй Исраел каре с-ау депэртат де Мине дин причина тутурор идолилор.»’
தங்களுடைய விக்கிரகங்களின் நிமித்தம், என்னைவிட்டு விலகிப்போன இஸ்ரயேல் மக்களின் இருதயங்களை மீண்டும் நான் என் பக்கம் திருப்புவதற்காக இவ்வாறு செய்வேன்.’
6 Де ачея, спуне касей луй Исраел: ‘Аша ворбеште Домнул Думнезеу: «Ынтоарчеци-вэ ши абатеци-вэ де ла идолий воштри, ынтоарчеци-вэ привириле де ла тоате урычуниле воастре!
“ஆதலால் நீ இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் சொல்லவேண்டியதாவது: ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. மனந்திரும்புங்கள்; உங்கள் விக்கிரங்களை விட்டுத் திரும்புங்கள். எல்லா அருவருப்பான பழக்கவழக்கங்களைவிட்டு உங்கள் முகத்தைத் திருப்புங்கள்.
7 Кэч орьче ом дин каса луй Исраел сау дин стрэиний каре локуеск пентру о време ын Исраел, каре с-а депэртат де Мине, каре ышь поартэ идолий ын инима луй ши ну-шь я привириле де ла чея че л-а фэкут сэ кадэ ын нелеӂюиря луй, дакэ ва вени сэ ворбяскэ унуй пророк ка сэ Мэ ынтребе прин ел, Еу, Домнул, прин Мине Ынсумь ый вой рэспунде.
“‘இஸ்ரயேலனாவது, இஸ்ரயேல் நாட்டில் வாழும் பிறநாட்டானாவது என்னைவிட்டுப் பிரிந்து, தன் இருதயத்தில் விக்கிரகங்களை வைத்துக்கொண்டும், தங்களை அக்கிரமத்திற்கு வழிநடத்தும் காரியங்களைத் தங்கள் முன் வைத்துக்கொண்டும் என்னிடம் விசாரிப்பதற்காக இறைவாக்கினரிடம் போவானானால், யெகோவாவாகிய நானே அவனுக்குப் பதிலளிப்பேன்.
8 Ымь вой ынтоарче Фаца ымпотрива омулуй ачестуя, ыл вой фаче ун семн ши де поминэ ши ыл вой нимичи ку десэвыршире дин мижлокул попорулуй Меу. Ши вець шти кэ Еу сунт Домнул!
நான் அவனுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்பி, அவனை ஒரு உதாரணமாகவும் ஒரு பழமொழியாகவும் வைத்து, அவனை என் மக்களிலிருந்து முற்றிலும் அகற்றிவிடுவேன். அப்பொழுது நானே யெகோவா என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.
9 Дакэ пророкул се ва лэса амэӂит сэ ростяскэ ун кувынт, Еу, Домнул, ам амэӂит пе пророкул ачела; Ымь вой ынтинде мына ымпотрива луй ши-л вой нимичи дин мижлокул попорулуй Меу Исраел.
“‘ஆனால் அப்படி ஆலோசனை கேட்கும்போது தீர்க்கதரிசி ஒருவன் ஏமாந்து, பொய்த் தீர்க்கதரிசனம் சொல்வதற்குத் துணிவுகொண்டால், யெகோவாவாகிய நானே அவனை அவ்வாறான துணிகரத்திற்குட்படுத்தினேன். அவனுக்கு விரோதமாக என் கரத்தை நீட்டி, இஸ்ரயேல் மக்கள் மத்தியிலிருந்து அவனை அழிப்பேன்.
10 Ышь вор пурта астфел пэкатул лор ши педяпса пророкулуй ва фи ла фел ку педяпса челуй че ынтрябэ,
அவர்கள் தங்கள் குற்றத்தைச் சுமப்பார்கள். தீர்க்கதரிசி குற்றவாளியாயிருப்பது போலவே, அவனிடம் ஆலோசனை கேட்க வந்தவனும் குற்றவாளி. ஆகவே நான் அவர்களைத் தண்டிப்பேன்.
11 ка сэ ну се май рэтэчяскэ де ла Мине каса луй Исраел ши сэ ну се май спурче ку тоате фэрэделеӂиле ей. Атунч вор фи попорул Меу, ши Еу вой фи Думнезеул лор»’”, зиче Домнул Думнезеу.
அப்பொழுது இஸ்ரயேல் மக்கள் இனியொருபோதும் என்னைவிட்டு வழிதவறிப் போகமாட்டார்கள். பாவங்களினால் தங்களைக் கறைப்படுத்திக்கொள்ளவும் மாட்டார்கள். அவர்கள் என் மக்களாயிருப்பார்கள். நான் அவர்களின் இறைவனாயிருப்பேன் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்’” என்றார்.
12 Кувынтул Домнулуй мь-а ворбит астфел:
யெகோவாவினுடைய வார்த்தை எனக்கு வந்தது. அவர் என்னிடம்,
13 „Фиул омулуй, кынд ва пэкэтуи о царэ ымпотрива Мя, дедынду-се ла фэрэделеӂе, ши Ымь вой ынтинде мына ымпотрива ей, дакэ ый вой сфэрыма тоягул пыний, дакэ ый вой тримите фоаметя, дакэ ый вой нимичи ку десэвыршире оамений ши вителе,
“மனுபுத்திரனே, ஒரு நாடு எனக்கெதிராய் பாவம் செய்து உண்மையற்றதாய் இருந்தால், நான் அதற்கு விரோதமாக என் கரத்தை நீட்டுவேன். அதற்கு உணவளிப்பதை நிறுத்தி, பஞ்சத்தை அனுப்பி அதன் மக்களையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவேன்.
14 кяр де ар фи ын мижлокул ей ачешть трей оамень: Ное, Даниел ши Йов, ей ну шь-ар мынтуи декыт суфлетул лор прин неприхэниря лор”, зиче Домнул Думнезеу.
அப்பொழுது அங்கே நோவா, தானியேல், யோபு ஆகிய மூவரும் இருந்தாலுங்கூட, அவர்கள் தங்கள் நீதியின் நிமித்தம் தங்களை மட்டுமே தப்புவித்துக்கொள்ளக்கூடும் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
15 „Дакэ аш лэса ка цара сэ фие кутреератэ де фяре сэлбатиче, каре ар лэса-о фэрэ попор, дакэ ар ажунӂе ун пустиу пе унде н-ар май путя трече нимень дин причина ачестор фяре
“அல்லது, நான் காட்டு மிருகங்களை அந்த நாட்டின் வழியாக அனுப்பினால், அவை அந்த நாட்டிலுள்ளவர்களைப் பிள்ளையற்றவர்களாக்கும். ஒருவரும் அந்த நாட்டின் வழியாகப்போக இயலாதபடி, அது மிருகங்களின் நிமித்தம் பாழாய்ப்போகும்.
16 ши ар фи ын мижлокул ей ачешть трей оамень, пе вяца Мя”, зиче Домнул Думнезеу, „кэ н-ар скэпа нич фий, нич фийче, чи нумай ей ар скэпа, ши цара ар ажунӂе ун пустиу.
நான் வாழ்வது நிச்சயம்போலவே, அங்கு அவ்வேளையில் இவர்கள் மூவரும் இருந்தாலுங்கூட, அவர்களால் தம் சொந்த மகன்களையோ மகள்களையோ தப்புவிக்கவும் முடியாது. அவர்கள் மாத்திரமே தப்புவார்கள். ஆனால் நாடோ பாழாய்ப்போகும் என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
17 Сау, дакэ аш адуче сабие ымпотрива цэрий ачестея, дакэ аш зиче сэ трякэ сабия прин царэ, дакэ й-аш нимичи ку десэвыршире оамений ши вителе
“இல்லையெனில், நான் அந்நாட்டிற்கு எதிராக வாளை வரச்செய்து, ‘வாள் நாட்டை ஊடுருவிச் செல்லட்டும்’ என்று சொல்வேனாகில், நான் அங்குள்ள மக்களையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவேன்.
18 ши ар фи ын мижлокул ей ачешть трей оамень, пе вяца Мя”, зиче Домнул Думнезеу, „кэ н-ар май скэпа нич фий, нич фийче, чи нумай ей сингурь ар скэпа.
நான் வாழ்வது நிச்சயம்போலவே, நான் அப்படிச் செய்தால், இந்த மூவரும் அங்கு இருந்தாலுங்கூட அவர்களால் தங்கள் சொந்த மகன்களையோ, மகள்களையோ தப்புவிக்கவும் முடியாது. அவர்கள் மாத்திரமே தப்புவார்கள் என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
19 Сау, дакэ аш тримите чума ын цара ачаста, дакэ Мь-аш вэрса урӂия ымпотрива ей прин молимэ, ка сэ-й нимическ ку десэвыршире оамений ши вителе,
“இல்லையெனில், நான் அந்நாட்டில் கொள்ளைநோயை அனுப்பி, நான் எனது கோபத்தினால் இரத்தம் சிந்தப்பண்ணி, அங்குள்ள மனிதரையும், அவர்களுடைய மிருகங்களையும் கொலைசெய்வேனாகில்,
20 ши ар фи ын мижлокул ей Ное, Даниел ши Йов, пе вяца Мя”, зиче Домнул Думнезеу, „кэ н-ар скэпа нич фий, нич фийче, чи нумай ей шь-ар мынтуи суфлетул прин неприхэниря лор.”
நான் வாழ்வது நிச்சயம்போலவே, நோவா, தானியேல், யோபு ஆகிய அந்த மூவரும் அங்கிருந்தாலுங்கூட, அவர்களால் தங்கள் மகனையோ மகளையோ தப்புவிக்கவும் முடியாது. தங்கள் நீதியினால் அவர்கள் மட்டுமே தப்புவார்கள் என்பதும் நிச்சயம் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
21 Тотушь аша ворбеште Домнул Думнезеу: „Мэкар кэ тримит ымпотрива Иерусалимулуй челе патру педепсе грозаве але меле: сабия, фоаметя, фяреле сэлбатиче ши чума, ка сэ нимическ ку десэвыршире дин ел оамений ши вителе,
“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. நான் எருசலேமுக்கு விரோதமாக மனிதரையும் அவர்களுடைய மிருகங்களையும் கொல்லுவதற்கு வாள், பஞ்சம், காட்டுமிருகம், கொள்ளைநோய் ஆகிய நான்கு பயங்கரத் தீர்ப்புகளையும் அனுப்பும்போது, அவைகளிலும் இது எவ்வளவு அதிக கொடியதாயிருக்கும்!
22 тот ва фи о рэмэшицэ каре ва скэпа, каре ва еши дин ел, ши ануме фий ши фийче. Ятэ, ачештя вор вени ла вой, ле вець ведя пуртаря ши фаптеле ши вэ вець мынгыя де ненорочиря пе каре о адук асупра Иерусалимулуй, де тот че адук асупра луй.
அப்படியிருந்தும், அங்கிருந்து தப்பிப்பிழைத்த சில மகன்களும், மகள்களும், வெளியே கொண்டுவரப்படுவார்கள். அவர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டு உங்களிடத்திற்கே வருவார்கள். அவர்களுடைய ஒழுக்கக்கேட்டையும் அவர்களுடைய நடத்தையையும் நீங்கள் காணும்போது எருசலேமின்மீது நான் வரப்பண்ணின தீங்கையும், அதன்மீது வரப்பண்ணின ஒவ்வொரு அழிவையும் குறித்து ஆறுதல் அடைவீர்கள்.
23 Ей вэ вор мынгыя кынд ле вець ведя пуртаря ши фаптеле ши вець куноаште кэ ну фэрэ темей фак Еу тот че фак ымпотрива Иерусалимулуй”, зиче Домнул Думнезеу.
நீங்கள் அவர்களுடைய ஒழுக்கக்கேட்டையும் நடத்தையையும் காணும்போது, நான் காரணமில்லாமால் ஒன்றும் செய்யவில்லை என்று அறிவீர்கள். அப்பொழுது நீங்கள் ஆறுதல் அடைவீர்கள் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.”

< Езекиел 14 >