< Екзодул 22 >

1 Дакэ ун ом фурэ ун боу сау о оае ши-л тае сау ыл винде, сэ дя чинч бой пентру боул фурат ши патру ой пентру оая фуратэ.
“ஒரு மனிதன் ஒரு எருதையோ அல்லது செம்மறியாட்டையோ திருடி, அதைக் கொன்றாலோ அல்லது விற்றாலோ அவன் அந்த எருதுக்குப் பதிலாக ஐந்து எருதுகளையும், அந்த செம்மறியாட்டுக்குப் பதிலாக நான்கு செம்மறியாடுகளையும் கொடுக்கவேண்டும்.
2 Дакэ хоцул есте принс спэргынд ши е ловит ши моаре, чел че л-а ловит ну ва фи виноват де омор фацэ де ел;
“திருடன் ஒருவன், வீட்டை உடைத்துத் திருடுகையில் பிடிக்கப்பட்டு, அடிபட்டு இறந்தால், அடித்தவன் இரத்தத்தைச் சிந்தியதற்கான குற்றவாளி அல்ல.
3 дар, дакэ а рэсэрит соареле, ва фи виноват де омор фацэ де ел. Хоцул требуе сэ дя ынапой че есте датор сэ дя; дакэ н-аре нимик, сэ фие вындут роб, ка деспэгубире пентру фуртул луй.
ஆனால் அது சூரியன் உதித்தபின் நடந்திருந்தால் இரத்தத்தைச் சிந்திய குற்றம் அவன்மேல் இருக்கும். “திருடன் தன் திருட்டிற்காகப் பதிலீடு செய்யவேண்டும். அவனிடம் ஒன்றுமில்லையானால் அபராதத்தைச் செலுத்துவதற்காக அவன் விற்கப்படவேண்டும்.
4 Дакэ чея че а фурат, фие боу, фие мэгар сау оае, се гэсеште ынкэ виу ын мыниле луй, сэ дя ындоит ынапой.
அவன் திருடிய எருதோ, கழுதையோ, செம்மறியாடோ அவனிடத்தில் உயிரோடிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அவன் இரண்டு மடங்கு அபராதத்தைச் செலுத்தவேண்டும்.
5 Дакэ чинева фаче стрикэчуне ынтр-ун огор сау ынтр-о вие ши ышь ласэ вита сэ паскэ пе огорул алтуя, сэ дя ка деспэгубире чел май бун род дин огорул ши вия луй.
“ஒருவன் தன் வளர்ப்பு மிருகங்களை ஒரு வயலிலோ, திராட்சைத்தோட்டத்திலோ மேய்க்கிறபோது, அவற்றைக் கட்டாமல் இன்னொருவனுடைய வயலில் மேயவிட்டால், அவன் தன்னுடைய வயலிலிருந்தும், தோட்டத்திலிருந்தும் அதற்குப் பதிலீடாக மிகச்சிறந்ததைக் கொடுக்கவேண்டும்.
6 Дакэ избукнеште ун фок ши ынтылнеште мэрэчинь ын кале ши арде грыул ын снопь сау ын пичоаре сау кымпул, чел че а пус фок сэ фие силит сэ дя о деспэгубире деплинэ.
“நெருப்பு மூண்டு முட்செடிகளில் பற்றிப்பரவி, தானியக்கட்டுகளையோ, விளைந்து நிற்கும் தானியக்கதிர்களையோ அல்லது முழு வயலையோ எரித்துப்போட்டால், நெருப்பை மூட்டியவன் அதற்காகப் பதிலீடு செய்யவேண்டும்.
7 Дакэ ун ом дэ алтуя бань сау унелте спре пэстраре ши ле фурэ чинева дин каса ачестуя дин урмэ, хоцул требуе сэ ынтоаркэ ындоит, дакэ ва фи гэсит.
“ஒரு மனிதன் தன் அயலானிடம் வெள்ளியையோ, பொருட்களையோ பாதுகாப்பாக வைப்பதற்குக் கொடுக்கையில், அந்த அயலானுடைய வீட்டிலிருந்து அவை திருடப்பட்டு, அந்த திருடன் பிடிக்கப்பட்டால் அவன் இரண்டு மடங்கு அபராதம் செலுத்தவேண்டும்.
8 Дакэ хоцул ну се гэсеште, стэпынул касей сэ се ынфэцишезе ынаинтя луй Думнезеу ка сэ спунэ кэ н-а пус мына пе авутул апроапелуй сэу.
ஆனால், அத்திருடன் அகப்படாவிட்டால், வீட்டின் உரிமையாளன் தன்னிடம் ஒப்புவிக்கப்பட்ட பொருட்களை தான் எடுக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காக அவன் நீதிபதிகள் முன் வரவேண்டும்.
9 Ын орьче причинэ де ыншелэчуне ку привире ла ун боу, ун мэгар, о оае, о хайнэ сау ун лукру пердут, деспре каре се ва зиче: ‘Уйте-л!’ – причина амындурор пэрцилор сэ мяргэ пынэ ла Думнезеу; ачела пе каре-л ва осынди Думнезеу требуе сэ ынтоаркэ ындоит апроапелуй сэу.
ஒருவன் தன்னுடையதல்லாத எருதையோ, கழுதையையோ, செம்மறியாட்டையோ, உடையையோ, காணாமற்போன எந்தப் பொருளையோ வைத்திருக்கும்போது, அதை இன்னொருவன் கண்டு, ‘இது என்னுடையது’ என்று சொன்னால், அவர்கள் இருவரும் நீதிபதியின் முன்பாக தங்கள் வழக்குகளை கொண்டுவர வேண்டும். நீதிபதியால் குற்றவாளியென்று தீர்க்கப்படுகிறவன் மற்றவனுக்கு இரண்டு மடங்காகக் கொடுக்கவேண்டும்.
10 Дакэ ун ом дэ алтуя ун мэгар, ун боу, о оае сау ун добиток оарекаре сэ и-л пэстрезе ши добитокул моаре, ышь стрикэ ун мэдулар сау е луат ку сила де ла ел, фэрэ сэ фи вэзут чинева,
“ஒருவன் தன் கழுதையையோ, எருதையோ, செம்மறியாட்டையோ, வேறொரு மிருகத்தையோ தன் அயலானிடத்தில் பாதுகாப்பாக வைத்திருக்கும்படி கொடுத்திருக்கும்போது, அது இறந்தால் அல்லது காயமடைந்தால் அல்லது ஒருவரும் பார்க்காத வேளையில் காணாமற்போனால்,
11 сэ се факэ ун журэмынт, ын Нумеле Домнулуй, ынтре челе доуэ пэрць, ши чел че а пэстрат добитокул ва мэртуриси кэ н-а пус мына пе авутул апроапелуй сэу; стэпынул добитокулуй ва прими журэмынтул ачеста, ши челэлалт ну ва фи датор сэ и-л ынлокуяскэ.
அந்த மிருகங்களை வைத்திருந்த மனிதன் அவற்றைத் தான் திருடவில்லை என யெகோவா முன்னிலையில் சத்தியம் செய்யவேண்டும். அப்பொழுது அவர்கள் இருவருக்கும் இடையில் இப்பிரச்சனை தீர்க்கப்படும். மிருகங்களின் உரிமையாளன் அந்த ஆணையை ஏற்றுக்கொள்ளவேண்டும். பதிலீடு எதுவும் வேண்டியதில்லை.
12 Дар, дакэ добитокул а фост фурат де ла ел, ва фи датор фацэ де стэпынул луй сэ и-л ынлокуяскэ.
ஆனால் அந்த மிருகம் அயலானிடத்திலிருந்து களவுபோயிருந்தால், அவன் அதன் உரிமையாளனுக்கு அதற்காகப் பதிலீடு செய்யவேண்டும்.
13 Дакэ добитокул а фост сфышият де фяре сэлбатиче, ыл ва адуче ка довадэ ши ну ва фи датор сэ-й ынлокуяскэ добитокул сфышият.
கொடிய மிருகங்களால் அது துண்டுகளாகக் கிழிக்கப்பட்டிருந்தால், அதன் உடலில் மீதியானவற்றைச் உரிமையாளனிடம் சாட்சியமாகக் கொண்டுவர வேண்டும். கிழிக்கப்பட்ட அந்த மிருகத்திற்காக அவன் பணம் செலுத்தும்படி கேட்கப்படமாட்டான்.
14 Дакэ ун ом ымпрумутэ алтуя о витэ, ши вита ышь стрикэ ун мэдулар сау моаре ын липса стэпынулуй ей, ва требуи с-о плэтяскэ.
“ஒருவன் தன் அயலானிடம் ஒரு மிருகத்தை இரவலாக வாங்கியிருக்கையில், அதன் உரிமையாளர் இல்லாத வேளையில் அது காயப்பட்டால் அல்லது இறந்துபோனால், அவன் அதற்கு ஈடுசெய்ய வேண்டும்.
15 Дакэ стэпынул е де фацэ, ну й-о ва плэти. Дакэ вита а фост датэ ку кирие, прецул кирией ва фи де ажунс.
ஆனால் மிருகத்தின் உரிமையாளர் அதனுடன் இருந்தால், இரவல் வாங்கியவன் அதற்காக ஈடுசெய்ய வேண்டியதில்லை. அந்த மிருகம் கூலிக்கு எடுக்கப்பட்டிருந்தால், கூலியாகச் செலுத்தப்பட்ட பணம் அந்த நஷ்டத்தை ஈடுசெய்கிறது.
16 Дакэ ун ом ыншалэ пе о фатэ нелогодитэ ши се кулкэ ку еа, ый ва плэти зестря ши о ва луа де невастэ.
“திருமணத்திற்காக நிச்சயிக்கப்படாத ஒரு கன்னிப்பெண்ணை ஒருவன் வஞ்சித்து, அவளுடன் உறவுகொண்டால், அவன் அவளுக்கான சீதனத்தை அவளுடைய தகப்பனுக்குக் கொடுக்கவேண்டும். அவள் அவனுக்கு மனைவியாயிருப்பாள்.
17 Дакэ татэл ну вря сэ й-о дя, ел ва плэти ын арӂинт прецул зестрей кувените фетелор.
அப்பெண்ணின் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்க முற்றிலுமாக மறுத்தால், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் சீதனப் பணத்தை கண்டிப்பாக அவன் கொடுத்தாகவேண்டும்.
18 Пе врэжитоаре сэ н-о лашь сэ трэяскэ.
“சூனியக்காரியை உயிரோடு இருக்கவிடவேண்டாம்.
19 Орьчине се кулкэ ку ун добиток сэ фие педепсит ку моартя.
“மிருகத்தோடு பாலுறவுகொள்பவன் எவனும் கொல்லப்படவேண்டும்.
20 Чине адуче жертфе алтор думнезей декыт Домнулуй сингур сэ фие нимичит ку десэвыршире.
“யெகோவாவைத்தவிர வேறு தெய்வங்களுக்குப் பலியிடுகிறவன் எவனும் அழிக்கப்படவேண்டும்.
21 Сэ ну кинуешть пе стрэин ши сэ ну-л асупрешть, кэч ши вой аць фост стрэинь ын цара Еӂиптулуй.
“பிறநாட்டினனைத் துன்புறுத்தவோ, ஒடுக்கவோ வேண்டாம். ஏனெனில் நீங்களும் எகிப்திலே பிறநாட்டினராயிருந்தீர்களே.
22 Сэ ну асупрешть пе вэдувэ, нич пе орфан.
“விதவைகளையும், அனாதைப் பிள்ளைகளையும் தன்னலத்துக்காக சுரண்டவேண்டாம்.
23 Дакэ-й асупрешть, ши ей стригэ ла Мине дупэ ажутор, Еу ле вой аузи стригэтеле;
அப்படிச் செய்தால் அவர்கள் என்னிடம் அழும்போது, நான் நிச்சயமாக அவர்கள் அழுகையைக் கேட்பேன்.
24 мыния Мя се ва апринде ши вэ вой нимичи ку сабия; невестеле воастре вор рэмыне вэдуве ши копиий воштри вор рэмыне орфань.
அதனால் நான் கோபமடைந்து, உங்களை வாளினால் கொல்லுவேன். அப்பொழுது உங்கள் மனைவிகள் விதவைகளாவார்கள். உங்கள் பிள்ளைகள் தந்தையற்றவர்கள் ஆவார்கள்.
25 Дакэ ымпрумуць бань вреунуя дин попорул Меу, сэракулуй каре есте ку тине, сэ ну фий фацэ де ел ка ун кэмэтар ши сэ ну черь камэтэ де ла ел.
“என் மக்களில் வறுமையான ஒருவனுக்கு யாராவது பணம் கொடுத்திருந்தால், வட்டிக்குப் பணம் கொடுப்பவனைப்போல அவனிடம் வட்டியை வாங்கக்கூடாது.
26 Дакэ ей зэлог хайна апроапелуй тэу, сэ й-о дай ынапой ынаинте де апусул соарелуй,
உங்கள் அயலானுடைய மேலங்கியை அடகுப்பொருளாக வாங்கியிருந்தால், சூரியன் மறையும் முன்பே அதை அவனுக்குத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும்.
27 кэч есте сингура луй ынвелитоаре, есте хайна ку каре ышь ынвелеште трупул – ку че аре сэ се кулче? Дакэ стригэ спре Мине дупэ ажутор, Еу ыл вой аузи, кэч Еу сунт милостив.
ஏனெனில், அதுமட்டுமே அவனுடைய உடலை மூடும் போர்வையாயிருக்கிறது. அவன் படுக்கும்போது, வேறு எதனால் அவன் தன்னை மூடிக்கொள்வான்? அவன் என்னிடம் அழும்போது நான் கேட்பேன். ஏனெனில் நான் கருணையுள்ளவர்.
28 Сэ ну хулешть пе Думнезеу ши сэ ну блестемь пе май-мареле попорулуй тэу.
“இறைவனை நிந்திக்கவேண்டாம். உங்கள் மக்களின் ஆளுநனை சபிக்கவேண்டாம்.
29 Сэ ну преӂець сэ-Мь адучь пырга сечеришулуй тэу ши а кулесулуй вией тале. Сэ-Мь дай пе ынтыюл нэскут дин фиий тэй.
“உங்கள் தானியக் களஞ்சியங்களிலிருந்தும், திராட்சை இரசத் தொட்டிகளிலிருந்தும் காணிக்கைகளைக் கொடுக்காமல் வைத்திருக்கவேண்டாம். “உங்கள் மகன்களில் முதற்பேறானவனை நீங்கள் எனக்குக் கொடுக்கவேண்டும்.
30 Сэ-Мь дай ши ынтыюл нэскут ал вачий тале ши ал оий тале; сэ рэмынэ шапте зиле ку мама са, яр ын зиуа а опта сэ Ми-л адучь.
நீங்கள் உங்கள் ஆடுமாடுகளிலிருந்தும் செம்மறியாடுகளிலிருந்தும் அப்படியே செய்யவேண்டும். அவை தங்களுடைய தாய்களுடன் ஏழுநாட்களுக்கு இருக்கட்டும். எட்டாம் நாளிலே அவற்றை எனக்குக் கொடுக்கவேண்டும்.
31 Сэ-Мь фиць ниште оамень сфинць. Сэ ну мынкаць карне сфышиятэ де фяре пе кымп, чи с-о арункаць ла кынь.
“நீங்கள் என் பரிசுத்த மக்களாக இருக்கவேண்டும். ஆகையால், காட்டு மிருகங்களினால் கிழிக்கப்பட்ட மிருகத்தின் இறைச்சியைச் சாப்பிடவேண்டாம். அதை நாய்களுக்கு எறிந்துவிடுங்கள்.”

< Екзодул 22 >